திரைப்பட இயக்குநர், நடிகர் சேரன் வெளிப்படையான கருத்து 'திருமணம்' படம் தேர்வுக குழுவால் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவரது கேள்விகள், கவனத்தை ஈர்க்க்கிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான தொலைக்காட்சித் தொடர் விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் வழங்க உள்ள நிலையில் இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்ப...
மதுரை நாயக்க மன்னர்களின் தலைநகரான திருச்சிராப்பள்ளியை மாற்றி முதன் முதலில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பெருமைக்குரிய மன்னர் திருமலை நாயக்கர். மதுரை நகரை கலையின் வடிவமாக மாற்றினார். மதுரையில் பிரம்மாண்டமான மற்றும் பழைய பாண்டியர் அரண்மனையின் மூன்றில் ஒரு பகுதியில் ஒரு புதிய அரண்மனையை 200 தூண்களுடன் கட்டுவித்தார். அதற்காக மண் எடுக்கத் தோண்டிய பெரிய பள்ளத்தைக் கூட கலைநயத்துடன் கூடிய தெப்பக்குளமாக மாற்றினார். பின்னாட்களில் அமைச்சர் பெருமக்களும், அரச சபையினரும் திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று (அக் காலத்தில் கிரிக்கோரியன் காலண்டர் கிடையாது. எனவே சரியான தேதிப்படி நடக்காது ஹிந்து மத திதிப்படிதான் நடக்கும் ஆகவே பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம்) அதே தெப்ப குளத்தில் திருமலை நாயக்கரின் ஆயுள் விருத்திக்கும் அவர் புகழினை போற்றவும் தெப்பம் விடும் திருவிழாவை துவக்கினர். பின்னர் அந்த கலாச்சாரம் திருமலை நாயக்கர் ஆட்சி செய்யும் அனைத்து பகுதிகளிலும் பரவி பல இடங்களில் நாயக்க மன்னரின் புகழினை போற்றும் விதமாக தெப்...