முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பாஜகவின் வரலாற்றில் தலைவராக அண்ணாமலை பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதது

பாஜகவில் இருந்து விலகிய புதிய பரினமத்தில் உறுவான தலைவர் கே அண்ணாமலையின் புதிய இயக்கம் ஒரே லிங்க் மட்டுமே அதில் எழுட்சியாக 17  லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளனர், இது கடந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட அதிகம் தமிழ்நாடு பாஜக வின் தலைவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் தான், ஒரே பரபரப்பு. திரும்பிப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியம் ஆன டெல்லி தேசியத் தலைமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பார்வையும் மக்கள் தலைவராக உறுவான கே.அண்ணாமலை என்ற தனித் தலைவர் பக்கமே  இப்போது திருப்பியிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, மூன்று தினம் முன் "வீ தி லீடர்ஸ்" (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் களமாட உள்ளார் பொதுத்தேர்தலில் தங்களது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்ததுமே அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்புத் தான் ஏற்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக வெளியாகி வரும் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைமையை அ...
சமீபத்திய இடுகைகள்

தமிழக முதல்வரைச் சந்தித்த தொழிலதிபர்கள்

தமிழ்நாடு முதலமைச்சரை இன்று இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் ஆர். வரதராஜன்,  ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர்  ராஜ்ஸ்ரீ பதி,  சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி,  பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம். சில்வெஸ்டர்,  EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின்  Chief Strategy Officer  ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

ஏழைகளுக்கு அதிகாரமளித்த ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின்...

பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் 10 ஆண்டுக் கொண்டாட்டம்

பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் 10 ஆண்டுகாலத்தைக் குறிக்கும் கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது மகப்பேறு பெண்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையிலான நாட்டின் முன்னோடி முன்முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 10 ஆண்டு காலம் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் நாளை மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்குகிறார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்தின் கீழ் உள்ள ஒன்பது உறுதியளிக்கப்பட்ட இலவச சேவைகள் குறித்தும், மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மகப்பேறு பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விழிப்புணர்வு, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் 10 ஆண்டுகால பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு...

லக்னோவில் புதிய பிராந்திய வானிலை மையத்தை மத்திய அமைச்சருடன் முதல்வர் திரந்து வைத்தார்

லக்னோவில் புதிய பிராந்திய வானிலை மையத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இணைந்து தொடங்கி வைத்தனர். லக்னோவில் புதிய மண்டல வானிலை மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வானிலை ஆய்வு உட்கட்டமைப்பு பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது நாடு முழுவதும் துல்லியமான, வானிலை முன்னறிவிப்பு சேவைகளை அளிப்பதாக தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்கள், பேரிடர் மேலாண்மை முகமைகள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள், விமானப் போக்குவரத்துத் துறையினர் ஆகியோருக்கு வானிலை சேவைகள் வழங்கப்படும் உரையையே மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 17 டாப்ளர் வானிலை ரேடார்கள் மட்டுமே இருந்ததாகவும், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேற...

தர்மேந்திரப் பிரதானுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா டில்லியில் போராட்டம்

காக்ரோச் ஜனதா பார்ட்டி  இந்தியாவின் தற்போதைய அரசியல், வேலையின்மை மற்றும் ஊழல் போன்றவற்றை எதிர்த்து இளைஞர்களால் இணையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி  அரசியல் இயக்கம். மே 2026-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கொன்றில் விமர்சகர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் 'காக்ரோச்'  அதாவது கரப்பான் பூச்சி மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்தார்.இந்த வார்த்தையை சாதகமாக எடுத்துக்கொண்ட அரசியல் தகவல் தொடர்பு வியூகவாதியான அபிஜித் தீப்கே  நையாண்டி கட்சியை டிஜிட்டல் தளத்தில் தொடங்கினார். 'கரப்பான் பூச்சி' என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் சாதாரண மக்களின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாற்றப்பட்டது. ஜூன் 2026-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்  கடந்த சில ஆண்டுகளாகவே ஊழல் நிறைந்த நபராக உள்ள தர்மேந்திரப் பிரதான் பதவி விலகல் தான் தீர்வு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவ...