நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்களின் பட்டியலில் புதிய மசோதாக்கள் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மசோதாக்கள் என மொத்தம் 7 முக்கிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளது.. மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மசோதாக்களின் விவரம் முதலாவது :-வருமான வரி (திருத்த) மசோதா, 2026 (Income-tax Amendment Bill, 2026): முந்தைய அவசரச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் இந்த மசோதா, இந்தியச் சந்தையை வலுப்படுத்தவும், உலகளாவிய நிலையான மூலதன முதலீடுகளை ஈர்க்கவும், சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. இரண்டாவது :-உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026: இதற்கு முந்தைய அவசரச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி தவிர்த்து) தற்போதைய 33-லிருந்து 37 ஆக உய...
புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'மால்வன்' ஜூலை 22 அன்று கடற்படையில் இணைகிறது இந்திய கடற்படை தமது புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான மால்வனை ஜூலை 22 அன்று படையில் இணைக்கிறது. இவ்விழாவில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் தலைமை தாங்குகிறார். மேற்குக் கடற்படைத் தளத்தின் தலைமை தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலை வகிக்க உள்ளார். கடற்படை உயர் அதிகாரிகள், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகள், முன்னாள் படை வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட மால்வன் கப்பல் நாட்டின் தற்சார்பு தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பலின் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டுமானத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.