அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு . இதன் காரணமாக 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் தொடர்வார். மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆம் தேதியாக இருந்தது தற்போது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 ஆம் தேதி வரை அந்தப் பதவியில் நீடிப்பார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரியாவார். ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்வர் 2020 நவம்பரில் அமல...
பெங்களூரில் தங்கிய வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் கைது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 'ஆபரேஷன் முக்தா' என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையில் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.ஒயிட்பீல்டு பகுதியில் 62 பேரும், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 43 பேரும் பிடிபட்டவர்களிடமிருந்து மேற்கு வங்காள மற்றும் அசாம் மாநில முகவரிகளைக் கொண்ட போலியான ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் தாங்களாக சட்டத்தை கையில் எடுக்காமல், உடனடியாக பெங்களூரு காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்த்தனர் பெங்களூரில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 105 ...