முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் உச்சநீதிமன்றத் தடை நீக்கம் விசாரணை மீண்டும் புதிதாகத் துவங்குகிறது

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை  உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  அதனால், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமித்துக் கொள்ளலாம் எனப் பொருளல்ல. உயர்நீதிமன்றம் அவசர கால வழக்காக எடுத்து விசாரித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.  தமிழ்நாடு அரசின் சட்டங்கள் சரியா என்பது குறித்து முதலிலிருந்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் புதிதாக  முதலிலிருந்து  விசாரித்தாலும் தமிழ்நாடு அரசின் சட்டங்கள் உயிர் பெறுமா என்பது சந்தேகமே அச்சட்டங்கள் ஆளுநரின் உரிமையில் குறுக்கிடுவதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான பிரச்சனை.  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஜனாதிபதி ஆளுநர் தாமதமே செய்தாலும், அவர்களின் அதிகாரத்தில் மாநில அரசுகளோ நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாக  ஏற்றுக்கொண்டு விட்டது. அது தீர்ப்பு அல்ல என்றாலும் சட்ட ரீதியான கர...
சமீபத்திய இடுகைகள்

மடப்புரம் கோவில் காவலாளி அடித்துப் படுகொலை செய்த வழக்கில் புகார்தாரி நிகிதா கைதாவது எப்போது

காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில்  நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை  உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல்,   காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம் காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார். சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும...

சமூக நீதி விடுதியில் உணவுக்கு ஊறுகாய் வாங்கும் அவலம் பாமக தலைவர் கேள்வி

புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு பட்டியல் மாணவிகள் தங்கிப் பயிலும் சமூக நீதி விடுதியில்  மாணவிகளுக்கு 3 வேளையும் பழைய சாதமும் ஊறுகாயும் தான் உணவாக வழங்கப்படுவதாகவும் . சாம்பார், ரசம், காரக் குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு தட்டில் வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் வந்தார்.  மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் வரவில்லை. அதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனைக் கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள...

ரூபாய்.10,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற அளவையர் கைது

மனையிட வரன்முறைக்கு அனுமதி வழங்க ரூபாய்.10,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற அளவையர் கைது  திருவேற்காட்டில் மனையிட வரன்முறை செய்து அனுமதி வழங்க ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற நில அளவர் ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்குச் சொந்தமான  திருவேற்காடு பகுதியில் உள்ள நிலத்திற்கான மனையிட வரன்முறை அனுமதி வாங்குவதற்காக திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு பிரிவில் பணம் செலுத்தி மனு அளித்திருந்தார். அந்த நிலத்திற்கு மனையிட வரன்முறை அனுமதி வழங்குவதற்கு ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என நகரமைப்பு அலுவலர் சாந்தி கேட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால், அது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜெயலெட்சுமி கொண்டு வந்த பணத்தை பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட் டுகளாக ஜெயலட்சு...

கன்னிப்பேச்சில் கவிதை வடித்த கமலஹாசன்

“தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - நாடாளுமன்ற மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு:- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.( நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) ஓரளவு உண்மை தான். தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! என  நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன்  ஆங்கிலத்தில் உரையாற்றியவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவ...