புதுக்கோட்டையில் இராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள இரண்டு ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வையாபுரி எனும் துரை வைகோ தலைமையில் நடந்தது, நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையான 15 வருடக் கோரிக்கை புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய இரண்டு பகுதிகளில் பகல் நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரண்டு இரயில்வே கேட்டைக் கடந்து செல்லும்போது, உரிய நேரத்தில் தமது நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்தப் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இரயில்வே துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ...
சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த படைப்புகளில் சிறந்த கலைஞர்களுக்கும், சிறந்த நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் அரசியல் காரணமாக இருந்த நிலையில், சமீப காலங்களில் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022 ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 7 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகளை தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பிப்ரவரி மாதம் 13-ஆம்தேதி, துணை முதல்வர் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூபாய்.2 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூபாய்.1 லட்சமும், 3 மற்றும் சிறப்புப் பரிசாக ரூபாய்.75 ஆயிரமும் வழங்கப்படும். மகளிர் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்...