முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக அரசு அறிவிப்பு

நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல் இந்திய ரயில்வே பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் 135 ரயில் விபத்துகள் நடந்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் 16 விபத்துகள் (88 சதவீதம் குறைவு) மட்டுமே நடந்தன. 2026-27-ம் நிதியாண்டில் (2026 ஜூன் வரை) 2 விபத்துகள் நடந்துள்ளன. பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவினம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு ரூ.39,200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27-ம் நிதியாண்டில் ரூ.1,20,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 2026 ஜூன் 30 வரை 10,395 லெவல் கிராசிங்குகளில் இண்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களில் விழிப்புணர்வை மேம்படுத்த அனைத்து எஞ்சின்களிலும் விழிப்புணர்வு கட்டுப்பாட்டு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளன. மூடுபனி பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் அடிப்பட...
சமீபத்திய இடுகைகள்

நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டு மாற்றியமைப்பு

நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. புதிய அடிப்படை ஆண்டை கணக்கில் கொண்டு, மாதாந்திர விலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள், 434 நகரங்களில் உள்ள 1,465 கிராமப்புற சந்தைகள், 1,395 நகர்ப்புற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, மின்னணு வர்த்தகம் அல்லது இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை கண்டறியும் வகையில் தலா 25 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகைக் கொண்ட 12 நகரங்களில் 12 இணையவழி சந்தைகளும் இந்த தரவு சேகரிப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் மொத்த எடை கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் நுகர...

கடந்த திமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் ஊழல் முறைகேடு ED நடவடிக்கை அடிப்படையில் DVAC வழக்குப் பதிவு செய்து சோதனை

கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரான வி.செந்தில்பாலாஜி, டாஸ்மாக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி ராமதுரை முருகன், பி.பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் பிஏ பாஸ்கர், அவரது கூட்டாளியான ரதீஷ் ராஜ், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கார்த்திக், சண்முகவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் இரமேஷ்வரன்பட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் பழைய வீட்டில் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் சோதனை நடத்துகிறது. கரூர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடக்கிறது முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, சில முன்னாள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனம் மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடுகள் மற்றும் வரம்பு மீறிய நிதி முறைகேடுகள...

ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆயிரம் வழக்குகளுக்கும் குறைவாக நடத்தும் மாவட்ட நுகர்வோர் மன்றங்களான ஆணையங்களைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி  அதனால் நுகர்வோர்களன் நீதி பாதிக்கப்படுமா? என்பது குறித்த பார்வை  குறைந்த வழக்குகள் உள்ள மாநிலங்களில் மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை கலைத்து,  நடுவர்களிடம் வழக்குகளை ஒப்படைக்கலாம்; அதற்கு உயர்நீதிமன்ற ஒப்புதல் அவசியம். மொத்தம் 1,000-க்கும் குறைவான நுகர்வோர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள், சில மாவட்ட நுகர்வோர் ஆணையங்களைக் கலைத்து, அந்த வழக்குகளை பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்ச்சி மற்றும் வி. மோகனா ஆகியோர்கள் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் தொடர்ச்சியாக இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு, நாடு முழுவதுமுள்ள நுகர்வோர் ஆணைய உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் பணி நிலை...

வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை

வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த  மு.க.அழகிரி மகள் கயல்விழி கைதாகி ஜாமீனில் விடுதலை சென்னை அடையார் சாஸ்திரி நகரில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை இயங்கி வருகிறது. 20-ஆம் தேதி அந்தக் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்கு வந்த முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷீன்சிங், கட்டிடப் பராமரிப்பு பொறுப்பில் இருந்த கயல்விழியின் வீட்டு பணியாளரைத் தொடர்புகொண்டு மின்தூக்கியை உடனடியாக சீரமைக்குமாறு கண்டிப்புடன் வலியுறுத்தியதை தையடுத்து கயல்விழி நேரடியாக வங்கிக்கு சென்று வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்து, கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் மேலாளர் அறையில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை...

புது எழுட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் இன்று  சென்னை மாமல்லபுரத்தில்  பூஞ்சேரியில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில் தற்போதய  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு கூடி பா.ம.க தலைவராகத்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ்       தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தமிழ்நாடு பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் மருத்துவர் செளமியா அன்புமணி மற்றும் அவரது மகள்கள், நாம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தெரிவித்த படி ஜி.கே. மணி இல்லாத பாமக தற்போது உறுவனது, பாமக தலைவராக நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் ஏகமனதாகத் தேர்வு.  பாமக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வடிவேல் ராவணனும், பொருளாளராக மீண்டும் திலகபாமாவும் தேர்வு.  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஓய்வு அறிவிப்பிற்கு பின்னர் நடந்த பா.ம.க.வின் முக்கியமான பொதுக்குழுக் கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ...