"சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூடிக வாகனே இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி இன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் எனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவத்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து........."...
தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டு, சதுர்த்தி தினமான இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. 'துர்கா' என்ற 5 வயது (பெண் யானையைக் குறிக்கும் சொல். பிடி, அதவை, வடவை, கரிணி,அத்தினி,) கொண்டுவரப்பட்டு, இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு கோவில்களுக்கு 5 வளர்ப்பு யானைகளைக் கொண்டு வருவதற்கான அனுமதியை அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் வழங்கினர். மாநிலங்களுக்கு இடையேயான இந்த யானைகள் இடமாற்றத்திற்குத் தேவையான தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த 5 யானைகளான துர்கா 5 வயது பெண் யானை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது. மற்றும் ஹிராலால், சிவா, ரூப்சிங், பிஜூலி, இந்த யானைகள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் சங்கர மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும்...