டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உசசநீதிமன்னத்தின் வழக்கறிஞருமான முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஆவார். சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக 2026 செப்டம்பர் 17 ல் அவர் 79வது வயதில் காலமானார், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழகப் பிரதிநிதியாக இரண்டு முறைகள் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். மத்திய இணை அமைச்சர்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில், 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக திறம்படச் செயல்பட்டார். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாகவும் செயலாற்றியுள்ளார். அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வருவதற்கு காரணமாக ஆர்...
திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில் சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில...