நால்வர் பலியான சிவகாசி செங்கமலபட்டியில் சட்ட விரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா செங்கமலப்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடிவிபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், அவரது மகன்கள் ராம்பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமான அனுமதியின்றி மறைமுகமாக ஒரு தகர ஷெட் அமைத்து பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர், இன்று காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாஸ்பரஸ், கந்தகம் உள்ளிட்ட வேதிப்பொருட்களின் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது வெடி விபத்தின் வீரியம் மிகவும் அதிகமாக இருந்ததால், பட்டாசு தயாரித்த அந்த தகரக் கொட்டகை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது, விபத்தில் சிக்கி இராம்பிரகாஷ் (வயது32), இன்னாசி முத்து (வயது 44), ஐயப்பராஜ் (வயது 37) மற்றும் பாண்டித்துரை (வயது 35) ஆகிய நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர...
பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி தற்போதைய இந்திய மத்திய அமைச்சரவையில் மத்தியக் கல்வி அமைச்சராகக் (கூடுதல் பொறுப்பு) ஏற்றார், நீட்-யுஜி தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து தர்மேந்திரப் பிரதான் பதவியை ராஜினாமா செய்ததால், நேற்று இவருக்கு இக்கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக, இவர் வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராக கல்வித் துறைக்கு கூடுதலாகப் தற்போது பொறுப்பு வகிக்கிறார் கர்நாடகாவின் தார்வாட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலம் விஜயபுரால் 27 நவம்பர் 1962 ல் பிறந்து, ஹூப்பள்ளியில் உள்ள கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய பிரகலாத் ஜோஷி தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் கர்நாடகாவின் ஹூப்ளி இத்கா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தைப் பெற்றார். நாடாளு...