வெங்காய கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 13 சதவீதம் உயர்த்தி ரூபாய் 2,125 ஆக அரசு நிர்ணயித்துள்ளது வெங்காயக் கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ₹1,875-லிருந்து ₹2,125 ஆக, அதாவது 13% அரசு உயர்த்தியுள்ளது. திருத்தப்பட்ட இந்தக் கொள்முதல் விலை இன்றுமுதல் (04 ஜூலை 2026) அமலுக்கு வந்துள்ளது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவை மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தப்பட்ட இந்தக் கொள்முதல் விலையானது, கையிருப்பு கொள்முதல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, வெங்காய விவசாயிகளுக்குச் சிறந்த வருவாயையும் உறுதி செய்யும். வேளாண் துறையின் 2025-26-ம் ஆண்டுக்கான இரண்டாவது மதிப்பீடுகளின்படி, வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காயத்தின் ஒட்டுமொத்த கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இருப்பினும், வழக்கமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலைகள் சிறிதளவு மட்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தற...
சாதனை அளவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, இந்தியா மீதான உலகளாவிய நம்பிக்கைக்குச் சான்றாக உள்ளது - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம், பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து தற்சார்புக்கும், தற்சார்பிலிருந்து தன்னம்பிக்கைக்கும், தன்னம்பிக்கையிலிருந்து வளர்ச்சி பெற்ற இந்தியாவைக் கட்டமைப்பதற்குமான ஒரு முன்னேற்றப் பயணமாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று, (ஜூலை 04, 2026) புதுதில்லியில் ஊடக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது முதல் பதவிக்காலத்தில் பற்றாக்குறைகளைக் களைந்து, வாய்ப்புகளை விரிவுபடுத்தி, பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்தது என்றார். இரண்டாவது பதவிக்காலத்தில், அது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, சாதனைகளாக மாற்றி, நாட்டை தற்சார்புப் பாதையில் உறுதியாக நிலைநிறுத்தியது என்று அவர் தெரிவித்தார். மூன்றாவது பதவிக்காலத்தில், "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற கொள்கையின் மூலம் வளர்ச்சியடைந...