திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: திருநெல்வேலி மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். இந்த விவகாரத்தில் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் . யார் எனக் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்தபடி, ஆனால் "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக் கருதவில்லை. என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும் என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை காவல்துறை கண்டுபிடித்து விடுவார்கள்.நிச்சயமாக காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. என்மீது சுமத்தப்படுவது அபாண்டமான குற்றசாட்டு . நான் நிச்சயம் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவருடைய இறுதிச் சடங்கில் நானும் கலந்து கொள்வேன் என
யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம். கைதாகி அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தி சிக்கியத! யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் . கோயமுத்தூரில் இருந்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரைக் கூட்டிச் சென்றனர். காவல் துறை உயர் ஐ பி எஸ் அதிகாரிகள், மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், சவுக்கு சங்கர் தேனிக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோயம்புத்தூருங்கு கூட்டிச் செல்லப்பட்டார். சவுக்கு சங்கர் கைது குறித்து காவல்துறையினர் தரப்பில், “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தது, சவுக்கு சங்கர் அவ