தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் ஆலோசனை நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன், தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநருடன் இன்று ஆலோசனை நடத்தினார். வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ள இந்த மறுதேர்வை எவ்விதப் பிரச்சனையும் இன்றி, வெளிப்படையான முறையில் பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து அவர் விரிவாக விவாதித்தார். மறுதேர்வைச் சீராக நடத்த மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக டாக்டர் டி வி சோமநாதன் குறிப்பிட்டார். தேர்வை சீர் குலைக்கவோ, முறைகேடுகளில் ஈடுபடவோ முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். முன்னதாக, ஜூன் 1 அன்று மத்திய அரசுச் செயலாளர்களுடனும், ஜூன் 4 அன்று மாநிலத் தலைமைச் செயலாளர்களுடனும் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டங்களை அவர் நடத்தினார். நீட் மறுதேர்வுச் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் நேர்மைய...
நித்தி ஆயோக் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம் நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு அசோக் லஹிரி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (2026 ஜூன் 12) நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்று வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பேசுகையில், தங்களது மாநிலத்தின் நீர்மின் ஆற்றல் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வ சர்மா, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைத் குறைக்க உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, பொருளாதார வளர்ச்சி மனித மேம்பாடாக மாற வேண்டும் எனக் குறிப்பிட்டு, ‘மாற்றத்திற்கான பயணம் 2032’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். மிசோரம் முதலமைச்சர் திரு லால்டுஹோமா, சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுற...