பூலோக வைகுண்டம் எனப் போற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைணவத் திருத்தலங்களில் தொன்மையானதும், முதன்மையானதும், பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் "மெய்க்கீர்த்தி" போல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தின் மூலவரான ஸ்ரீரங்கநாதர், திருப்பாற்கடலில் இருந்து பிரம்மதேவனால் வழிபடப்பட்டு, பின்னர் சூரிய வம்சத்து மன்னர்களான இக்ஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்டவர் எனும் ஆன்மீக வரலாறும் உண்டு. ஸ்ரீராமர் இந்த ரங்க விமானத்தை விபீஷணனுக்குப் பரிசளிக்க, இலங்கை செல்லும் வழியில் காவிரி ஆற்றின் நடுவிலுள்ள தீவுப்பகுதியில் இதை நிறுவினார். காலப்போக்கில் மணலில் புதைந்த இந்த ஆலயத்தை, கிளிச்சோழன் (தர்மவர்ம சோழனின் வம்சாவளி) ஒரு கிளியின் சுலோகத்தைக் கேட்டு கண்டறிந்து மீண்டும் புதுப்பித்ததாகக் வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் , பாண்டியர்கள் , ஹொய்சளர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றையும், மன்னர்களின் தானதர்மக் கொடைகளையும் மெய்க்கீர்த்திகளாகப் பறைசாற்றுகின்றன. பொது ஆண...
ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச் மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 ல...