முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காத்திருப்போர் பட்டியலில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி

சென்னை நுளம்பூரில் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பெண்னை கத்தியதால் தலையில் வெட்டி விட்டுத் தப்பியோடிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாமல் காவல் ஆய்வாளர்  விஜயலட்சுமி கட்டைப்பஞ்சாயத்து பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. அதன் பின்னர், பாலியல் வன்கொடுமை முயற்சி செய்து பென்ணை கத்தியால் தாக்கிய முகேஷ் என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் காவலில் எடுத்து மட்டுமே காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அதே போல காவல்நிலையத்திற்கு வரும் புகார்களை முறையாக விசாரிப்பது இல்லை என்ற குற்றசாட்டின் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு ஆய்வாளர் விஜயலட்சுமியை மாற்றி காவல்துறை உயர் அலுவலர்கள் உத்தரவு.
சமீபத்திய இடுகைகள்

திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் வந்த நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் வந்த கார் எட்டையபுரம் அருகில் விபத்து

திருச்செந்தூர் சென்று திரும்பிய தஞ்சாவூர் நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 6 பேர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்று இன்று காலை தஞ்சாவூருக்கு திரும்பிய நிலையில். அந்த காரை நீதிமன்ற ஊழியர் வாசுதேவன் மற்றும் ராமநாதன் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் வந்த போது தூத்துக்குடியிலிருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியதில் விபத்திற்குள்ளான காரின் ஒரு பகுதி லாரிக்குள் சிக்கிய நிலையில் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் வாசுதேவன் ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமசந்திரன், பாதுகாவலர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அது குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு  காவலர்கள் அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் ...

உலகளாவிய யோகாசன இணைப்பு உச்சிமாநாடு--2025

யோகாசனம் இணைப்பு 2025 : ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா என்பது குறித்து மெய்நிகர் முறையில் உலகளாவிய உச்சிமாநாடு புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது 11-வது சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜூன் 14) யோகா இணைப்பு என்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டை ஆயுஷ் அமைச்சகம் நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த யோகா குருக்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், வர்த்தக தலைவர்கள், ஆய்வாளர்கள், உலக அளவில் செல்வாக்கு செலுத்துவோரை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கும். யோகா துறையில் உயர்நிலை ஆய்வு அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. சர்வதேச அளவிலான யோகா கல்வி நிறுவனங்கள், நல்வாழ்வு அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். பஹ்ரைன், அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த உச்சிமாநாட்டையொட்டி கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக ய...

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாடு

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தனது அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "சிறந்த நடைமுறைகள்" குறித்த மாநாட்டின் முதல் பதிப்பில் மெய்நிகர் மூலம் உரையாற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, பல்வேறு எய்ம்ஸ் நிறுவனங்கள் பின்பற்றும் முன்மாதிரியான நடைமுறைகளை எடுத்துரைக்கிறது. இதில் நோயாளிகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு, செயல்பாட்டுத் திறன், டிஜிட்டல் மாற்றம் மற்றும் கல்விச் சிறப்பு ஆகியவை இடம் பெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து (போபால், ஜம்மு, பிலாஸ்பூர், ஜோத்பூர், நாக்பூர், தியோகர், பாட்னா, கோரக்பூர், குவஹாத்தி, ராய்ப்பூர்) எய்ம்ஸ் நிறுவனங்கள், பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இந்த மாநாட்டில் இணைந்து செயல்படுகின்றன. இந்த நிகழ்வில் மத்திய சுகாதார செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவ...

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

விமான விபத்தில் காலமான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்மையில் அகமதாபாத் விமான விபத்தில் துயரமாக உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் ஸ்ரீ விஜய் ரூபானியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்கோட் மாநகராட்சியில் அவரது பதவிக்காலம், மாநிலங்களவை எம்.பி., குஜராத் பாஜக தலைவர், மாநில அரசில் கேபினட் அமைச்சராக இருந்த காலம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் திரு ரூபானியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த திரு மோடி, அவரது புகழ்பெற்ற வாழ்க்கையை எடுத்துரைத்தார்.   X  பதிவில், ஸ்ரீ  நரேந்திர மோடி எழுதினார்: “விஜய்பாய் ரூபானி ஜியின் குடும்பத்தினரை சந்தித்தேன்.  விஜய்பாய் நம்மிடையே இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அவரை பல தசாப்தங்களாக அறிவேன். மிகவும் சவாலான சில காலகட்டங்களிலும், தோளோடு தோள் சேர்ந்து நாங்கள் ஒன்றாகப் பணியாற்றினோம். விஜய்பாய் பணிவானவர், கடின உழைப்பாளி, கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார், குஜராத்தின்...

242 பேருடன் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் AI171 பயங்கர விபத்து

அஹமதாபாத்தில் 242 பேருடன் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் AI171 பயங்கர விபத்து. உலகின் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றான போயிங் 787 விபத்துக்குள்ளான நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயணி மட்டும் நல்வாய்ப்பாக வெளியே குதித்து தப்பித்துள்ளார். விமான நிலைய ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பியதும் தொடர்ந்து மேல் நோக்கி செல்ல முடியாமல், விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தின் சிசிடிவி காட்சியில் பதிவான விபத்தின் காட்சி மூலம் தெளிவாகிறது. ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பியதும் தொடர்ந்து மேல் நோக்கி செல்ல முடியாமல், விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது அகமதாபாத் விமான விபத்து - சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறை  தொடர்புக்கு: 011-24610843 | 9650391859 தொலைபேசி மூலம் தகவல் தெரிவிகிறது  .கொடூரமான குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமான விபத்துக்கு குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி  உயிரிழந்தார்...