ஐஐஎஸ் அதிகாரிகள், நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கிறார்கள்: தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி, இன்று (01.09.2026) 2009, 2023, 2024 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவையும் பட்டமளிப்பு விழாவையும் நடத்தியது. ஐஐஎம்சி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு முதன்முறையாக ஐஐஎஸ் பயிற்சிப் பெறுபவர்களுக்கு முதுகலைப் பட்டங்களை வழங்கியதன் மூலம், இந்த விழா ஐஐஎம்சி-க்கும் இந்தியத் தகவல் பணிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது. இந்த விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் பேசுகையில், மக்கள் தொடர்பு என்பது நிர்வாகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். அது மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பரிணமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தவறான தகவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த திருப்புமுனையாகவும் உருவெடுத்து வருகிறது என்று அவ...
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2026 செப்டம்பர் 01) புதுதில்லியில் 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்தரச் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோருக்கு, இந்த நிறுவனங்களின் முக்கிய சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி, தயாரிப்புத் திறன்களை மேம்படுத்துதல், மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரித்தல், முக்கியத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார். தமது உரையில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில் சூழலமைப்பை உருவாக்கும் அதே வேளையில் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்...