முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சாத்தான்குளம் இருவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு அணைவரும் குற்றவாளிகள் தணடணை விபரம் 30 ஆம் தேதி

சாத்தான்குளம் வழக்கின் நியாயத் தீர்ப்பு நீதி வென்றது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி-காவல்துறைக்குபாராட்டு என வழக்கறிஞர் ஹென்றி திபேன் கருத்து, இந்த வழக்கில் தண்டனை விபரம் மார்ச 30-இம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நாடார்  வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மகன் படுகொலையானது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்ட பின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து வ...
சமீபத்திய இடுகைகள்

NDA கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிவானது

NDA கூட்டணியில் தொ குதிப்பங்கீடு அஇஅதிமுக-170, ல் (பகுஜன்சமாஜ் ஆம்ஸ்ட்ராங் 1), பாஜக- 27, பா.ம.க-18, அமமுக-11, தமாக(மு)-2, இன்னும் முடிவாகாத நிலை, IJK -2, புதிய நிதிக்கட்சி-2, A.C.திருமாறன்-1, P.ஜான்பாண்டியன்-1, ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள்,மருத்துவர் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகளும், டி.டிவி தினகரன் அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம், தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, பகுஜன்ஜமாஜ் (ஆம்ஸடராங் )ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தினம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் எனக் கூறப்பட்டதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மார்ச் 23 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அவர் இந்த கூட்டணி அமைந்தவுடன் முதல்முறையாக எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த போது அவர்களுக்கு  ஏற்கனவே டெல்லியில் பேசி முடிவு செய்து 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சியை விட ஒரு த...

3 தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக

மூன்று தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைந்து. ஒரு தொகுதியை தவெக பெற்ற நிலையில், பண்ருட்டி தொகுதியில் பாமகவின் பழைய மாணவர் பிரிவுச் செயளாளரான வேல்முருகன் போட்டியிட்டார். அதில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் அதிமுகவின் ராஜேந்திரனை வீழ்த்தி வென்றார் அதேபோல் தற்போது வேல்முருகன் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக சார்ந்த தே ஜ கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தணை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். இதனால் வேல்முருகன் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு செய்வாரென்றும். கூறுகின்றனர்....

வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல சுற்றறிக்கை

வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு இறப்புச் சான்றிதழ் பதிவுக்கு இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல ,- - சுவாமி விவேகானந்தர்   வீட்டில் இயற்கையாக நிகழும் மரணங்களைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களைத்த் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வயது முதிர்வு, மாரடைப்பு அல்லது திடீர் உடல்நலக்குறைவு         காரணமாக வீட்டில் மரணம் சம்பவிக்கும் போது, அதற்கு இறப்புச் சான்றிதழ்கள் பதிவு 21 நாட்களுக்குள் பதிவு செய்ய உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பிறப்பு, இறப்புப் பதிவு அமைப்புகள்,  மருத்துவச் சான்றிதழை (MCCT - பார்ம்.A) கட்டாயமாகக் கேட்டு வந்தன. இதனால் முறையான பதிவு மருத்துவர்  பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் 1969  ன் படி பதிவுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் ஆனால்  சிகிச்சை பெறாமல் வீட்டில் இயற்கையாக உயிரிழப்பவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சிலர் ந...