முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பள்ளிப் பாடத்திட்ட நிபுணர் குழு விஞ்ஞானி தலைமையில் மாற்றியமைத்து உத்தரவு

தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 நபர் உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை: 17 பேர் கொண்ட குழு. மாணவர்களின் எதிர்காலத் திறன் வளர்ச்சிக்கு ஏற்பவும், நவீன காலத்திற்கு ஏற்பவும் பள்ளி பாடத்திட்டங்களை முழுமையாக மறுசீரமைத்தல். இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நிபுணர் குழு மாற்றியமைப்பு தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டங்களுக்கு முழுமையாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.முக்கிய அம்சங்கள் இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச்...
சமீபத்திய இடுகைகள்

ஊழல் தடுப்பு ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த ஊழல் லஞ்ச ஒழிப்பு மற்றும் சொத்துக் குவித்த புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை , ஜனவரி மாதம் 6 ஆம் தேதி  ஒரு குறிப்பாணையை வெளியிட்டதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.     ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார்.  பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ​இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணியிடை நீக்கம் செய்து...

கடவுச்சீடடுக் கட்டணம் உயர்வு கிராமங்களின் மக்களை பாதிக்கும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுது. இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான புதிய கட்டண விபரம்:36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 1,500-லிருந்து ரூபாய் . 2,500 ஆக உயர்வு, 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 3,500-லிருந்து ரூபாய் . 5,000 ஆக உயர்வு  60 பக்க ஜம்போ சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 2,000-லிருந்து ரூபாய் . 3,500 ஆக உயர்வு   60 பக்க ஜம்போ தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 4,000-லிருந்து ரூபாய் . 6,000 ஆக உயர்வு  குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான விபரம் 18 வயதுக்குட்பட்டோர் (சாதாரண 36 பக்கங்கள்): ரூபாய் . 1,000-லிருந்து ரூபாய்  1,750 ஆக உயர்வு 18 வயதுக்குட்பட்டோர் (தட்கல் 36 பக்கங்கள்): ரூபாய் . 4,250 மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு, சாதாரண சேவைக்கு ரூபாய்...

தென் அமெரிக்கா வெனிசுலா நிலநடுக்கத்தில் இதுவரை 1,430 நபர்கள் உயிரிழப்பு பலரைத் தேடும் நிலை

தென் அமெரிக்கா வெனிசுலாவில் 2026 ஜூன் 24  அன்று ஏற்பட்ட பயங்கர இரட்டை நிலநடுக்கத்தில் இதுவரை 1,430-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இந்த நிலநடுக்கங்கள் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்து இந்த இயற்கைப் பேரிடர் ஒரே நிமிட இடைவெளியில் இரண்டு பெரிய பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.ரிக்டர் அளவுகளில் முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. மையப்பகுதி: வெனிசுலாவின் வடக்கு கரீபியன் கடற்கரை பகுதியிலுள்ள மோரோன் நகருக்கு மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டது.  தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், 65,000-க்கும் மேற்பட்ட மக்களைத் தேடும் பணி மற்றும் 2000 நபர்கள் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தப் பேரழிவினால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் ச...

பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய்.100 கோடி மோசடி பி.டி. அரசகுமார் கைது

 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் .100 கோடி மோசடி  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. குமார் என்ற பி.டி.அரசக்குமார் கைது..  தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும், NOC  தடையில்லா சான்றிதழ்  லஞ்சம் மூலம் பெற்றுத் தருவதாகவும் மோசடி. தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை..  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி அதை மாவட்டம் தோரும் நிர்வாகிகள் நியமித்து நடத்தி வந்துள்ளார் இந்த பி.டி. குமார் எனும் B.T.அரசகுமார். தி.மு.க பிரமுகரான அரசகுமார், முன்னாள்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு. விசாரணை இனி தீவிரமடையும் இதில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை PMLA சட்டமும் பாயும். மோசடி, லஞ்சம், குண்டர் சட்டம் பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு; 2013- ஆம் ஆண்டில் ரூபாய் .14 லட்சம் மோசடி...

மதம் மாறிய பின் ஜாதிச் சலுகை தமிழ்நாடு அரசாணை (G.O. No. 31) அரசியலமைப்பிற்கு முரணானதென ரத்து செய்த உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார்.  அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் நியமனம்

விருதுநகர் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தற்போதைய தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2026 ல் TNCC தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை இவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளது.மாற்றம்: இதற்கு முன்னர் தலைவராக இருந்த கே. செல்வம் நீக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.  இவர் தமிழ்நாடு விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  விருதுநகர் தொகுதியில் 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று .மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் (Whip) செயல்படுகிறார். ஜூன் 1, 1975 அன்று பழைய இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்தார். தந்தை புலவர் பகீரத நாசசியப்பன் தமிழாசிரியர் மற்றும் சமூக நல்லினக்கம் கொண்ட பரோபகாரி  இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி (BA LLB) சட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆரம்பகாலத்தில்: 1994 ல் NSUI மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல...