முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய குறுவட்ட நில அளவர் உள்ளிட்ட இருவர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூரைச் சேர்ந்த குமரேசன் தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். நீண்ட நாட்கள் கடந்தும் தனது கடமை செய்யாத நில அளவையரான , ஆத்தூர் பிர்க்கா சர்வேயர் ஜீவிதா (வயது 29), அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது37) ஆகியோர், நிலம் அளவை செய்துதர 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.அதன் பின் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பேரம் பேசியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், ஊழல் நடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, நேற்று செப்டம்பர்.,17 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் பணம் பெற்ற கையுடன் பிடித்துக்,கைது செய்தனர். பின்னர் சோதனைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
சமீபத்திய இடுகைகள்

தங்கம் குவிக்கும் நாடுகளின் வர்த்தக நிலை டாலர் வர்த்தகம் குறையலாம்

உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்தத் தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாகும், 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்தது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கினர். இந்தியா உட்பட உலகின் முன்னோடி 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76 சதவீதம் தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 ஆம் ஆண்டு முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1 சதவீதம் வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்தத் தொடங்கியுள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திரக் கொள்முதலாகும். இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கிக் குவிக்கக் ...

ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசி​தா​ரர்​களுக்கு வழங்க காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அறி​வுறுத்தல்

செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான  ப. சிதம்பரம் அவரது எக்ஸ் தளத்தில் இதுபற்றி, "12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். 5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை? கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்​துவ மற்​றும் ஆயுள் காப்​பீட்​டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது ...

தமிழ்நாடு சிலை கடத்தல் திருட்டு வழக்கு கோப்புகள் மாயம்; தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

தமிழ்நாடு சிலை கடத்தல் திருட்டு வழக்கு கோப்புகள் மாயம்; தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை தமிழ்நாடு சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும்  மேற்பட்ட கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன. 38 காவல நிலையங்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது சாதாரண விஷயமல்ல. இதில் காவல் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நில...

வருமானவரித் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டிப்பு

வருமான வரிக் கணக்கு இணையதளம் சரியாக செயல்படாத நிலையில் வருமான வரிக் கணக்கு  தாக்கல் செய்ய முடியவில்லை என பலரும் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். எனவே கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கையை முன் வைத்தனர். இந்தச் சூழ்நிலையில் வருமானவரித் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்திருக்கிறது. ஏராளமான சம்பளதாரர்கள் கடைசி 3 நாட்களில் போட்டி போட்டுக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். குறிப்பாக கடைசி நாள் என்பதால் செப்டம்பர் 15ஆம் தேதி லட்சக்கணக்கானவர்கள் வருமான வரி கணக்கு இணையதளத்தை அணுகினர். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளமே முடங்கி போனது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என முதலில் அறிவிக்கப்பட்டது. வழக்கத்தை விட கூடுதலாக 45 நாட்கள் இந்த முறை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவற்கு அவகாசம் வழங்கப்பட்டது வருமான வரி கட்டவில்லை எனினும் தவறாமல் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவும் ஓய்வூதியதாரர்களில் பலர் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதில் தயங்குகிறார்கள்,  ஆனால் ஓய்வூதியதாரர்கள் விபத...

மதுரை ஆதீனகர்த்தார் வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் காட்​டாங்​குளத்​தூரில் 2025 மே மாதம் நடை​பெற்ற சைவ சித்​தாந்த மாநாட்​டில் பங்​கேற்க வந்த மதுரை சைவ ஞானசம்பந்நர் மடம் ஆதீன கர்தாரின் கார் மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதுவது போல வந்ததையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், இதில் பாகிஸ்​தானுக்குத் தொடர்பு இருப்​ப​தாகச் சந்​தேகம் உள்​ள​தாக​வும் மதுரை ஆதீனம் கருத்துத் தெரி​வித்​திருந்​தார். அதையடுத்து மத ஒற்றுமையை சீர்​குலைக்​கும் நோக்​கில் பேசி​யுள்​ள​தாக மதுரை ஆதீனம் மீது சென்னை சைபர் கி்ரைம் காவலதுறையினர் 4 பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த வழக்​கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம்  ஜூலை மாதம் முன்​ஜாமீன் வழங்​கியது.        இந்​த நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது  தரப்​பில், “மதுரை ஆதீனம் மத ஒற்​றுமையை சீர்​குலைத்து சட்​டம் - ஒழுங்கு பாதிக்​கப்​படும் வகை​யில் பேசி​ய​தால்​தான் அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. காவல் துறை விசா​ரணைக்கு அவர் ஒத்​துழைப்...

பிரபல நகைக்கடை வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்தை மீட்ட அமலாக்கத்துறை

பிரபல நகைக்கடை வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்தை மீட்ட அமலாக்கத்துறை வங்கி மோசடியில் சிக்கிய, நாதெல்லா சம்பத் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் ரூபாய்.163 கோடி மதிப்புள்ள 27 அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் மீட்டு  பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர் சென்னையைச் சேர்ந்த நாதெள்ள சம்பத் நகைக்கடை நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் போலியாக ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்ததாக  2018 ஆம் ஆண்டு எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். துவக்கத்தில் ரூபாய்.250 கோடி எனக் கூறப்பட்டாலும், விசாரணை முடிவில் அந்த நிறுவனம் செய்த மோசடி ரூபாய்.380 கோடி என சிபிஐ பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.              நாதெல்லா சம்பத் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற நிலையில், நிறுவனம் கலைக்கப்பட்டது. வங்கிக் கடன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்...