திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம்.25-இம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம்.4-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை, மாலையில் ஊர்வவம் புறப்பாடு நடைபெற்றது. காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 9 நாட்களும் எழுந்தருளினர். அதனையொட்டி எட்டாம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவான தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிச் செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று டிசம்பர் மாதம்.3 ஆம் தேதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் கடந்த வருடம் போல மாலை 6.05 மணிக்கு தீபம...
திருவண்ணாமலை மஹாதீபம் கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ஆம் நாள் திருவிழா. இந்த மகாதீபம் இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" எனப்படுகிறது. காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பதுவே பரணி தீபமாகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இந்தத் தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படும். 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். பஞ்ச பூத ஸ்தலத்தில் அக்கினி ஸ்தலமாகும். தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மஹாதீபம் எனலாம். இந்தத் தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் காணும் மலை 2668 அடி உயரம் கொண்டது. மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையை 1668- ஆம் ஆண்டு பிரதானிவேங்கடபதி ஐயர் செய்து கொடுத்தார். பின்பு 1991- ஆம் ஆண்டில் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை...