முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மேகமலை மக்களுக்கு அரசு தீர்வு காண வலியுறுத்த அணைத்துக் கட்சிகளை அழைக்கும் கே.சி.திருமாறன் ஜி,

மாஞ்சோலை மற்றும் மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!  என  மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல ...
சமீபத்திய இடுகைகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8-வது குற்றவாளியும் காலமானார்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8-வது குற்றவாளியான திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி (வயது 52), உடல்நலக் குறைவால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.    இச் சம்பவம் குறித்த தகவல்கள் மரணத்திற்கான காரணம் மற்றும் தற்போதைய நிலை உடல்நலக் குறைவு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி, கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தோஷ் சாமியின் மரணம் குறித்து முறையாக விசாரித்து, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை,உதகமண்டலத்தில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது மந்தமான கதியிலேயே நடைபெற்று வருவதாகத் தகவல் .ஏற்கனவே நிகழ்ந்த மரணங்கள்: 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முதன்மைக் குற்றவாளியான முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகரா...

இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருடன் சந்திப்பு

இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு இயக்குநர் ஜெனரல்  லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. வைச் சந்தித்துப் பேசினார். இந்த  சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக தமிழகத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்புப் பணிகளை மேலும் திறம்பட நடத்துவது குறித்து இரு அதிகாரிகளும் விரிவாகக் கலந்துரையாடினர். ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் போது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாகத் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து வழங்கி வரும் முழுமையான ஆதரவை அவர் சுட்டிக்காட்டினார். ராணுவப் பணிகளுக்கு இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த உன்னதப் பணியில் தமிழ்நாடு காவல்துறை அளித்து வரும் தொடர் ஒத்துழைப்பிற்கு லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

பிரபல பழமை நடிகை சௌகார். ஜானகி காலமானார்

தென்னிந்தியத் திரைப்பட  பழமையான நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.  அவரது வயது முதிர்வு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பெற்ற சிகிச்சை பலனின்றி இன்று  பிற்பகல் காலமானார், 1950-ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷாவுகாரு’ எனும் தெலுங்கு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம, ஹிந்தி மொழிகளில் 387-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. இவரது கடைசித் தமிழ் திரைப்படம் 2020- ஆம் ஆண்டில்  வெளியான 'பிஸ்கோத்' ஆகும் இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது 2022 ஆம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார், இவரது மறைவுக்குத் ...

வீ த லீடர்ஸ் இயக்கத் தன்னார்வலர்களின் உழவாரப்பணிகள்

வீ த லீடர்ஸ் இயக்கம் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டில்  அடித்தள மக்கள் தொடர்பு மற்றும் சமூக இயக்கம். இதன் பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை மற்றும் கடற்கரை தூய்மைப் பணிகளை பல பகுதிகளில் நடத்துவது. எனினும், காரைக்குடியில் இந்த அமைப்பு சார்பில் தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது, திருச்செந்தூர், கடலூர், கடற்கரைப்பகுதி மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளிகளில் ஏற்கனவே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல் மற்றும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றுதல். இளைஞர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் துப்புரவுப் பணிகள்.அடிமட்ட விழிப்புணர்வு மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை குறித்த உறுதிமொழிகள் மற்றும் பிரச்சாரங்களை காரைக்குடி மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் அரண்மனை வாசல் போன்ற பொது இடங்கள், நீர்நிலைகளின் ஓரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றும் பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டன...