முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புதுக்கோட்டையில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களுக்கு வரைபட ஓப்புதல் மற்றும் குழுக் கூட்டம்

புதுக்கோட்டையில் இராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள இரண்டு ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வையாபுரி எனும் துரை வைகோ தலைமையில் நடந்தது, நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையான 15 வருடக் கோரிக்கை புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய இரண்டு பகுதிகளில் பகல் நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரண்டு இரயில்வே கேட்டைக் கடந்து செல்லும்போது, உரிய நேரத்தில் தமது நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்தப் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து  திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இரயில்வே துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ...
சமீபத்திய இடுகைகள்

சிறந்த திரைப்படங்கள், கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளும்,  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த படைப்புகளில் சிறந்த கலைஞர்களுக்கும், சிறந்த நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் அரசியல் காரணமாக இருந்த நிலையில், சமீப காலங்களில் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022 ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 7 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகளை தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது  பிப்ரவரி மாதம் 13-ஆம்தேதி, துணை முதல்வர் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூபாய்.2 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூபாய்.1 லட்சமும், 3 மற்றும் சிறப்புப் பரிசாக ரூபாய்.75 ஆயிரமும் வழங்கப்படும். மகளிர் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்...

வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய்.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் குறித்து விசாரணை

கேரளா மாநில எல்லையில் வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய்.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் குறித்து காவல்துறை விசாரணை, வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் கைவசமின்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் சந்தை மதிப்பு ரூபாய். 10 கோடி .கோயம்பத்தூர் மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் ஜனவரி மாதம். 28  ஆம் தேதி காவல்துறையினர் வாகனங்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலக்காட்டிலிருந்து கோயமுத்தூர்  நோக்கி வந்த பேரூந்தை நிறுத்தி சோதனை செய்த போது, நிபின் (வயது 29) என்பவர், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த 6 கிலோ.140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். ரூ.9 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை எடுத்து வந்ததால் வருமான வரித்துறை உயர் அலுவலர்கள் வாலிபர் நிபினிடம் விசாரித்து வருகிறார்கள். முறையாக கணக்கு காட்டினால் மட்டுமே வருமான வரித்துறை அலுவலர்கள் தங்கத்தை கேரள வியாபாரியிடம் ஒப்படைப்பார்கள். விசாரணை நடந்து வருகிறது.தங்கக்கட்டிகள் கடத்தி வந்த அந்த நபர், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட...

சிங்க மராட்டியர் பவர் செக்டரான அஜீத் பவார், ஓடாமல் நின்று போனது அந்தக் கடிகாரம்

சிங்க மராட்டியர் பவர் செக்டரான அஜீத் பவார், ஓடாமல் நின்று போனது அந்தக் கடிகாரம். மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார். அந்தச் சிறு விமானம், பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகித் தீப்பிடித்தது. அஜித் பவார், அவரது பாதுகாப்பு அலுவலர், (PSO) உதவியாளர் மற்றும் இரு விமானிகளென ஐவரும் உயிரிழந்தனர். அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 'சூப்பர்-லைட்' (Super-light) ரக  ஜெட் சொகுசு விமானம். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை சுமார் ரூபாய்.100 கோடி முதல் 130 கோடி வரை! ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரக விமான உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் பெரிய ரக விமானங்களை மட்டுமே தற்போது தயாரிக்கிறது. ஆனால் விபத்துக்குள்ளாகி இருக்கும் லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானம் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. Federal Aviation Administration தரச் சான்றிதழும் பெறப்பட்டது. Honeywell Primus 1000 எனும் நவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம்...