ஜி.கே.மணி ச ம உ வை பாமகவிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜி.கே.மணிக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் துவங்கிய நிலையில் பாமகவில் தந்தை நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கும், மகன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸு க்குமான மோதல் சமாதானத்தை எட்டாமல் தீவிரமடைகிறது. தேர்தல் நேரம் நெருங்கியும் தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில் இருதரப்பும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''என்னை துரோகி என அன்புமணி கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் நான் தான் பேசினேன். அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்த நேரத்திலும் நானே அவருக்காக பேசினேன். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் வைத்து பேசியதால்தான் இந்த பிரச்சனையே முழுமையாக ஆரம்பித்தது'' எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜி.கே....
இந்தியாவில் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும். காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்பே, நாடாளுமன்ற மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குள்ள நடைமுறைக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.1925-ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா மாகாணங்களில் ஹிந்து, பௌத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதி இஸ்லாமியர்களுக்குப் பொ...