முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

டெல்லியில் நீதிமன்றம் விடுவித்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள்

டெல்லி யூனியன் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என 2021-22 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையைக் கொண்டு வந்தார் . இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூபாய் .100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது. மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ஆம் ஆண்டு டெல்லி தலைமைச் செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு...
சமீபத்திய இடுகைகள்

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?'  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்.  மேற்கத்திய வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளதன்படி கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியது. அபுதாபியில் ஈரான் போர் சூழல் வான்பரப்பை மொத்தமாக மூடிய துபாய். விமானப் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்தது! ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிற நிலையில், துபாய் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகள் தங்கள் வான் பரப்பை மூடியிருக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக, வான்வழிப் பாதைகள் மூடப்பட்டு, ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா 'ஆபரேஷன் எபிக் ஃபுயூரி' என்றும், இஸ்ரேல் 'ஆபரேஷன் லயன்ஸ் ரோவர்' என்றும் பெயரிட்டன. அத...

பாதை மாறிய பயணம் அதிமுகவில் தலைவர்கள் கட்சி மாறும் நிலை

" அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே  ஒட்டி உறுவார் உறவு. " ஔவையின் மூதுரை 17 :  தற்போது கட்சி மாறி வருகிறவர்களுக்கெல்லாம் ஒதுங்கி வழிவிட்டு வழிவிட்டு இப்போது வந்தவர் யாரு? காலகாலமாக கட்சியை வளர்த்தவர் யாருன்னு தெரியாத அளவுக்கு வந்தவர்களின் ஆதிக்கம் திமுக மற்றும் பாஜகவில் வலுத்துப் போனது, திமுக மற்றும் பாஜக ஆரம்ப காலக் கட்சிக்காரர்களை சோகமாக மனசொடிஞ்சி நிக்கும் நிலைமைக்குத் தள்ளியது, மூன்று முறை முதல்வர் தேனி மாவட்டம் பெரியகுளத்து தேனீர் கடைக்காரர், பின்  நகராட்சித் தலைவர் "O. பன்னீர் செல்லம் திமுக வில் இணைந்தார்" அதற்கு முன், பல அமைச்சர்கள் ஆர் எம். வீரப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,   ஏ.வ.வேலு,     எஸ்.ரகுபதி, தென்னவன்,   ஈரோடு S. முத்துச்சாமி,  அனிதா ராதாகிருஷ்ணன்,    ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,    செந்தில்பாலாஜி,  சேகர் பாபு, ஃ நிலோபர் கபில்,  அன்வர்ராஜா,  தங்கதமிழ்ச்செல்வன், வ. மைத்திரேயன், பி.எச். மனோஜ் பாண்டி...