இந்தியாவில் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும். காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்பே, நாடாளுமன்ற மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குள்ள நடைமுறைக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.1925-ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா மாகாணங்களில் ஹிந்து, பௌத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதி இஸ்லாமியர்களுக்குப் பொ...
தவெகவில் இணைந்த முன்னால் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் 20 நாட்களில் கோயம்பத்தூர் ஈரோடு சார்ந்த கொங்கு மண்டலத்திற்கு நடிகர் விஜயை அழைத்து, சொந்த மாவட்ட மண்ணில் பிரமாண்டத்தை காட்டுகிறார். ஆளுங்கட்சி திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தின் செல்வாக்கைக் காட்ட முனையும் கே. ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் பிரமாண்டமான பொதுக் கூட்டம் எனும் மக்கள் சந்திப்புக்கு 7 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கே. ஏ. செங்கோட்டையன் நேரடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். அதில் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 75 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பெரிய கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியானதும், தவெக ஆதரவாளர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த அனுமதியை ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா வழங்கினார். அனுமதியுடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன...