முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திமுக முன்னால் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுக மற்றும் அதிமுக முன்னாள் மாநில அமைச்சரும் திமுக தூத்துக்குடி மாவட்டப் பிரமுகருமன அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையின் சார்பாக குற்றஞ்சாட்டியது. தொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. என்ற நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும். சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழ்ந...
சமீபத்திய இடுகைகள்

கிஃப்ட் சிட்டியில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய நிதியமைச்சர்

நிதி அமைச்சகம்  குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் குஜராத்தின் கிஃப்ட் சிட்டி முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ந்து வரும் சர்வதேச நிதிச் சேவைகள் சூழலமைப்பு குறித்து  வெள்ளியன்று கிஃப்ட் சிட்டியில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி.கே. மிஸ்ரா; குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி; பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், குஜராத் அரசு, சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம், கிஃப்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். வங்கித்துறை, மூலதனச் சந்தைகள், நிதி மேலாண்மை, காப்பீடு மற்றும் மறு காப்பீடு, விமானம் மற்றும் கப்பல் குத்தகை, நிதித் தொழில்நுட்பம், தங்கம் மற்றும் வெள்ளிப் பரிமாற்றம், சர்வதேசக் கல்வி மற்றும் அது சார்ந்த சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிஃப்ட் சிட்டி அட...

சூலூர் குளக்கரையில் பத்து வயது சிறுமியின் சடலம்: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

கோயமுத்தூர் சூலூர் குளக்கரையில் பத்து வயது சிறுமியின் சடலம்: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் தவெகவுக்கு வாக்களித்த தாயின் குமுறல் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது அபாயத்தில் உள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என செல்லும் தொகுதி யெல்லாம் மக்களிடம் பரப்புரை செய்து தான் தனித் தன்மை கொண்டு இன்று தவெக ஆட்சி அமைத்து அதன் பின் கூட்டணி ஆட்சியாக மாறிப்போனது, இதனால் வாக்களிந்த மக்கள் 40 சதவீதம் உள்ளவர்கள் மத்தியில் முதல்வர் சி.ஜோசப் விஜய் மீதான நம்பிக்கை குறைந்தது, தவெக கூட்டணி ஆட்சி பதவியேற்று 2 வாரம் தான் ஆகிறது, குற்றவாளி பக்கத்து ஊரோ, பக்கத்து தெருவோ, பக்கத்து வீடோ, இல்லை உறவினரோ அதைக் காரணம் காட்டுவது என்பது ஏற்புடையiதுமல்ல. குற்றம் நடந்துவிட்டது, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைந்து தண்டனை வழங்குவது மட்டுமே தீர்வு என்பது. அதை நீதிமன்றமே செய்யும்  எப்போதுமே கோரிக்கையோ, போராட்டமோ இருந்தல்ல.. தங்கள் குழந்தைக்கு, தங்கள் வீட்டு பெண்களுக்கு நடந்தது இனி யாருக்கு நடைபெற கூடாது, அதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதோடு ஒரு பொறுப்பான ஆறுதல் மற்று...

தமிழக மாநிலங்களவைத் தேர்தலும், நடப்பு அரசியல் நகர்வுகளும்

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியான 24 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், சி.வி. சண்முகம், சுனேத்ரா பவார் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர். இதன் காரணமாக, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பி...