முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகி டாக்டர் விஜயகுமார் ரெட்டி

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகியாக அப்பல்லோ மருத்துவமனை தொழிலதிபர் விஜயகுமார் ரெட்டி நியமனம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 2026 மே மாதம் 7 ஆம் தேதி , அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின் படி அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் ' ராஜாசார் வாரிசு முத்தையா செட்டியார் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி' (Kumara Rajah Muthiah School of Traditional Arts and Crafts) என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக,  தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கத்தின் செயலாளரான மீனா முத்தையா கடந்த மே 2, 2026 ஆம் தேதி அன்று காலமானதை அடுத்து இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தொழிலதிபர் அய்யப்பன் எனும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் 5 நபர்கள் இணைந்து சென்னை உயர...
சமீபத்திய இடுகைகள்

சந்திர தரிசனத்தின் சிறப்பு

சிறப்பு செய்திகள் :ரெங்கநாதன் திருப்பதி-    " பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா    எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை       வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே"....... சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்..            பித்தன் எம்பெருமான் ஈசன் பிறையான சந்திரனை சூடியதால் சந்திர தரிசனம் முக்கிய வழிபாடு  சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  நகர வாழ்வில் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம மாலை தரிசனம் பண்ணுவது எளிது  சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். ...

17 ஐ ஏ எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியிடமாறுதல்

தமிழ்நாடு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளரான ககன் தீப் சிங் பேடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, நீர்வளத் துறை செயலாளராகவும்,    போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குனர் அனில் மேஸ்ராம் எரிசக்தித் துறை செயலாளராகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் வள்ளலார் போக்குவரத்துத் துறைச் செயலாளராகவும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கேஎஸ் பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளராக இருந்த தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர்...

தொழில் நகரத்தில் புதிய மத்தாப்பு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்

ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்காள முன்னால் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடந்து கால வெற்றிக்குப் பின்னால் அமைச்சர் கீர்த்தனா கூட்டுக குழுவில் வழிகாட்டி ஆலோசனைப் பிரதிநிதி என 29 வயதில் அமைச்சர் என கீர்த்தனாவுக்கு சிறு வயதில் மறுபக்கம் உண்டு, சிவகாசி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆன பின் தொழில் அமைச்சர் கீர்த்தானா சம்பத் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள்.  நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப் போகிறோம்." என்றார். கீர்த்தனா சம்பத்        அவர் யார் எனப்  பார்ப்போம். கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோச...