முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை

இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை என்பதே உண்மை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தவெகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுவதில், பங்கேற்க தவெக ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில் தான், நாளைய தவெக கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்  தெரிவித்துள்ளார் தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்திற்கு  நாங்கள் போகப்போவதில்லை என- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கூறியுள்ளார், தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து அதே கருத்து பாலகிருஷ்ணன் கூறிய நிலையில் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி விலகல் என்றே கருதலாம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவைப் பற்றி பேசும் போது திடீரென, “இன்றைக்கு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயளாளர் சண்முகம், முதல்வரின் பதிவை தவறான பார்வையில் புரிந்து கொண்டுள்ளார். அதற்க...
சமீபத்திய இடுகைகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவு 67 அலட்சியம் குறித்து கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவு 67  அலட்சியம் குறித்து கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அறிக்கை !, "மெத்தனால் கசிவைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளே இந்த சராய சாவுக்கு காரணம்" - 12 பேர் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை; கல்வராயன் மலையில் தனி மதுவிலக்கு படை அமைக்கவும் பரிந்துரை! சென்னை, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கருணாபுரத்தில் நிகழ்ந்த கொடூர கள்ளச்சாராய சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை இன்று செப்டம்பர் .8 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை, மதுவிலக்கு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமும், கடமை தவறிய போக்குமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது 2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ நச்சுச் சாராயத்தை அருந்தியதில் 67 பேர் உயிரிழந்தனர். மேலும் 161 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தச்சம்பவம...

தமிழ்நாடு IAS, IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் இன்று செப்டம்பர் 8, 2026 ல் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 15 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு உயர் அதிகாரிகளின் புதிய பணியிடங்கள் குறித்த விவரம் இன்னசென்ட் திவ்யா – பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், டி.மோகன் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளர், ஸ்ரேயா சிங் – பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர், ஞானதேவ் ராஜ் – சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர், ராஜகோபால் சுங்கரா – சுற்றுலாத் துறை இயக்குநர், சுகபுத்ரா – சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர், ஜி. ரவிக்குமார் – வேளாண்மை - உழவர் நலத்துறை இணைச் செயலாளர், ஜெயசீலன் – சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் வெவ்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டு அரசு ஆணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்...

பொன்னமராவதி தன்னாட்சி மறவர் நாட்டு மிராஸ் மக்கள் இறுதி அஞ்சலிக்குப் பின் நல்லடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மிராஸ் தன்னாட்சி மறவர் நாட்டு பட்டம் ஏ.எல்.எஸ். பழனியப்பன் அம்பலகாரர் 2026 செப்டம்பர் 7 திங்கட்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் காவேரி மருத்துவமனையில் காலமானார். செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 2 மணிக்கு மேல், பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி மாம்பழத்தான் ஊரணி கரையில் உள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவர் பொன்னமராவதி பகுதியில் மிராசுதாரராகவும், பாரம்பரியமிக்க பரம்பரை தன்னாட்சி வழி நாட்டு அம்பலகாரராகவும்  விளங்கியவர். அன்னாரின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பொன்னமராவதி நாட்டு மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்கினர், பாண்டிய மன்னர்களின் காலத்தில், பொன்னன்  அமரன் ஆகியோரது காவற்படையின் தளபதியாக விளங்கிய அழகாண்டத் தேவர்  இப்பகுதி நாட்டைக் காக்கப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். இன்றும் அவரது நினைவாக அமரகண்டன் ஊரணியில் படடமரத்தானாக உள்ள ஆலயத்தில் பாரம்பரியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருக...

LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு  நிவாரணம்! எல்பிஜி நிரப்பு முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டது இப்போது அடுத்த சமையல் ஏரிவாயு உருளை (சிலிண்டரை) 25 நாட்களுக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம் கிராமப்புற LPG வாடிக்கையாளர்களுக்கு  நிவாரணம் இதற்கு முன் 45 நாள் இடைவெளியில் இருந்து மாற்றம்  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட அனைத்து உள்நாட்டு LPG வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான 25 நாள் விதியை  பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்டர்-ரீஃபில் முன்பதிவு இடைவெளியைக் குறைக்க முடிவு செய்தது மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மிக முக்கியமான மாற்றத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக விதிகள் படி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி குறைப்பு முன்னதாக நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி கடைப்பிடிக்க...

குடி போதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கி பலியான PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களான சூர்யா திண்டுக்கல், யுவசஞ்சித் திண்டுக்கல், ஜோசுவா திண்டுக்கல், முரளி திண்டுக்கல், ஜீவா திண்டுக்கல், சந்தோஷ் மதுரை, பிரசன்னா மதுரை, விஸ்வா சேலம், ஆகியோர் தொடர் விடுமுறை என்பதால், அவர்களின் நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரில் இந்த மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவு 11:42 மணி அளவில், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதால் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், மீட்புக்குழுவினர் காரை வெட்டி எடுத்து 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கேரளா மாநில காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பராமரிப்பு பண...

ஊழல் வழக்கில் கைதாகும் முன்னால் திமுக அமைச்சர்களில் முதலிடத்தில் கே. என். நேரு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது இந்த டெண்டர் முறேகடு மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூபாய் 1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரன் லஞ்சப் பணம் கைமாறுவதைக் கண்காணித்ததாகவும், மற்றொரு சகோதரர் மணிவண்ணன் அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. ...