முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கர்நாடகாவில் மிருக வேட்டையை காரணமாக்கி வனத்துறை நடந்திய மனித வேட்டை

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹானூர் தாலுகா சாக்யா காப்புக்காடு வனப்பகுதியில் 15 ஆகஸ்ட் 2026  சுதந்திரதினத்தன்று மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஜகன்னாததொட்டி அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலம் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி      குமார் (வயது 33) ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும்       லாசர்தொட்டி கிராமம்   மகிமைதாஸ் (வயது 48) துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மைசூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.  இறந்தவர்கள் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், சுயமதப்புக்காகவே சுட்டதாகவும் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது காணாமல் போன மாடுகளைத் தேடி அவர்கள் காட்டிற்குச் சென்றனர் என்றும், வேட்டையாடவில்லை ...
சமீபத்திய இடுகைகள்

நீதிமன்ற பிடியாணையில் கைதான ரமேஷ் விவகரத்தில் லாட்டரி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலையீடு தவறு மன்னிப்பு கேட்க தேவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ரமேஷ் கைது செய்யப்பட்டது கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றத்தால் நிலுவையிலிருந்த வழக்கு பிடியாணையன Warrant அதை காவல்துறை நிறைவேற்றியதே தற்போதைய கைது    மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் மகன் ரமேஷ் சேதுராமன்.  2012-13 ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களைத் தாக்கியதாகவும், சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கிற்காக மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் வழக்கில் ஆஜராகவில்லை என்பதால் , நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணைப்பில் வெளிவர முடியாத பிடியாணையை  பிறப்பித்தது. சுமார் 14 வருடங்களாக உத்தரவு நிலுவையில் இருந்த நிலையில், காவல்துறை சிறப்புப் படை அமைத்து தற்போது இவரைக் கைது செய்தது. இவரது சகோதரி டாக்டர் பிரதீபா  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது தந்தை உருவாக்கிய மருத்துவமனைச் சொத்துக்களை ரமேஷ் அபகரிக்க முயன்றதாகவும், அவரது கைதிற்கு இதுவே உண்மையான பின்னணி என்றும் தெரிவித்துள்ளார்         மதுரை மீன...

உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது

தமிழ்நாடு மாநிலம் சார்பாக உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது  தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் நடக்கும் வழக்குகளை நடத்துவதற்கான புதிய  மூத்த வழக்கறிஞர் வரிசை பட்டியலை அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது. அரசாணை G.O.(Ms.) No.276, Home (Courts-IV) Department, dated 14.08.2026 மூலம், அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் பரிந்துரைத்த 35 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட புதிய வரிசைப் பட்டியலை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த புதிய வரிசைப் பட்டியலில் Attorney General for India, Solicitor General of India மற்றும் அனைத்து Additional Solicitors General உட்பட மொத்தமாக பரிந்துரைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை நடத்த மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான Standard Operating Procedure (SOP) பின்பற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான கட்டணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி செயல்படுத்தப்படும் என்றும் அரசு அந்த அரசாணை மூலம் தெரிவித்துள்ளது .தமிழ்நாடு அர...

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வர் கு.ராமச்சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் தகை சால் பதக்கம்

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!  கு.ராமச்சந்திரன், த/பெ.குழந்தைவேலு 03.03.2026 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முதல்வராக பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் 13.07.2022 ஆம் தேதி முதல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சென்னை நகர சிறப்பு பிரிவு-1, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி அயல்பணியாக விருதுநகர் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் சிவகங்கை, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும், மேலும் திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம் & ஒழுங்கு பிரிவிலும் காவல்துறை உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தில் பிறந்து பள்ளி படிப்பை (வாராப்பூர் மற்றும் TELC புதுக்கோட்டை ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் (B.com & M...