முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கேரளம் உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா 2026 மார்ச் மாதம் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதால் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிச...
சமீபத்திய இடுகைகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரையில் பிரதமர் திருப்பரங்குன்றத்தில் தரிசனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தரிசனத்திற்காக வருகை தந்தார் . அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது சாமி தரிசனம் செய்தார். பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துள்ளன மதுவால் தங்கள் குடும்பம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு பெண்கள் கலங்குகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தாய் ,சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்புக்கு நான் உறுதியளிக்கிறேன் . நம் ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்,தமிழ்நாட்டிலேயே சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவுகள் கற்பனை கோட்டையாக கானல் நீராக மாறிவிடும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று கூறினார். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டும் என‌ வலியுறுத்தி உயிரை விட்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பி...

டெல்லியில் நீதிமன்றம் விடுவித்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள்

டெல்லி யூனியன் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என 2021-22 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையைக் கொண்டு வந்தார் . இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூபாய் .100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது. மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ஆம் ஆண்டு டெல்லி தலைமைச் செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு...

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?'  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்.  மேற்கத்திய வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளதன்படி கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியது. அபுதாபியில் ஈரான் போர் சூழல் வான்பரப்பை மொத்தமாக மூடிய துபாய். விமானப் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்தது! ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிற நிலையில், துபாய் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகள் தங்கள் வான் பரப்பை மூடியிருக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக, வான்வழிப் பாதைகள் மூடப்பட்டு, ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா 'ஆபரேஷன் எபிக் ஃபுயூரி' என்றும், இஸ்ரேல் 'ஆபரேஷன் லயன்ஸ் ரோவர்' என்றும் பெயரிட்டன. அத...