இடுகைகள்

Featured Post

உயர் நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு வழக்கில் சிக்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள்

 உச்ச நீதிமன்றம் மறுப்பு:   திருப்பரங்குன்றம் மலை பாரம்பரிய பழமையான இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது ஆவணங்கள் சரியாகக் கொடுத்திருந்தால் வரிசை அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் விளக்கம்.  உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் இராம.ரவிக்குமார் சார்பில் கேவியட் மனுவும் தாக்கல்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது! நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு  வழக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 144 தடை உத்தரவை ரத்து செய்தார் , தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு.மாநகர காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு. மனுதாரர் இராம.ரவிக்குமார் உடன் 10 பேர் சேர்ந்து சென்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை விளக்கேற்ற அனுமதித்த உத்தரவை பின்பற்றாவிட்டால் விளைவுகள் ஏற...
சமீபத்திய இடுகைகள்