நடிகை கௌதமிக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்தது தொடர்பாக, அவருக்கு வேண்டப்பட்ட அழகப்பன்,வயது 66, மற்றும் அவரது குடும்பத்தினரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை காவல்துறையில் நடிகை கௌதமி, கடந்த, 2023 ஆம் ஆண்டு அளித்த புகார்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், அவரது குடும்பத்தினருடன், சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலம் உள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவும், மகளின் எதிர்கால படிப்புக்காகவும், அந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன். அது பற்றி, என் குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்தேன். அவர் தன் பெயருக்கு பொது அதிகாரப் பத்திரம் பெற்றார். ஆனால், '6 கோடி ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது' எனக் கூறி, பண மோசடி செய்துள்ளார். இதற்கு, அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, சென்னை காவல்துறை மத்திய குற...
இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து ரூபாய் .4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நால்வர் கைது, இராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மனைவி ஹாஜாபானு. இவருக்கு இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ரூபாய் .4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் காலி இடமாகவே இருந்துள்ளது. இதை போலியான பொது அதிகாரப் பத்திரம் மூலமாக சின்னக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரும், அவருடைய கூட்டாளிகளான செந்தில் குமார், சந்திரகுமார் , ஆகியோரும் 80 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை பத்திரம் பதிவு செய்து வாங்கிக்கொண்டு மீதமுள்ள பகுதியையும் விற்பனை செய்வதற்காக போலி பவர் பத்திரம் தயார் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நில உரிமையாளர் ஹாஜா பானு இராமநாதபுரம் நில மோசடி தடுப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில் குமார், மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். மேலும் அதற்கு உதவிய சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை க...