முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கன்னிப்பேச்சில் கவிதை வடித்த கமலஹாசன்

“தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - நாடாளுமன்ற மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு:- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.( நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) ஓரளவு உண்மை தான். தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! என  நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன்  ஆங்கிலத்தில் உரையாற்றியவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவ...
சமீபத்திய இடுகைகள்

திருக்கோஷ்டியூரில் மஹா சம்ரோக்ஷ்ன விழா

திருக்கோஷ்டியூரில் வெள்ளிக்கிழமை மஹா சம்ரோக்ஷ்ன விழா  "குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய் செற்றமொன்றுமிலா தவண்கையினார் கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றயேழுலகுண்ட தூமணிவண்ணம் தன்னைத்தொழாதவர் பெற்றதாயார் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே."..பெரியாழ்வார். ஸ்ரீ வைகுண்டபதியான சர்வேஸ்வரன் அடியார்களைக் காத் தல் பொருட்டு அவனிருப்பை விட்டு உலகத்திலுள்ள கோயில்களில் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியுள்ளான். அங்ஙனம் எழுந்தளி யுள்ள திருக்கோயில்களுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்விய தேசங்கள் 108, ல் தண்ணார் தமிழளிக்கும் தன் பாண்டிய நாட்டிலிருப்பவை 18 வைணவத் திருப்பதிகள். "ஈரொன்பதாம் பாண்டி" எனக் கூறப்பட்டிருக்கிறது. திருக்கோஷ்டியூர் இப் 18 ல் ஒன்று. 1720 ஆம் ஆண்டில் சேதுபதி சமஸ்தானம் மதுரை ஜில்லா அமராவதி தாலுகா, 1865 ஆம் ஆண்டில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் இராமநாதபுரம் ஜில்லா எழுவன்கோட்டை தாலுகா பின்னர் 1984 வரை  இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா என மாறியதில் தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்தில்  அமைந்துள்ளது இதற்குக் கோஷ...