தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்,சந்திரசேகர் தமிழ்நாடு முதலமைச்சராக நாளை மே மாதம் 10, 2026 பகல் 11 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சிபிஐ, சிபிஐ (எம்), ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, ஆளுநர் மாளிகையில் தவெக தலைவரும், சட்டப்பேரவைக்கு குழுத் தலைவருமான ஜோசப் விஜய் இன்று மே 9 அன்று மக்கள் பவனில் நேரில் சந்தித்தார். அப்போது, அவர் கோரிக்கை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் முதல்வராக நியமித்து பதவிஏற்க உத்தரவிட்டார், அவருடன் சில முக்கியத் தலைவர்கள் கே. ஏ. செங்கோட்டையன், புஸ்ஸி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முதல்வருடன் பத்து அமைச்சர்கள் பதவி ஏற்கிறனர். விழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாகசா செய்து வருகிறது. பிரச்சினைகளும், சவால்களும் தான் ஒரு மனிதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன! தவெக கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை தமிழக வெற்...
ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம் முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த மூத்த ராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றுள்ளார். டிசம்பர் 14, 1985 அன்று 'கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவின் 8-வது படைப் பிரிவில், அவர் ...