முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார்

டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உசசநீதிமன்னத்தின் வழக்கறிஞருமான  முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஆவார். சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக  2026 செப்டம்பர் 17 ல் அவர் 79வது வயதில் காலமானார்,  1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழகப் பிரதிநிதியாக இரண்டு முறைகள் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். மத்திய இணை அமைச்சர்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில், 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக திறம்படச் செயல்பட்டார். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாகவும் செயலாற்றியுள்ளார். அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வருவதற்கு காரணமாக ஆர்...
சமீபத்திய இடுகைகள்

பள்ளிக்கல்வித் துறையில் திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு சோதனையும் வழக்கும்

திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில் சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில...

நடிகர் விஜய் சேதுபதியின் விமர்சனம் அரசியல் சினிமா எனும் இரட்டை வேடம்

சமீப காலத்தில் மக்களின் கலாச்சார பன்பாடடுக்கு கேடான பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவாய் ஈட்டும் நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடையே பேசும்போது, "நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும் போது அதிகாரம் வரும், அதுதான் போதை" என்றார் அதற்கு முன் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகம் அல்லது கஃபே (Café) திறப்பு விழாவின் போது விஜய் சேதுபதி, போதைப்பொருள் குற்ற வழக்கு தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும்,  இயக்குனர் அமீர் மூவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட பழைய காணொளிக்காட்சி மற்றும் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்படுகின்றன. திரைப்படத் தொடர்பு: இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான 'இறைவன் மிகப்பெரியன்' திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தின் மற்றும் உணவகக் கூட்டாண்மை வணிகத்தின் அடிப்படையில் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட  நிலையில் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானதை அடுத்து, அவருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் சமூக வல...

வால்பாறை தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதாகரின் ஜாதிச் சான்றிதழைச் சரிபார்க்கக் கோரிய வழக்கில் உரியவர்கள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

வால்பாறை தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதாகரின் ஜாதிச் சான்றிதழைச் சரிபார்க்கக் கோரிய வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான ஜாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் குழு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வால்பாறை தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதாகரை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்தார். அதில் சட்டமன்ற உறுப்பினர் ஆன சுதாகர் தனது வேட்புமனுவில், தான் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் (SC) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் தீவிரமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்றும், சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் மற்றும் திருமணம் செய்துகொண்ட அவரது தந்தை ஆரோக்கியத்தின் உடல் கிறிஸ்தவ முறைப்படி கல்லறைத் தோட்ட்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  சட்ட வாதத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதங்களைத் தவிர வேறு மதங்களைப் பின்பற்றுபவ...

டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்,  தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ்  மீது   அறப்போர் இயக்கம்   கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது முதற்கட்ட நடவடிக்கை அரசு பணி சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்த ஊழல் முறைகேடு செய்ய காரணமான ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.     தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாகவை மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டு சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அறப்போர் இயக்கம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது தற்போது அதிர்ச்சியாகும்,  இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...

மேகமலை - மாஞ்சோலை விவகாரம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் நடத்திய அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டம்

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ...

உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் கார் பந்தயம் அதன் துவக்கம் தான் லண்டன் போட்டி

 இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகரில் நடைபெற்ற புகழ்பெற்ற Le Mans Cup கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் ‘ரேசர் ஏகே’ (Racer AK) அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற Silverstone Motor Racing Circuit மைதானத்தில் இந்த பந்தயம் நடைபெற்றது.  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், அஜித்தின் அழைப்பை ஏற்று கார் பந்தய மைதானத்திற்குச் சென்றார். அங்கு அஜித்குமாரை கட்டியணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.  பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக அஜித் குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அஜித்குமார் தனது பந்தயக கார் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த மிகக் கடுமையான சர்வதேச 'Michelin Le Mans Cup' பந்தயத்தில், அஜித்குமாரின் பந்தய அணி (Racer AK Racing) 3-வது இடத்தைப் பிடித...