கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை கான்பூர் - லக்னோ விரைவுச்சாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக, ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திட்டத்தைச் செயல்படுத்திய 'பிஎன்சி இன்ஃப்ராடெக்' நிறுவனத்தை எதிர்கால ஏலங்களில் பங்கேற்கத் தடை விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ரூ.3 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட மேற்பார்வையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 முதன்மைப் பொறியாளர்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய திட்ட இயக்குநர் முன்பணி புரிந்த துறைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் மற்றும் தற்போதைய திட்ட இயக்குநர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஐஐடி கரக்பூர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டி தலைமையிலான குழு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகள் முடியும் வரை ச...
மத்திய அமைச்சரவைச் செயலாளரான டி.வி. சோமநாதன் IAS பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அமைச்சரவைச் செயலாளராக டி.வி. சோமநாதன் பணியாற்றுகிறார். இதேபோல சிக்கிம் ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் மத்திய உள்துறைச் செயலாளராக பணியாற்றுகிறார். இவ்விரு அதிகாரிகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிற நிலையில், டி.வி.சோமநாதன், கோவிந்த் மோகன் இருவரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தப் பதவி நீட்டிப்பு ஓராண்டு காலத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக உயரிய நிர்வாகப் பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளர் எனும் Cabinet Secretary யாகப் பணியாற்றும் புகழ்பெற்ற IAS ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடியவிருந்த இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு 30 ஆகஸ்ட் 2027 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தியாவின் 33வது அமை...