ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வருகிறது தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான அவரது கடைசி திரைப்படம் ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை பிரச்னைகளால் தை பொங்கல் நாளில் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை செய்யப்பட்டு மே மாதம் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகள் வெளியானது. தொடர்ந்து, முழுப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினர் முதற்கொண்டு பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், இப்படத்தைப் பகிர்வோர்கள் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த நிலையில், இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழைத் தணிக்கை வாரியம் வருகிற ஏப்ரல். 24 ஆம் தேதி நாளிட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சான்றிதழ் கிடைத்ததும் ஏப்ரல் மாதம் வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணைத்தும் இனி நடிகர் விஜய்க்கு சாதகமாகவே நடக்கும் இது...
மக்கள் புரட்சியா? அரசின் வீழ்ச்சியா? வெற்றி குவிக்கும் கட்சிகளும், சிலருக்கு காத்திருக்கும் தோல்விகளும் அலசல்
இதுவரை நடந்த ஊழல் ஆட்சி சமூக நீதி ஆட்சியாம்…! பாசிச பாஜகவை இவர்களை விட்டால் தடுக்க ஆளில்லையாம்…! தேனாறும், பாலாறும் ஓடிய பொருளாதார முன்னேற்றமாம்..! இது எல்லாம் உண்மை என்றால், ஏன் இந்த தேர்தலை இவ்வளவு பதட்டத்தோடு மற்றும் பணத்தோடு அணுகியது திமுக கூட்டணி ? ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து பணநாயகத்தையே முழுக்க நம்பி ஒரு வாக்கிற்கு ஆயிரம் முதல் 10,000 வரை தந்தார்களே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர். தவெக மற்றும் அதிமுகவின் பல நிர்வாகிகளை பணம் தந்து விலை பேசினார்களே..!. எத்தனை சட்ட மீறல்கள், அத்துமீறல்கள்..இவையெல்லாம் சொல்வது என்ன? இவர்கள் தங்களைக் குறித்து கட்டமைத்துக் கொண்ட பிம்பங்களை தாங்களே நம்பவில்லை என்பது தானே..! பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிகையாளர்களும்..மற்றும் சில அறிவு ஜீவிகளும் திமுக ஆட்சியை விதந்தோதி, ”இந்த நல்லாட்சியே மீண்டும் வரும்” என்ற கருத்தாக்கத்தை வலுவாக பணம் பெற்றுக் கட்டமைத்தார்கள். இதற்காக திமுக தலைமை பணத்தை அள்ளி இறைத்திருந்தது. அதில் இதுவரை நேர்மையான நபர்கள் என நம்பப்பட்ட பலரும் உண்டே, ஆனால், தேர்தல் நெருங்கும் தருவாயிலும், தேர்தலன்றும் அந்த பிம்பம்...