காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில் நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல், காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம் காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார். சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும...
புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு பட்டியல் மாணவிகள் தங்கிப் பயிலும் சமூக நீதி விடுதியில் மாணவிகளுக்கு 3 வேளையும் பழைய சாதமும் ஊறுகாயும் தான் உணவாக வழங்கப்படுவதாகவும் . சாம்பார், ரசம், காரக் குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு தட்டில் வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் வந்தார். மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் வரவில்லை. அதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனைக் கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள...