முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தூத்துக்குடி உணவகத்தில் QR கோடு பண மோசடி சிக்கிய குற்றவாளி

இப்போது டிஜிட்டல் நாணயத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது போல அதில் மோசடிளும் பெருகிவிட்டது, தெருவில் கீரை வாங்கக் கூட QR கோடு தான், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடு நடுத்தர உணவகத்தில் QR Code பதித்த ஸ்டிக்கர் மீது மற்றொரு ஸ்டிக்கரை மறைத்து ஒட்டி பண மோசடி சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைதானார், - சைபர் குற்றத்தில் மோசடி செய்தவன் சிக்குவதும் எளிது காரணம் சாடசியம் வலுவானது ஆகவே அவனை எளிதாக பூஜியக் குற்றம் தடுப்புப் பிரிவு காவல்துறை உடனடியாக பிடித்து கைது செய்து நடவடிக்கை. தூத்துக்குடியில் ஒரு நநடுத்தர உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தை QR கோடு ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும் போது அந்தப் பணம் உணவகம் நடத்தும் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் போனதால் உணவக உரிமையாளர் QR Code ஸ்கேன் சாதனத்தை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் QR Code ஸ்டிக்கர் இவர் ஒட்டிய ஸ்டிக்கரை மறைத்து ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அது குறித்து உணவக உரிமையாளர்  22.12.2025 ல் NCRP ல் online மூலம் (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் காவல்த...
சமீபத்திய இடுகைகள்

5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா பெயர் மாறுதல் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர்  கைது.  .விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், முன்னுாரைச் சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆலங்குப்பத்தில், அவருடைய மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார்  ஆனால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் தாமதம் செய்துள்ளார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புகா கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் ஆலோசனைப்படி சுரேந்தரிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தைப் பெற்ற சரவணனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் SIR திருத்தப் பணி குறித்த தகவல்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும் எனவும், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 28.12.2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 03.01.2026 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழிப் படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொ...

பிரபல எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: "ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும்,  ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி

கிருஸ்தவ அமைப்புக்களின் ஆதரவைப் பெற்ற தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28 வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. முன்னதாக அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததநிலையில்  விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மற்றொரு புறம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. எனவே த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்ற கிறிஸ்மஸ் விழாவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர் . இந்த நிலையில் சென்னையில் த.வெக தவைவர் நடிகர் விஜய் த...

தேசிய நுகர்வோர் தினநிகழ்ச்சி – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்பு

தேசிய நுகர்வோர் தினநிகழ்ச்சி – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்பு தேசிய நுகர்வோர் தினம் இன்று கொண்டாடுப்படுவதையொட்டி  புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி பங்கேற்றார். டிஜிட்டல் முறையிலான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்களை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டுக் கருப்பொருள், டிஜிட்டல் முறையில் நுகர்வோருக்கு விரைவான நீதி வழங்குதல் என்பதாகும் என குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இதுவரை 1,40,000 நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 90,000 விசாரணைகள் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நுகர்வோர் விவகாரங்கள்துறை இணையமைச்சர்  திரு பி எல் வர்மா, நாட்டின் பொருளாதாரத்தில் நுகர்வோர் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள் நுகர்வோரிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.