யு டியூபில் வந்த விளம்பரத்தை பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். பெண் அலுவலர், ஏமாந்தார். கர்நாடகா மாநில அரசில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவான, 'சகலா மிஷன்' இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., உயர் அலுவலருமான பல்லவி அக்ருதி, (வயது 42), மார்ச் மாதம் மாதம் 10 ஆம் தேதி, யு டியூபில் புடவை விற்பனை குறித்த விளம்பரக் காணொளி ஒன்றை பார்த்து அந்த வீடியோவில், மதுரையில் கைத்தறியில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்ட நிலையில் வீடியோவில், பல புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அதில், தங்களுக்கு விருப்பமான புடவையின் புகைப்படத்தை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டிருந்ததன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தினார். தனது வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்து பல நாட்களைக் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த தொலை...
ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதில் அந்தணர் பங்கு மிகப் பெரியது. 71 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஹைதராபாத்தை சேர்ந்த கணேசன் என்ற 20 வயது உடைய பையனை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ளார்கள். அநேகமாக இன்று மதியம் ஸ்ரீமடத்தின் மூலமாக அறிவிக்கப் படலாம். முறையாக துறவறம் பூண்டார் அவர் சன்யாச வழியில் ரிக் வேதம், யஜுர் வேதம் படித்தவர். தற்போது காஞ்சிபுரத்தில் சாஸ்திரம் வாசித்து வருகிறார். இது சிஷ்ய ஸ்வீகாரம் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தராதிகாரியின் சிஷ்ய ஸ்வீகாரம். தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிஷ்ய ஸ்வீகாரம் செய்து, 2025 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அக்ஷய திருதியை நாளன்று, சன்ன்யாசாஷ்ரம விதிவிதானங்களைப் பின்பற்றி காஞ்சி காமகோடி பீடத்தின் 71ஆம் ஆச்சார்யராக நியமிக்கவுள்ளனர். கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்...