மின்சார ரயில் பறக்கும் பாதை சீரமைக்கும் பணிகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வேளச்சேரியிலிருந்து சிந்தாதரிப்பேட்டை நிறுத்தம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் மின்சார ரயில் சேவைகள் நாளை முதல் துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.அதைபோல அடுத்த முக்கிய அறிவிப்பு அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும் விருதுநகர்- காரைக்குடி- வழி திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரித் தண்டலர் கைது! சேலம் அஸ்தம் பட்டி மாநகராட்சி ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் வரித்தண்டலராகப் பணி செய்பவர் ராஜா. மிட்டாபுதூர், ஆண்டிச்சிநகர் சண்முகம் மகன் ராஜு (வயது 33) அவரின் புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு ரசீது வழங்கும்படி ராஜாவிடம் ஆவணங்களின் தகவல்களைக் கொடுத்தார். ரூபாய் 35 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் ரசீது தரமுடியும் என ராஜா கூறிய நிலையில் இறுதியாக முப்பதாயிரம் ரூபாய் தந்தால் ரசீது தருவதாக பேரம் முடிந்துள்ளது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜூ அதுகுறித்து சேலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனை படி ராஜூ கொண்டு வந்து வழங்கிய பணம் பினாப்தலின் இரசாயனம் அரசு சாட்சிகள் முன்னிலையில் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ராஜூவிடம் திருப்பிக் கொடுத்து சாட்சிகள் உடன் அனுப்பினர்.ரூபாய் 30 ஆயிரம் லஞ்சப் பணத்தை ராஜு, வரித்தண்டலர் ராஜாவிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜாவை லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த