முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கோவில் பூசாரி மரணத்தில் காவல்துறை மீது குற்றம் சாட்டிய குடும்பம் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை

மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பரமசிவம் 52 வயதுடைய ஒரு கோவில் பூசாரி, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் வாகனம் நிறுத்துவதில்  பரமசிவத்திற்கும் அவரது அண்டை வீட்டாரான மற்றொரு தரப்பினருக்கும் இடையே வண்டி நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பாக சிந்தாமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சிறிய தகராறு வழக்கு விசாரணைக்காகவே அவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுச் சென்றார்.தற்போதைய சர்ச்சை கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவத்தை, சிந்தாமணி காவல் நிலைய காவல்துறை கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு காரணமாக ஆகஸ்ட் 16, 2026 அன்று அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், காவல்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர் பரமசிவம் தனது வீட்டில் தற்செயலாகக் கீழே விழுந்து காயமடைந்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தான் உயிரிழந்தார் என காவல்துறை தரப்ப...
சமீபத்திய இடுகைகள்

கோயம்பத்தூர் மாநகராட்சி 97 வது வர்டு வரித் தண்டலர் லஞ்சம் வாங்கிய போது கைது

கோயம்பத்தூர் மாநகராட்சி வரித் தண்டலர் லஞ்சம் வாங்கியபோது கைது: ரூபாய் .40,000 லஞ்சப் பணத்துடன் பிடிபட்டார். கோயம்பத்தூர் தெற்கு மண்டலம் 97வது வார்டு வரித் தண்டலர் யமுனா தேவி, மினி தியேட்டர் கட்டுவதற்கு வரி விதிப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் பிடிக்கப்பட்டார். கோயம்பத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம்  சுந்தராபுரம் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் வைத்து லஞ்சம் பெற்ற நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.  மாநகராட்சியின் 97வது வார்டு, தெற்கு எல்லையில் உள்ளது. இங்கு குடிநீர் குழாய் கசிவு, தெருவிளக்கு பற்றாக்குறை, குப்பை சேகரிப்பு ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன. இந்த நிலையில், வார்டு மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய  நிலையில் உள்ள மாநகராட்சி வரித் தண்டலர் மாறாக தனது பணியை துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெற்ற சம்பவம் அப் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 97வது வார்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் மினி த...

சேரனூரில் கிடைத்த பழமையான மன்னர்கள் கால நாணயங்கள்

சேரனூரில் கிடைத்த பழமையான மன்னர்கள் கால நாணயங்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஊராட்சி ஒன்றியம் குடுமியான்மலை அருகிலுள்ள சேரனூர் ஊராட்சி  கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊரணி அமைக்க மக்கள் மண் வெட்டிய போது பழைய கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவாய் துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இவ்விடத்தை இந்திய தொல்லியல்  (ASI) மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை சார்பாக அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடுமியான்மலை மற்றும் சேரனூர் ஆகிய இரண்டு ஊர்களும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, தொன்மை வாய்ந்த மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளாகும், குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இதன் முந்தைய பெயர் "திருநலக்குன்றம்" என்பதாகும். இங்குள்ள சிஹாகிரீஷ்வரர் ஆகிய சிவன் கோயிலில், சிவலிங்கத்தின் உச்சியில் 'குடுமி'  காணப்படுகிறது. இதனால் இறைவன் 'குடுமிநாதர்' என்றும், இவ்வூர் 'குடுமியான்மலை' என்றும் பெயர் பெற்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்ல...

ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி  நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை ! கள்ளக்குறிச்சியில் விபத்து இழப்பீட்டுத் தொகையான ரூபாய் .38.79 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரது மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்தத் தண்டனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. மோசடித் தொகை  ரூபாய் .38.79 லட்சம்! நீதிமன்ற ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறை! மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை! விதித்து தீர்ப்புகள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை (MCOP வழக்குகளில் ) போலி ஆவணங்கள் மற்றும் நீதிபதியின் போலிக் கையெழுத்து மூலம் மோசடி செய்த முன்னாள் நீதிமன்றப் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை நீதித்துறை நடுவர் நீதிம...

தாராபீத் நகரில் 17 ஆம் தேதி அதிகாலை தனியார் ஹோட்டல் தீ விபத்து பலி 7 பிரதமர் நிவாரணம்

மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம்  மாவட்டம் தாராபீத் நகரில் 17 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை ஒரு தனியார் ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தாராபீத் காளி கோயில் அருகே உள்ள நான்கு மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில் அதிகாலை 4:30 முதல் 5:00 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு  காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததால், நச்சுப் புகை வேகமாக பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களாவர்.  தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஏணிகள் மூலம் கட்டிடத்தில் சிக்கியிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டனர் காயமடைந்தவர்கள் உடனடியாக ராம்பூர்ஹத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்...

தஞ்சாவூர் ஒரு சட்டவிரோதப் போராட்டமும் மூன்று குற்றங்களும்.- உண்மை அலசல்

தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விசிக வின் ஃப்ளக்ஸ் பேனர்கள், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூட்டணிக் கட்சியாக ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிகவினர், அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் செயகின்றனர், இதுவே முரணாகும், எங்கள் கட்சியின் பேனரைக் கிழித்துவிட்டார்கள் என விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். அதற்கு எப்போதுமே காவல்துறை அனுமதி கொடுக்க மாட்டார்கள், எனவே அனுமதி இல்லாமல் நடந்த அந்த மறியலைக் கலைக்கவே காவல்துறையினர் அங்கு வருகின்றனர், ஒரு இளைஞன்,சாலை மறியல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேற பைக்கில் இருந்தபடியே முன்னேற  என்ன அவசரவேலையோ !  அல்லது மாற்று வழி இல்லையோ தெரியவில்லை!  அவன்  விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 26) மற்றும் திருக்கனூர்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 27)  மறியலுக்கு ஆதரவு தரப்பு, அந்த இளைஞனோடு ஏதோ வம்பாகப் பேச, பதிலுக்கு இளைஞனும் பேச, மையமாக நுழைந்த  காவலர்களும் ஏதோ பேச. அந்த ஏதோ அது ஏதோ என்ற ஹம்மிங்கின் பின்னணி தான் எப்போதுமே F.I.R. ன் நேரமும...

பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார். தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது தேசிய அளவில் 65 நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நியமனங்களின் முக்கியப் பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேசியத் தலைவர்: நிதின் நபின் தேசியப் பொருளாளர்: பியூஷ் கோயல் (மத்திய அமைச்சர்) தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர்: பி.எல். சந்தோஷ் இவர் பதவக நீடிக்கிறார் சமூக ஊடகப் பொறுப்பாளர் தீபக் மஸ்கே இவர் அமித் மால்வியாவுக்குப் பதிலாக நியமனம் ஊடகப் பொறுப்பாளர் அனில் பலூனி மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 8 பேர் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டேசுனில் பன்சால்பிப்லாப் குமார் தேவ்அருண் சிங் உள்ளிட்டோர ஆவர் தேசியத் துணைத் தலைவர்கள் 13 நபர்கள் அதில் முன்னாள் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளடக்கிய 13 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்....