தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் நிதித்துறை செயலாளரான திமுக ஆட்சியில் இருந்து பல ஊழலுக்கு துணையாக செயல்பட்ட உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாலராக இருந்து திமுகவுக்கு ஆதரலாக பல தீய காரியங்கள் செய்த நிலையில் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார் .அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் தவெக தலைவர் முதல்வர் விஜய் மற்றும் கட்சி மீது சுமத்த முயன்றதால் அவர் செய்த செயல் ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலை...
சிவகங்கை ரூபாய்.1 லட்சம் லஞ்சம் உதவி செயற் பொறியாளர் கைது நெடுஞ்சாலைத்துறை அலுவலர் கைது ரூபாய் .1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். சிவகங்கையில் அரசு ஒப்பந்ததார் கந்தசாமி. இவர் பெரியகிளுவச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை செய்து முடித்த வகையில் அவருக்கு ரூபாய் .19 லட்சம் நிலுவைத் தொகை அரசிடம் வரவேண்டியது இருந்தது. சிவகங்கை நெடுஞ்சாலைத் துறையில் உதவிக் கோட்ட செயற்பொறியாளர் சையது இப்ராஹிம் என்பவரை அணுகி நிலுவை தொகையை உடன் விடுவித்துத் தருமாறு கோரினார். பணத்தை விடுவிக்க, தமக்கு லஞ்சமாக ரூபாய் .1.20 லட்சம் தரவேண்டும் என்று அவர் நிர்பந்தித்துள்ளார். இதை ஏற்காத கந்தசாமி, மீண்டும் செயற்பொறியாளர் சையது இப்ராஹிமை அணுகி உள்ளார். அப்போது லஞ்சமாக ரூபாய் .1 லட்சம் கொடுத்தால் போதும் என்று பேரம் முடிவானது. இருப்பினும் பணத்தை தர விரும்பாத அவர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அது குறித்து புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, பினாப்தலீன் ரசாய...