திருவெறும்பூர் அரசு உதவிப்பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியையின், 6 லட்ச ரூபாய் சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் புகழேந்தி. இவரது பணிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கேட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்த போது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்ய புகழேந்தி ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார் அதன் தொடர்ச்சியாக நேற்று ஆசிரியர் இளமுருகு திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபா பதிவு செய்யப்பட்டு, த...
முன் ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்த முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு கூட்டிச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர். திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக திமுக என மாறி தொடர்ந்து 7 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார் " கைதான பின் "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ” என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் பேசியதால் புகார் அதற்கு முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் ஆத்தூருக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச் சென்றனர். த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் அரசியல் கைது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக நடாளுமன்ற...