சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (வயது 35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபுசகுபர் சாதிக் (வயது 26), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 28), முகமதுரபீக் (எ) பாபு (வயது 30) ஆகிய நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ அளவுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. அதனுடன் 3 செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். காவல்துறை தகவல் படி இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதைப் பங்கிட்டுக் கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், காவல்துறைக்கு தகவல் வரவே பிடத்துள்ளனர் அந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளி...
மதுரை- திருச்சிராப்பள்ளி நான்கு வழிச்சாலை வஞ்சிநகரத்தில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி KMR Tranz தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் செல்லும் சாலையில் நுழைந்த போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்றுச் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் மீது, வேகமாக மோதிய விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை சுற்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் மோதியது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கொட்டாம்பட்டி காவல்நிலையத் தகவல்....