வளர்ச்சிப் பணிகளில் இளைஞர்களின் ஒத்துழைப்பு, பங்கேற்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இளையோர் நல அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர் மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இளையோர் நலன் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிக்ஸ் இளையோர் நல அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், 2026 ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டம், மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. இதில் அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, செயலாளர் திரு சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் இளையோர் உச்சிமாநாடு, இளைஞர் குழுக் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, விவாதங்கள் நடைபெற்றன. இதில் பெறப்பட்ட பரிந்துரைகள், கருத்துக்கள், அமைச்சர்கள் நிலையிலான விவாதங்களுக்கு முக்கிய அடித்தளத்தை வழங்கின. இதில் பங்கேற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே உரையாற்றிய மத்திய இளையோர் நலன், விளையா...
சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பண்டிகைக் காலங்களில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை சர்க்கரையின் விலை, 20 ஜூலை 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்த நிலையில், 20 ஆகஸ்ட் 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது. அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதைக் காரணம் காட்டுவது தவறானது. உண்மையில், எத்தனால் தயாரிப்பிற்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு, 2022-23-ல் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ல் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இப்போது தானியங்களிலிருந்தே, குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை, கரும்புப் பயிரில் வானில...