கோயம்பத்தூர் தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரி உதவி ஆணையர் , கணவருடன் கைது கோயம்பத்தூர் வடக்கு வணிகவரித்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி வயது 48. இவர், வணிகவரித்துறை தொடர்பான ஒரு விசாரணையை முடிப்பதற்காக சிங்காநல்லூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூபாய் 60,000 லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்.லஞ்சம் தர மறுத்த அந்த நிறுவனத்தினர் இதுகுறித்து கோயமுத்தூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில், நிறுவனத்தினர் பினாப்தலீன் தடவிய லஞ்சப் பணத்தைத் தருவதற்கு வந்த போது மகேஸ்வரிக்காக லஞ்சப் பணத்தை வாங்க வந்த அவரது கணவர் தனசேகரன், வயது 51, ஐ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவிக்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். கணவன் மனைவி இருவரையும் நேருக்கு நேராக வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகேஸ்வரியும் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இருவரும் ...
பாரதிய ஜனதா கட்சியில் யாராவது தலைவராகலாம் ஆனால் அமைப்புப் பொதுச்செயலாளராக ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் மட்டுமே பதவி வகிக்க முடியும் பிரதமர் நரேந்திர மோடி கூட குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவர் தேர்தல் தொகுதிப் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அதுகுறித்து விமர்சனம் வைத்ததாக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மீது பாஜகவின் ஒரு தரப்பு புகார் எழுப்பிய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயநகபாஜகவின் நகரில் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது. சென்னை தியாகராயநகரில்...