தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியை ஜனவரி 30-ஆம் தேதி நடத்தியதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும் போது, அரங்கில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கை தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது அனைவர் கவனத்தைப் பெற்றது, திமுகவின் சேலம் பகுதி நிர்வாகி பரணீதரனுக்கும் எச்.ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போதே திடீரென எச்.ராஜா மயக்கமடைந்து கீழே சரிந்தார். அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதே நிகழ்வில் அரங்கிலிருந்த பாஜக முன்னால் தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து, “அதிக இரத்த அழுத்தத்தால்” மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறினார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோ...
புதுக்கோட்டையில் இராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள இரண்டு ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வையாபுரி எனும் துரை வைகோ தலைமையில் நடந்தது, நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையான 15 வருடக் கோரிக்கை புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய இரண்டு பகுதிகளில் பகல் நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரண்டு இரயில்வே கேட்டைக் கடந்து செல்லும்போது, உரிய நேரத்தில் தமது நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்தப் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இரயில்வே துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ...