ஆந்திரப் பிரதேச மாநிலம் புத்தூர் போஃன் செட்டிங் ஹாஸ்பிட்டல் என்பது பல தலைமுறையாக புத்தூர், இராஜபாள்யம், சித்தூர் மாவட்டம், உள்ளது திருப்பதி செல்லும் சாலையில் நகரியை அடுத்து அமைந்துள்ள புத்தூர் Bone Setting மருத்துவமனை ஆகும், இதன் பெயர் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம் இந்தியா முன்னால் ஜனாாதிபதி வரை இங்கு மருத்துவம் பார்த்தவர்கள் என அதிகம். அவ்வாறு இருக்க அந்த மருத்துவ மனை பெயரைப் பயன்படுத்தி அவர்கள் அனுமதி பெறாமல் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் கதைபோல ஒரு போலியான நபர் நுடவைத்திய சாலை நடத்திய நிலையில் சுகாதாரத்துறையின் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில் சிங்கம்புணரியில் பாண்டி என்ற நெடுஞ்செழியன் போலி நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தைலப் பாட்டில்கள் உள்ளிட்ட நுட வைத்தியம் பார்த்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் நெடுஞ்செழியன் என்ற ஆ. தெக்கூர் பகுதி நபர் நுட வைத்தியம் பாரர்த்து வந்தார். முகநூல் வாயிலாக நேரலையில் சிகிச்சை அ...
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தார். சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநரின் லோக் பவன் எனும் மக்கள் மாளிகை எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தது.பதிவில், 1. ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை; 2 தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்களும், தவறான தகவல்களும் உள்ளன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 3. மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற தகவல் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு...