EXIT POLL: வரலாற்றுச் சாதனையாக மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியும், தமிழ்நாடடில் தவெக இணைந்து என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கிறது.. தமிழ்நாட்டின் அரசியல் களம் நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் பெயரில் இரு பெரும் சக்திகளான திமுக மற்றும் அதிமுகவின் இருமுனைப் போட்டியால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) நுழைவு, அரசியல் களத்தை மூன்று முனைப் போட்டியாக மாற்றியுள்ளது. த.வெ.கவின் நுழைவு, தமிழ்நாட்டு அரசியலை மிகுந்த போட்டித்தன்மை கொண்டதாகவும் மாற்றியுள்ளது. போர்ட்டரின் கோட்பாட்டின்படி, உயர் போட்டி மற்றும் புதிய நுழைவு, மக்களுக்கு சிறந்த விளைவுகளை—திறமையான ஆட்சி, ஊழல் குறைப்பு, இளைஞர் மைய கொள்கைகள்—ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஆனால், வாக்கு சிதறல் காரணமாக கூட்டணி ஆட்சி அல்லது நிலையற்ற அரசியல் ஏற்படலாம். திமுக தன் ஆளுமை மற்றும் நலத்திட்டங்களால் தாக்குப்பிடிக்க முயல்கிறது. அதிமுக பாஜக உதவியுடன் திரும்ப முயல்கிறது. த.வெ.கவோ நீண்டகால அடித்தளம் அமைக்க வேண்டிய சவாலை எதிர்கொள்கிறது. இந்த ஐந்து விசைகளின் விளைவாக தமிழ்நாட்டு அரசியல் மிகுந்த மாற்...
1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 6A ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு சூன் 1, 2018 அன்று காவிரி நீர் தொடர்புடைய மாநில அரசுகளுடன் இணைந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது. தற்போது மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்துள்ளதால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டம் டெல்லியில் இன்று ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ...