முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கமலின் மையத்துக்கு வீட்டுச் சிறை, பிரேமலதா கட்சிக்கு ஜொலிக்கும் பிறை

கமலின் மையத்தை  சிறை வைத்து பிரேமலதா கட்சிக்கு பிறை சூடடிய இந்தியா கூட்டணி இதுகுறித்து கமலஹாசன் செய்யாளர்களிடம் "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வரும், துணை முதல்வரும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும். இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை, அவர்களது தரப்...
சமீபத்திய இடுகைகள்

இனி அட்டவணை பட்டியலினக் கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை -உச்சநீதிமன்றம்

இனி அட்டவணை பட்டியலினக் கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை,  மதம் மாறினால் SC/ST அட்டவணை பட்டியலில் நீடிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.  கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பின் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் எனும் சட்டப் பாதுகாப்பு செல்லாது;  ஆந்திரப்பிரதேச கிருஸ்தவ மத போதகர் அளித்த புகாரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டில் அதை உச்சநீதிமனறம் உறுதிப்படுத்தியது,, ஆந்திரப் பிரதேச ஹரிஜன அட்டவணைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்து  முன்பு  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவரின் ஜாதிச் சான்றிதழை அதிகார அமைப்புகள் இரத்து செய்யாத காரணத்தால் அதை அவர் தவறாகப் பயன்படுத்தி சலுகை உரிமை பெற்றால் அது மட்டுமே அவருக்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அளித்து விட முடியாது. அவர் தற்போது கிருஸ்தவராக இருப்பதால், அவர் பட்டியல் ஜாதி இல்லை எனவே அவர் அந்த அந்தஸ்தைக் கோரும் தனது உரிமையை மாறிய போதே இழந்துவிட்டார், என்றும், அதனால் அட்டவணை பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்...

விவாதத்தில் பேசியவர்கள் ஒரே ஜாதியானாலும் வேறு வேறு கட்சி அதுவே கலவரமானது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெகவைத் தவிர்த்து நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி தேர்தல் விவாத நிகழ்ச்சியில், தி.மு.க. ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் அதன் செய்தியாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனியார் தமிழ் தொலைக்காட்சி 'தேர்தல் பயணம்' என்ற பெயரில் நேரடி விவாத நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மார்ச் 23 ஆம் தேதி மாலை காரைக்குடி மகர்நோன்புத் திடலில்  நடைபெற்றதில் தி.மு.க, சார்பில் மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவருமான கட்சியின் பிரமுகர் சேங்கை மாறன் மற்றும் அ.தி.மு.க சார்பில் திருப்புத்தூர்ஜமுன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே. கே. உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி வேட்பாளரான மாநில ஒருங்கிணைப்பாளர் இடுப்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  இடும்பாவனம் கார்த்திக் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் திடீரென மேடையை நோக்கி நாற்காலிகளை வீசித் தாக்குதலில் ஈ...

சாத்தான்குளம் இருவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு அணைவரும் குற்றவாளிகள் தணடணை விபரம் 30 ஆம் தேதி

சாத்தான்குளம் வழக்கின் நியாயத் தீர்ப்பு நீதி வென்றது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி-காவல்துறைக்குபாராட்டு என வழக்கறிஞர் ஹென்றி திபேன் கருத்து, இந்த வழக்கில் தண்டனை விபரம் மார்ச 30-இம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நாடார்  வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மகன் படுகொலையானது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்ட பின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து வ...