முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேளாண்மை வளர்ச்சி அவசியம்-மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் செளகான் தலைமையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண் வளர்ச்சியின்றி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகாது என்று தெரிவித்தார். நாடு வெறும் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, வேளாண் நிலம் முதல் உலகளாவிய சந்தை வரை வலுவான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு நேரடிப் பயன்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சி சூழல் தேவை என்றும் அவர் கூறினார். வேளாண் மாற்றத்தின் அடுத்தக் கட்டமாக விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதிலும் குறு, சிறு விவசாயிகளின் எதிர்கொள்ளும் சக்தியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், தரமான விதைகள், நடவுப் பொருள்களை உரிய நேரத்தில் பெறுதல், சமச்சீ...
சமீபத்திய இடுகைகள்

நாளை சென்னை கோவளத்தில் 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் 2026 ஆகஸ்ட் 20, ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராக  செயல்படுகிறார். மாநாடு காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை  சுமார் 4 மணி நேரம் நடைபெறும், மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19 இன்று புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தார் சென்னைக்கு தெற்கில் சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் அமைந்துள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவர்: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், உறுப்பினர்கள்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாணடிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர். மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்  உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள். கலந்து க...

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார் முதலமைச்சர் அறிவிப்பு

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார்  முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு  காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ எல் ஜோதிமணி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்.  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் அவர்கள் விரும்பும் நபர் ஒரு உதவியாளராக நியமனம் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வாகனப்படி மாதம் ரூபாய் 25, 000 லிருந்து உயர்த்தி ரூபாய் .75,000 ஆக வழங்கப்படும் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உதவியாளர் படி ரூபாய் .25,000  கூடுதலாக வழங்க நடவடிக்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்  பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி வேலையில்ல்லை காருமில்லை.. இன்னைக்கு வேலையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.. காரும் கொடுத்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ஏன்னா நான் டிரெயினில்தான் வருகிறேன். இங்கே உள்ளே ஆட்டோவில வருகிறேன்.. உள்ளே வரும் போது எல்லாம் பணியில் இருக்கிற காவலர்கள், அடையாளம் தெரியாமல் "நீங்க யார்? என கேட்பார்கள் ”, நான் எம்.எல்.ஏ.எனச் சொல்வேன்.. ...

களவு போன திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து மீட்பு

இந்தியாவில் நீண்ட ஆன்மீகக் கலாச்சாரப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், லண்டனிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமங்கையாழ்வார் சிலை கும்பகோணத்தை வந்தடைந்தது! பின்னர் முதல்வர் சி. ஜோசப் விஜய் பார்வையிட்டார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Ashmolean Museum மூலம் மீட்கப்பட்டு, ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதியன்று வெற்றிகரமாகத் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டது.  கும்பகோணம் பகுதி கத்திரிநத்தம் சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில். 16-ஆம் நூற்றாண்டு வெண்கலச் சிலை (சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள Ashmolean Museum.நூலகத்தில் இருந்து கண்டறிந்து மீட்பு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு CID காவல்துறையினரின் தீவிர விசாரணை மற்றும் அறிவியல் பூர்வமான ஆவணங்கள் மூலம் சிலை அடையாளம் காணப...

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் நிர்வாகம் மாற்றியமைப்பு

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் நிர்வாகத்தை மாற்றியமைத்து வருகின்றன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கருவிகள் ஆகியவை நிர்வாகத்தை மாற்றியமைத்து வருவதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நிர்வாக நடைமுறைகளும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்ந்து கற்றுக்கொண்டு புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்களுக்கான 15 நாள் புத்தாக்கப் பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்தப் பயிற்சி வெறும் விரிவுரைகளுக்கான தளமாக மட்டுமில்லாமல், கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம், தொடர்ச்சியான கற்றலுக்கான வாய்ப்பாக அமைய வேண்டும் என்றார். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளையும், அரசு நிறுவனங்களின் மாண்பையும் அதிகாரிகள் நிலைநி...

குஜ்லியம்பாறை தாசில்தார் உத்தரவும், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவும், கம்யூனிஸட்கள் எதிர்ப்பால் வாபஸானது

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்த அய்யாசாமி அனுப்பிய சுற்றறிக்கையில், ”திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நபர்களின் பெயர்; முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 ஆம் தேதி மாலைக்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது, அறிக்கை அளிக்கத் தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.இந்தப் பகிரங்க சுற்றறிக்கையானது, கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் வருவாய் ஆய்வாளர்கள்; தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்; பழனி வருவாய் கோட்டாட்சியர்; திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்த அய்யாசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர் விவரங்களைச் சேகர...

கோவில் பூசாரி மரணத்தில் காவல்துறை மீது குற்றம் சாட்டிய குடும்பம் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை

மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பரமசிவம் 52 வயதுடைய ஒரு கோவில் பூசாரி, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் வாகனம் நிறுத்துவதில்  பரமசிவத்திற்கும் அவரது அண்டை வீட்டாரான மற்றொரு தரப்பினருக்கும் இடையே வண்டி நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பாக சிந்தாமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சிறிய தகராறு வழக்கு விசாரணைக்காகவே அவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுச் சென்றார்.தற்போதைய சர்ச்சை கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவத்தை, சிந்தாமணி காவல் நிலைய காவல்துறை கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு காரணமாக ஆகஸ்ட் 16, 2026 அன்று அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், காவல்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர் பரமசிவம் தனது வீட்டில் தற்செயலாகக் கீழே விழுந்து காயமடைந்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தான் உயிரிழந்தார் என காவல்துறை தரப்ப...