தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் நதிகளுக்கு இடையேயான நீர்ப் பகிர்விற்காக தேசிய தொலைநோக்குத் திட்டத்தை (NPP) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் கீழ் தீபகற்பப் பகுதியில் 16 நதி இணைப்புத் திட்டங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் 14 நதி இணைப்புத் திட்டங்கள் என மொத்தம் 30 நதிகள் இணைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் (NWDA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமைத் திட்டமான கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் தற்போது செயலாக்க நிலையை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 11.88 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். மேலும், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் போலவரம் திட்ட ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது. தனிநபர் மீதான குற்ற வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து வைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெங்காதரன், (வயது 47), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகில் நல்லுார் பக்கம் நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த சௌமியாராஜ், வயது 30; விவசாயம் செய்து வருகிறார். அவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அடிதடி வாய்த் தகறாறு ஏற்பட்ட காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்பாக, சில தினங்களுக்கு முன், சௌமியாராஜை அழைத்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கெங்காதரன், வழக்கை சாதகமாக முடித்து வைக்க, 30,000 ரூபாய் லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சௌமியாராஜ், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின் படி, நேற்...