முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்,   தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடி பேச்சுகளால்  செய்திகளில் இடம்பிடிப்பார். கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். தமிழ் திரைப்படம் தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. கே ராஜன் தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டில் இருந்து தீவிரமாக இயங்கியவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த 'பிரம்மச...
சமீபத்திய இடுகைகள்

காந்தி நகரில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் வர்த்தகத்துறை வர்த்தகச் செயலாளர் கருத்து

காந்தி நகரில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் வர்த்தகத்துறை வர்த்தகச் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விளக்கினார் குஜராத்தின் காந்தி நகரில்  நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான தொடர்புக் குழுவின் 2வது கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் சிறப்புரையாற்றினார். மார்ச் 2026-ல் மெய்நிகர் வடிவில் நடைபெற்ற முதல்  கூட்டத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் தொடர்ந்து வலிமையடைந்து, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக உருவெடுத்துள்ளது என்று திரு. அகர்வால் கூறினார். அதிகரித்து வரும் புவியியல் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலித் தடைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இது நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ல் 84 பில்லியன் டாலராக இருந்த பிரிக்ஸ் உள்நாட்டுப் பொருட்களின் வர்த்தகம், 2024-ல்  1.17 டிரில்லியன் ட...

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரை

குவாண்டம் மற்றும் செய ற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி, ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம், வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியா...

நெதர்லாந்திலிருந்து பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள்,

நெதர்லாந்திலிருந்து நமது பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள், முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட 30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் ஒரு பொக்கிஷமாகும். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தை அமைத்த ஸ்ரீ விஜய பேரரசு மன்னருக்கு, ஆனைமங்கலம் கிராமத்தை தானமாக வழங்கியதை இவை பதிவு செய்கின்றன.இந்தச் செப்பேடுகள் முதலாம் இராஜராஜ சோழனின் 21-வது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1010-1012) வெளியிடப்பட்டன. கடாரத்தை (தற்போதைய இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பகுதிகள்) ஆண்ட ஸ்ரீ விஜய மன்னன் 'சூளாமணிபன்மன்' கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமம் தானமாக வழங்கப்பட்டது. சோழப் பேரரசின் கடல் கடந்த வர்த்தக வலிமையையும், இந்து மன்னரான இராஜராஜ சோழன் பௌத்த மதத்திற்கு அளித்த சமய சகிப்புத்தன்மையையும் இந்த தானம் உலகிற்கு பறைசாற்றுகிறது. செப்பேடுகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தொடக்கப் பக்கங்கள் சமஸ்கிருதத்திலும், பெரும்பான்மையான தகவல்கள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் சின்னமான ...

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாக்கா விபரம் வெளியிட்ட லோக் பவன்

லோக் பவன், தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பு :- மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மாண்புமிகு  தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்கள் பரிந்துரை ஏற்று அமைச்சர்கள் குழுவிற்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10.05.2026 அன்று அவருடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர்கள் குழுவிற்கான இலாகாக்கள் மற்றும் பொறுப்புகள் ஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளார் .தமிழ்நாடு அமைச்சரவை முழுத் துறை விவரங்கள் சி. ஜோசப் விஜய் - முதல்வர்   தமிழ்நாடு அமைச்சரவை - பதவி ஏற்ற அமைச்சர்களின் துறை விவரங்கள்: முதல்வர் சி. ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, மகளிர் நலம், இளைஞர் நலன், குழந்தைகள் நலம், முதியோர் நலம், மாற்றுத் திறனாளிகள் நலம்,   நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல். என்.ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துறைகள்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், வறுமை ஒழி...

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் ஊழல் ஒழிப்பில் துவக்கமா அலசல்

சென்னை திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம். "சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கத் தவறியதால், காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட்" என, காவல் துறைத் தலைமை தெரிவித்தது. சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்கத் தவறியதாக,  சென்னையில், இதுவரை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இது புதிது.  இப்போது தான் முதல்முறையாக தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு அருகே, அதிகாலை வேளையிலேயே தனி நபர்கள் மாமூல் மூலம் கள்ளச்சந்தையில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது  செய்யப்பட்டனர். அதோடு கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதை மாமூல் வாங்கி தடுக்கத் தவறிய, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கண்டுகொள்ளாமல், கடமை தவறி அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி க...