உலகின் பிற நாடுகள் ஒற் றைப்படை-இரட்டை, 4 நாள் வேலை வாரங்கள், பள்ளி மற்றும் அலுவலகங்களை மூடுதல் மற்றும் எரிபொருள் விலையை 20-30 சதவீதம் உயர்த்துதல் போன்ற கடுமையான எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் போது, நமது பரதப் பிரதமரின் கீழ் இந்தியாவுக்கு எல் பி ஜி எரிசக்தி பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலையில் ஒரு சோலையாக உள்ளது. வணிக ரீதியான LPG விநியோகத்தை எளிதாக்குவதற்கு மேலும் ஒரு நடவடிக்கை எடுத்து, இந்திய அரசு மாநிலங்களின் வணிக LPG ஒதுக்கீட்டை 70 சதவீதம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது, மேலும் 20 சதவீதம் ஒதுக்கீடு எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற உழைப்புத் தொழில்கள் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படுகிறது. குழாய் எரிவாயு மாற்றாக இல்லாத தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பெட்ரோலின் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரிகளை லிட்டருக்கு ரூபாய் .13 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும், டீசல் மீதான நில் (பூஜ்ஜியம்) லிட்டருக்கு ரூபாய் .10 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும் குறைக்கிறது இந்திய அரசு.
தமிழ்நாடு நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம், காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவு. மாற்றமானவர்களை ; தேர்தல் ஆணையம் மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 28 ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டும், தீவிர பரப்புரையையும் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தலை நேர்மை...