ஆசை துறந்த புத்தன். ஆசை கொண்ட பிக்குகள்! இது மஹாயானமா? ஹீனயானமா? தாய்லாந்தில் இருந்து ரூபாய் .100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்த பிக்குகள் கொழும்பு விமானநிலையத்தில் கைதாகினர். வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, தாய்லாந்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய 22 புத்த பிக்குகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பைகளில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் 110 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின் பையில் இருந்தும் தலா 5 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் .100 கோடி ஆகும். இதையடுத்து, 22 புத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புத்தவிஹா...
செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு திருச்செந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு மதுரை பயணம் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாளை அதிகாலை திருச்செந்தூர் செல்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்."ஞானச் செருக்கின் வடிவேல்! - நல் ஞாலத் தவர்உயர் வடிவேல்! ஈனப் பிறவி அறுக்கும் - எங்கள் ஈசன் மகனடிப் போற்றும் வடிவேல்! தூய அடியவர் நெஞ்சே - நிலை தோன்றும் பிரணவ மந்திர வேல்! மாயச் சுழலை அறுக்கும் - இந்த மாண்புயர் ஞானத்தின் வேல்! அசுரனை அழித்த செந்தூர் வடி வேல் " தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது தொண்டர்களால் வழங்கப்படும் முருகன் வேல்-ஐ கையில் ஏந்தி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். குறிப்பாக, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ரோடு, காரைக்குடி ஷோக்களில் வேல் மற்றும் கட்சிக் கொடியுடன் அவர் மக்களை சந்தித்த காட்சிகள் உண்டு . இது அவரது காணிக்கை வேல் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய குறியீடாகப் பார்க்கப்படுகிறது வேலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, காரைக்குடி போன்ற இடங்களில் தொண்டர்கள் விஜய்க்கு வேல், வாள், ம...