18-வது லோக்சபா நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது. தொகுதியின் வேட்பாளர்களாக 01) கன்னியாகுமரி காங்கிரஸ் - விஜய் வசந்த் பாஜக - பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக - பசிலியான் நசரேத் நாம் தமிழர் - மரிய ஜெனிபர் 02) திருநெல்வேலி காங்கிரஸ் - ராபர்ட் ப்ரூஸ் பாஜக - நயினார் நாகேந்திரன் அதிமுக - ஜான்சி ராணி நாம் தமிழர் - பா.சத்யா 03) தென்காசி திமுக - ராணி ஸ்ரீகுமார் தமமுக - ஜான் பாண்டியன் புதிய தமிழகம் - கிருஷ்ணசாமி நாம் தமிழர் - இசை மதிவாணன் 04) தூத்துக்குடி திமுக - கனிமொழி தமாகா - SDR.விஜயசீலன் அதிமுக - சிவசாமி வேலுமணி நாம் தமிழர் - ரொவினா ருத்ஜேன் 05) இராமநாதபுரம் ஐயுஎம்எல் - நவாஸ்கனி ஓபிஎஸ் அணி - ஓ.பன்னீர்செல்வம் அதிமுக - ஜெயபெருமாள் நாம் தமிழர் - சந்திரபிரபா ஜெயபால் 06) விருதுநகர் காங்கிரஸ் - மாணிக்கம் தாக்கூர் பாஜக - ராதிகா சரத்குமார் தேமுதிக - விஜய பிரபாகர் நாம் தமிழர் - கெளசிக் 07) தேனி திமுக - தங்க தமிழ்செல்வன் அமமுக - TTV.தினகரன் அதிமுக - நாராயணசாமி நாம் தமிழர்
முதல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஒரு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி நடத்தை விதிமுறைகளை (எம்.சி.சி) அமல்படுத்துவதை பொதுத் தளத்தில் வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சில நேரங்களில் சில பகுதிகளிலிருந்து எழுப்பப்படும் சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இதில் விளக்கம் அளிக்க ஆணையம் முற்பட்டுள்ளது. தற்போதைய இந்த நிலை, மீதமுள்ள காலத்திற்கும் பொருந்தும். மாதிரி நடத்தை விதிமுறைகள் (எம்.சி.சி) நடைமுறைக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் இந்த விதிகளுக்கு இணங்குவதில் தேர்தல் ஆணையம் பரந்த அளவில் திருப்தி அடைந்துள்ளது. மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச