முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், சில ஆண்டு நிலையாணைகளில் திருத்தம்

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், மற்றும் 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட நிலை ஆணைகள் மற்றும் 09.01.2026 தேதியிட்ட நிலை ஆணை எண். 7-ஐ ரத்து செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன்மூலம்  உத்தரவிடுகிறார். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், மற்றும் 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட நிலை ஆணைகள் மற்றும் 09.01.2026 தேதியிட்ட நிலை ஆணை எண். 7-ஐ ரத்து செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன்மூலம்  உத்தரவிடுகிறார். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4) என்பது, தமிழக அரசில் அதிகாரப் பகிர்வு (Delegation of Powers) மற்றும் கோப்புகள் கையாளப்படும் நிலைகளை முறைப்படுத்தும் ஒரு முக்கியமான சட்ட விதியாகும்.அண்மையில் (ஆகஸ்ட் 2026-இல்) இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட நிலை ஆணைகளில் தமிழ்நாடு அரசு மிக முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இவ்விதி குறித்த முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:1. விதியின் முக்கிய நோக்கம்முதலமைச்சரின் ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2026- நிகழ்வு அட்டவணை

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5, 2026 ஆம் தேதி துவங்கியது. சபாநாயகர் J.C.D. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இக்கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 8, 2026 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தொடர் விவரம்ஆகஸ்ட் 5:ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல்ஆகஸ்ட் 6: ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை (வேளாண்மை பட்ஜெட்) தாக்கல் ஆகஸ்ட் 7: ஆம் தேதி இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் துவக்கம் ஆகஸ்ட் 8, 9:ஆம் தேதிகளில் அரசு விடுமுறை நாட்கள் ஆகஸ்ட் 10, 11: ஆம் தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடர்ச்சி ஆகஸ்ட் 12: ஆம் தேதி பொது விவாதத்திற்கு பதிலுரை ஆகஸ்ட் 13, 14:  ஆம் தேதிகளில் பேரவைக் கூட்டம் இல்லை ஆகஸ்ட் 15, 16: ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் அரசு விடுமுறை ஆகஸ்ட் 17 முதல் - செப்டம்பர் 8: ஆம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு கூட்டநேரம் மற்றும் பிற விவரங...

இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் செல்லும்

இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் செல்லும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'வங்கியாளர்களின் புத்தக சாட்சியச் சட்டம் மசோதா, 2026' (Bankers' Books Evidence Bill, 2026) மூலம் இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் முறையான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும். 135 ஆண்டுகள் பழமையான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய காலத்து 1891-ஆம் ஆண்டின் சட்டத்திற்கு மாற்றாக, மத்திய நிதியமைச்சர் இந்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களாக டிஜிட்டல் ஆவணங்களுக்கு அங்கீகாரம்: ஆன்லைன் பரிவர்த்தனைகள், கிளவுட் (Cloud) தரவுகள், மொபைல் ஆப்ஸ் மற்றும் மெய்நிகர் (Virtual) வங்கி பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். வங்கி ஆவணங்களை மேலாளர்கள் தங்களின் டிஜிட்டல் அல்லது மின்னணு கையொப்பம் (Digital/Electronic Signature) மூலம் சான்றளித்து வழங்கலாம். ஒவ்வொரு வழக்குக்கும் வங்கி அலுவலர்கள் நேரடியாக நீதிமன்றம் சென்று சாட்சியமளிக்கத் தேவையில்லை. நீதிமன்றம் 'சிறப்பு காரணம்' (Special Cause) இருந்தால் மட்டுமே அவர்களை நேரில் அழைக்க முடியும். சமர்...

பண மோசடி காவல் ஆய்வாளர் முகமது புஹாரி கைதும், மற்றொரு ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக ரூபாய் .40 லட்சம் மிரட்டி பறித்த காவல் ஆய்வாளர் புஹாரி கைதும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றமான இரண்டு ஆய்வாளர்களும் பகுஜன் ஜமாஜ் கட்சியின்  (BSP) தமிழ்நாடு தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலி 'என்கவுண்டர்' செய்த  காவல் ஆய்வாளர் புகாரி, அதே வழக்கில் வேறு ஒருவரை சிக்க வைப்பதாக மிரட்டி, ஒரு வியாபாரியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபாய் .40 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில், 'வேக்கன்சி ரிசர்வ்'  எனும் 'காத்திருப்போர் பட்டியலுக்கு' மாற்றப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த தங்கம் மற்றும்  வெளிமாநிலத்தை சேர்த்து சென்னையில் வசிக்கும் பங்குச் சந்தை வியாபாரி அகில் குமார் உக்கம்ராஜ் (வயது 35) பூக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்தார். 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி, பகுஜன் ஜமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவரும்,  வழக்கறிஞருமான கே.ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27...

சேவை பெறும் உரிமை சட்டம்' - தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிப்பு;

சேவை பெறும் உரிமை சட்டம்' - தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிப்பு; காலக்கெடுவில் சேவை உறுதி! 'இனி அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களில் சேவை கிடைக்காவிட்டால் உரிய அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்; 'வெற்றி தமிழகம்' பார்வை ஆவணத்தின் முதல் படி! தமிழ்நாடு வெற்றிக் கழக அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கையில், மக்களுக்கு மிக முக்கியமான 'சேவை பெறும் உரிமைச் சட்டத்தை' (Right to Service Act) கொண்டு வரப்போவதாக நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் அறிவித்துள்ளார். இதன் மூலம், அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறுவது உறுதி செய்யப்படும். சேவை தாமதமானால் அல்லது மறுக்கப்பட்டால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழி வகை செய்யும். இந்த அறிவிப்பு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னதாக வெளியிட்ட 'வெற்றித் தமிழகம்' பார்வை ஆவணத்தின் (Vetri Thamizhagam Vision) முக்கிய உறுதிமொழிகளில் ஒன்றாகும் பல்வேறு அரசு சேவைகளைப் பெற பொதுமக்கள் உரிய அலுவலர்களிட...

வெள்ளக்கோவில் லஞ்சம் வாங்கி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், வெள்ளகோவில் ஒன்றியப் பள்ளி ஒன்றில் சமையலறை அமைத்தல் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து டேங்க் கட்டுதல் உள்ளிட்ட 4 பணிகளை டெண்டர் எடுத்திருந்தார், இந்தப் பணிகளுக்கான பில் தொகையை விடுவிப்பதற்காக, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய துணை வடடார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ரூபாய் 20,000 லஞ்சமாகத் தருமாறு ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்,  லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமார் அரசு சாட்சிகள் முன்னிலையில் இரசாயனம் தடவிய ரூபாய் 20,000 பணத்தை வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரவிசந்திரன் தலைமையிலான ஊழல் தடுப்புக் க...

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், தேர்தல் அறிக்கை 6 சிலிண்டர்கள், வீட்டுக்கு ரேஷன் பொருள் பேருந்தில் எல்லோருக்கும் இலவசம் இன்னும் பல அறிவிப்புகளை  தவிர்த்துத் தான் நிதிநிலை காரணம் எனச் சொல்கின்றார்கள் எனபதால் பின்னர் எதிர்பார்க்க வேண்டும் அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது எவ்வளவு செலவிடுகிறது என்பததை எல்லாம் அறிந்து கொள்ளும் நேரமிது அது போக கடந்த திராவிடக் கட்சி ஆட்சி  ஊழல் பட்ஜெட்டிலிருந்து இது எப்படி வேறுபடுகின்றது என்பதைக் காட்டும் நிகழ்விது அது போக காங்கிரஸ்,, கம்யூனிஸ்டுகள், விசிக கூட்டு மந்திரி சபை என்பதால் வழக்கமாக எந்த பட்ஜெட் என்றாலும் காரசாரமில்லை எனச் சொல்லும் சில கும்பல்களின் கூடாட்சியில் அவியல் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் வரும் முதல் நிதிநிலை அறிக்கை. இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அதிமுக, திமுக அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்...