திமுக மற்றும் அதிமுக முன்னாள் மாநில அமைச்சரும் திமுக தூத்துக்குடி மாவட்டப் பிரமுகருமன அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையின் சார்பாக குற்றஞ்சாட்டியது. தொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. என்ற நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும். சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழ்ந...
நிதி அமைச்சகம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் குஜராத்தின் கிஃப்ட் சிட்டி முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ந்து வரும் சர்வதேச நிதிச் சேவைகள் சூழலமைப்பு குறித்து வெள்ளியன்று கிஃப்ட் சிட்டியில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி.கே. மிஸ்ரா; குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், குஜராத் அரசு, சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம், கிஃப்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். வங்கித்துறை, மூலதனச் சந்தைகள், நிதி மேலாண்மை, காப்பீடு மற்றும் மறு காப்பீடு, விமானம் மற்றும் கப்பல் குத்தகை, நிதித் தொழில்நுட்பம், தங்கம் மற்றும் வெள்ளிப் பரிமாற்றம், சர்வதேசக் கல்வி மற்றும் அது சார்ந்த சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிஃப்ட் சிட்டி அட...