சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரூபாய் .258 கோடி பணமோசடி வழக்கில், ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனைகளை நடத்தியது.வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பதிவு செய்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இந்தக்கும்பல் கடல் வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் இலங்கைக்கு ரூபாய் .150 கோடி மதிப்புடைய மெத்தபெட்டமைன் மற்றும் ரூபாய் .108 கோடி மதிப்புடைய ஹாஷிஷ் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியது கண்டறியப்பட்ட சோதனைகளின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது இந்த நிலையில்ஜே.எம்.ஜே. (IJK) நிறுவனரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களின் அண்ணன் தான் இந்த ஜான் பிரிட்டோ. அவர் மீதான முக்கிய விவரங்கள்:அமலாக்கத்துறை (ED) வழக்கு: ஜான் பிரிட்டோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், அந்நி...
60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை – 320 பணியாளர்கள் ஒரே நேரத்தில் நுழைந்து கணக்கில் வராத பணம், முறைகேடுகள் குறித்து சோதனை! நேற்று ஜூன் மாதம் 4, 2026: தமிழ்நாடு முழுவதும் உள்ள 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் பிற்பகல் 2.30 மணியளவில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது. சுமார் 320 காவல்துறை பணியாளர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நுழைந்து, கணக்கில் வராத பணம் மற்றும் பிற முறைகேடுகளைச் சோதனை செய்தனர் ஜூன் 4 ஆம் தேதி ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான மிகச் சிறந்த நாள் என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் பெருங்கூட்டத்தைப் பயன்படுத்தி, DVAC அதிகாரிகள் திட்டமிட்டு இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 சார்பதிவாளர் அலுவலகங்கள். பிற்பகல் 2.30 மணியளவில், போலீஸார் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து, வெளியேறும் வழிகளை முற்றுகையிட்டனர் பணியாளர்கள்: சுமார் 320 காவல் பணியாளர...