முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவைகளை வழங்குவதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் கீழ் 100% இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் (இபிஎப்ஓ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது. இபிஎப்ஓ-வின் 73-வது நிறுவன தினத்தின் போது, ஐபிபிபி-யின் நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர். விஸ்வேஸ்வரன், இபிஎப்ஓ-வின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இடையே இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை விருந்தினராகக் கலந்து கொண...
சமீபத்திய இடுகைகள்

தனிப்படை துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த பாலியல் குற்றவாளிகள் மூவர்

கோயம்பத்தூர் விமான நிலையமருகே நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கோயம்பத்தூர் மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது..:- நேற்று முன்தினம் இரவு கோயமுத்தூர் விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்ய முயன்ற போது, காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர்...

திருநெல்வேலியில் திருட்டு கல் மணல் குவாரிகள் அறப்போர் அறிக்கை

அறப்போர் இயக்கம் சார்பாக வந்த பத்திரிக்கை செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து கேட்பு நிகழ்வில் குவாரி தரப்பினர் செய்த திட்டமிட்ட தாக்குதல் திருநெல்வேலியில் கல் குவாரிகளால் மக்கள் எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் அறப்போர் இயக்க மக்கள் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திருநெல்வேலி ரோஸ் மஹாலில் நடந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் V. சுரேஷ் தலைமையில் அடங்கிய குழு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர் இந்தக் குழுவில் டாக்டர் சுரேஷ் தவிர தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர்  நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் திரு உதயகுமார்  , சுற்றுச்சூழல் நிபுணர்  தணிகைவேல் , விவசாய மேலாண்மை நிபுணர்  நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே திருநெல்வேலியில் கல் குவாரி முறைகேடுகளால் எப்படி ஒரு கோடிக்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடந்தது என்பதை ஆவண ரீதியாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது குறித்து அதன் ஒருங்கிணைப...

ஸ்ரீ ராஜராஜ சோழனுக்கு சிறப்பாக நடந்த துலா மாத சதப நட்சத்திர விழா

மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் 1,040 ஆவது சதய விழாவை முன்னிட்டு,  மன்னர் சிலைக்கு மரியாதை அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் எனும் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை பிறந்த துலாம் மாதமெனும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில்  விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழ்வாண்டு ஸ்ரீ ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா பெரிய கோவிலில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன், நடன நாட்டிய நிகழ்வுகளுடன் வெள்ளிக்கிழமை காலை துவங்கியது. பின்னா், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ராமச்சந்திரன் துவக்கவுரையாற்றினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம், சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் மராட்டிய சரபோஜி வழி வந்த. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறையில் இணை ஆணையா் மு. ஜோத...

கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம்.

கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம். கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைத்து கோயமுத்தூர் சட்டக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை பல தலைவர்கள் கண்டனம்.  விசாரணை. கோயமுத்தூர் பீளமேடு பகுதியில் விமான நிலையம் அருகே நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தநிலையில் நண்பரைத் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர்.  தனியார் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் சட்டம் படித்து வருகிறார். கோயமுத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார், இவரும் அந்த மாணவியும் நண்பர்கள். இந்த நிலையில், அந்த இளைஞரும் மாணவியும் நேற்று முன்தினம் நவம்பர்.2 ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்தனர். தொடர்ந்து, கண்ணாடி வழியாகவே கதவைத் திறந்து, காருக்குள் இருந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக தாக...