கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று ஆகஸ்.1 ல் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காட்சி! இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்! "இயற்கை யாருக்கும் சொந்தமானதல்ல.." கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன, இந்த நேரத்தில் அதிக நீரைத் தேக்கினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம்..! ''தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக..'' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தகவல் "கபினி அணை நிரம்பி வருகிறது. அணை நிரம்பியதும் நீரை வெளியேற்ற வேண்டும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை வெளியேற்றக் கூடாது என்று போராடும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் . வேண்டுகோள். "கபினி அணையின் நீர் இருப்பு குறித்த தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் வழங்கி வருகின்றனர். அணைக்கு வரும் நீரின் அளவு (வரத்து)...
இனித் தேர்வு வினாத்தாள் வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை: 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை , ரூபாய் 10 கோடி அபராதம் பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் வெளியாகி மோசடி , ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட "பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்தச் சட்டம், 2026" நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தற்போது சட்டமாகியுள்ளது. வினாத்தாள் மோசடியாக வெளியாகுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு: 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூபாய் 50 லட்சம் வரை அபராதமும் விதிக்க . ஒழுங்கமைக்கப்பட்ட வினாத்தாள் வெளியிடும் கும்பல்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்வு மோசடிகளுக்கு: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடி அபராதம். தேர்வு நடத்தும் சேவை நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் ரூபாய் 5 கோடி வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை தேர்வு பணிகளில் இருந்து தடை. விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு விசாரணைக் குழுக்க...