முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காணாமல் போன.திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு:  திருநெல்வேலி மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் . யார் எனக் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்தபடி, ஆனால்  "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக் கருதவில்லை. என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும் என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை காவல்துறை கண்டுபிடித்து விடுவார்கள்.நிச்சயமாக காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. என்மீது சுமத்தப்படுவது அபாண்டமான குற்றசாட்டு . நான் நிச்சயம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்து கொள்வேன் என
சமீபத்திய இடுகைகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம்

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம். கைதாகி அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தி சிக்கியத! யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் . கோயமுத்தூரில் இருந்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரைக் கூட்டிச் சென்றனர். காவல் துறை உயர் ஐ பி எஸ் அதிகாரிகள், மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், சவுக்கு சங்கர் தேனிக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோயம்புத்தூருங்கு கூட்டிச் செல்லப்பட்டார். சவுக்கு சங்கர் கைது குறித்து காவல்துறையினர் தரப்பில், “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தது, சவுக்கு சங்கர் அவ

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பு

 "ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும்" - ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் "ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய இணைய தளங்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் ஒருங்கிணைந்தக ஓய்வூதியதாரர்கள் வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்படும்" என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். ஏப்ரல் 26 அன்று பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்த 'ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை' பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் அத்தகைய ஒரு முயற்சியாகும், இது டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் மற்றும் பவிஷ்யா போர்ட்டல் போன்ற பல்வேறு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது என்று கூ

வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ சிக்கலில் சிக்கிய வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம், தற்போது ஒக்கூரில் வசித்து வருகிறார், இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசுத் துறை சார்ந்த வட்டாட்சியரான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாககூறப்படுகிறது. தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவை சமூக வலைதளங்களில்பலரும் பகிர்ந்து வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கியவருக்குச் சிக்கல் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காக தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இது போன்ற வ

அரசுத் துறைகளில் உள்ள பெயர்களை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதை மட்டுமே தடை செய்யலாம் அதுவே உண்மையான மோசடி

அணைத்துத் துறைகளிலும் போலியானவர்களும் மோசடிப் பேர்வழிகளும் உண்டு . நான் பத்திரிகையாளன். அதனால் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ள ஜனநாயக உரிமை. ஒருவர் வழக்கறிஞர் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் வழக்கறிஞர் என்ற அடையாளத்தை பொறித்துக்கொள்வது அவர் உரிமை. ஒருவர் மருத்துவர்.என அவரை அடையாளப்படுத்திக் கொள்வது அவரது உரிமையும் கடமையும். இதுபோன்று அரசு சாராமல் தனது துறைகளை அடையாளப்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது அதற்கு உரிமையுமில்லை. தீவிபத்து நேர்ந்து விட்டது என்பதால் யாரும் வீட்டில் சமையல் செய்யக்கூடாது என்பதைப்போல இருக்கிறது சென்னை காவல்துறையின் இந்த அறிவிப்பு. PRESS, ADVOCATE, DOCTOR, ENGINEER  என்று வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத பகுதியில் எழுதி வைத்துப் போனால்  காவல்துறை நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று நினைப்பதாக யார் சொன்னது? இதனால் சிறப்பு சலுகை எங்காவது கிடைக்கிறதா.      சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதிலையா? காவலர்கள் எப்போது வேண்டுமானாலும் உண்மைத்தன்மையை சோதனையிடலாம். சோதனை செய்யக்கூடாது என்று யார் சொன்னது? போலியாக இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு சுற்றுபவர்களுக்கு ஜாமீன் இல்ல

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் குழப்பம் பேரன் வீடியோ ஏற்படுத்தும் திகில்

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் மகன்கள் ரேவண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி இடையில் எப்போதுமே மோதல் தான். மண்டியா தொகுதியை குமாரசாமியும் ஹாசன் தொகுதியை ரேவண்ணாவும் 'பங்கு' போட்டுக் கொண்டது போலவே தான் அரசியல் நடவடிக்கைகள் எப்போதுமிருக்கும். ஹாசன் தொகுதிக்குள் குமாரசாமி நுழைவது கிடையாது; மண்டியா பக்கம் ரேவண்ணா போவது கிடையாது. தற்போது ரேவண்ணா மகன் பிரஜ்வல், ஆபாச வீடியோவில் சிக்கியிருப்பதும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்பதும் சித்தப்பா குமாரசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரங்கள். தற்போது பிரஜ்வல் வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம். பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மேலிடம் தான் முடிவெடுக்கும். தற்போதைய நிலையில் மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு ஜி டி தேவே கவுடா தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்கமாட்டோமென ப

நிா்மலாதேவி வழக்கில் தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

நிா்மலாதேவி வழக்கில் தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்டனா். பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 2 வது மற்றும் 3 வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரமில்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுவிப்பு .      தீர்ப்பு நாளான ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி ஏப்ரல் 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்த