திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில் சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில...
சமீப காலத்தில் மக்களின் கலாச்சார பன்பாடடுக்கு கேடான பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவாய் ஈட்டும் நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடையே பேசும்போது, "நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும் போது அதிகாரம் வரும், அதுதான் போதை" என்றார் அதற்கு முன் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகம் அல்லது கஃபே (Café) திறப்பு விழாவின் போது விஜய் சேதுபதி, போதைப்பொருள் குற்ற வழக்கு தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும், இயக்குனர் அமீர் மூவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட பழைய காணொளிக்காட்சி மற்றும் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்படுகின்றன. திரைப்படத் தொடர்பு: இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான 'இறைவன் மிகப்பெரியன்' திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தின் மற்றும் உணவகக் கூட்டாண்மை வணிகத்தின் அடிப்படையில் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானதை அடுத்து, அவருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் சமூக வல...