சென்னை திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம். "சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கத் தவறியதால், காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட்" என, காவல் துறைத் தலைமை தெரிவித்தது. சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்கத் தவறியதாக, சென்னையில், இதுவரை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இது புதிது. இப்போது தான் முதல்முறையாக தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு அருகே, அதிகாலை வேளையிலேயே தனி நபர்கள் மாமூல் மூலம் கள்ளச்சந்தையில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அதோடு கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதை மாமூல் வாங்கி தடுக்கத் தவறிய, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கண்டுகொள்ளாமல், கடமை தவறி அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி க...
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்; குடியுரிமை பெற்ற நாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் சென்றபோது விரல்களில் இருந்த மையால் பிடிபட்டனர்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்திருப்பது தொடர்பாக நேற்றிரவு வரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தொடர்ந்து வெளிநாட்டினர் கைதாகி வருகின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களின் விரலில் இருந்த ஓட்டு போட்டதற்காக அடையாளத்திற்கு வைக்கப்பட்ட மை அவர்களைக் காட்டி கொடுத்திருக்கிறது. கையில் மை உடன், வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை பிடித்து விசாரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு . அதையடுத்து சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி என சர்வதேச விமான நிலையங்களில்,...