முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி.

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி. சட்டப்பேரவையில் அப்பா எங்கே எனக் கேட்டு சிறு கதை சொன்ன முதலமைச்சர் ரசித்துச் சிரித்த எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தவிர பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என்ன நிலைமை என்பது தெரியாது, ஜேசிடி பிரபாகர் சிறப்பாகவே நடத்துகிறார். மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தம் சொல்லி அதை இணைக்கச் சொல்கிறார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒப்புதலோடு அதை இணைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் நிறைவேற்றுகிறார். குரல் வாக்கெடுப்புக்குப்பின்னே தீர்மானம் நிறைவேறுகிறது. மறுநாள், "புதிய திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை தருகிறார். அதன் பின்னே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகமும், "புதிய திருத்தம், ஏற்புடையதல்ல" என்கிறார். அதற்குப் பின்னர்...
சமீபத்திய இடுகைகள்

திருப்பரங்குன்றம் மலை மீதான தீப வழக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவை நோக்கி நகர்கிறது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது பூர்வீக தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு புதியதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தகவல், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில்,  விசாரணைக்கு வந்த போது இன்று மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.   அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்க் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபத்தூணில்  தீபம் ஏற்ற இரு நீதிபத...

தனியார் இரால் பதப்படுத்தும் ஆலை அமோனியா வாயு கசிவு 7 பேர் உயிரிழப்பு 60 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் கண்ணிகைப்பேரிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையான St Peter's Paul Seafoods Exports நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் இருந்த அளவீட்டு வால்வில் measure valve ஏற்பட்ட பழுது காரணமாக அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 4வது பட்டாலியன் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தமிழ்நாடு அரசு, இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதுடன், ஆலை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் ராஜ்மோகன் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்  அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் தொழில...

கொல்கத்தாவில் 12 வது சர்வதேச யோகா தினத்தில் பிரதமரின் உரை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 12வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவிஜி, ஆற்றல் மிக்க முதல்வர் ஸ்ரீ சுவேந்து அதிகாரி ஜி, மத்திய அரசில் எனது சக ஊழியர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ் ஜி, மேடையில் இருந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும், கொல்கத்தாவில் கூடியிருந்த அனைத்து பங்கேற்பாளர்களும், இந்த யோகா விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும், இந்தியா மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். ஜூன் 21 ஆம் தேதி, பூமியின் சில பகுதிகளில், பகல் மிக நீண்ட நேரம் ஏற்படும் நாள். சர்வதேச யோகா தினத்தின் காரணமாக, ஜூன் 21 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டத்தின் நாளாகவும் மாறியுள்ளது. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து, யோகாவின் அசாதாரண படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில், இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, கிழக்கில் வடகிழக்கு மற்றும் வங்காளம் முதல் மேற்கில் சௌராஷ்டிரா வரை, முழு தேசமும் யோகாவின் ஆற்றலாலும் உணர்வாலும் நிரம்பியுள்ளது. முழு நாடும், முழு உலகமும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது - அதுதான் யோகாவின் ...

60 RTO அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோதனையில் சிக்கிய ரூபாய் .37,81,168 பறிமுதல் வழக்கு

தமிழ்நாடு முழுவதும் 60 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் 114 RTO அலுவலகங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் சென்னை நகரில் (வளசரவாக்கம், தாம்பரம், அண்ணா நகர் போன்றவை), காரைக்குடி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ஆலங்குடி, பெருந்துறை, கோயம்பத்தூர் , மதுரை, மற்றும் தென்காசி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை அதில் கணக்கில் வராத சுமார் ரூபாய் .37.81 லட்சம் ரொக்கம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்தும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.பரமக்குடியில் முதுகுளத்துார் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படும் நிலையில் தணிக்கை செய்ய இடமில்லாததால் ஐ.டி.ஐ., வளாகத்தில் பணிகள் நடக்கிறது. இங்கு வியாழக்கிழமை மதியம் 3:00 மணிக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இர...