முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து நில மோசடி நால்வர் கைது

இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து ரூபாய் .4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நால்வர் கைது, இராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி  மனைவி ஹாஜாபானு. இவருக்கு இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ரூபாய் .4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் காலி இடமாகவே இருந்துள்ளது. இதை போலியான பொது அதிகாரப் பத்திரம் மூலமாக  சின்னக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரும், அவருடைய கூட்டாளிகளான  செந்தில் குமார், சந்திரகுமார் , ஆகியோரும் 80 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை பத்திரம் பதிவு செய்து வாங்கிக்கொண்டு மீதமுள்ள பகுதியையும் விற்பனை செய்வதற்காக போலி பவர் பத்திரம் தயார் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நில உரிமையாளர் ஹாஜா பானு இராமநாதபுரம் நில மோசடி தடுப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில் குமார், மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.  மேலும் அதற்கு உதவிய சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை க...
சமீபத்திய இடுகைகள்

நீர்நிலைகளை ஆக்கிரமித்த கட்டிடங்களால் நேபாள உயிர் சேதம் அதிகரிப்பு

திபெத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள லெண்டே கோலா ஆற்றில் ஈஷா அறக்கட்டளையின் S3 குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குழுவினர், ஜக்கி வாசுதேவின் ஈஷா மற்றும் அவரது குழு சாகா  பகுதியில் சந்தித்ததாகவும், பின்னர் அவர்கள் கைரோங்கில் இறங்குவதற்காகப் புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்: 80 பேர் (34 ஆண்கள், 46 பெண்கள்)  நாடுகள் வாரியாக: 22 அமெரிக்கா, 12 கனடா, 11 ஆஸ்திரேலியா, 9 இங்கிலாந்து, 4 ஜெர்மனி, 3 பிரான்ஸ், 3 நேபாளம், 2 நெதர்லாந்து, 2 நியூசிலாந்து, 2 சிங்கப்பூர், 2 ஸ்பெயின், தலா ஒருவர் பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றவர்கள்: 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு மருத்துவர்   ஆனால், அனைத்து தொலைப்பேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன, அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன, சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன நேபாளத்தில்:165 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 579 பயணிகள் (466 வெளிநாட்டினர் மற்றும் 113 நேபாளிகள்) காணவில்லை. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. மொ...

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் .14. 4 கோடி மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் சுங்கத இலாகா அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர்.தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும்படியான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய பெண் ஒருவரின் சூட்கேஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டபோது. அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாகவே பதிலளித்துள்ளார். இதையடுத்து சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, தாய்லாந்து நாட்டு உணவுப்பொருட்கள் அடங்கிய 6 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்துப் பார்த்...

அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தரத் துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ரவியின் பதவிக்காலம் மற்றும் ஓராண்டு பணி நீட்டிப்புக்காலம்  ஆகஸ்ட் 21, 2026 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பு துணை வேந்தராக நியமனம் ஆன ஜே. ஜெயகாந்தன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவான Syndicate உறுப்பினராகவும், அறிவியல் புல முதன்மைப் பேராசிரியர் Dean of Science ஆகப் பணியாற்றுகிறார். மேலும், உயிரித் தகவலியல் எனும் Bioinformatics துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். கடந்த திமுக ஆட்சி முதல் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே நிலவும் துணைவேந்தர் தேர்வுக் குழு மற்றும் யூஜிசி தொடர்பான சட்டச் சிக்கல்களால், பல்கலைக்கழகத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த இடைக்கால ஏற்பாடு தற்போது செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளின்படி மூத்த பேராசிரியரான இவருக்கு இந்தக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த நியமனம் முறையா...

ஈசனைக் காண கைலாயம் போனவர்கள் நேபளத்தில் தற்போதய நிலை

நேபாளத்தின் ராசுவா  மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 400 பேர் குறித்து தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளனர். இன்று புதன்கிழமை  ஆகஸ்ட் 26, 2026 அதிகாலையில் போதே கோசி  நதியில் பனி உறுகி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எல்லைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 390 ஆன்மீக சுற்றுலா யாத்ரீகர்கள் ராசுவாகதி  எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்  அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் 105 இந்தியர்கள், 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் சில வெளிநாட்டினரும் நேபாளிகளும் அடங்குவர். நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் மிதேரி பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல பாலங்களும் சாலைகளும் சேதமடைந்தன.நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது காத்மாண்டு நகரில் தொடங்கி திபெத் எல்லை வழியாகச் செல்லும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். காத்மாண்டுவிலிருந்து ரசுவாகடி மற்றும் கெருங்  எல்லை வழியாக திபெத் நுழைந்து கைலாஷ் செல்வது பொதுவான வழியாகும்.  இப்பயணம் பொதுவாக...