நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியான வியாபாரி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாட்டின் சிறை நிர்வாகத்தின் மீதும், சட்டம் ஒழுங்கு அமைப்பின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் உயிரிழந்த நிலையில் . உடல் நலக் குறைவென் முதலில் கூறப்பட்டாலும், நீதித்துறையின் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 19 காயங்கள் கண்டறியப்பட்டதாகத் தகவல் தெரிலிக்கின்றன. முன்பே ஊனமுற்ற வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. CCTV காட்சிகளில் சிறை அலுவலர்களும் கைதிகளும் அவரைத் தாக்கியது பதிவாகியுள்ள தகவல்கள் வெளியாகின, தொடர்ந்து மூன்று சிறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுகிறது. இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல. இது தொடர்ச்சியான காவல் துறை மற்றும் சிறை அலுவலர்களின் அலட்சியம், மூர்க்கத்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடு. ஒரு உடல் ஊ...
ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பீடு ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025-டன் ஒப்பிடுகையில் 9.48 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. ஜூன் 2026-க்கான மொத்த இறக்குமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 88.76 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025 உடன் ஒப்பிடுகையில் 26.85 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. 2026-27-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 232.73 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 11.37 சதவீத நேர்மறை வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 270.15 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 17.55 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. ஜூன் 2025-ல் 34.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதி, ஜூன் 2026-ல் 40.41 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஜூன் 2025-ல் 54.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு இறக்...