முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நேபாளத்தில் இதுவரை 149 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

நேபாளத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை 149 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் பட்டியல் வெளியான நிலையில்  நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி இந்தியர்கள் உயிரிழந்ததை அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோர வெள்ளத்தில், இதுவரை 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   மேலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் தனது சமூக வலைத்தளப் பதிவில், பேரிடரில் இந்தியர்களின் உயிர் பறிபோனதற்கு இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நேபாளத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் இந்தியா உடனடியாக இந்திய விமானப்படை மூலம் 57 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் 11 பேர் கொண்ட மருத்துவ மற்றும் சுரங்க மீட்புக் குழுவினரை அனுப்பி உதவியதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி ம...
சமீபத்திய இடுகைகள்

இந்தியா–சிலி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

இந்தியா–சிலி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இந்தியா - சிலி விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, மத்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், சிலி அரசின் சர்வதேசப் பொருளாதார உறவுகள் துணை அமைச்சர் திருமதி பவுலா எஸ்டீவெஸ் வெயின்ஸ்டீனை 2026 ஆகஸ்ட் 26 அன்று சிலியின் சாண்டியாகோவில் சந்தித்தார். இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கும் மக்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, இந்தியா - சிலி பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மைக்கும், சமச்சீரான அணுகுமுறைக்குமான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. வலுவான, வளர்ந்து வரும் இந்தியா - சிலி உறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நோக்கங்களை வணிக ரீதியாக அர்த்தமுள்ள வாய்ப்புகளாக மாற்றுவதை உறுதி செய்வதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர். சுகாதாரம், மருந்துப் பொருட்கள், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், இயந்திரங்கள், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார ஒத்துழைப...

பிட்காயின் மோசடிக் குற்றவாளிகள் வலை விரித்து வீழ்த்திய குக்கிராம மக்கள்

மதுரை மாவட்டம் மேலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் குறைந்தது சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகச் சாமானிய மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசாடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் ஏஜென்ட்கள் கட்டையம்பட்டி ரஞ்சித் மற்றும் அருண் எனத் தகவல் வருகிறது, மேலூரில் FQL,VG எனும் பிட்காயின் மோசடி நிறுவனங்களில் 53 ஆயிரம் போட்டால் 45 நாட்களில் லட்சம் ரூபாய் திரும்ப பெறலாம் என்று ரஞ்சித், அருண் ஆகியவர்கள் பல குடும்பம் மூலமாக  தனது பகுதியில் அதிகம் வசிக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மக்களிடம் இருந்து ஆரம்பித்து  அவர்கள் மட்டும் 30 ஆயிரம் பேரிடம் மோசடி, மேலும் பல உப ஏஜென்ட்கள் உணடாம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த FQL (மற்றும் VG) ஆன்லைன் செயலி பண மோசடியில் ஒட்டுமொத்தமாக சுமார் 60,000 முதல் 68,000-க்கும் மேற்பட்ட மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையின் அதிகாரப்பூர்வப் பதிவுகள் மற்றும் கள நிலவரங்களின்படி இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நத்தம் மற்றும் அதன் சுற்றுவட...