ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் கீழ் 100% இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் (இபிஎப்ஓ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இபிஎப்ஓ-வின் 73-வது நிறுவன தினத்தின் போது, ஐபிபிபி-யின் நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர். விஸ்வேஸ்வரன், இபிஎப்ஓ-வின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை விருந்தினராகக் கலந்து கொண...
கோயம்பத்தூர் விமான நிலையமருகே நடந்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் மூவரை, துப்பாக்கிச் சூடு நடத்தி தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கோயம்பத்தூர் மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது..:- நேற்று முன்தினம் இரவு கோயமுத்தூர் விமான நிலையம் அருகே நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் அவர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்ய முயன்ற போது, காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி கால்களில் சுட்டனர். அதில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி எனும் சதீஷ் இருவருக்கு தலா இரண்டு புல்லட்டுகளும் தவசிக்கு ஒரு புல்லட்டும் பாய்ந்து காயம் ஏற்பட்டது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), அவரது தம்பி காளீஸ்வரன் (21) மற்றும் உறவினர்...