சத்ரு சம்ஹார யாகம் செய்து சாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் நடிகர் விஜய் சத்ரு சம்ஹார ஹோமத்தை ஜென்ம நட்சத்திர திதிகளில் செய்வது சிறப்பு. முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்களில் செய்வது சிறப்பான பலன், மேலும் முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாகத் தர வல்லதாகும். யாக வேள்வி குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களைத் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களைத் தருகிறது. ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும். சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாகத் தரப்படுவதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் தோஷங்களைப் போக்குகிறது. சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நேரடி மற்றும்...
கோயம்பத்தூர் மாவட்டம் ஏழாம் படைவீடான மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டி, அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நிலைதான் திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி வட்டாரம் கோணப்பட்டி மலையில் ஜோதி முருகன் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இது போன்ற வழக்குகளில், "அரசு புறம்போக்கு நிலத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்" என்பது போன்ற கருத்துகள், அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் புதிய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிமுறை இங்கு முக்கிய...