முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு

குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை வாரியம்  புதிய உறுப்பினர்களுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.3 ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் 25.08.2026 அன்று G.O.(Ms.) No.53 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம், 1982-ன் பிரிவு 9-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளஅரசாணையில், சென்னையில் உள்ள Advisory Board உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பின்வரும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு மறுசீரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலோசனை வாரியத்தின் தலைவர்: நீதியரசர் திரு. V. பாரதிதாசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். உறுப்பினர்கள்: நீதியரசர் திரு. P. கலையரசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். நீதியரசர் திரு. V. பார்த்திபன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.    இதேபோல, மதுரை அறிவுரைக் கழக தலைவராக ஓய்வுபெற்ற...
சமீபத்திய இடுகைகள்

மைசூரில் பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு

பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு மைசூருவில் நடைபெற்றது கர்நாடக மாநிலம் மைசூருவில் பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், வரலாற்று ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், பழங்குடியின சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பழங்குடியினரின் மொழிகள், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலான அருங்காட்சியகங்களை அமைப்பது, வரலாற்று உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்துவது, உள்ளூர் மக்களின் நேரடிப் பங்களிப்புடன் பாரம்பரியக் கதைகளை எடுத்துரைப்பது ஆகியவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அருங்காட்சியகங்களை வெறும் கண்காட்சிக் கூடங்களாக மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களின் தனித்துவமான அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மையங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பார்வையாளர்களை ஈர்க்கும் வ...

தஞ்சாவூர் வல்லம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

தஞ்சாவூர் வல்லம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை! தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சரக துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் காயத்ரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை அளிப்பதற்காக வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அவர் தற்போது வகித்து வந்த வல்லம் சரக துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.  பொதுமக்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகள் தொடர்பாக புகார் காரணமாக  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிஉத்தரவு  அதுகுறித்த அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளின் முடிவிலேயே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில், ரூபாய் 1.18 கோடி பணம் கூகுள் பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில், ரூபாய் 1.18 கோடிக்கும் அதிமான கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான கூகுள் பே (G-Pay) பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இந்த கூட்டுத் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம்: ரூபாய் 28,24,945 (சுமார் ரூபாய் 28.24 லட்சம்).சந்தேகத்திற்கிடமான G-Pay பரிவர்த்தனைகள்: ₹89,89,663 (சுமார் ரூபாய் 89.89 லட்சம்).கண்டறியப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 1,18,14,608 (ரூபாய் 1.18 கோடி) முக்கிய இடங்களான சென்னை (கிண்டி): அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூபாய் 31.52 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்குரிய G-Pay பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.திருச்சிராப்பள்ளி (தென்னூர்): மின்சார வாரிய...

சமூக வலைதளக் குற்றவாளிகள் நடிகை உள்ளிட்ட 12 நபர்கள் மீது வழக்கு

சமூக வலைத்தளங்களில் கட்டணச் சந்தா  மூலம் ஆபாச உள்ளடக்கம் மற்றும் பேச்சுக்களைப் பகிர்ந்ததாக, சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் கோயமுத்தூர் தர்ஷா குப்தா மற்றும் திருச்சிரப்பள்ளி சாதனா உள்ளிட்ட 12 குற்றவாளிகள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்ஸோ  சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய காவல்துறை தீவிரம் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதன் பேரில் காவல்துறை ஆய்வாளர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான தனிக் குழு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கண்காணிப்பில் சைபர் கிரைம் காவல்துறை  இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உள்ளடக்கங்கள், கட்டண அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகாரைப் பெற்ற சேலம் சைபர் கிரைம் காவல்துறை சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணை...

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் Bitcoin மோசடியில் பணமிழந்த மக்களின் பரிதாபங்கள்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் Bitcoin மோசடி 'இரட்டிப்பு லாபம்' என ஆசை வார்த்தையில் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் - கோடிக்கணக்கில் பறிபோனது பணம்  "FQL EXCHANGE", "fqlin.com", "V.G INVESTMENT" ஆப்கள் மூலம் மக்களை ஏமாற்றிய சதுரங்க வேட்டை பாணி மோசடி கும்பல்; ஏஜெண்ட் ஒருவர் கைது - ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பரிதவிப்பு!  மதுரை மாவட்டம் மேலூர் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பகுதிகளில், 'இரட்டிப்பு லாபம்' என்ற ஆசை வார்த்தையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடியில் ஏஜெண்டுகள் மூலம் மக்களை அணுகி, FQL EXCHANGE, fqlin.com, V.G INVESTMENT போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்ய வைத்து, பின்னர் ஆப் முழுவதுமாக முடக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்  மேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏஜெண்டுகள், மக்களை அணுகி ரூபாய் .50,000 பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களின் மொபைலில் FQL EXCH...

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு (SHRC) இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு (SHRC) இரண்டு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக: சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஆர்.என். மஞ்சுளா, மற்றும்  ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஏ. சுகந்தி ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நியமனம் Protection of Human Rights Act, 1993 – Section 22(1)-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இருவரையும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார், அரசாணையின்படி, அவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து: 3 ஆண்டுகள் அல்லது 70 வயது நிறைவடையும் நாள் இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை அவர்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ பணிகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்கிறது. கு...