பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். அதிபர் மேக்ரோன் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்குப் பிரதமர் நன்...
தேசிய நெடுஞ்சாலைகளின் மாற்றம் : வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு பலம் சேர்க்கிறது கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரியின் வழிகாட்டுதலின் கீழும், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு புதிய இணைப்பு சகாப்தத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்து, பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தி, போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்📢பைத் தேசிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக அங்கீகரித்து, இணைப்பை விரிவுபடுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைமைப்பின் விரிவாக்கம், சாதனை அளவிலான கட்டுமான வேகம், விரைவுச்சாலைகளின் மேம்பாடு ஆகியவை இந்தியாவின் ...