திருமறைக்காடு எனும் வேதாரண்யம் இலங்கை இராவணன் அரண்மணையின் பின்பகுதிதான் அதன் கோடியக்கரை இலங்கை யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியத்தின் செல்வாக்கு யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூஜகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம் வழியாக நெடுந்தீவுக்கு வரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, 'மேளங்கட்டுதல்' எனச் சொல்லும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவின் நடுக்குறிச்சியில் அமைந்துள்ள பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், நெடுந்தீவில் நைமித்திய பூசை இடம்பெற்ற முதலாவது ஆலயம் எனக் கருதப்படுகிறது. “சுமார் 300ஆண்டு காலப் பழமையுடன், இந்தியாவுக்கு அணித்ததாய் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருந்த வேளையில், வேதாரணியத்துச் சைவக் குருமார், சைவப் பண்டாரங்கள் ஆரம்ப காலங்களில் இங்கு கொடியேற்றி, திருவிழாக்களை நடத்தி வந்தனர். கர்ப்பக் கிரஹ விக்கிரகமும் வேதாரணியத்திலிருந்து கடலில் வந்தடைந்ததாகவே கூறப்படுகிறது. கடலில் வந்து கண்...
எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி. சட்டப்பேரவையில் அப்பா எங்கே எனக் கேட்டு சிறு கதை சொன்ன முதலமைச்சர் ரசித்துச் சிரித்த எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தவிர பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என்ன நிலைமை என்பது தெரியாது, ஜேசிடி பிரபாகர் சிறப்பாகவே நடத்துகிறார். மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தம் சொல்லி அதை இணைக்கச் சொல்கிறார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒப்புதலோடு அதை இணைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் நிறைவேற்றுகிறார். குரல் வாக்கெடுப்புக்குப்பின்னே தீர்மானம் நிறைவேறுகிறது. மறுநாள், "புதிய திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை தருகிறார். அதன் பின்னே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகமும், "புதிய திருத்தம், ஏற்புடையதல்ல" என்கிறார். அதற்குப் பின்னர்...