முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்   நதிகளுக்கு இடையேயான நீர்ப் பகிர்விற்காக தேசிய தொலைநோக்குத் திட்டத்தை (NPP) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் கீழ் தீபகற்பப் பகுதியில் 16 நதி இணைப்புத் திட்டங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் 14 நதி இணைப்புத் திட்டங்கள் என மொத்தம் 30 நதிகள் இணைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் (NWDA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமைத் திட்டமான கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் தற்போது செயலாக்க நிலையை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 11.88 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். மேலும், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் போலவரம் திட்ட ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது...
சமீபத்திய இடுகைகள்

பரமத்தி வேலூர் அருகில் நல்லூர் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது. தனிநபர் மீதான குற்ற வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து வைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெங்காதரன், (வயது 47), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகில் நல்லுார் பக்கம் நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த சௌமியாராஜ், வயது 30; விவசாயம் செய்து வருகிறார். அவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அடிதடி வாய்த் தகறாறு ஏற்பட்ட காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்பாக, சில தினங்களுக்கு முன், சௌமியாராஜை அழைத்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கெங்காதரன், வழக்கை சாதகமாக முடித்து வைக்க, 30,000 ரூபாய் லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சௌமியாராஜ், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின் படி, நேற்...

தேமுதிக, பாமகவை உடைத்து அதிமுகவில் இணைத்தது சரி எனில் தவெக செய்வது எப்படித் தவறாகும்

தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மூலம் கேப்டன் என வர்ணிக்கப்பட்டு,  பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியை உடைத்த அதிமுகவின் ஜெ ஜெயலலிதா தற்போது அதே பாணியைக் கையில் எடுத்த  தவெக முதல்வர் சி. ஜோசப் விஜய் 2011 சட்டமன்ற தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டார். இதனால் தேமுதிகவே இரண்டானது. குறிப்பாக கட்சியை விட்டு விலகிய 11 எம்.எல்.ஏ.க்கள் விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்துப் பேசி அவமதித்தனர். தற்போது அதே பாணியைக் கையில் எடுத்துள்ள தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய், அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் டீமை இபிஎஸுக்கு எதிராக பேச தயார் படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் மூலம் கட்சியிலும், மக்களிடமும் எடப்பாடி கே பழனிசாமி மீது அதிருப்தி அதிகரிக்கும் என்றும், அவரைத் தனிமைப்படுத்தவும் தவெக டீம் திட்டமிட்டுள்ளதாகப் தகவல் பரவலாக பேசப்படுதிறது, .தவெக பொதுச் செயலாளரும் உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்சித்துறை அமைச்சருமான புஸ்ஃஸி என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளின் பட...

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவின் தலைவராக மயிலம ஆதினம் நியமனம்

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் ஆக நியமனம். பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு ; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்        கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் மயிலம் பொம்மபுர ஆதீனம்  தலைமைமில் குழு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அமைந்துள்ள ஒரு பழமையான வீரசைவ சமய மரபைச் சார்ந்த ஆதீனம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்ப்பதில் இந்த ஆதீனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சிவபெருமானின் கணங்களில் ஒருவரான சங்குகன்னர் என்பவரின் அவதாரமாக கருதப்படும் பாலசித்தர் என்பவரால் இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயில் இந்த ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது, தற்போது 19-ஆவது பட்டமாக...

அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு . இதன் காரணமாக 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் தொடர்வார். மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆம் தேதியாக இருந்தது தற்போது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 ஆம் தேதி வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.  பீஹார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரியாவார். ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்வர் 2020 நவம்பரில் அமல...

வங்கதேச சட்டவிரோதக் குடியேறிகள் பெங்களூரில் கைது

பெங்களூரில் தங்கிய  வங்கதேச        சட்டவிரோதக் குடியேறிகள் கைது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 'ஆபரேஷன் முக்தா'  என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையில் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.ஒயிட்பீல்டு பகுதியில் 62 பேரும், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 43 பேரும் பிடிபட்டவர்களிடமிருந்து மேற்கு வங்காள மற்றும் அசாம் மாநில முகவரிகளைக் கொண்ட போலியான ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் தாங்களாக சட்டத்தை கையில் எடுக்காமல், உடனடியாக பெங்களூரு காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரித்த்தனர்  பெங்களூரில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 105 ...