கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக திமுக ஆட்சியில் ஆர். காந்தி பதவி வகித்தார். இவர் தி.மு.க சார்பில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார் இவர் கடந்த திமுக ஆட்சியில் தமிழக கைத்தறித் துறையில் இலவச வேட்டி-சேலைத் திட்டத்தில் அமைச்சராக இருந்த ஆர். காந்தி மற்றும் அவர் மகன் வினோத் காந்தி ஆகியோர் தமிழக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ராஜஸ்தானிலிருந்து தரம் குறைந்த துணிகளை இறக்குமதி செய்து, அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் 'ஸ்கேம்' நடைபெறுவதாகக் கூறும் புகார்கள் அதிர்ச்சியூட்டுவதாகும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகளை மக்களுக்கு விநியோகிக்காமல், அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் சம்பவமும் நடைபெற்றள்ளதாம். இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூபாய் .60 கோடி மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியைச் சுரண்டி, இடைத்தரகர்கள் கோடிகளில் புரளும் இந்த அவலத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள...
ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் மகளிரின் ஊரகத் தொழில் முனைவு குறித்த கண்காட்சிக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், கேரள மாநிலம் கொச்சியில், 2026 ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பெண் அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே நடைபெறவுள்ள கண்காட்சியில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பங்கேற்றுள்ளது. நாடு முழுவதும் மகளிரால் நடத்தப்படும் ஊரக தொழில்துறை முயற்சிகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் திரு சாவித்ரி தாக்கூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மகளிரால் நடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களின் தொழில் முனைவு குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து. எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், உயர் பிரதிநிதிகளும் அரங்குகளைப் பார்வையிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஊரக தொழில்துறை குறித்...