டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மீது அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது முதற்கட்ட நடவடிக்கை அரசு பணி சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்த ஊழல் முறைகேடு செய்ய காரணமான ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாகவை மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டு சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அறப்போர் இயக்கம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது தற்போது அதிர்ச்சியாகும், இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ...