முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திருவரங்கன் அறக்கட்டளை சொத்து திருட்டிலிருந்து தடை வழங்கிக் காப்பாற்றிய உயர்நீதிமனறம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைணவத் திருத்தலங்களில் தொன்மையானதும், முதன்மையானதும், பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் "மெய்க்கீர்த்தி" போல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  ஸ்ரீரங்கத்தின் மூலவரான ஸ்ரீரங்கநாதர், திருப்பாற்கடலில் இருந்து பிரம்மதேவனால் வழிபடப்பட்டு, பின்னர் சூரிய வம்சத்து மன்னர்களான இக்ஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்டவர் எனும் ஆன்மீக வரலாறும் உண்டு.  ஸ்ரீராமர் இந்த ரங்க விமானத்தை விபீஷணனுக்குப் பரிசளிக்க, இலங்கை செல்லும் வழியில் காவிரி ஆற்றின் நடுவிலுள்ள தீவுப்பகுதியில் இதை நிறுவினார். காலப்போக்கில் மணலில் புதைந்த இந்த ஆலயத்தை, கிளிச்சோழன் (தர்மவர்ம சோழனின் வம்சாவளி) ஒரு கிளியின் சுலோகத்தைக் கேட்டு கண்டறிந்து மீண்டும் புதுப்பித்ததாகக் வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் , பாண்டியர்கள் , ஹொய்சளர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றையும், மன்னர்களின் தானதர்மக் கொடைகளையும் மெய்க்கீர்த்திகளாகப் பறைசாற்றுகின்றன. பொது ஆண...
சமீபத்திய இடுகைகள்

சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ATM கொள்ளையர் அடகாசம்

ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச்  மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 ல...

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா  தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முட...

ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்

1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினம் 2 ஆம் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அரசியல் கலந்த ஆசிரியர் உயர் பதவிக்கு வந்ததால் இந்த நிலை அதற்கு முன்னும் உண்மையான ஆசிரியர்கள் இருந்தனர், சமூகத்தில் மதிக்கப்பட்டனர் மாணவர்கள் கற்கவும், புதிய கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும், படிப்பில் உள்ள சவால்களைச் சமாளிக்கவும் உதவுவதால், ஆசிரியர்கள் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பாடங்களை விளக்குகிறார்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள், மேலும் மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவுகிறார்கள். ஒரு பாடம் கடினமாகத் தோன்றும்போது, ​​தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஆசிரியர்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல், மாணவர்கள் கற்றலில் அதிக நம்பிக்கையையும் வசதியையும் பெற உதவும்.  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள்: புதிய கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துங்கள் நம்பிக்கையை உருவாக்குங்கள் நல்ல கற்றல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் ...

இந்த வாரத்தில் தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலில் சிக்கி கைதானவர்கள்

ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களை ஏமாற்றி ரூபாய் .1 கோடி லஞ்சம்: 3 வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் ! "அரசு வனத்துறை நிலத்தை பட்டா வழங்குவதாகக் கூறி, 3 தலைமுறையாக வாழ்வாதாரத்தை இழந்த மலைவாழ் மக்களை மிரட்டி லஞ்சம்"  ஜவ்வாது மலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாதித்த ஊழல்; ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்; மாவட்ட வன அலுவலர் உத்தரவு  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில், அரசுக்கு சொந்தமான காப்புக் காடு வனத்துறை நிலத்தை திருவண்ணாமலை மாவட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சாமை, திணை, வரகு, தேன் மற்றும் பலாமரம் வளர்ப்பு போன்ற விவசாய விளைபொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் தங்கள் நிலத்தை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான காட்டு நிலங்களைச் சுமார் 3 தலைமுறைகளாக அனுபவித்து வரும் மலைவாழ் மக்களுக்கு...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

 நகராட்சி நிர்வாகத் துறையின் டெண்டர் முறைகேடு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் DVAC சோதனை ! முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புள்ள 19 இடங்களும் அதில் அடக்கம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையானது “ரூபாய் .1000 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு” சம்பந்தப்படடது, “நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பேர் பணியமர்த்தலில் திமுக கட்சி நிதி வசூல் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றமானது திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு  அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான 19 இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) திருச்சிராப்பள்ளி தில்லைநகர் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்  இன்று 05.09.2026 காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் .1000 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு முறைகேடு மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப்...