மாநில உள்துறைச் செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம் ஏ.டி.துரை குமார் ஐபிஎஸ் வழக்கமான பணியிட ஆணை வெளியிடும் வரை V&AC ன் பொறுப்பு இயக்குனராக உள்ளார். தீரஜ் குமாருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக நியமித்து நடவடிக்கை இடமாற்ற உத்தரவை ECI மாற்றியமைக்கிறது, டேவிட்சன் தேவாசீர்வதம், IPS தலைவராக தொடர்கிறார், ஆயுதப்படை போலீஸ் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம்.தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரையும், புதிய உள்துறை செயலாளராக கே மணிவாசனையும் இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு; மேலும், சட்டசபை தேர்தல் முடியும் வரை தீரஜ் குமாரை தேர்தல் தொடர்பான பணிகளுக்கு நியமிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பதிவிரக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி . 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை திரைப்படத் தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.தொடர்ந்து, நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன. தற்போது, மறுதணிக்கை நிறைவடைந்ததாகவும் தேர்தல் நிறைவடைந்த பிறகு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வியாழக்கிழமை மாலை வெளியான நிலையில், இன்று அதிகாலை 3 மணிநேர முழுப் படமும் வெளியானது.இதனால் படக...