முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருதை வழங்கிய குடியரசுத் தலைவர்

வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குப் பிரதமரின் தேசிய சிறார் விருது ஆண்டுதோறும் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்துதவிய 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு சேர்ந்த ஷ்ரவன் சிங் (வயது 10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினார்.இன்று ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விருதைப் பெற்ற ஷ்ரவன் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரின்போது எங்கள் ஊர் எல்லை அருகே ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால், அவர்களுக்காக நாள்தோறும் பால், தேநீர், மோர், லஸ்ஸி கொடுத்தேன். இந்த விருது பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனைக் கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார். கலை மற்றும் கலாசாரம்,...
சமீபத்திய இடுகைகள்

58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்

58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிலரங்கு மகாராஷ்டிராவின் புனேவில் டிசம்பர் 29 அன்று நடைபெற உள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சுமூகமான மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது பணிபுரிந்து, அடுத்த 12 மாதங்களில் ஓய்வுபெற உள்ள 350 பேர், இந்த ஓய...

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் பாதை, என் ஆர் காங்கிரஸ் இணையும் வாய்ப்புக் கூடியது

தமிழ்நாட்டில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 'பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் மற்றும் பாஜகவின் தலைமையில் ஆன தே ஜ கூட்டணியை அமைக்க வேண்டும்' என்பதை எடப்பாடி கே பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்ய மறுத்ததால், அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் தங்கமணி. பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியும் தங்கமணியை ஓரம்கட்டத் தொடங்கினார். பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றபோதிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோதும் கூட அந்த நிகழ்வுகளுக்கு தங்கமணியை அழைக்க வில்லை. இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி -தங்கமணி இடையே சமரசம் வருகிறது. அதன் எதிரொலியாக, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலாக சென்னை வந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்துகொண்டார் தங்கமணி !பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமையிலான முதல் மாநில மையக்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடந்தத...

புதுச்சேரி பெண் காவலருடன் கண்காணிப்பாளர் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம் வெளிச்சமானது

புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் பணியில் உள்ள ஒரு உயர் அலுவலர் காரைக்காலில் பணியாற்றியபோது பெண் காவலர் ஒருவருடன் கள்ளக்காதலானது. பின்னர், அந்த உயர் அலுவலர் புதுச்சேரிக்கு பணி மாறி வந்ததும் பெண் காவலருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிக் கள்ளக் காதலைத் தொடர்ந்தார். இதை அந்த பெண் காவலரின் கணவரும் காவல்துறை பணியில் இருந்த நிலையில் அதை கண்டுபிடித்ததால் அந்த பெண் காவலர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலைமை இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் திருமணமான பெண் காவலர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பத்திரிகைகளுக்கு செய்தி வந்தது காவல் உயர் அலுவலருடன் கள்ளத்தொடர்பு: ஆபாச வீடியோக்களை பகிர்ந்த பெண் காவலர் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறைக் கணவர்   புதுச்சேரி, காரைக்கால் மகளிர் நிலையத்தில் 35 வயது பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரராக உள்ளார்.இந்த நிலையில் அந்த பெண் போலீசுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கும் தொ...

கொளத்தூர் வண்ணான் குளத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள வண்ணான் குளத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கொளத்தூர் ஜிகேஎம் காலனியிலுள்ள வண்ணான் குளத்தில் சுமார் 250-350 ஏக்கர் நிலம் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற அரசாணை 540 ன்படி உத்தரவிடக் கோரியும் செம்பியம்  கோ. தேவராஜன் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, அம்பத்தூர் மண்டலம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வண்ணான் குளத்தின் கணிசமான பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வருவாய்த்துறை, டிஎன்யுஎச்டிபி மற்றும் ஜிசிசிக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 3 துறைகளைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைக்குமாறு நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.பகுதி மழைநீரில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவை...

தூத்துக்குடி உணவகத்தில் QR கோடு பண மோசடி சிக்கிய குற்றவாளி

இப்போது டிஜிட்டல் நாணயத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது போல அதில் மோசடிளும் பெருகிவிட்டது, தெருவில் கீரை வாங்கக் கூட QR கோடு தான், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடு நடுத்தர உணவகத்தில் QR Code பதித்த ஸ்டிக்கர் மீது மற்றொரு ஸ்டிக்கரை மறைத்து ஒட்டி பண மோசடி சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைதானார், - சைபர் குற்றத்தில் மோசடி செய்தவன் சிக்குவதும் எளிது காரணம் சாடசியம் வலுவானது ஆகவே அவனை எளிதாக பூஜியக் குற்றம் தடுப்புப் பிரிவு காவல்துறை உடனடியாக பிடித்து கைது செய்து நடவடிக்கை. தூத்துக்குடியில் ஒரு நநடுத்தர உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தை QR கோடு ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும் போது அந்தப் பணம் உணவகம் நடத்தும் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் போனதால் உணவக உரிமையாளர் QR Code ஸ்கேன் சாதனத்தை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் QR Code ஸ்டிக்கர் இவர் ஒட்டிய ஸ்டிக்கரை மறைத்து ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அது குறித்து உணவக உரிமையாளர்  22.12.2025 ல் NCRP ல் online மூலம் (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் காவல்த...

5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா பெயர் மாறுதல் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர்  கைது.  .விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், முன்னுாரைச் சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆலங்குப்பத்தில், அவருடைய மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார்  ஆனால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் தாமதம் செய்துள்ளார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புகா கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் ஆலோசனைப்படி சுரேந்தரிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தைப் பெற்ற சரவணனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர்.