பத்து காவல்துறை அதி காரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. உளவுத் துறையில் டிஜிபியான பாலநாக தேவி சைபர் கிரைம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். வேலூர் சரக டிஐஜி-யான தர்மராஜன் சென்னை உளவுத்துறை (பாதுகாப்பு) டிஐஜி-யாக நியமனம்.. சென்னை சட்டம் – ஒழுங்கு (தெற்கு மண்டலம்) இணை ஆணையரான ப.கெர்லா செபாஸ் கல்யாண் சென்னை உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜி-யாக மாற்றப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜி-யான சரவணன் சென்னை சிஐடி (CID) உளவுத்துறை டிஐஜி-யாக நியமனம். திருவாரூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கராட் கருண் உத்தவ்ராவ் சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்பி-யாக மாற்றம். தென்காசி மாவட்டக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (I) எஸ்பி-யாக நியமனம். தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் மதன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (I) எஸ்பி-யாக மாற்றம். ‘Q’ பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் சண்முகம் ஸ்பெஷல் பிரான்ச் CID (II) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரோ மண்டல குற்றப் பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் மாதவன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID ...
மீண்டும் புதுவை முதல்வரானார் ரெங்கசாமி. பாண்டிச்சேரி யூனியன் பிரதேச 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் என்.ரெங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதியிலும், அ.தி.மு.க ஒரு தொகுதியிலும்,ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தான் தேவை. ஆகவே 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு கூடி அதன் தலைவராக என்.ரெங்கசாமியை தேர்வு செய்தனர். பாண்டிச்சேரி 2026 சட்டப்பேரவைமுதல்வர் என்.ரங்கசாமி பெற்ற மொத்த எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார், குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையைடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர். ஆன்மிகம், ஆருடம், நல்ல நேரம் அகியவற்றில் அதீத நம்பிக்கை உடையவரான என்.ரங்கசாமி, பதவியேற்புக்காக தன்னுடைய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவி...