முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திரௌபதி-2 திரைப்படம் வழக்கு பைசலானதால் இன்று வெளியானது

ஹெய்சாலர்களின் பேரரசன் மூன்றாம் வீர வல்லாளனையும் காடவராயர்களையும் இணைக்கும் வரலாற்றுத் தழுவல் இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் இயக்கத்தில் நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த திரௌபதி -2 திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மகாமுனி அம்பலகாரர் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை அமா்வில் தாக்கல் செய்த மனு: பொது ஆண்டு 14 -ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை இரண்டாம்  தலைநகராகக் கொண்டு மூன்றாம் வீர வல்லாளத் தேவன் ஆட்சி செய்தாா். அவர் சேந்தமங்கலம் காடவராயர்களுடன் சம்பந்தம் செய்த உறவு வாழ்க்கை வரலாறு சிவனே மகனாக வந்த அருணாசல புராணம் ஏழாவது சருக்கம் அடிப்படையில் திரௌபதி - 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக படக் குழு அறிவித்தது. கர்நாடக ஹெய்சால மன்னர்  மூன்றாம்  வீர வல்லாளத் தேவன் கள்ளா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளதாகவும் . திரெளபதி -2 திரைப்படத்தில் வீர வல்லாளத் தேவனை வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவராக ...
சமீபத்திய இடுகைகள்

உடைத்த கண்ணாடிகளை ஒட்ட வைத்த பாஜக பிரதமர் பங்கேற்கும் பிரமாண்டமான தேஜக பொதுக்கூடடம்

மதுராந்தகத்தில் நடக்கும் தே ஜ கூட்டணிக் கட்சிகள் பங்கு பெரும் பிரம்மாண்டப் பொதுக்கூடடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்கிறார். பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர்  பிற்பகல் 2.50: மணிக்கு MI-17 உலங்கு வானூர்தி மூலம் புறப்பட்டு மதுராந்தகத்தில் தரை இறங்குகிறார் பிற்பகல் 2.55: மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சாலை மார்க்கமாகச் செல்கிறார் பிற்பகல் 3.00: மணிக்கு மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்;4.15 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கிறது மாலை 4.20: மணிக்கு பொதுக்கூட்டத் திடலில் இருந்து சாலை மார்க்கமாகப் புறப்படுகிறார் மாலை 4.25: மணிக்கு மதுராந்தகம் உலங்கு வானூர்திக்குச் செல்கிறார் மாலை 5.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் மாலை 5.05: மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படுகிறார் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குகள் நிலவரம் உத்தேசம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவம் இல்லாத பழனிச்சாமி அதிமுக - 17 முதல் 22 சதவீதம் வரை அண்ணாமலை தலைமை இல்லாத பாஜக...

நடிகர் விஜய் தமிழக மக்களுக்குறியவரா இல்லை மிஷினரிகளின் கைப்பாவையா? தெளிவு தேவை

31 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினாலும், குறைந்தபட்சமாக 20 சதவீதம் வாக்குகளாவது தனித்து நின்றால் தங்களுக்குக் கிடைக்குமென தவெக தரப்பு நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமெனவும் நம்புகிறார்கள். காரணம், விஜயை மையப்படுததி இருக்கும் கிருஸ்தவ மிஷினரிகள் சார்ந்த சிறுபான்மையினர். ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வஃக்பு வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் இதுவரை தனியாகச் செய்திருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தவெகவை துவங்கி செப்டம்பரிலேயே முதல் மாநாட்டையும் நடத்தி ஆக்ஸ்டிவ் அரசியலுக்கும் வந்தார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவைக் கூட நடத்தவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் விழாவ...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சஙக நிர்வாகிகள் மீது உறுப்பினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார்

2026 பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ராஜேஸ்வரி வேந்தனைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதுள்ள நிர்வாகிகள் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர், ‘ஜின்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன். தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பதற்கு மாநில மகளிர் ஆணையத்துக்கான புகார் ஏன் என வினவினால்  தமிழ்த்.திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முரளி ராமசாமி அணியில ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினராக ஒருமுறை இருந்துள்ளார்  அப்போது சங்கப் பதிவுப் பிரச்சனை தொடர்பாக அதிகமாக வேலைகள் செய்துள்ளதாகவும். அதுக்கு முன் இரண்டு முறை நியமன உறுப்பினராம் இருந்துள்ளார். பொதுப்பணத்தை எடுத்து செலவு வீணாகச் செய்வது பிடிக்காததால். நிர்வாகிகளைக் கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டு வரவு செலவு முறையாக் காட்டவும், பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவதும் சங்க நலன் தொடர்பான...