விமானங்களின் பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள்,...
குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். "அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு மனிதருக்கு...