முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு -அலசல் ஆய்வுக் கட்டுரை

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள  அறிவிப்பு !?, -அலசல் ஆய்வுக் கட்டுரை,.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை (Demand No. 37) மீதான விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புத் தாக்கல் செய்த ஆகஸ்ட் 31, 2026 அன்று  இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டதில். கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கள்ளச்சாராய உற்பத்தியை முழுமையாக ஒழிப்பதற்காகவும், போலி மதுபானப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு உத்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன, கள்ளச்சாராயத் தொழிலை கைவிட்டு, திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் பொருளாதார மறுவாழ்விற்கான தனிநபர் நிதியுதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கள்ளச்சாராய நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தடுக்கவும் காவல் மற்றும் ஆயத்தீர்வை துறைகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகனங்கள் மேம்படுத்தவும். டாஸ...
சமீபத்திய இடுகைகள்

நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் துவக்கம்

நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், நேபாள்கஞ்ச் சாலை-நான்பாரா-பஹ்ரைச் அகல ரயில் பாதை, மின்மயமாக்கல் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தனர். 56.15 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை சுமார் ரூ.730 கோடி செலவில், அகலப் பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நான்கு ரயில் சேவைகளும் நேபாள்கஞ்ச் சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இதற்கான நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவும் நேபாளமும் வலுவான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்தடையும் பயணிகளுக்காக, ரயில்வே ஏற்பாடுகளைச் செய்து ...

தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்த இணை அமைச்சர்

மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு, உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்தார். மரபணு மாற்றப்பட்ட பயிர் புரட்சியில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் கூறினார். பிரிக்-தேசிய வேளாண் உணவு உயிரி உற்பத்தி நிறுவனத்தில் நடைபெற்ற, உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கிரீன் ஃபோர்ஜ் மையம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பரிசோதனை செய்யவும், வெவ்வேறு பகுதிகளுக்கு அவற்றின் பொருத்தத்தை மதிப்பிடவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்றும் கூறினார்.  மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வளர்ப்பதற்கும் பரிசோதனை செய்வதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்காக, ஒளி, ஈரப்பதம், வெப்பநிலையின் அளவு, உருவகப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் கொண்ட அறைகளை கிரீன் ஃபோர்ஜ் வழங்குகிறது என்று அவர் கூறினார். ...

ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள்

ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து தவெக அரசின் சீர்திருத்த நடவடிக்கை காவல்துறை மற்றும் DVAC விசாரணைகளை விசாரிக்கும் அதிகாரம்  அரசாணை எண்.259 ன்படி வெளியீடு! தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நோக்கில், 8 சிறப்பு நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-II) அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act, 1988) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை செய்யும் வழக்குகளை விசாரிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை, இந்த நீதிமன்றங்கள் துணை நீதிபதி (Sub Judge) அந்தஸ்தில் இருந்தன. தற்போது, அவை மாவட்ட நீதிபதி (District Judge) அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு, ஊழல் வழக்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கா...

ஒடிஷா பெண்ணை தாம்பரம் பகுதியில் கொன்று பிரியாணி செய்த குற்றவாளி மனிப்பூரில் கைதாகி சென்னையில் விசாரணை தீவிரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த xxxx xx (வயது 42)  இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்,  இவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் வைத்து வேகவைத்து அழிக்க முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மணிப்பூரில் கைது விசாரணை தீவிரம்                    தாம்பரம் கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில்  பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில்  தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாடெங்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (வயது 2...