மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி அதை குடியரசுத் தலைவர் மாளிகை ஏற்றுக்கொண்டது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த நீட் உள்ளிட்ட தேர்வு கசிவு ஊழல்களுக்கு பொறுப்பேற்று அவர் விலகியிருப்பது, பாஜக அரசின் கல்வித் துறை நிர்வாகத்தின் முழுமையான தோல்வியை வெளிச்சமிட்டுக் காட்டும் நிகழ்வு பாஜக அரசுக்கு ஒரு பின்னடைவு அதில் சந்தேகமில்லை. பல நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள், கரப்பான் பூச்சி ஜனதா போன்ற சில இயக்கங்களின் உறுதி நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் பாஜக எதிர் நிலை ஆதரவு ஆகியவை இறுதியில் அரசை பின் வைத்துள்ளன. “தேசவிரோத சக்திகள்” என முத்திரை குத்தும் அரசின் முயற்சிகள் தோற்றுப்போனதோடு, மாணவர்களின் உண்மையான கோபத்தை அடக்க முடியவில்லை. தர்மேந்திரப் பிரதான் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தேர்வு அமைப்புகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான குளறுபடிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைப் பாதித்ததற்கு பொறுப்பேற்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்த அரசின் அணுகுமுற...
கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும். கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22...