வி ஏ ஓ வுக்கு ஜிபேயில் லஞ்சம் ! லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா? கண்டித்த உயர்நீதிமன்றம்!தபால் துறையை போல் செயல்படுவதற்காக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்தது. கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழ்நாடு அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலை அதிகாரிப்பட்டி மலர்விழி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "என் கணவர் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் எங்கள் பரம்பரை சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரித்த போது, தில்லையம்பல நடராஜன் என்பவர் அலுவலர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் பரம்பரை சொத்துகளை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தது தெரியவந்ததை சரி செய்ய வருவாய்த் துறை அலுவலர்களைச் சந்தித்தபோது ரூபாய்.2 லட்சம் லஞ்சமாகத் தரும் படி கேட்டனர். அதன் காரணமாக பல தவணைகளில் ரூபாய் .2 லட்சம் வழங்கினேன். கடைசியா...
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில், நடிகை அருணா வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். புதுச்சேரி யூனியன் பிரதேச பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் சென்ற அமலாக்கத் துறை அலுவலர்கள், மன்மோகன் குப்தா வீட்டில், காலை 7:00 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரை சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. அருணா மற்றும் மன்மோகன் குப்தாவின் சொகுசு பங்களாவை பார்த்து பலரும் வியந்தனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடந்தப்பட்டு அவரது நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரை பகுதியில் சொகுசு பங்களாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உண்டு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள் அலங்காரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த மாநிலங்களிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.