முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

3 தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக

மூன்று தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைந்து. ஒரு தொகுதியை தவெக பெற்ற நிலையில், பண்ருட்டி தொகுதியில் பாமகவின் பழைய மாணவர் பிரிவுச் செயளாளரான வேல்முருகன் போட்டியிட்டார். அதில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் அதிமுகவின் ராஜேந்திரனை வீழ்த்தி வென்றார் அதேபோல் தற்போது வேல்முருகன் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக சார்ந்த தே ஜ கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தணை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். இதனால் வேல்முருகன் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு செய்வாரென்றும். கூறுகின்றனர்....
சமீபத்திய இடுகைகள்

வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல சுற்றறிக்கை

வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு இறப்புச் சான்றிதழ் பதிவுக்கு இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல ,- - சுவாமி விவேகானந்தர்   வீட்டில் இயற்கையாக நிகழும் மரணங்களைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களைத்த் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வயது முதிர்வு, மாரடைப்பு அல்லது திடீர் உடல்நலக்குறைவு         காரணமாக வீட்டில் மரணம் சம்பவிக்கும் போது, அதற்கு இறப்புச் சான்றிதழ்கள் பதிவு 21 நாட்களுக்குள் பதிவு செய்ய உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பிறப்பு, இறப்புப் பதிவு அமைப்புகள்,  மருத்துவச் சான்றிதழை (MCCT - பார்ம்.A) கட்டாயமாகக் கேட்டு வந்தன. இதனால் முறையான பதிவு மருத்துவர்  பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் 1969  ன் படி பதிவுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் ஆனால்  சிகிச்சை பெறாமல் வீட்டில் இயற்கையாக உயிரிழப்பவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சிலர் ந...

பாண்டிச்சேரி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னாள் பாஜக வேட்பாளர்களாக அறிவிப்பு

பாண்டிச்சேரி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னாள் பாஜக வேட்பாளர்களாக அறிவிப்பு  பாஜக போட்டியிடும் தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி, ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜக மத்திய தேர்தல் குழு கட்சியின் தேசியத்தலைவர் நிதின் விபின் தலைமையில் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய தேர்தல் குழு அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றதில் பாண்டிச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான 9 தொகுதிகளின் வேட்பாளர்களை தலைமைப்பொறுப்பாளரும் பாஜக தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டார்.  அதன்படி :  மண்ணாடிப்பேட்டை அமைச்சர் நமச்சிவாயம்,     ஊசுடு- எம்எல்ஏ தீப்பாஞ்சான்,  காலாப்பேட்- எம்எல்ஏ கல்யாணசுந்தரம்,  இராஜ்பவன்- மாநிலத்தலைவர் ராமலிங்கம்,  முதலியார்பேட்டை அமைச்சர் ஜான்குமார்,  மணவெளி- சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,  திருநள்ளார்- எம்எல்ஏ ராஜசேகரன்,            நிரவி டிஆர்பட்ட...

கொள்கை இழந்த தலைவர்களின் கூட்டணி அதிகாரத்தின் பலியாடுகள்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கட்சியும், காலஞ்செனற முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த் தோழி வி.கே. சசிகலா நடராஜன் தலைமையிலான புதிய கட்சியான அஇபுதமமுக கட்சியும் கூட்டணி, அரசியல் மாற்றத்தின் பெயரில் அது  முன்வைக்கப்பட்டாலும், அதன் மையத்தில் தெளிவாக தெரியும் ஒன்றைப் பார்வை என்பது இது திட்டமிட்ட ஜாதி வாக்குப் பிரிப்பு அரசியல் முயற்சியாகவே பார்க்கலாம். குறிப்பாக வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோரில் சிலர் வாக்கு வங்கியின் திசையை உடைத்து, அந்த ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற நகர்வாகவே இந்தக் கூட்டணி வெளிப்படுகிறது. பாமக நிறுவனர்  மருத்துவர் ச.ராமதாஸ் 1989 முதல் நீண்ட காலமாக களத்திலிருந்து நேரடியாகவே அரசியல் செய்து வந்த தலைவர், முன்னால் முதல்வர்கள் காலஞ்சென்ற டாக்டர். எம்ஜிஆர், செல்வி ஜெ.ஜெயலலிதா, டாக்டர் மு.கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களை எதிர்த்தும், ஆதரித்தும் செயல்பட்டவர். அதே நேரத்தில், வி.கே.சசிகலா நடராஜன் செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பின்புலப் பொம்மையாக வைத்து நேரடி அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்காமல் கிச்சன் கேபினட் இன்கேமரா அரசியல் செய்த அரசியல் ஆளுமை; தமிழகத்து நடிகையானாலு...