பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு. ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு. குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை: அதில் கண்டுள்ள படி 07.04.2026-ம் தேதி 23.30 மணிக்கு ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் K.சுபாஷ் சந்திர போஸ் நிலைய பொறுப்பிலிருந்த போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் (தாலுகா), மருதம்புத்தூர், S.பிரதிபா வயது 17 என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவை பெற்று புகார்மனுவின் தன்மைக்கேற்ப சட்டப்பிரிவுகள் 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT -"ன். படி பதிவு செய்தார் அதன் விபரம். புகார் மனு அனுப்புநர்: எஸ். பிரதீபா மருதம்புத்தூர், ஆலங்குளம் (தாலுகா), தென்காசி மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர், ஆலங்குளம் காவல் நிலையம், ஆலங்குளம். ஐயா, இன்று 7-04-2026 மதியம் சுமார் 12.45 மணியளவில், மூன்று நபர்கள் எனது சித்தப்பா மணிகண்டன் என்பவரை, எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து எங்களது பனைமரத்தில் ஏறச் சொல்லி வற்புறுத்தி...
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழ்நாடு தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் சமயத்தில் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2026 ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே இருந்த நா. முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்இந்த மாற்றம் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் கீழ் ஏப்ரல் 8, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. ...