முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கம்யூனிஸ்ட் கட்சித் கேரளாத் தலைவர் பினராயி விஜயனின் ஊழல் மகள் வீணா

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார்.மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கேரளம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். மாநிலம்'!!ED,கொச்சி மண்டல அலுவலகம் 27/05/2026 அன்று PMLA, 2002 ன் கீழ் M/s கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (CMRL) க்கு சொந்தமான கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் உள்ள 10 வளாகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தியது. எஸ்.கார்த்தா, ஸ்ரீமதி.வீணா என்பவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.பினரயி விஜயனின்...
சமீபத்திய இடுகைகள்

மணிப்பூர் தடைசெய்த அமைபபின் முக்கியக் குற்றவாளி டெல்லியில் கைது

மணிப்பூர் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (KCP) முக்கியத் தளபதி ஹோபிஜாம் திலீப் சிங்  டெல்லியில் கைது செய்யப்பட்டான், டில்லி காவல்துறையின் சிறப்ப்புப் பிரிவு (Special Cell), மணிப்பூர் காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை ஆகியவை இணைந்து நடத்திய ரகசிய நடவடிக்கையின் மூலம் கைது  இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  விசாரணையைத் தொடர்ந்து, மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் பெரும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கேசிபி (KCP) தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி ஹோபிஜாம் திலீப் சிங் கைது  டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு (Special Cell), மணிப்பூர் காவல்துறை மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு ஆப்பரேஷனில், கேசிபி (Kancerpak Communist Party) தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான ஹோபிஜாம் திலீப் சிங்  கைது ..இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மணிப்பூரைத் தளமாகக் கொண்ட கிளர்ச்சி அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (கே...

தமிழகத்தில் அரசியல் களத்தை உற்று நோக்கும் பாஜக அமைதி காப்பது களையுமா .

அழிவின் விளிம்பில் அதிமுக, தடம்மாறத் தயாராகும் மதிமுக, சிவகாசி சரவெடியாக கில்லி விஜயின் சர்கார் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சியை நோக்கி நகர்கிறது நாளைய சபாநாயகர் தீர்ப்புக்குப் பின் விசில் ஊதப்போகும் ராஜினாமா MLA க்களும், சுயேச்சையாகக் களம் காணப்போகும் அதிமுக தகுதி நீக்க எம்எல்ஏக்களும் என்ற நிலையில் கூட்டணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட, முஸ்லீம் லீக், விசிகவின் திடீர் பயம் என்பது தவெக இங்கு மெஜாரிட்டி பெற்றுவிட்டால் நமக்கு வழியில்லை எனக் கருதும் காரணமாக, குதிரை பேரம் என சுயநலம் கருதியே குதிக்கின்றனர், அதிமுக CV. சண்முகம், அணியின் கொரடா டாக்டர் சி.விஜயபாஸ்கர் அணியாக பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள் பலர், மீண்டும் தங்களை இயக்கிய அரசியல் தலைமை பேச்சைக் கேட்டு, எடப்பாடி கே. பழனிசாமி பக்கம் அவர் இல்லம் தேடி வரத் தொடங்கினர். கடந்த வாரம் தான், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக ஒரு சார்பு அணி எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்து மெஜாரிட்டியை அதிகரித்தனர், அதைத் தான் அவர்களை வழிநடத்தும் தலைமையும் விரும்பியது, ஆனால் தவெக அவர்களை அமைசசரவையில் சேர்க்காமல் ஏதோ கொள்கை அரசியல் செய்வதாக ஆதவ் அர்ஜுனா திட்டப்படி சிறிய...

கடந்த திமுக ஆட்சியில் குறைந்த விலை முட்டை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு அரசுக்கு விற்பனை ஊழல்

கடந்த கால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் பல முறை அழுகிய முட்டைகளை வழங்கப்பட்டதைக் பாஜகவின் சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்ததாக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், மேலும் தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமலிருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல. முட்டைகளின் சேமிப்புக் காலம், மற்றும் தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-, "தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூபாய் 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூபாய் 3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குற...

எல்லையோர சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க உள்துறை அமைச்சர் உத்தரவு

இந்திய நாட்டின் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்’ கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்தவும், பல ஆண்டுகளாக உருவாகி வரும் இது போன்ற அனைத்துக் கட்டிடங்களையும் இடிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அனைத்து வங்கிகளும் எல்லைப் பகுதிகளில் வங்கிப் பரிவர்த்தனைகளை சட்டப்பூர்வமாகவும், நிதி ரீதியாகவும் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல், பெரிய வணிக நிறுவனங்களைச் சரிபார்த்தல், அவற்றின் நிதி ஆதாரங்களை ஆய்வு செய்தல், சில போலி கணக்குகள் மற்றும் தவறான நிறுவனங்களைக் கண்காணித்தல், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிதல், எல்லை தாண்டிய கடத்தலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. செவ்வாயன்று பிகானேரில் நடந்த பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மதிப்பீடு செய்தார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா, மூத்த மாநில அதி...

கர்நாடக முதல்வரை மாற்ற காங்கிரஸ் தலைமை தீவிரம், சிவக்குமாருக்கு வரப்போகும் வாய்ப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா செல்ல வேண்டும் என்று விரும்புகிறது இந்த மாற்றம் சுமூகமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முதல்வர் இந்த யோசனையை பரிசீலிக்க கால அவகாசம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் தலைமைத்துவத்திற்கான அனைத்துப் போட்டிகளுக்கும் மத்தியில், மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதையும், கட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்தை மறுசீரமைப்பதாக, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, புதிய தலைவராக சிவக்குமாரை அமர்த்த வழி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. மாற்றம் சுமூகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த யோசனையை பரிசீலிக்க முதலமைச்சருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  அவரை மூத்த அரசியல் வாதி என்பதை மதித்து, காலக்கெடுவை நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறப்படுவதால், இதில் அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, பெங்களூ...