முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சி இ ஓ வாக ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்

இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா முதல் தலைமைச் செயல் அதிகாரி CEO வாக 2026 செப்டம்பர் 2 ஆம் தேதி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ராமர் கோயிலில் ஏற்பட்ட உண்டியல் காணிக்கை முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாரர இப்பதவிக்காக வந்த 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான குழு பரிசீலித்து இவரைத் தேர்வு செய்தது. ராமர் கோயில் வளாகத்தின் நிதி மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகச் செயல்பாடுகளை இவர் கவனிப்பார்.  இந்திய விமானப்படையின் மிக முக்கிய பிரிவான மேற்கு விமானப்படைப் பிரிவின் தளபதியாக (AOC-in-C, Western Air Command) பணியாற்றினார். எல்லையில் வான்வழி மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையை முன்னின்று வழிநடத்தியவர். 1986-ல் போர் விமானியாக (Fighter Pilot) இணைந்து, சுமார் 38 ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றி 2026 ஆம் ஆ...
சமீபத்திய இடுகைகள்

சிங்கை ஜி.இராமச்சந்திரன் TANSIM தலைவராக நியமனம்

சிங்கை ஜி.இராமச்சந்திரன் என்பவர் கோவிந்தராசு மகன்  இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11, 2026 ஆம் தேதி அன்று தவெகவில் இணைந்தவருக்கு, மூன்றே வாரங்களில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக (TANSIM Chairman) பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.ஜூலை 2026 ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தவர், ஆகஸ்ட் மாதம் தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மார்ச் 2016 ல் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் மாணவர் அணிச் செயலாளராகவும் பணியாற்றினார். 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி கண்டார் டிசம்பர் 11, 1987 அம் தேதி  கோயம்புத்தூரில் பிறந்த...

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் வெளியிட்ட சுற்றறிக்கை அரசாணையாக மாறுமா?

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் அரசு அலுவலகங்களில் பணம் கொண்டு வரும் ஊழியர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் -என தமிழ்நாட்டில் முன்னுதாரணமாக சுற்றறிக்கை! சமீபத்தில் உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் பணி நேரத்தில் வைத்லிருக்கலாம் என பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சர்க்குலர் தற்போது பேசு பொருளாகிறது,  "பணத்தைப் பதிவு செய்யத் தவறினால் ஊழல் குற்றச்சாட்டு" - உயர் நீதிமன்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை  சமீபத்தில் 38 அலுவலகங்களில் ரூபாய் .1.18 கோடி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் ஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல்; செய்த நிலையில் ஜூலை மாதம் மட்டும் 24 பேர் கைது - அதன் பின்னணியில் வெளியான இந்த சுற்றறிக்கை! தற்போது பேசு பொருளாகிறது,  தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், ஐ.ஏ.எஸ்., அதிரடியான சுற்றறிக்கையௌ பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் தாங்கள் கொண்டு வரும் பணத்தின் மூலத்தையும் தொகையையும் கட...

தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை சட்டமன்றத்தில் இன்று அறிமுகப்படுத்தி நிறைவேற்றினார் அமைச்சர் கீர்த்தனா,  தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் இன்று 2 செப்டம்பர் 2026 ஆம் தேதி முறைப்படி அறிமுகப்படுத்திய நிலையில் அவையில் நிறைவேறியது, மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், அவற்றுக்கான உரிமங்களைப் பெறுவதற்கும் நிலவும் காலதாமதத்தைக் குறைத்து, "தொழில் செய்வதை எளிதாக்கும்"  நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தம் ஆன்லைன் மற்றும் ஒற்றைச் சாளர  முறையை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு உரிமம், மற்றும் மீண்டும் புதுப்பித்தல்  அனுமதிகள் பெற நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விதிமீறல்களைத் தடுக்கவும், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக உரிமங்களை எளிதா...

கைலாஷ் யாத்திரை காணாமல் போன ஓய்வு நீதிபதியைக் கன்டறியும் நிலை அறிக்கை 8 நாளில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு டில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் முன்னர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் இந்திய நீதித்துறையில் ஏறக்குறைய 34 ஆண்டுகள் நீடித்த ஒரு சிறப்பான பணியைக் கொண்டிருந்தாா். 23 ஜூலை 2025 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். தற்போது அவர் தமிழ் யாத்ரீகா்கள் குழுவின் ஒரு பகுதியாக நேபாளத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் எடுக்கப்பட்ட ஒரு குழுப் புகைப்படம், அவா் அக்குழுவுடன் இருந்ததை உறுதி செய்கிறது. 26 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை வேளையில், அவா் தனது மனைவிக்கு செல்லுலர் வாட்ஸ்அப் அழைப்பு விடுத்தாா், அதன் பிறகு வேறு எந்தத் தொடா்பும் ஏற்படவில்லை. திமுரேயில் உள்ள நேபாள ஆயுதப் பாதுகாப்புப் படை எல்லைச் சாவடிக்கு அருகே மீட்கப்பட்ட, மற்றொரு பேருந்தில் பயணித்தவா்கள், நீதிபதி சிவஞானத்தின் பேருந்து தங்களது பேருந்திலிருந்து சுமாா் 100-200 மீட்டா் தொலைவில் மட்டுமே இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா். எனவே, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரும் எங்கள் சங்கமும் மிகுந்த...

IIS குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளின் பயிற்சி நிறைவுப் பட்டமளிப்பு விழா

ஐஐஎஸ் அதிகாரிகள், நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கிறார்கள்: தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி, இன்று (01.09.2026) 2009, 2023, 2024 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவையும் பட்டமளிப்பு விழாவையும் நடத்தியது. ஐஐஎம்சி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு முதன்முறையாக ஐஐஎஸ் பயிற்சிப் பெறுபவர்களுக்கு முதுகலைப் பட்டங்களை வழங்கியதன் மூலம், இந்த விழா ஐஐஎம்சி-க்கும் இந்தியத் தகவல் பணிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது. இந்த விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் பேசுகையில், மக்கள் தொடர்பு என்பது நிர்வாகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். அது மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பரிணமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தவறான தகவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த திருப்புமுனையாகவும் உருவெடுத்து வருகிறது என்று அவ...

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2026 செப்டம்பர் 01) புதுதில்லியில் 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்தரச் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தின் போது, ​​பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோருக்கு, இந்த நிறுவனங்களின் முக்கிய சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி, தயாரிப்புத் திறன்களை மேம்படுத்துதல், மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரித்தல், முக்கியத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார். தமது உரையில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில் சூழலமைப்பை உருவாக்கும் அதே வேளையில் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்...