முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தீ பற்றி 25 பேர் உயிரிழந்த கோவா யூனியன் பிரதேச விடுதியின் உரிமையாளர்கள் தப்பியோடிய நிலையில் கைது

தீ பற்றி 25 பேர் உயிரிழந்த கோவா யூனியன் பிரதேச விடுதியின் உரிமையாளர்கள் தப்பியோட்டம்:  இண்டர்போல் உதவியை நாடியது காவல்துறை கோவாவில் நடந்த தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விடுதியின் உரிமையாளர்கள் இரண்டு பேர் தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளனர். விபத்து நடந்த மறுநாள் அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாகத் தெரிகிறது. கோவாவின் வடக்குப் பகுதியிலுள்ள பாஹா கடற்கரைப் பகுதியில் 'பிர்ச் பை ரோமியோ' லேன்' என்ற இரவு நேர விடுதி செயல்படுகிறது.   பாகா மற்றும் வகேட்டர் கடற்கரை பகுதிகளில் பிரபலமான இந்த ஹோட்டல் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் 'Romeo Lane The Boutique Resort' என்ற பெயரில் அசாகாவில் புதிய சொகுசு விடுதியாக உள்ளது. முன்பு இரவு விடுதி, உணவகம் (இத்தாலியன், இந்தியன்). மாடலாகும்   இது கோவாவில் சட்ட சிக்கல்களுக்கு உள்ளான ஒரு புகழ்பெற்ற கடற்கரை ஹோட்டல்  ஓராண்டுக்கு முன்னர் துவக்கப்பட்ட இந்த இரவு நேர விடுதியில் வார இறுதி நாட்கள் என்பதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏரளமானோர் கடந்த மூன்று தினம் ம...
சமீபத்திய இடுகைகள்

மதுரை மாவட்ட கிராம உதவியாளரிடம் ரூபாய்.67.25 கோடி சொத்து

மதுரை மாவட்ட கிராம உதவியாளரிடம் ரூபாய்.67.25 கோடி சொத்து வருமானத்திற்கு மீறியது என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு மதுரை மாவட்டம்  கிராம உதவியாளர் (தலையாரி) பணி தனது வருமானத்தை மீறி ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் செக் கானுாரணியைச் சேர்ந்தவர் பாண்டி வயது 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளததில் கிராம உதவியாளராகப் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்தது.குறித்து விசாரித்த குழுவினர், ஆவணங்களின் அடிப்படையில் ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதி செய்த நிலையில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராகப் பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி அவரது பெயரிலும், அவர் மனைவி ராணி, மற்றும் மகன்கள் பெயர்களிலும...

நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்த உயர் நீதிமன்றப் பதிவாளர்

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்யத் தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், சங்கர் கணேஷ் என்பவரை சிறையிலடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை  கண்காணிப்பாளர் - துணைக் கண்காணிப்பாளர்., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் துணைக் கண்காணிப்பாளரைக் கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்ய...

வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.1.10 கோடி சொத்து சேர்த்த ஊராட்சி செயலாளர்

வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் வீடு, திருமண மண்டபம், மற்றும் பண்ணை வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று வியாழக்கிழமை சோதனை நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிகிறார். 2019  ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளராக பணி செய்தார். அப்போது படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி செயலாளர் பணிப் பொறுப்பை கூடுதலாகச் செய்து வந்தார்.   அந்தக் காலத்தில் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தங்கப்பாண்டியன் வீடு, திருமண மண்டபம், வணிக வளாகம், பண்ணை வீடு, தோட்டம் ஆகியவற்றை விருதுநகர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செ...

கலப்பை மக்கள் இயக்க கட்சி அடமானம் கரன்சி வருமானம்

கலப்பை மக்கள் இயக்க கட்சி அடமானம் கரன்சி வருமானம்             நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் உள்ளிட்ட பலருக்கு 20  ஆண்டுகளாக பி ஆர் ஒ வாகப் பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.                 பி.டி.செல்வகுமார் ஒரு திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலராக பல தனியார் சினிமா கம்பெனிகளில் பணியாற்றியவர். ராஜகிருஷ்ணபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்த்தவர்.சமூகத்தை சீரழிக்கும் பல சினிமா சார்பாக மஞ்சள் பத்திரிகைகளை வடபழனி கமலா தியேட்டர் எதிரில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் நடத்தி விற்பனை செய்தவர், தனது வாழ்க்கையை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்தார் , பின்னர் பி. டி.செல்வகுமாரை தனது மகன் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலராக நியமித்தார் . செல்வகுமார் 2003 ஆம் ஆண்டில் தயாரிப்பிலும் இறங்கினார், டி.பி. கஜேந்திரனின் குடும்ப நாடகமான பண்டா பரமசிவம் (2003) க்கு நிதியளித்தார்....