முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டம் மற்றும் மகளிர் கடடணமில்லாத பேருந்து திட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்  24.8.2026தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்றும், 'வெற்றிப் பயணம்' திட்டம் செயலாக்கம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், தற்போது முக்கியத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் அவையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி, நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் மீதான விவாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.அரசியல் காரசார விவாதங்கள்: தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு மக்கள் ந...
சமீபத்திய இடுகைகள்

தன்னம்பிக்கைக் கொள்கை மட்டுமல்ல; போர்க்களத் திறனுக்கான சக்தி பெருக்கி:அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

 ரக்ஷா மந்திரி மற்றும் மேற்கு வங்க முதல்வர் கொல்கத்தாவில் இருந்து GRSE & YIL இன் ஐந்து விரிவாக்க திட்டங்களுக்கு பூமி பூஜை செய்கிறார்கள் தோராயமாக மதிப்பு. ரூ.3,500 கோடி, நாட்டின் கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, உலோகவியல் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள், ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’, மேக் ஃபார் தி வேர்ல்டு’ ஆகியவற்றுக்கு பெரும் உந்துதலை அளிக்கிறது. வேலைகளை உருவாக்குவதற்கும், MSMEகள் உட்பட துணைத் தொழில்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும் திட்டங்கள் தன்னம்பிக்கை என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல; இது போர்க்களத் திறனுக்கான ஒரு சக்தி பெருக்கி: ஸ்ரீ ராஜ்நாத் சிங் "வளர்ந்து வரும் 'திறன் முரண்பாடு' இந்தியா உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக உருவெடுக்க ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது" ரக்‌ஷா மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் ஸ்ரீ சுவேந்து அதிகாரியுடன் இணைந்து, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) மற்றும் யந்த்ரா இந்தியா லிமிடெட் (YIL) இன் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கான பூமி பூஜை விழாவிற்கு தல...

போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம்.

போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம்.  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் தலைமைக் காவலர் ஜெயராஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கிய புகார் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அவரது பரிந்துரை படி இராமநாதபுரம் டிஐஜி மணிவண்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். புத்தூர் கட்டு பாண்டி என மாற்றுப் பெயரில் மருத்துவம் படிக்காமல்  நுட வைத்தியம் பார்க்கும்  நாட்டு மருத்துவர் நெடுஞ்செழியன் என்பவர்  சமீபத்தில் போலி மருத்துவர் என கைதானார் பின் ஜாமீனில் வெளிவந்தார் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டதில், தன்னிடம் மக்கள் மருத்துவம் பார்க்க அனுமதிப்பதற்கு   காவல் ஆய்வாளர் சீனிபாபு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தராவிட்டால் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு காவலர் ஜெயராஜ் தன்னிடம் லஞ்சம் வாங்கியதற்கான CCTV பதிவு காட்சிகளையும் அவர் ஆதாரமாக வெளி...

பிரிக்ஸ் இளையோர் நல அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், 2026

வளர்ச்சிப் பணிகளில் இளைஞர்களின் ஒத்துழைப்பு, பங்கேற்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இளையோர் நல அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர் மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இளையோர் நலன் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பிரிக்ஸ் இளையோர் நல அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், 2026 ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டம், மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. இதில் அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, செயலாளர் திரு சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் இளையோர்  உச்சிமாநாடு, இளைஞர் குழுக் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, விவாதங்கள் நடைபெற்றன. இதில் பெறப்பட்ட பரிந்துரைகள், கருத்துக்கள், அமைச்சர்கள் நிலையிலான விவாதங்களுக்கு முக்கிய அடித்தளத்தை வழங்கின. இதில் பங்கேற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே உரையாற்றிய மத்திய இளையோர் நலன்,  விளையா...

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பண்டிகைக் காலங்களில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை சர்க்கரையின் விலை, 20 ஜூலை 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்த நிலையில், 20 ஆகஸ்ட் 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது. அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதைக் காரணம் காட்டுவது தவறானது. உண்மையில், எத்தனால் தயாரிப்பிற்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு, 2022-23-ல் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ல் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இப்போது தானியங்களிலிருந்தே, குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை, கரும்புப் பயிரில் வானில...

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியின்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2026 முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி , 2027 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து தலைமைச் செயலாளராகப் பதவியில் இருப்பார். பதவி நீட்டிப்பு பதவிக் காலம் 6 மாதங்கள் கால வரம்பாக 01.09.2026 முதல் 28.02.2027 வரைஅதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அனுமதியை வழங்கியுள்ளது.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அகில இந்திய பணி விதிகளின் கீழ் (AIS Rules, 1958) ன் படி இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம்,

 இளம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அதிக அளவிலான வாய்ப்புகள், வலுவான சர்வதேசத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், 2026 ஆகஸ்ட் 21 அன்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை-2-ல் நடைபெற்றது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தத் திரைப்பட விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவாக, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2026 நவம்பர் 20 முதல் 28 வரை, கோவாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன், இளம் மாணவர்கள், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இந்தியத் திரைப்படத் துறையின் அதிகம் அறியப்படாத சாதனையாளர்களுக்கு, அதிக வாய்ப்புகள் வழங்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் திறமையாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படு...