மாஞ்சோலை மற்றும் மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை! என மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8-வது குற்றவாளியான திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி (வயது 52), உடல்நலக் குறைவால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இச் சம்பவம் குறித்த தகவல்கள் மரணத்திற்கான காரணம் மற்றும் தற்போதைய நிலை உடல்நலக் குறைவு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சாமி, கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தோஷ் சாமியின் மரணம் குறித்து முறையாக விசாரித்து, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை,உதகமண்டலத்தில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது மந்தமான கதியிலேயே நடைபெற்று வருவதாகத் தகவல் .ஏற்கனவே நிகழ்ந்த மரணங்கள்: 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முதன்மைக் குற்றவாளியான முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகரா...