முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவின் தலைவராக மயிலம ஆதினம் நியமனம்

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் ஆக நியமனம். பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு ; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்        கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் மயிலம் பொம்மபுர ஆதீனம்  தலைமைமில் குழு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அமைந்துள்ள ஒரு பழமையான வீரசைவ சமய மரபைச் சார்ந்த ஆதீனம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்ப்பதில் இந்த ஆதீனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சிவபெருமானின் கணங்களில் ஒருவரான சங்குகன்னர் என்பவரின் அவதாரமாக கருதப்படும் பாலசித்தர் என்பவரால் இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயில் இந்த ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது, தற்போது 19-ஆவது பட்டமாக...
சமீபத்திய இடுகைகள்

அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு . இதன் காரணமாக 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் தொடர்வார். மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆம் தேதியாக இருந்தது தற்போது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 ஆம் தேதி வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.  பீஹார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரியாவார். ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்வர் 2020 நவம்பரில் அமல...

வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் பெங்களூரில் கைது

பெங்களூரில் தங்கிய  வங்கதேச        சட்டவிரோதக் குடியேறிகள் கைது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 'ஆபரேஷன் முக்தா'  என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையில் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.ஒயிட்பீல்டு பகுதியில் 62 பேரும், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 43 பேரும் பிடிபட்டவர்களிடமிருந்து மேற்கு வங்காள மற்றும் அசாம் மாநில முகவரிகளைக் கொண்ட போலியான ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் தாங்களாக சட்டத்தை கையில் எடுக்காமல், உடனடியாக பெங்களூரு காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்த்தனர்  பெங்களூரில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 105 ...

சரத்குமார் நாட்டாமை குடும்பமா? நடிகர் குடும்பமா? வலைத்தளங்களில் விவாதம்

நாட்டாமை குடும்பம் என பச்சை குத்த வலியுறுத்தல். தனக்கு படப்பிடிப்பு இருப்பதால் குத்தவில்லை - நடிகர் சரத்குமார்.தமிழ்நாட்டில் கிராமத்தில் ஒரு நாட்டாண்மை உண்டு (நாடு + ஆளுமை) என்ற சொல்லில் இருந்து மருவியதே நாட்டாமை, இது கொங்கு பகுதியில் பண்ணாடி எனவும் அழைக்கும் நிலை, சுதந்திர காலத்திற்கு முன் ஜமீன் காலத்தில் ஏற்பட்ட முறை இது கிராமங்களில் பஞ்சாயத்துக் கூட்டி, மக்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை விசாரித்து நீதி வழங்கும் தலைவர் நாட்டாமை என அழைக்கப்படுகிறார்.தற்காலத்தில், மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தேவையின்றி தலையிட்டு தீர்ப்பு சொல்பவர்களைக் கிண்டல் செய்யவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது., சினிமாவில் நாட்டாமை வேடத்தில் நடித்த காரணத்தால் நாட்டாமை என நடிகர் சரத்குமார் நினைத்து தனது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் நிலை தான் தற்போது நாட்டாமை குடும்பம் எனும் பச்சை குத்துதல் உண்மையில் இதை அவர் குடுப்பம் சார்ந்த நபர்கள் குத்தி அதை  மக்களுக்கு காட்ட  வேண்டும் அதுவே முக்கியம்.உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் (Tattoos) பொதுவாக இந்திய ராணுவத்தில் சேர முடியாது. சில குறிப்பிட்ட மத அல்லத...

சித்திரகூட்டிற்கான நேரடி இணைப்பை வலுப்படுத்த ரயில்வே நடவடிக்கை

சித்திரகூட்டிற்கான நேரடி இணைப்பை வலுப்படுத்தும் வகையில், சித்திரகூட்தாம் கார்வி - கான்பூர் சென்ட்ரல், பிரதாப்கர் - கான்பூர் சென்ட்ரல் விரைவு சேவைகளை இணைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், ரயில் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ரயில்வே, 14109/14110 சித்ரகூட் கார்வி-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,  14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை இணைத்து, 14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-சித்ரகுத்தம் கார்வி எக்ஸ்பிரஸ் என இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு, மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர், சித்திரகூட் தாம் கார்வி ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி இணைப்பை மேம்படுத்துவதோடு, கான்பூர் சென்ட்ரல், லக்னோ பகுதி, சித்திரகூட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இடையேயான இணைப்பையும் வலுப்படுத்தும். இந்த இணைப்பின் செயல்பாட்டுப் பலன்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 12 பெட்டிகள் கொண்ட சேவையானது 24 பெட்டிகளாக அதிகரிக்கப்படுவதால், ஒருங்கிணைந்த சேவையின் திறன் மேம்படும். இது இருக்கை வசதியை கணிசம...

UPI பயனர்களுக்கு ஒரு செய்தி.

UPI பயனர்களுக்கு ஒரு செய்தி. மத்திய நிதியமைச்சகம், 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் (திருத்த) மசோதா, 2027'-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 'வணிகர் தள்ளுபடி விகிதத்தை' (MDR) அறிமுகப்படுத்த முன்மொழிகிறது. திட்டத்தின் படி, ரூபாய் .2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR பொருந்தக்கூடும். இருப்பினும், இந்த விதி அனைத்து UPI பயனர்களுக்கும் பொருந்தாது. வணிகரீதியான பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சாதாரண வாடிக்கையாளர்கள் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. பால், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவது அல்லது ஆட்டோ, டாக்ஸி கட்டணம் செலுத்துவது போன்ற தினசரி UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் குழப்பம் நிலவினாலும், ரூபாய் 2,000 க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு அனைத்துப் பயனர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பல பதிவுகள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் நிலைமை அப்படி இல்லை இந்தப் பரிந்துரையானது முக்கியமாக ரூபாய...

AI2379 விமானம், பயணத்தின் போது திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்தது,

04.08.2026 அன்று ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் VT-EXO விமானம் AI2379 இல் M/s Air India A320 விமானத்தில் பயணத்தின் போது திடீரென உயர இழப்பு மற்றும் காயங்கள் 04.08.2026 அன்று, M/s Air India A320 விமானம் VT-EXO, ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் AI2379 விமானம், பயணத்தின் போது திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்தது, அதைத் தொடர்ந்து விமானம் நிலைபெற்று பின்னர் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தின் போது, ​​விமானத்தில் இருந்த சில பயணிகள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 03 கைக்குழந்தைகள் உட்பட 137 பயணிகளும், இரண்டு விமானிகள் மற்றும் 6 கேபின் பணியாளர்கள் அடங்கிய 08 பணியாளர்களும் இருந்தனர். அத்தகைய நிகழ்வைத் தொடர்ந்து நிலையான இயக்க நடைமுறைகளின் ஒரு பகுதியாக, இரு விமானக் குழு உறுப்பினர்களும் பரிந்துரைக்கப்பட்ட மனோவியல் பொருள் திரையிடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பைலட்-இன்-கமாண்ட் (PIC) தொடர்பான ஸ்கிரீனிங் சோதனையானது உறுதிப்படுத்தும் சோதனை தேவைப்படும் முடிவைக் குறிக்கிறது. அதன்படி மாதிரிகள் உறு...