மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய அளவிலான மாநாடு மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தேசிய அளவிலான மாநாட்டை ஏற்பாடு செய்தது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவின் மென்சக்தியும் படைப்பாற்றல் பொருளாதாரமும் வலிமையின் ஏழு தூண்களான சப்ததாராவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் பரந்த ஆக்கத்திறன் ஆற்றலைப் பயன்படுத்தவும், பொதுத் தகவல்தொடர்பை வலுப்படுத்தவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வலுவான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பதைச் செயலாளர் வலியுறுத்தினார். கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்பாற்றல் பொருளாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவின் உலகள...
இந்தியா-நியூசிலாந்து உத்திசார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை வெலிங்டனில் நடைபெற்றது இந்தியா - நியூசிலாந்து இடையேயான பாதுகாப்பு உத்திசார் உரையாடலின் இரண்டாவது பதிப்பு, நேற்று (2026 ஆகஸ்ட் 24) வெலிங்டனில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத், நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் திரு ரிச்சர்ட் ஷ்மிட் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், கூட்டு ராணுவப் பயிற்சி, ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அமைந்திருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டு நிலையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பகிரப்பட்ட ஒத்துழைப்பின் அடிப்படையில், ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தூதுக்குழுக்களும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு செயல்திட்டம் 2030-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலக்குகளைச் செயல்படுத்துவது குறித்தும் இதில் கவனம் செலுத்தப்பட்டது. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு...