முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்

 உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்  உடான் திட்டத்தின் அடுத்த கட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் - ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், உலகத் தரம் வாய்ந்த விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) 'உடான்' திட்டத்தின் அடுத்த கட்டமான விக்சித் உடான் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தார். ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய கலாச்சாரம் - சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 2...
சமீபத்திய இடுகைகள்

பிரதமர் ராஜஸ்தான் பலோத்ரா மாவட்டத்தில் ரூ 1.06 லட்சம் கோடி வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் புதிய இந்தியா தனது தீர்மானங்களிலிருந்து பின்வாங்காது, தனது வேகத்தையும் குறைக்காது: பிரதமர் திரு நரேந்திர மோடி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.  ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், முழுமையான வளர்ச்சி, பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பரந்த இலக்கை முன்னெடுத்துச் செல்வதில் அதன் முக்...

தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் காலமானார்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால்  காலமானார்  கடந்த இருபது வருடங்களாக பலருக்குச் சிறந்த தொல்லியல் வழிகாட்டி. 'மரபுசார் ஆர்வலர் குழு' உருவாக்கிய போது, முதல் ஆளாக வந்து வழிகாட்டியவர். 03.07.2026 ல் அஞ்சலி செலுத்த: https://goo.gl/maps/JdkhG35vAjHc7UPP6?g_st=aw   பூகோள வரைபடப் பாதை  இறுதிச் சடங்கு நிகழ்வு  தமிழ்நாடு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளரும், தொல்லியல் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான முனைவர் சு. ராஜகோபால்  மறைவையொட்டி, அவருடைய இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை 04.06.26 காலை 10.00 மணியளவில் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகிலுள்ள நகரத்தார் விடுதியில் நடைபெறவுள்ளது. அவரது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி, கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் மூலம் தமிழ்நாட்...

தலைமைத்துவம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கருத்து

தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடே தொடங்கி வைத்த இரண்டு மாத கால பயிற்சித் திட்டமான 'எம்.பி. லீட் ஃபெலோஷிப்' என்ற பயிற்சித் திட்டப் பங்கேற்பாளர்களுடன் இன்று (02.07.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். இளைஞர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர் இளைஞர்கள் தேச சேவையில் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைமை என்பது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை எனவும், மாறாக பணிவு, நேர்மை, கருணையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒருவரின் திறனால்தான் அளவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைத்த அவர், பிராந்தியம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியாவின் பகிரப்பட்ட கலாச்சாரமே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தை அறிமுகப்படுத்துவத...

மை பாரத்' டிஜிட்டல் தளம் மூலம் தொழில் துறை சங்கங்களின் மாநாடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  மை பாரத்' டிஜிட்டல் தளம் வாயிலாக, தொழில்துறை - இளைஞர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பை உருவாக்க, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார் நாட்டில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு - தொழில் துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  இளைஞர் விவகாரங்கள் துறை, புது தில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தொழில் துறை சங்கங்களின் மாநாட்டை' நடத்தியது. 'மை பாரத்'  தளத்தின் மூலம் உத்திகள் சார்ந்த ஒத்துழைப்புக்களை உருவாக்க, 20-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை சங்கங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிஎஸ்ஆர்  அமைப்புகள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், திறன் மேம்பாடு, தன்னார்வத் தொண்டு, தொழிற்பயிற்சி, தொழில்முனைவு, புத்தாக்கம்,  பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின்...

சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருவெறும்பூர் அரசு உதவிப்பெறும் பள்ளியில்  இடைநிலை ஆசிரியையின், 6 லட்ச ரூபாய் சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கைது செய்தனர். திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் புகழேந்தி. இவரது பணிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கேட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்த போது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்ய புகழேந்தி ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார் அதன் தொடர்ச்சியாக நேற்று ஆசிரியர் இளமுருகு திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபா பதிவு செய்யப்பட்டு, த...

முதல்வரை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கைது

முன் ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்த முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு  கூட்டிச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர்.  திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக திமுக என மாறி தொடர்ந்து 7 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார் " கைதான பின் "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ” என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் பேசியதால் புகார் அதற்கு முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் ஆத்தூருக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச் சென்றனர். த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் அரசியல் கைது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.  கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக  நடாளுமன்ற...