கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹானூர் தாலுகா சாக்யா காப்புக்காடு வனப்பகுதியில் 15 ஆகஸ்ட் 2026 சுதந்திரதினத்தன்று மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஜகன்னாததொட்டி அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலம் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி குமார் (வயது 33) ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் லாசர்தொட்டி கிராமம் மகிமைதாஸ் (வயது 48) துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மைசூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்கள் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், சுயமதப்புக்காகவே சுட்டதாகவும் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது காணாமல் போன மாடுகளைத் தேடி அவர்கள் காட்டிற்குச் சென்றனர் என்றும், வேட்டையாடவில்லை ...
நீதிமன்ற பிடியாணையில் கைதான ரமேஷ் விவகரத்தில் லாட்டரி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலையீடு தவறு மன்னிப்பு கேட்க தேவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ரமேஷ் கைது செய்யப்பட்டது கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றத்தால் நிலுவையிலிருந்த வழக்கு பிடியாணையன Warrant அதை காவல்துறை நிறைவேற்றியதே தற்போதைய கைது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் மகன் ரமேஷ் சேதுராமன். 2012-13 ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களைத் தாக்கியதாகவும், சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கிற்காக மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் வழக்கில் ஆஜராகவில்லை என்பதால் , நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணைப்பில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்தது. சுமார் 14 வருடங்களாக உத்தரவு நிலுவையில் இருந்த நிலையில், காவல்துறை சிறப்புப் படை அமைத்து தற்போது இவரைக் கைது செய்தது. இவரது சகோதரி டாக்டர் பிரதீபா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது தந்தை உருவாக்கிய மருத்துவமனைச் சொத்துக்களை ரமேஷ் அபகரிக்க முயன்றதாகவும், அவரது கைதிற்கு இதுவே உண்மையான பின்னணி என்றும் தெரிவித்துள்ளார் மதுரை மீன...