வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குப் பிரதமரின் தேசிய சிறார் விருது ஆண்டுதோறும் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்துதவிய 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு சேர்ந்த ஷ்ரவன் சிங் (வயது 10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினார்.இன்று ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விருதைப் பெற்ற ஷ்ரவன் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரின்போது எங்கள் ஊர் எல்லை அருகே ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால், அவர்களுக்காக நாள்தோறும் பால், தேநீர், மோர், லஸ்ஸி கொடுத்தேன். இந்த விருது பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனைக் கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார். கலை மற்றும் கலாசாரம்,...
58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிலரங்கு மகாராஷ்டிராவின் புனேவில் டிசம்பர் 29 அன்று நடைபெற உள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சுமூகமான மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது பணிபுரிந்து, அடுத்த 12 மாதங்களில் ஓய்வுபெற உள்ள 350 பேர், இந்த ஓய...