காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு - தில்லியில் சாலைகள் தரநிலைகளுக்கு இணக்கமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தேசிய தலைநகர் பிராந்தியம் தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 'ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கத்தை நடத்தியது. இந்த ஆய்வின் போது, தில்லி மாநகராட்சியின் (MCD) அதிகார வரம்பிற்குட்பட்ட 79 சாலைப் பகுதிகளில் 78 சாலைகளில், ஒரு முனை முதல் மறு முனை வரை தார் போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது, ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது. 07.01.2025 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்ட, தில்லி பகுதியில் நகர்ப்புற சாலைகளை அமைத்தல், பசுமையாக்குவது ஆகியவற்றுக்கான தரநிலைக் கட்டமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சாலை மறுசீரமைப்புப் பணிகளின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப் பணிக்காக, தில்லி மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய, ஆணையத்தின் 10 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஆய்வானது, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சுமா...
680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்
வடக்கு ரயில்வே மண்டலத்தில் 680 கிலோமீட்டர் தூரத்திற்கு 206 கோடி ரூபாய் மதிப்பில் கவச் பாதுகாப்பு முறையை செயல்படுத்த ரயில்வே ஒப்புதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்திற்குட்பட்ட ரேவாரி-தில்லி, சாகுர்பஸ்தி-பத்திண்டா ஆகிய வழித்தடங்களின் கிளைப் பாதைகள் உள்ளிட்ட 680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளைத் தடுத்தல், சிக்னல்களைத் தாண்டிச் செல்வதால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதன் மூலம் ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இந்த கவச் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ரயில்களின் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவசரக் காலங்களில் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும் வசதி கொண்டது. அடர்ந்த பனிமூட்டம் போன்ற மோசமான வானிலையிலும் ரயில்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் இயங்குவதற்கு இது பெரிதும் உதவும...