முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திருமறைக்காட்டின் ஆலய வாரணி ஆதினத்திற்கு உரிய நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் வெளியேற்றம் சட்டப்படி துவங்கியது

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் இலங்கை இராவணன் அரண்மணையின் பின்பகுதிதான் அதன் கோடியக்கரை இலங்கை யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியத்தின் செல்வாக்கு  யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூஜகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம் வழியாக நெடுந்தீவுக்கு வரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, 'மேளங்கட்டுதல்' எனச் சொல்லும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவின் நடுக்குறிச்சியில் அமைந்துள்ள பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், நெடுந்தீவில் நைமித்திய பூசை இடம்பெற்ற முதலாவது ஆலயம் எனக் கருதப்படுகிறது.  “சுமார் 300ஆண்டு காலப் பழமையுடன், இந்தியாவுக்கு அணித்ததாய் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருந்த வேளையில், வேதாரணியத்துச் சைவக் குருமார், சைவப் பண்டாரங்கள் ஆரம்ப காலங்களில் இங்கு கொடியேற்றி, திருவிழாக்களை நடத்தி வந்தனர். கர்ப்பக் கிரஹ விக்கிரகமும் வேதாரணியத்திலிருந்து கடலில் வந்தடைந்ததாகவே கூறப்படுகிறது. கடலில் வந்து கண்...
சமீபத்திய இடுகைகள்

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி.

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி. சட்டப்பேரவையில் அப்பா எங்கே எனக் கேட்டு சிறு கதை சொன்ன முதலமைச்சர் ரசித்துச் சிரித்த எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தவிர பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என்ன நிலைமை என்பது தெரியாது, ஜேசிடி பிரபாகர் சிறப்பாகவே நடத்துகிறார். மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தம் சொல்லி அதை இணைக்கச் சொல்கிறார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒப்புதலோடு அதை இணைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் நிறைவேற்றுகிறார். குரல் வாக்கெடுப்புக்குப்பின்னே தீர்மானம் நிறைவேறுகிறது. மறுநாள், "புதிய திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை தருகிறார். அதன் பின்னே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகமும், "புதிய திருத்தம், ஏற்புடையதல்ல" என்கிறார். அதற்குப் பின்னர்...

திருப்பரங்குன்றம் மலை மீதான தீப வழக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவை நோக்கி நகர்கிறது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது பூர்வீக தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு புதியதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தகவல், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில்,  விசாரணைக்கு வந்த போது இன்று மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.   அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்க் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபத்தூணில்  தீபம் ஏற்ற இரு நீதிபத...