இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச இயக்கத்தின் மதிப்புறு தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு. தமுஎகச 1975 ஆம் ஆண்டு கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியாக உறுவானது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்வாகினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டன.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று நடந்து முடிந்தது. புதிய நிர்வாகிகளாக மதிப்புறு தலைவர் நடிகை ரோகிணி,தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்,பொதுச் செயலாளர் களப்பிரன், பொருளாளர் சைதை ஜெ, துணைத் தலைவர்கள் மதரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, புதுக்கோடடை கவிஞர் நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன், துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன், துணைச் செயலாளர்களாக மருதுபாரதி, மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல் கருணாநிதி, ஹேமாவ...
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் 2015 ஆம் ஆண்டில் ONGC நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சார்பு அரசியல் சார்ந்த ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.குறிப்பிட்டுக் கூறினால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிற நிலையில் 2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கண...