முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு ஊழல் செய்த அலுவலர்கள் பணியிடை நீக்கம்

பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டிருந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்  பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது  சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்,  சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடு...
சமீபத்திய இடுகைகள்

லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,

இந்தியா முழுவதும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எழுச்சி தான் மக்கள் மத்தியில் வரவேண்டும் நாணயத்தின் மறுபக்கம் நாளும் வளரும் ஊழல் தானே, ஏழையின் வியர்வைத் துளிகளை எச்சில் துளியாய் விழுங்கும் ஒரு லஞ்சப் பெருங்கூட்டம்,  நான்கு கால்களில் அமைந்த ஜனநாயக நாற்காலிக்கு இரண்டு கால்கள் பழுது எனில் அதன் அடியில் செல்லும் ஊழல் கைகள்,  நாட்டின் உரிமையை விற்கும் நேர்மை இல்லாத அந்தகக் கண்கள்!சாமானியனின் உரிமை மறுக்கப்பட்டு, சட்டத்திலுள்ள சிறிய எலிப்பொறி ஓட்டைகளில் தப்பிக்கும் பெரிய ஊழல் பெருச்சாளிகள், மூலம் லஞ்சம் நுழைந்து தானே உண்மை !   இனி நாளை மலரும் விடியலாய்,ஒன்றாகுவோம் வாரீர்!  தற்போது தமிழ்நாடு அரசாணை  நேர்மையின் ஒளியை ஏந்தி, ஊழலை வேரறுப்போம் பாரீர் என வந்தாலும் !    ஊழல் என்பது பலவகை   "தானும் செய்யாது தருபவரையும் தடுத்தல் அதுவே  தகுதியில் செய்யும் ஊழல், காணும் அனைத்திலும் காழ்ப்புடன் எழுதல் கற்பனையில் செய்யும் ஊழல், மானம், மரியாதை, மதிப்பைக் கெடுத்தல்  மனிதம் அழிக்கும் ஊழல், வீணாய் தர்க்கித்து விவாதம் ...

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் : ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார். காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதுல் ஆன...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தத் தடை இல்லை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை ஜூலை மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை  வழக்கை விசாரித்து, ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலை நடந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கில் அஸ்வத்தாமன், பொன்னா பாலு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை சார்பில் 7,000 பக்கங்களுக்கும் மேல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணைக்காக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய  திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. இந்த நிலையில் முக்கியத் திருப்பமாக ஜூலை 2026 நிலவரப்படி தமிழ்நாடு அரசியல் சூழல் மாற்றங்கள...

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண் கலைஞர்கள் பைஜாம அல்லது வேட்டி, சட்டை அணிந்திருந்த வேண்டும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி, அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார். கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இந்த மனுக்களை விசாரணை செய்து உரிய நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கிவருகிறனர். இந்த நிலையில் தஞ்சை வளப்பக்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழா 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி ...

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை ஒரு தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டும்.தேசியவாதிகளின் கோரிக்கை

இந்திய அரசு 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை (Cockroach Janata Party) ஒரு தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டும். தேசியவாதிகளின் கோரிக்கை சீன தூதரகத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் எஸ்.எஃப்.ஐ (SFI) தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில்  (CJP)  கரப்பான் பூச்சி அமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களான ஆதர்ஷ் எம். சஜி மற்றும் ஆய்ஷே கோஷ் ஆகிய இருவரும், சமீபத்தில் சீனத் தூதரகத்திற்குச் சென்றதாகவும், அங்கிருந்து சில 'பரிசுகளைப்' பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் முக்கியமான மாணவர் இயக்கத் தலைவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கவலையையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற வேளாண்மைத்துறை உயர்நிலை ஆய்வுக் கூட்டம்

கொல்கத்தாவில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமை தாங்கினார் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மேற்கு வங்க மாநில முதல்வர் திரு சுவேந்து அதிகாரி, மாநில அமைச்சர்களுடன் கொல்கத்தாவில் இன்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 82,000 கோடி ரூபாய் மதிப்பிலான 19 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநிலத்தில் கிராமங்களின் வளர்ச்சியை வலுப்படுத்த 8,508 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளுக்கு இடைக்கால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகள் கணக்கெடுப்புக்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 295 கோ...