தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம். தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிறப்பித்த உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு அல்லது தேவை முடியும் வரை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார், ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டார். நீட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களான Fast Track Courts அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளரான வினீத் ஜோஷி மாற்றப்பட்டார், அதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீட் (NEET) போன்ற முக்கிய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் மேலும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதே இந்த விரைவு நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும். வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டார்.புதிதாக : நரேஷ் பால் கங்வார் (உயர் கல்வி) மற்றும் டி.கே. அனில் குமார் (பள்ளி கல்வி) பொறுப்பேற்பு. இதனிடையே வினாத்தாள் கச...