வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேளாண்மை வளர்ச்சி அவசியம்-மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் செளகான் தலைமையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண் வளர்ச்சியின்றி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகாது என்று தெரிவித்தார். நாடு வெறும் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, வேளாண் நிலம் முதல் உலகளாவிய சந்தை வரை வலுவான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு நேரடிப் பயன்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சி சூழல் தேவை என்றும் அவர் கூறினார். வேளாண் மாற்றத்தின் அடுத்தக் கட்டமாக விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதிலும் குறு, சிறு விவசாயிகளின் எதிர்கொள்ளும் சக்தியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், தரமான விதைகள், நடவுப் பொருள்களை உரிய நேரத்தில் பெறுதல், சமச்சீ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் 2026 ஆகஸ்ட் 20, ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராக செயல்படுகிறார். மாநாடு காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடைபெறும், மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19 இன்று புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தார் சென்னைக்கு தெற்கில் சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவர்: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், உறுப்பினர்கள்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாணடிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர். மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள். கலந்து க...