சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி. குற்றவாளிகள் காவல் துறை ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை பணியாளருக்குமே தூக்கு தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு. செல்போன் விற்பனைக் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஆறாண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி கொரோனா பரவல் காலத்தில் காவல்துறை பணியில் இருந்த காவலர் சிலரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்படவர்கள். ஜூன் மாதம் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. வழக்கை சூமோட்டோவாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , அறிக்கை தாக்கல் செய்யம்படி மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப்...
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி தென்பாண்டி நாட்டின் கீழ்திசை தன்னாட்சிக் கள்ளர் நாடுகளான வெள்ளளூர், மற்றும் மேலவளவு மற்றும் முத்தரையர் என அழைக்கப்படும் வலையர் சமூக மக்கள் நிறைந்த கொடடாம்பட்டி யூனியனில் அதிகம் வசிக்கும் சட்டசபை தொகுதியாகும் இங்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூரைச் சேர்ந்த முன்னாள் காஞ்சிபுரம் நடாளுமன்ற உறப்பினரான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளராகவும் உள்ளார். தேர்தலில் போட்டியிட தனக்கு பொதுத் தொகுதி வேண்டுமென விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்தார் அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “மேலூர் தொகுதி என்பது எனக்கு புதிதல்ல, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கத்துடன் இணைந்து தொகுதியின் அனைத்து...