முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழநாடு முதலவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபர் டெல்லி விமான நிலயத்தில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு

தமிழநாடு முதலமைச்சரை ஆள்மாறாட்டம் செய்து அல்-உருவாக்கப்பட்ட போலி மோசடி வீடியோ காட்சிகள் பரவியது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் உருவத்தை ஆள்மாறாட்டம் செய்து AI உருவாக்கிய ஆழமான போலி மோசடி வீடியோவுக்கு எதிராக CBCID காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சைபர் ரோந்து பணியின் போது, ​​சிபிசிஐடி சைபர் கிரைம் குழு பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் பரவும் போலி வீடியோக்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடியோக்கள் பொய்யாக நிதி உதவி வழங்குவதாகவும், வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  01.09.2026 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விவரங்களைப் பெறவும் போலியான உள்ளடக்கத்தை அகற்றவும் மெட்டாவைத் தொடர்புகொண்டனர். இதுபோன்ற வீடியோக்கள், தொலைபேசி எண்கள் அல்லது வாட்ஸ்அப் குழுக்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் குறித்து பதிவட்ட நபர்தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து செயற்கை நுண்ணறிவு (AI Deepfake) தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்களை தயாரித்து, சமூக வலைத்தளங...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு கிராம ஊராட்சிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கு கௌரவ ஆலோசகர் நியமனம்

தமிழ்நாடு கிராம ஊராட்சிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கு கௌரவ ஆலோசகர் நியமனம் !   தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை G.O.(1D) No.399 / 02.09.2026 ன்படி மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியியல் நிறுவனம் (SIRD) சார்பில், கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டிற்காக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை கௌரவ ஆலோசகராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருககு மாதம் ரூபாய் 1 லட்சம் கௌரவ ஊதியம் வழங்கப்படும். SIRD-ன் Training Corpus Fund மூலம் கௌரவ ஊதியம் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளில் தொழில்முறை ஆலோசனை வழங்குவார். கிராம ஊராட்சிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை  இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளில் மிகச்சிறந்த வல்லுநராகவும், கல்வியாளராகவும் அறியப்படுபவர் ஆவார். திண்டுக்கல் காந்திகிரா...

இஸ்ரோ 9 முக்கிய ஊழியர் சங்கங்கள் தலைவர் வி. நாராயணனுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ஒன்பது முக்கிய ஊழியர் சங்கங்கள், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் தங்களின் எதிர்காலப் பணிப் பாதுகாப்பு குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம்  விவகாரத்தின் பின்னணி, இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செயல்பாடுகளை தனியார்மயமாக்குதல்/பரிமாற்றம் செய்தல், இஸ்ரோவின் எதிர்கால பங்கு மற்றும் பணியாளர்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு சேவை செய்வதில் ஏற்படும் தாக்கம் தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து இஸ்ரோ ஊழியர்கள் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை கோருகின்றனர். ஊழியர்களின் கவலைகள் மற்றும் அதற்கு இஸ்ரோ அளித்துள்ள விளக்கம் விண்வெளித் துறையின் தாராளமயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை மேற்பார்வையிடும் அமைப்பான IN-SPACe இன் தலைவர் பவன் கோயங்கா,  ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், "எதிர்காலத்தில் இஸ்ரோ எந்தவொரு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களையும் தயாரிக்காது; அந்தப் பணிகள் அனைத்தும் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்...

திருவரங்கன் அறக்கட்டளை சொத்து திருட்டிலிருந்து தடை வழங்கிக் காப்பாற்றிய உயர்நீதிமனறம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைணவத் திருத்தலங்களில் தொன்மையானதும், முதன்மையானதும், பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் "மெய்க்கீர்த்தி" போல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  ஸ்ரீரங்கத்தின் மூலவரான ஸ்ரீரங்கநாதர், திருப்பாற்கடலில் இருந்து பிரம்மதேவனால் வழிபடப்பட்டு, பின்னர் சூரிய வம்சத்து மன்னர்களான இக்ஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்டவர் எனும் ஆன்மீக வரலாறும் உண்டு.  ஸ்ரீராமர் இந்த ரங்க விமானத்தை விபீஷணனுக்குப் பரிசளிக்க, இலங்கை செல்லும் வழியில் காவிரி ஆற்றின் நடுவிலுள்ள தீவுப்பகுதியில் இதை நிறுவினார். காலப்போக்கில் மணலில் புதைந்த இந்த ஆலயத்தை, கிளிச்சோழன் (தர்மவர்ம சோழனின் வம்சாவளி) ஒரு கிளியின் சுலோகத்தைக் கேட்டு கண்டறிந்து மீண்டும் புதுப்பித்ததாகக் வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் , பாண்டியர்கள் , ஹொய்சளர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றையும், மன்னர்களின் தானதர்மக் கொடைகளையும் மெய்க்கீர்த்திகளாகப் பறைசாற்றுகின்றன. பொது ஆண...

சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ATM கொள்ளையர் அடகாசம்

ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச்  மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 ல...

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா  தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முட...