நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை அளந்து அத்துமால் செய்து தர அரசு கடடணம் போக ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய பரந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு ஊழல் தடுப்புக் காணிகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனா். காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்குச சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் வழங்க முடிவு செய்து அதற்கான இழப்பீடு பெற விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் நில எடுப்புப் பிரிவுக் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு தனக்கு ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை லஞ்சமாகத் தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிபபுத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகாா் செய்த நிலையில் அவர்கள் ஆலோசனைப்படி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடைத் தெருவுக்கு வருமாறு க...
மாசிக் கருவாடு ஓசி வாஙகிய ஊழல் காக்கி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை பணம் தராமல் மாமூலாக மாசிகருவாடு வாங்கியதுடன், கடையிலிருந்தவர்களை மிரட்டியதாக பாம்பன் காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் பரவிய நிலையில் உயர்நீதிமன்றத்நில் வழக்கு விசாரணை சம்பவம்: பணம் கொடுக்காமல் காவலர் மாசிக் கருவாடு வாங்கிச் சென்றதுடன் உரிமையாளர்களைக் காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படடுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கருவாடு வாங்கி பணம் தர மறுத்த விவகாரம் குறித்து டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு அருகில் அமைந்த பாம்பனைச் சேர்ந்தவர் மீனவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மாசிக் கருவாடு வாங்கிய பாம்பன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், பணம் தர மறு...