தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலமென ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள மாநில ஆளுநராக பெரிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புச் சகோதர சகோதரிகளே, தமிழகச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி. கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்த போது, கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு– உங்களின் அயராத உழ...
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நீதிமன்றம் ஆணை. அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் கோனம்பேடு கிராமத்திலூள்ள இந்தக் கல்வி நிறுவனம் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விடுதிகள், துணை மின் நிலையம், தனியார் பாதைகள் அமைத்துள்ளதாக கிராம பொதுநல சங்கம் சார்பில் 2021 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோலவே காடடாங்குளத்தூர் ஏரியை எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம் பாரி வேந்தரான பச்சைமுத்து உடையாரும், ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி போரூர் ஏரியிலும் ஆக்கிரமித்த ராமசாமி உடையாரருப் போலவே தற்போது தம்பிதுரை ஆக்கிரமிப்பும் உள்ளது, வழக்கில், கோனம்பேடு கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால், மீட்கப்படும் நிலங்களை அந்தப் பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக...