தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பெற்ற ஓய்வு பெறும் கடைசி மாதத்தில் பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவே வழங்கப்படும். 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீதம் பங்களிப்பு பணம் பிடித்தம் செய்து பணிக்காலத்தில் எடுக்கப்படும். ஓய்வூதியதாரர் திடீரென இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு ஓய்வூதியம் அரசு பணியாளர்களுக்கு 22 வருடம் முடிந்து, இந்த ஆட்சியில் கடைசி மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வந்த அறிவிப்பு இது, காப்பா!இல்லை முழுமையான ஆப்பா! என்பது குறித்து ஒரு விரிவான பார்வை பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் எனும் ஓய்வூதியம் CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது அவர்களின் பிடித்தம் செய்து செலுத்திய 10 சதவீதம் அரசு செலுத்திய 10 சதவீதம் இதற்கு வட்டி 8 சதவீதம் எல்லாம் சேர்த்து, சுமாராக ர...
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். வெனிசுலா கம்யூனிச நாடு. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் எப்போதுமே ஆகாத நிலை. இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல்கள் இருந்து வந்த வண்ணமுள்ளன. வெனிசுலா மீது பல வர்த்தகத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகவே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த முறை அதனை நடத்தியம் விட்டார். வெனிசுலா தலைநகர் கராகஸிஸ் வெடிகுண்டு சத்தமும் பயங்கர தாக்குதல் சத்தமும் கேட்பதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் பறக்கும் சத்தங்கள் கேட்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணுவ நடவடிக்கையை சுட்டிக்காட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கொலம்பியா, கியூபா...