சென்னை நுளம்பூரில் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பெண்னை கத்தியதால் தலையில் வெட்டி விட்டுத் தப்பியோடிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாமல் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கட்டைப்பஞ்சாயத்து பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. அதன் பின்னர், பாலியல் வன்கொடுமை முயற்சி செய்து பென்ணை கத்தியால் தாக்கிய முகேஷ் என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் காவலில் எடுத்து மட்டுமே காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அதே போல காவல்நிலையத்திற்கு வரும் புகார்களை முறையாக விசாரிப்பது இல்லை என்ற குற்றசாட்டின் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு ஆய்வாளர் விஜயலட்சுமியை மாற்றி காவல்துறை உயர் அலுவலர்கள் உத்தரவு.
திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் வந்த நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் வந்த கார் எட்டையபுரம் அருகில் விபத்து
திருச்செந்தூர் சென்று திரும்பிய தஞ்சாவூர் நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்று இன்று காலை தஞ்சாவூருக்கு திரும்பிய நிலையில். அந்த காரை நீதிமன்ற ஊழியர் வாசுதேவன் மற்றும் ராமநாதன் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் வந்த போது தூத்துக்குடியிலிருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியதில் விபத்திற்குள்ளான காரின் ஒரு பகுதி லாரிக்குள் சிக்கிய நிலையில் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் வாசுதேவன் ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமசந்திரன், பாதுகாவலர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அது குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் ...