‘டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழல் சோதனைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கேட்டு’ - அமலாக்கத் துறை பதில் மனு அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஊழல் சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது முதல் தவறு. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்திய ஊழல் சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில், அமலாக்கத் துறையினர் சார்பில் பதில் மனுவை இன்று தாக்கல் செய்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, விற்பனை பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது....
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை ஐஐடி யில் பேசிய கருத்துக்கள் . சென்னை ஐஐடி யில் படிக்கும் 30 சதவீதம் ஆந்திரப் பிரதேச மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நமது பொருளாதாரம் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா தற்போது கொண்டுள்ளது.இந்தியப் பிரதமர் என்னிடம் சொன்னார் நாம் (5,00,000) ஐந்து லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளி மூலம் பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதில் 136 ஜிகாவாட்ஸ் மட்டும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து உற்பத்தி செய்யத் திட்டம். ஒருகாலத்தில் 1 யூனிட் தயாரிக்க 14 ரூபாயாக இருந்ததை இன்று 2 ரூபாயாக மாற்றியாகி விட்டது. நரேந்திர மோடியின் ஒரு சிரிய தொடக்கம் டிஜிட்டல் இந்தியா கரன்சி ரூபே மூலம் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 16 ஆயிரம் கோடி ரூபே பரிவர்த்தனை நடந்து அதன் மூலம் 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு காகித பணமே இல்லாமல் கைமாறிய தொகை. 1 ட்ரில்லியன் = 83 லட்சம் கோடி ரூபாய் 200 லட்சம் கோடி 2014 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதா...