முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தந்திரம் வாழ்வதில்லை; தைரியம் வீழ்வதில்லை என முதல்வர் சி. ஜோசப் விஜய் வாக்கெடுப்பில் வெற்றி !

தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான சி. ஜோசப் விஜய் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் வெனியிட்ட அறிக்கையில். "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,   வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.  மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.  நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.  அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில்...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு அரசு புதிய நியமனம் மற்றும் மாற்றங்கள்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்  நிதித்துறை செயலாளரான திமுக ஆட்சியில் இருந்து பல ஊழலுக்கு துணையாக செயல்பட்ட உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாலராக இருந்து திமுகவுக்கு ஆதரலாக பல தீய காரியங்கள் செய்த நிலையில் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார் .அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் தவெக தலைவர் முதல்வர் விஜய் மற்றும் கட்சி மீது சுமத்த முயன்றதால் அவர் செய்த செயல் ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலை...

ரூபாய்.1 லட்சம் லஞ்சம் உதவி செயற் பொறியாளர் கைது

சிவகங்கை ரூபாய்.1 லட்சம் லஞ்சம் உதவி செயற் பொறியாளர் கைது நெடுஞ்சாலைத்துறை அலுவலர் கைது ரூபாய் .1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.  சிவகங்கையில் அரசு ஒப்பந்ததார் கந்தசாமி. இவர் பெரியகிளுவச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை செய்து முடித்த வகையில் அவருக்கு ரூபாய் .19 லட்சம் நிலுவைத் தொகை அரசிடம் வரவேண்டியது இருந்தது. சிவகங்கை நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட செயற்பொறியாளர் சையது இப்ராஹிம் என்பவரை அணுகி நிலுவை தொகையை உடன் விடுவித்துத் தருமாறு கோரினார். பணத்தை விடுவிக்க, தமக்கு லஞ்சமாக ரூபாய் .1.20 லட்சம் தரவேண்டும் என்று அவர் நிர்பந்தித்துள்ளார். இதை ஏற்காத கந்தசாமி, மீண்டும் செயற்பொறியாளர் சையது இப்ராஹிமை அணுகி உள்ளார். அப்போது லஞ்சமாக ரூபாய் .1 லட்சம் கொடுத்தால் போதும் என்று பேரம் முடிவானது. இருப்பினும் பணத்தை தர விரும்பாத அவர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அது குறித்து புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, பினாப்தலீன் ரசாய...

முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்

முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை   முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக  நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கியப் பொறுப்பாகும். இதில் இருப்பவர் பொதுவாக முதல்வரின் அரசியல் நடவடிக்கைகள், கட்சித் தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் ஒருங்கிணைப்பார். அவரின் முக்கிய பணிகளாக முதல்வரின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு பேணுதல் அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருக்குத் தகவல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஊடகங்களில் வெளியாகும் அரசியல் செய்திகள் மற்றும் எதிர்வினைகளைக் கண்காணித்தல் கட்சியின் செய்தி பரப்பல் மற்றும் பொதுத் தொடர்பு நடவடிக்கைகளில் உதவுதல் தேர்தல் மற்ற...

நீட் இளநிலை 2026 நுழைவுத்தேர்வு ரத்து

மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலை 2026 நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவையடுத்து தேசியத் தேர்வு முகமையான என்.டி.ஏ ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின் இத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்தது. இத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் எனவும் புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என என்.டி.ஏ கூறியது. ராஜஸ்தானில் மே மாதம் 10-ஆம் தேதி வினாத்தாள் கசிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட இத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இனி மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், இதற்காகத் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. தேசியத் தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிபிஐ-யிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு என்.டி.ஏ முழு ஒத்துழைப்பு வழங்கும்; தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் விசாரணை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்...