கடந்த கால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் பல முறை அழுகிய முட்டைகளை வழங்கப்பட்டதைக் பாஜகவின் சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்ததாக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், மேலும் தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமலிருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல. முட்டைகளின் சேமிப்புக் காலம், மற்றும் தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-, "தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூபாய் 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூபாய் 3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குற...
இந்திய நாட்டின் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்’ கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்தவும், பல ஆண்டுகளாக உருவாகி வரும் இது போன்ற அனைத்துக் கட்டிடங்களையும் இடிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அனைத்து வங்கிகளும் எல்லைப் பகுதிகளில் வங்கிப் பரிவர்த்தனைகளை சட்டப்பூர்வமாகவும், நிதி ரீதியாகவும் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல், பெரிய வணிக நிறுவனங்களைச் சரிபார்த்தல், அவற்றின் நிதி ஆதாரங்களை ஆய்வு செய்தல், சில போலி கணக்குகள் மற்றும் தவறான நிறுவனங்களைக் கண்காணித்தல், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிதல், எல்லை தாண்டிய கடத்தலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. செவ்வாயன்று பிகானேரில் நடந்த பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மதிப்பீடு செய்தார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா, மூத்த மாநில அதி...