முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கன்னியாகுமாரி மாவட்ட காவல்துறைக்கு புதிய கண்காணிப்பாளர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (டாக்டர் ஆர். ஸ்டாலின் ராஜா ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தமிழ்நாடு அரசு இன்று செப்டம்பர் 11, 2026 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அவர் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணி நியமனமின்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அன்ஷுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் எஸ்பி ஸ்டாலின் ராஜா குறித்து கடுமையான பெண்கள் குற்றச்சாட்டு கலந்த விமர்சனங்களை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து கன்னியா குமரி மாவட்டத்தில் அந்த சமூக ஊடக நபர் மீது 4 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் ஏதோ சில தகவல்கள் உளவுத்துறை சேகரித்து அதன்படி இந்த அரசியல் மற்றும் சமூக ஊடக விவாதப் பின்னணியில் இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண...
சமீபத்திய இடுகைகள்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு ICU வில் சுவாசக்கருவி உதவியில் தீவிர சிகிச்சை

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு சென்னை அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்த விவரங்கள் பின்வருமாறு:அனுமதி மற்றும் சிகிச்சை: 2026 செப்டம்பர் 10 அன்று இவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் 3-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சுவாசக் கருவி (Ventilator/Respiratory Support) உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய உடல்நிலை: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய மருத்துவ அறிக்கையின்படி, அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதாகும் மூத்த அரசியல்வாதியான வி.எஸ்.பாபு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்ப...

இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு வலுசேர்க்கும் சமுத்ர லக்ஷ்னா கடற்படைப் பயிற்சி

இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு வலுசேர்க்கும் சமுத்ர லக்ஷ்னா கடற்படைப் பயிற்சி  இந்திய கடற்படை – ராயல்  மலேசியா கடற்படை இடையே நடைபெறும் சமுத்ரா லக்ஷ்மனா என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 4-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மைசூர் 2026 செப்டம்பர் 9 அன்று மலேசியாவின் லூமுட் சென்றடைந்தது. அங்கு ராயல் மலேசியா கடற்படை அதிகாரிகளும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அன்புடன் அவர்களை வரவேற்றனர். இருதரப்பு கப்பல் பார்வையிடல், செயல்பாட்டு உரையாடல், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் துறைமுகம் மற்றும் கடற்பகுதியில் நடைபெற உள்ளது. இந்நடவடிக்கைகள் இருநாட்டு கடற்படையினருக்கும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், சிறந்த பரஸ்பர புரிதலுக்கும் வாய்ப்புகளை அளிக்கும்.

இந்தியக் கடற்படைக் கப்பல் சுதர்ஷினி இத்தாலியை அடைந்தது

இத்தாலியை சென்றடைந்தது இந்தியக் கடற்படைக் கப்பல் சுதர்ஷினி இந்திய கடற்படையின் தொன்மையை பறைசாற்றும் லோக்கயான் பாய்மர கப்பல் பயணம் இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, 'லோக்காயன் 2026' கடல் பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பர் 9 அன்று இத்தாலியின் லிவோர்னோ துறைமுகத்திற்கு சென்றடைந்தது. இந்தப் பயணத்தின் போது, ​​இக்கப்பல் 10 நாடுகளைக் கடந்து 17,400 கடல் மைல்களுக்கும் மேல் பயணித்துள்ளது. இது இந்தியாவின் கடல்சார் மரபுகளையும் கடல்கடந்த நட்புறவு உணர்வையும் முன்னெடுத்துச் செல்கிறது. லிவோர்னோ செல்லும் வழியில், ஐஎன்எஸ் சுதர்ஷினி மத்திய தரைக்கடலில் இத்தாலிய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐடிஎஸ் பாலினூரோவுடன் இணைந்து ஒரு பயணப் பயிற்சியை நடத்தியது. இந்த கூட்டுப் பயிற்சியில், ஒருங்கிணைந்த பயிற்சிகள் இடம்பெற்றன. இது இரு பாய்மரக் கப்பல்களின் குழுவினருக்கும் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், தொழில்முறை நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்துதல், சர்வதேச கடல்சார் கூட்டாண்மையை வலுப்பட...

ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்

குடியரசுத் தலைவர் செயலகம் ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார் ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான் இன்று (செப்டம்பர் 10, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். ஆகா கான் இந்தப் பொறுப்பை ஏற்ற பிறகு இந்தியாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை வரவேற்ற குடியரசுத் தலைவர், அவரது தந்தையான மறைந்த நான்காம் ஆகா கானின் மறைவுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தார். இந்தியாவில்,  நான்காம் ஆகா கானையும், ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பு மேற்கொண்ட பணிகளையும் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறோம் என்று அவர் கூறினார். நீர், சுகாதாரம், கல்வி,  நகர்ப்புற மறுசீரமைப்பு, பெண்கள் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளில் ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பால் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைக் குடியரசுத் தலைவர் பாராட்டினார். இத்திட்டங்கள் பொது-தனியார் ஒத்துழைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றும், அரசுடன் இணைந்து செயல்படும் லாப நோக்கற்ற அமைப்புகள் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரத்தை ...

இலங்கை இந்தியா இருநாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் பயணம்

இலங்கை இந்தியா இருநாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கின் இலங்கைப் பயணம் பார்க்கப்படுகிறது!  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 8 முதல் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை தலைநகர் கொழும்புக்குப் புறப்படுகிறார்! இதற்கு முன்பு  1988ல் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கேசி பந்த் கொழும்பு சென்றார்! இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இலங்கை செல்வது கடந்து 38 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.சீனா வழங்கியுள்ள கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹம்பன்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை. சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் இந்த துறைமுகம், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்தியா சந்தேகம் அடைந்து வருகிறது. இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெர...

மஹாகவி பாரதி நினைவு நாளில் காலமான பேராசிரியர் தமிழறிஞர் பத்ம ஸ்ரீ சாலமன் பாப்பையா

"அன்புத் தாய்மார்களே, அருமை பெரியோரே, இனிய குழந்தைகளே!" என்ற உரைக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 11, 2026 அன்று 90 வது வயதில் காலமானார். சாலமன் பாப்பையா பிப்ரவரி மாதம் 22, 1936 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் சாத்தான்குடியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இனிய குரலிலும் நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.1961-ஆம் ஆண்டில், புதுக்கோட்டையில். 'பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?' என்ற விவாதத் தலைப்புகளில், 'புதுமைக் கவிஞனே' என்ற தலைப்பில் உரை நிக...