நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல் இந்திய ரயில்வே பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் 135 ரயில் விபத்துகள் நடந்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் 16 விபத்துகள் (88 சதவீதம் குறைவு) மட்டுமே நடந்தன. 2026-27-ம் நிதியாண்டில் (2026 ஜூன் வரை) 2 விபத்துகள் நடந்துள்ளன. பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவினம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு ரூ.39,200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27-ம் நிதியாண்டில் ரூ.1,20,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 2026 ஜூன் 30 வரை 10,395 லெவல் கிராசிங்குகளில் இண்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களில் விழிப்புணர்வை மேம்படுத்த அனைத்து எஞ்சின்களிலும் விழிப்புணர்வு கட்டுப்பாட்டு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளன. மூடுபனி பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் அடிப்பட...
நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. புதிய அடிப்படை ஆண்டை கணக்கில் கொண்டு, மாதாந்திர விலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள், 434 நகரங்களில் உள்ள 1,465 கிராமப்புற சந்தைகள், 1,395 நகர்ப்புற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, மின்னணு வர்த்தகம் அல்லது இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை கண்டறியும் வகையில் தலா 25 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகைக் கொண்ட 12 நகரங்களில் 12 இணையவழி சந்தைகளும் இந்த தரவு சேகரிப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் மொத்த எடை கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் நுகர...