முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் ஆலோசனை

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்  நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் ஆலோசனை நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன், தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநருடன் இன்று ஆலோசனை நடத்தினார். வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ள இந்த மறுதேர்வை எவ்விதப் பிரச்சனையும் இன்றி, வெளிப்படையான முறையில் பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து அவர் விரிவாக விவாதித்தார். மறுதேர்வைச் சீராக நடத்த மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக டாக்டர் டி வி சோமநாதன் குறிப்பிட்டார். தேர்வை சீர் குலைக்கவோ, முறைகேடுகளில் ஈடுபடவோ முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். முன்னதாக, ஜூன் 1 அன்று மத்திய அரசுச் செயலாளர்களுடனும், ஜூன் 4 அன்று மாநிலத் தலைமைச் செயலாளர்களுடனும் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டங்களை அவர் நடத்தினார். நீட் மறுதேர்வுச் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் நேர்மைய...
சமீபத்திய இடுகைகள்

வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம்

 நித்தி ஆயோக்  வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம் நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு அசோக் லஹிரி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (2026 ஜூன் 12) நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்று வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பேசுகையில், தங்களது மாநிலத்தின் நீர்மின் ஆற்றல் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வ சர்மா, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைத் குறைக்க உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, பொருளாதார வளர்ச்சி மனித மேம்பாடாக மாற வேண்டும் எனக் குறிப்பிட்டு, ‘மாற்றத்திற்கான பயணம் 2032’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். மிசோரம் முதலமைச்சர் திரு லால்டுஹோமா, சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுற...

அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்த மத்திய அரசு

அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு நாட்டின் நலிவடைந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு அந்த்யோதயா கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்ளடக்கிய, தரமான கல்வி, திறன் மேம்பாடு,அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு வாழ்வாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் விளிம்புநிலை மக்கள் முன்னேறி வருகின்றனர். மத்திய அரசு பழங்குடியின மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பழங்குடியின மக்களுக்கான வீட்டுவசதி, சாலை இணைப்பு, குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 24,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தொடங்கப்பட்ட பழங்குடியினர் மேம்பாட்டு மையங்கள் மூலம் பழங்குடியின மக்கள் வனம் சார்ந்த பொருட்களைச் சேகரித்து, பதப்படுத்தி விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில்  பழங்குடியினப் பெண்கள் ஆயுர்வேத மர...

எரிபொருள்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகள்

பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்  எரிபொருள்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது சட்டவிரோதமாக அவற்றைப் பதுக்கி வைப்பது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான உத்தரவை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு அனைத்து சில்லறை நுகர்வோருக்கும் டீசல் கிடைப்பதை இது உறுதி செய்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைச் சார்ந்த சில்லறை விற்பனை நிலையங்களுக்கு டீசல் விநியோகத்தின் அளவு மாற்றப்படுவதால் ஒரு சில விற்பனை நிலையங்களில் சீரற்ற எரிபொருள் தேவை ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து எரிபொருட்களைக் கொள்முதல் செய்வதன் காரணமாக மொத்த மற்றும் சில்லறை விலைகளுக்கு இடையே வேறுபாடு ஏற்படுகிறது.  தனியார் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதிக விலை காரணமாக மோட்டார் டீசல் எனப்படும், அதிவேக டீசல் விற்பனையில் 58 சதவீதம...

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – தில்லி மாநகராட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – தில்லி மாநகராட்சி இடையே நகர்ப்புறச் சாலை சீரமைப்பு பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர்ப்புற சாலைகளின் கட்டமைப்பு, மதிப்பீடு தரநிலை மற்றும் தில்லி மாநகராட்சி பொறியாளர்கள், ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – தில்லி மாநகராட்சி இடையே  ஜூன் 10-ம் தேதி அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள எஃகு கழிவுப் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடடினயாக அடைப்பதற்கான சுற்றுச்சசசூழலுக்கு உகந்த தொழில்நுட்ப மேலாண்மை ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சாலைகளின் தரநிலை குறித்த மதிப்பீடு, உத்தரவாதம், பராமரிப்பு போன்ற அம்சங்களில் அறிவியல் ரீதியிலான புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம் தில்லி நகர்ப்புறப் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பின் தரநிலைகளை மேம்படுத்துவதுடன் அவற்றின் நிலைத்தன்மையையும் அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய...

குறைந்த செலவில் தரமான சேவை வழங்கும் வர்யா எனும் வீடியோ கதை உருவாக்க மாதிரி அறிமுகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் குறைந்த செலவில் தரமான சேவை வழங்கும் வர்யா எனும் வீடியோ கதை உருவாக்க மாதிரி அறிமுகம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஆதரவுடன் அவ்தார்.ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வர்யா வீடியோ உருவாக்கத்திற்கான காலஅவகாசத்தைக் குறைக்கும் வகையில் 50 படிநிலைகளிலிருந்து 4 படிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வீடியோ உருவாக்கம் பத்து மடங்கு அதிக செயல்திறன் உள்ளதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மாற்றத்தை உருவாக்கும் நிறுவனமான அவ்தார் நிறுவனம் வர்யா என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை பயனாளர்களுக்கு அதிநவீன வீடியோ காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவில் வடிவமைக்க உதவுகிறது. கல்வி முதல் மின்னணு வர்த்தகம் வரை வர்யா வீடியோ உருவாக்க மாதிரி குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான வீடியோ உருவாக்கம் சேவையை அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கிறது. மேம்பட்ட கட்டளைகள் மூலம், எழுத்தில் வடிவில் உள்ள உரைகளை வீடியோக்களாக மாற்றும...

தியாகி வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் விழா அரசு விழாவாக நிகழ்வு

1801 ஆம் ஆண்டில்  ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனி அரசுக்கு எதிராக திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர்களை மீட்கப் படைதிரட்டி புறப்பட்டு கத்தப்பட்டில் வாளுக்கு வேலி அம்பலம் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட இடத்தில் அவரது தம்பி கருத்த ஆதப்பனால் வீரநடுகல் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது, அதில் வாளுக்குவேலி அம்பலத்தின் ஒரு கையில் ஈட்டியும் மறு கையில் வளரியும் உள்ளது. ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் நன்னி அம்பலம், கிழக்கு நாட்டு தலைவர்களான சேதுபதி அம்பலமும் - சண்முகபதி அம்பலமும், பாகனேரி நாட்டுத் தலைவரான வாளுக்கு வேலி அம்பலமும்  சுதந்திரப் போராட்டத்தில், சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலங்களில் முக்கியமானவர்கள். இதில் நன்னி அம்பலம், சேதுபதி அம்பலம், சோலைமலை அம்பலக்காரர், கருப்பண்ண அம்பலக்காரர் பற்றிய குறிப்புகள் நேரடியாகவே உள்ளன. ஆனால் வாளுக்கு வேலி அம்பலம் நடுகல் வழிபாடு தவிர, அவரை  பற்றிய நேரடிக் குறிப்புக்கள் இல்லை, சிறுகதை மன்னன் திருக்கோஷ்டியூர் எஸ். எஸ். தொன்னரசு எழுதிய கதையில் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் மூல...