இந்தியா முழுவதும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எழுச்சி தான் மக்கள் மத்தியில் வரவேண்டும் நாணயத்தின் மறுபக்கம் நாளும் வளரும் ஊழல் தானே, ஏழையின் வியர்வைத் துளிகளை எச்சில் துளியாய் விழுங்கும் ஒரு லஞ்சப் பெருங்கூட்டம், நான்கு கால்களில் அமைந்த ஜனநாயக நாற்காலிக்கு இரண்டு கால்கள் பழுது எனில் அதன் அடியில் செல்லும் ஊழல் கைகள், நாட்டின் உரிமையை விற்கும் நேர்மை இல்லாத அந்தகக் கண்கள்!சாமானியனின் உரிமை மறுக்கப்பட்டு, சட்டத்திலுள்ள சிறிய எலிப்பொறி ஓட்டைகளில் தப்பிக்கும் பெரிய ஊழல் பெருச்சாளிகள், மூலம் லஞ்சம் நுழைந்து தானே உண்மை ! இனி நாளை மலரும் விடியலாய்,ஒன்றாகுவோம் வாரீர்! தற்போது தமிழ்நாடு அரசாணை நேர்மையின் ஒளியை ஏந்தி, ஊழலை வேரறுப்போம் பாரீர் என வந்தாலும் ! ஊழல் என்பது பலவகை "தானும் செய்யாது தருபவரையும் தடுத்தல் அதுவே தகுதியில் செய்யும் ஊழல், காணும் அனைத்திலும் காழ்ப்புடன் எழுதல் கற்பனையில் செய்யும் ஊழல், மானம், மரியாதை, மதிப்பைக் கெடுத்தல் மனிதம் அழிக்கும் ஊழல், வீணாய் தர்க்கித்து விவாதம் ...
தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் : ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார். காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதுல் ஆன...