முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது அவமதிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,'' என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஏழுமலை கிராமம் ராமர.விக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர்  மாதம்., 3 ஆம் தேதியில் கார்த்திகைதா தீபத்தை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது காவல்துறையினர் கடமை என உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல்துறை ஆணையர்  லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்  யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக...
சமீபத்திய இடுகைகள்

காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டின் எம்பிக்களுடன் மத்திய அமைச்சர் கலந்துரை

காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துரையாடினார் காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று கலந்துரையாடினார். காசநோய் ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 2015-ம் ஆண்டு காசநோயால் ஒரு லட்சம் பேரில்  237 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து 187-ஆக இருந்தது என்று கூறினார். இது உலக அளவில் சராசரியாக 12 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியாவில் அந்த சரிவு இரட்டிப்பாக இருந்ததாக தெரிவித்தார். காசநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 92 சதவீதத்தைக் கடந்துள்ளதாகவும் கூறினார். இது உலகளாவிய சூழலைவிட அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். இந்நோய் குறித்து முன்னதா...

LLR பெற ரூபாய் ஆயிரம் லஞ்சம் ; மோடடார் வாகன ஆய்வாளருடன் தரகரும் கைது

LLR பெற ரூபாய் ஆயிரம் லஞ்சம் ; மோடடார் வாகன ஆய்வாளருடன் தரகரும் கைது திருச்சிராப்பள்ளி மாவட்டம் , குண்டூர் பழனியப்பன் . ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார் இவரது மையத்திலிருந்து , திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் LLR க்கு விண்ணப்பித்த இருவருக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதியை , (வயது 45) அணுகியுள்ளார் . அவரோ , ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் , அனுமதிக்க முடியும் எனக் கூறவே லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் , அது குறித்து திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார் அவர்களின் அறிவுறுத்தல்படி , ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதிக்கு , அங்கு தரகராக இருக்கும் திலீப்குமார் ,(வயது 35) , மூலம் அரசு சாட்சி வைத்துக் கொடுத்துள்ளார் அதை மணிபாரதி வாங்கிய போது , ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கு சென்று , பணம் பெற்ற கையுடன் அவரைப் பிடித்து கைது செய்தனர் . லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலைய...

கரூர் உதவி மின் பொறியாளருக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா நெய்தலூர் காலனி, ராஜன் நகர் பகுதியில், காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில் செயல்பட்டது. அதற்கு புதிய மின் இணைப்புப் பெற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுந்தரராஜ் என்பவர், குளித்தலை சின்ன பனையூர் மின்வாரிய அலுவலகத்திலுள்ள உதவி பொறியாளர் டி.ஆர். நாராயணனை கடந்த 2011-ஆம் ஆண்டு அணுகியபோது, புதிய மின் கம்பம் அமைப்பதற்கு ரூபாய். 2000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜ் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.அதனடிப்படையில், 10.08.2011-ஆம் தேதி சுந்தரராஜிடமிருந்து ரூபாய். 2000 லஞ்சம் பெற்ற போது உதவி மின் பொறியாளர் நாராயணன் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, நேற்று மாலை நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில், லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய். 10,0...

அரசு பள்ளி ஆசிரியையிடம் லஞ்சம் பெற்ற உதவிக் கல்வி அலுவலர் கைது

திருச்சிராப்பள்ளி மாநகர் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் ஊதிய நிலுவைத் தொகை பெற சான்று வழங்குவதற்கு 1500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு  மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்படார். திருச்சிராப்பள்ளி நகர வட்டாரக் கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக மணப்பாறை தாலுகாவில் உள்ள வையம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலராகவம் கூடுதல் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சிராப்பள்ளி, மணப்பாறையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை  விமலா  பணிபுரிந்துள்ளார். தற்போது பணி மாறுதலில் வேறு பள்ளிக்கு  ஜூலை மாதம் சென்று விட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியை  பணிபுரிந்த நாட்களுக்காக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவைத் தொகை இருந்துள்ளது.விடுமுறை நாட்களுக்கு ஊதியம் பெற சான்றிதழ் அளிப்பதற்கு ரூபாய்.1500 லஞ்சம் கேட்டதால் கொடுக்க விரும்பாத ஆசிரியை திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார் பள்ளி ஆசிரியை விமலா வேறு ஒரு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம...

களப்பிரர் வழி வந்த சுவரன்மாறன் முத்தரையருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட பிரதமர்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்தவராவார். இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நிலப்பரப்புகளை ஆண்டார். பல்லவ மன்னன் நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.  1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின்  முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா, திருச்சிராப்பள்ளி மாநகரில் இவர் சிலையை நிறுவினார்.பிறகு 2002-ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது, அனால் ஆரம்ப கால வரலாறு என்பதில் களப்பிரர்கள் பற்றி மட்டுமே படித்த நிலையில் களப்பிரர் தான் முத்தரையர் என தற்போது பேசும் நிலை உள்ளது 2025 டிசம்பர் 11 அன்று இவர் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறனின் நினைவுத் அஞ்சல்  தலையை இன்று புது டில்லியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், பி...