தமிழ்நாட்டில் 5 முக்கிய ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகள் பணியிட மாற்றம், அரசின் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் ஐஏஎஸ் உத்தரவு அதன்படி எம். விஜயலட்சுமி, IPS: திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை டி.ஐ.ஜி (DIG)-யாக இருந்தவர், சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.ஆர். சிவபிரசாத், IPS: சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் குப்தா, IPS: தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். டி. சண்முகப்பிரியா, IPS: சென்னை சிபிசிஐடி (CB-CID) மத்திய மண்டல எஸ்பி-யாக இருந்தவர், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு (DVAC) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். பி.ஆர்.மீரா, IPS: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)- ஆக இருந்தவர், சென்னை டிஜிபி தலைமையகத்தின் அலுவலக மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு உதவி காவ...
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது. மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (30) என்பவரின் தந்தையார் கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி வருவாய் பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூபாய் .5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. என்பவர் தனது பின்னர் அது ரூபாய் .4,000 ஆகக் குறைக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறையில் (DVAC) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு துறை அலுவலர்களின் பொறிவைப்பு திட்டப்படி, பினாப்தலீன் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் புகார்தாரர் அரசு சாட்சிகள் முன்னிலையில் ஹேமலதாவிடம் வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் வைத்து, ஈஸ்வரியிடம் இருந்து...