கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். குறு விவசாயிகளுக்கு ரூபாய் .50,000 வரை பயிர்க்கடன்கள் -முழு தள்ளுபடி. சிறு விவசாயிகள் - 50 சதவீதம் கடன் தள்ளுபடி 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கை. “5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி...” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள்,இன்று ரூபாய் 50,000 வரை மட்டும்”என அறிவிப்பு அதிலும் மே 2025-பிப்ரவரி 2026 என்று கால அளவீடு செய்தது தான் இது ஏமாற்றம் இல்லையா? 50 சதவீதம் தள்ளுபடி இல்லை ரூபாய் 50,000 மட்டுமே கால அளவு கட்டுப்பாடு வேறு உள்ள நிலையில் பயனடையும் உண்மை விவசாயிகள் யார் என்பது இனி மேல் தான் தெரியும். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வி...
ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டு வந்தார்கள். அந்த செப்பேடுகளை தமிழ்நாடு கொண்டு வரவேண்டும் என பேசுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் எனத் தெரிய வேண்டாமா? இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும். இந்த ஊராட்சியில் ஆனைமகானம், மஞ்சவாடி, ஒர்குடி, பூலாங்குடி, ஆனைமங்கலம், என தேவூர் அருகில் உள்ள பழமையான கிராமம் கி.பி. 985 ஆம் ஆண்டில் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் . இன்றைய இந்தோனேசியப் பகுதியான 'ஸ்ரீவிஜய' நாட்டின் சைலேந்திரகுல மன்னரான மாற விஜயதுங்க வர்மன், தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டுகிறார். இராஜராஜ சோழன், அந்த பௌத்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். தந்...