சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூரைச் சேர்ந்த குமரேசன் தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். நீண்ட நாட்கள் கடந்தும் தனது கடமை செய்யாத நில அளவையரான , ஆத்தூர் பிர்க்கா சர்வேயர் ஜீவிதா (வயது 29), அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது37) ஆகியோர், நிலம் அளவை செய்துதர 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.அதன் பின் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பேரம் பேசியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், ஊழல் நடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, நேற்று செப்டம்பர்.,17 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் பணம் பெற்ற கையுடன் பிடித்துக்,கைது செய்தனர். பின்னர் சோதனைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்தத் தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாகும், 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கினர். இந்தியா உட்பட உலகின் முன்னோடி 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76 சதவீதம் தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1 சதவீதம் வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்தத் தொடங்கியுள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திரக் கொள்முதலாகும். இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கிக் குவிக்கக் ...