முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு. ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு.  குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை:  அதில் கண்டுள்ள படி 07.04.2026-ம் தேதி 23.30 மணிக்கு ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் K.சுபாஷ் சந்திர போஸ் நிலைய பொறுப்பிலிருந்த போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் (தாலுகா), மருதம்புத்தூர், S.பிரதிபா வயது 17 என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவை பெற்று புகார்மனுவின் தன்மைக்கேற்ப சட்டப்பிரிவுகள் 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT -"ன். படி பதிவு செய்தார் அதன் விபரம். புகார் மனு அனுப்புநர்: எஸ். பிரதீபா மருதம்புத்தூர், ஆலங்குளம் (தாலுகா), தென்காசி மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர், ஆலங்குளம் காவல் நிலையம், ஆலங்குளம். ஐயா, இன்று 7-04-2026 மதியம் சுமார் 12.45 மணியளவில், மூன்று நபர்கள் எனது சித்தப்பா மணிகண்டன் என்பவரை, எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து எங்களது பனைமரத்தில் ஏறச் சொல்லி வற்புறுத்தி...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உளவுப் பிரிவு டிஜிபி ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு.  தமிழ்நாடு தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு.      தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் சமயத்தில் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2026 ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே இருந்த நா. முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்இந்த மாற்றம் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் கீழ் ஏப்ரல் 8, 2026 அன்று அறிவிக்கப்பட்டது.  ...

8 வது போஷன் பக்வாடா 2026-ன் தேசியத் துவக்க விழா

‘வாழ்க்கையின் முதல் ஆ று ஆண்டுகளில் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துதல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 8வது போஷன் பக்வாடா 2026-இன் தேசியத் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 2026 ஏப்ரல் 9 முதல் 23 வரை போஷன் பக்வாடாவைக் கொண்டாடும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 8வது போஷன் பக்வாடாவை 2026 ஏப்ரல் 9 முதல் 23 வரை கொண்டாடும். ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்: “நல்ல ஊட்டச்சத்து பெற்ற குழந்தையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம். போஷன் அபியான் என்பது வெறும் அரசுத் திட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் முழுமையான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான ஒரு மக்கள் இயக்கமாகும்.” மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி அவர்களி...

இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி.              குற்றவாளிகள் காவல் துறை ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை பணியாளருக்குமே தூக்கு தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு. செல்போன் விற்பனைக் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஆறாண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி கொரோனா பரவல் காலத்தில் காவல்துறை பணியில் இருந்த காவலர் சிலரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு  21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்படவர்கள். ஜூன் மாதம் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம்  பெரிய அளவில் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. வழக்கை சூமோட்டோவாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , அறிக்கை தாக்கல் செய்யம்படி மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப்...