முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிரபல மருத்துவமனையின் பெயரை வைத்து வைத்தியம் பார்த்து கைதான போலி நுட வைத்தியர்

ஆந்திரப் பிரதேச மாநிலம் புத்தூர் போஃன் செட்டிங் ஹாஸ்பிட்டல் என்பது பல தலைமுறையாக புத்தூர், இராஜபாள்யம், சித்தூர் மாவட்டம், உள்ளது திருப்பதி செல்லும் சாலையில் நகரியை அடுத்து அமைந்துள்ள புத்தூர் Bone Setting மருத்துவமனை ஆகும்,  இதன் பெயர் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலம்  இந்தியா முன்னால் ஜனாாதிபதி வரை இங்கு மருத்துவம் பார்த்தவர்கள் என அதிகம். அவ்வாறு இருக்க அந்த மருத்துவ மனை பெயரைப் பயன்படுத்தி  அவர்கள் அனுமதி பெறாமல் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் கதைபோல ஒரு போலியான நபர் நுடவைத்திய சாலை நடத்திய நிலையில் சுகாதாரத்துறையின் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட  ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில் சிங்கம்புணரியில் பாண்டி என்ற நெடுஞ்செழியன் போலி நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து தைலப் பாட்டில்கள் உள்ளிட்ட நுட வைத்தியம் பார்த்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் நெடுஞ்செழியன் என்ற ஆ. தெக்கூர் பகுதி நபர் நுட வைத்தியம் பாரர்த்து வந்தார். முகநூல் வாயிலாக நேரலையில் சிகிச்சை அ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறினார்

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இன்று தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தார். சட்டமன்றத்தில் அரசு உரையை வாசிக்க ஆளுநர் மறுத்ததற்கான காரணங்கள் என்னவென்று ஆளுநரின் லோக் பவன் எனும் மக்கள் மாளிகை எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தது.பதிவில்,                                  1. ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை; 2 தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் ஆதாரமற்ற பல தகவல்களும், தவறான தகவல்களும் உள்ளன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.                                     3. மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற தகவல் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு...

ஜனவரி 17, 18 தேதிகளில் அசாம் மாநிலத்தில் பிரதமர் பயணம்

பிரதமர் ஜனவரி 17, 18 தேதிகளில் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார் ஜனவரி 17-ம் தேதி போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார் ₹6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர் வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 17 18 ஆகிய தேதிகளில் அசாமுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 17-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய போடோ கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். ஜனவரி 18-ம் தேதி காலை 11 மணியளவில், பிரதமர் ₹6,950 கோடிக்கு மேல் மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நாகோன் மாவட்டத்தில் உள்ள கலியாபூரில் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார். குவஹாத்தியில் பிரதமர் குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்தில் போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் ...

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவமரத்துக் கிளி

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவம்பஞ்சு மரத்து கிளி நிலையில் காத்திருக்கக் காரணம் அதுவே.           தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது: "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  41 பேர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி 30 நிமிஷம் தமிழ்நாடு தலைவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குத் தேர்தல் முடிவுகள் எடுக்க ஏதுவாகக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைய விவாதங்களே எதிர்கால முடிவுகளுக்கான வழிகாட்டுதலாக அமையும்." என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ந...