முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஆன்லைன் விற்பனை சேலை மோசடியில் ஏமாந்த உயர் அலுவலர்

யு டியூபில் வந்த விளம்பரத்தை பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். பெண் அலுவலர்,  ஏமாந்தார்.  கர்நாடகா மாநில அரசில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவான, 'சகலா மிஷன்' இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., உயர் அலுவலருமான பல்லவி அக்ருதி, (வயது 42), மார்ச் மாதம் மாதம் 10 ஆம் தேதி, யு டியூபில் புடவை விற்பனை குறித்த விளம்பரக் காணொளி ஒன்றை பார்த்து அந்த வீடியோவில், மதுரையில் கைத்தறியில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்ட நிலையில் வீடியோவில், பல புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அதில், தங்களுக்கு விருப்பமான புடவையின் புகைப்படத்தை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டிருந்ததன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தினார். தனது வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பினார். ஆனால், ஆர்டர் செய்து பல நாட்களைக் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த தொலை...
சமீபத்திய இடுகைகள்

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் புதிய இளைய மடாதிபதி தேர்வானார்

 ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதில் அந்தணர் பங்கு மிகப் பெரியது. 71 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஹைதராபாத்தை சேர்ந்த கணேசன் என்ற 20 வயது உடைய பையனை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ளார்கள். அநேகமாக இன்று மதியம் ஸ்ரீமடத்தின் மூலமாக அறிவிக்கப் படலாம். முறையாக துறவறம் பூண்டார் அவர் சன்யாச வழியில் ரிக் வேதம், யஜுர் வேதம் படித்தவர். தற்போது காஞ்சிபுரத்தில் சாஸ்திரம் வாசித்து வருகிறார். இது சிஷ்ய ஸ்வீகாரம் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தராதிகாரியின் சிஷ்ய ஸ்வீகாரம். தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிஷ்ய ஸ்வீகாரம் செய்து, 2025 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அக்ஷய திருதியை நாளன்று, சன்ன்யாசாஷ்ரம விதிவிதானங்களைப் பின்பற்றி காஞ்சி காமகோடி பீடத்தின் 71ஆம் ஆச்சார்யராக நியமிக்கவுள்ளனர்.  கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்...

துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றஞ்சாட்டும் ஆளுநர்

துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றஞ்சாட்டும் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு துணைவேந்தர்கள்  எந்த சிரமமும் கொடுக்கவில்லை. மாநாட்டில் பங்கேற்ற ஒன்பது துணை வேந்தர்களில் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், யார் - யார் என்று மட்டும் பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது.  விழாவுக்கு 'நம்பி' வந்த குடியரசுத் துணைத்தலைவர் தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகள் நன்கு அறிவார்  துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது என குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் துணை வேந்தர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், பெரும்பாலான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். துணை வேந்தர்கள் மாநாடு  பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உதகமண்டலம் ராஜ்பவனில்  நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப்...

மன்னர் திருமலை நாயக்கர் காலம் பாண்டிய நாட்டின் ஹிந்து சமய மறுமலர்ச்சிக் காலம்

மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் மஹால் உலகப் பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கடந்த 18-04-2025 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நேற்று வரை, என ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் கட்டணமின்றிப் பார்வையிட தமிழ்நாடு தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. மேலும், ஏப்ரல் மாதம் 18  மற்றும் 24 ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு மரபுசார் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.    இந்த நிலையில் கோடைக்கால விடுமுறை நாட்களில் மாணவர்கள் காண அனுமதி தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மஹால் எனும் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும், இந்தோ-சாரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, பிரமாண்டமான 200 தூண்களுக்கு பெயர் பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த அரண்மனையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.        கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரமும். 248 ப...

சிந்து ஒப்பந்தம் ரத்து பதிலுக்கு சிம்லா ஒப்பந்தம் ரத்து போர் பதட்டம்

சிந்து ஒப்பந்தம் ரத்து பதிலுக்கு சிம்லா ஒப்பந்தம் ரத்து சிந்து நதி ஒப்பந்தம் ரத்து - பாகிஸ்தானின் மின்சார உற்பத்தி, விவசாயம், குடிநீர் அனைத்தும் பாதிக்கும். பொருளாதார பின்னடைவை அந்நாடு மேலும் சந்திக்கும். பணவீக்கம் அதிகரிக்கும். மனிதாபிமானமற்ற மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் இருளில் மூழ்கும். வறுமையில் வாடும்.  இது ஒரு முடிவின் துவக்கம் . ஜம்மு காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் பகுதியில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வாயிலாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியாகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாது பல நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சு...