தமிழ்நாடு தலைமைச் செயலகம் கடந்து வந்த பாதைகள் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், - மாதிரி அமைப்பு - 'புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்' என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்தார். தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 21.76 ஏக்கர் நிலத்தை செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564 அரசாணையை வெளியிட்டு ஒதுகீடு செய்து நடவடிக்கையை அரசு தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் பெரும்பாலான தவெகவின் எதிர் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன. புதிய தலைமைச் செயலகம் தேவை என்ற விவாதம் இப்போது தொடங்கியதல்ல. சென்னையின் பறந்து விரிந்த கடற்கரையில் கல்கத்தா தலைமையிடமான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மையத்தை பொதுஆண்டு 1639-ல் இப்பகுதியை நிர்வகித்து வந்த தாமர்ல வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி பிரான்சிஸ் டே வர்த்தக மையம் அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றார். அவரது ...
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபரை செருப்பாலடிக்கப் பாய்ந்து, அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலர் கலைமண்ணன் மண்டபம் முகாமின் சிறப்பு துணை ஆட்சியர பொறுப்பில் இருந்தவர். மண்டபம் முகாமில் வசித்து வரும் ஜெகநாதன் (வயது 53) என்ற இலங்கைத் தமிழர், தனக்கு ஏற்பட்டுள்ள குடலிறக்கம் நோய்க்கான சிகிச்சைப் பெற சென்னை செல்வதற்காக சார் ஆட்சியரிடம் முகாமில் முறைப்படி அனுமதி விடுப்பு கோரியுள்ளார். ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விடுப்பு குறித்து அவர் மீண்டும் கேட்கச் சென்றபோது, சார் ஆட்சியர் கலைமண்ணன் அவரிடம் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது காலணியைக் கழற்றி அடிக்க முயன்றுள்ளார். இது வைரால் காணொளியில் "பிச்சுப்புடுவேன் பிச்சு... செருப்பைக் கழட்டி அடிச்சிடுவேன் நாயே..." என்று அலுவலர் மிரட்டும் காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய துறை ரீதியான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடை...