முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது NHAI நடவடிக்கை

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை கான்பூர் - லக்னோ விரைவுச்சாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக, ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திட்டத்தைச் செயல்படுத்திய 'பிஎன்சி இன்ஃப்ராடெக்' நிறுவனத்தை எதிர்கால ஏலங்களில் பங்கேற்கத் தடை விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ரூ.3 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட மேற்பார்வையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 முதன்மைப் பொறியாளர்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய திட்ட இயக்குநர் முன்பணி புரிந்த  துறைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் மற்றும் தற்போதைய திட்ட இயக்குநர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஐஐடி கரக்பூர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டி தலைமையிலான குழு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகள் முடியும் வரை ச...
சமீபத்திய இடுகைகள்

மத்திய அமைச்சரவைச் செயலாளரான டி.வி. சோமநாதன் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு

மத்திய அமைச்சரவைச் செயலாளரான  டி.வி.  சோமநாதன் IAS பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அமைச்சரவைச் செயலாளராக டி.வி. சோமநாதன் பணியாற்றுகிறார்.  இதேபோல சிக்கிம்  ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் மத்திய உள்துறைச் செயலாளராக பணியாற்றுகிறார். இவ்விரு அதிகாரிகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிற நிலையில், டி.வி.சோமநாதன், கோவிந்த் மோகன் இருவரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தப் பதவி நீட்டிப்பு ஓராண்டு காலத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக உயரிய நிர்வாகப் பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளர் எனும் Cabinet Secretary யாகப் பணியாற்றும்  புகழ்பெற்ற IAS ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடியவிருந்த இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு 30 ஆகஸ்ட் 2027 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்தியாவின் 33வது அமை...

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், சில ஆண்டு நிலையாணைகளில் திருத்தம்

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், மற்றும் 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட நிலை ஆணைகள் மற்றும் 09.01.2026 தேதியிட்ட நிலை ஆணை எண். 7-ஐ ரத்து செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன்மூலம்  உத்தரவிடுகிறார். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், மற்றும் 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட நிலை ஆணைகள் மற்றும் 09.01.2026 தேதியிட்ட நிலை ஆணை எண். 7-ஐ ரத்து செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன்மூலம்  உத்தரவிடுகிறார். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4) என்பது, தமிழக அரசில் அதிகாரப் பகிர்வு (Delegation of Powers) மற்றும் கோப்புகள் கையாளப்படும் நிலைகளை முறைப்படுத்தும் ஒரு முக்கியமான சட்ட விதியாகும்.அண்மையில் (ஆகஸ்ட் 2026-இல்) இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட நிலை ஆணைகளில் தமிழ்நாடு அரசு மிக முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இவ்விதி குறித்த முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:1. விதியின் முக்கிய நோக்கம்முதலமைச்சரின் ...

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2026- நிகழ்வு அட்டவணை

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5, 2026 ஆம் தேதி துவங்கியது. சபாநாயகர் J.C.D. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இக்கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 8, 2026 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தொடர் விவரம்ஆகஸ்ட் 5:ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல்ஆகஸ்ட் 6: ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை (வேளாண்மை பட்ஜெட்) தாக்கல் ஆகஸ்ட் 7: ஆம் தேதி இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் துவக்கம் ஆகஸ்ட் 8, 9:ஆம் தேதிகளில் அரசு விடுமுறை நாட்கள் ஆகஸ்ட் 10, 11: ஆம் தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடர்ச்சி ஆகஸ்ட் 12: ஆம் தேதி பொது விவாதத்திற்கு பதிலுரை ஆகஸ்ட் 13, 14:  ஆம் தேதிகளில் பேரவைக் கூட்டம் இல்லை ஆகஸ்ட் 15, 16: ஆம் தேதி சுதந்திர தினம் மற்றும் அரசு விடுமுறை ஆகஸ்ட் 17 முதல் - செப்டம்பர் 8: ஆம் தேதி வரை துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு கூட்டநேரம் மற்றும் பிற விவரங...

இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் செல்லும்

இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் செல்லும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'வங்கியாளர்களின் புத்தக சாட்சியச் சட்டம் மசோதா, 2026' (Bankers' Books Evidence Bill, 2026) மூலம் இனி டிஜிட்டல் வங்கி ஆவணங்கள் நீதிமன்றத்தில் முறையான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும். 135 ஆண்டுகள் பழமையான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய காலத்து 1891-ஆம் ஆண்டின் சட்டத்திற்கு மாற்றாக, மத்திய நிதியமைச்சர் இந்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களாக டிஜிட்டல் ஆவணங்களுக்கு அங்கீகாரம்: ஆன்லைன் பரிவர்த்தனைகள், கிளவுட் (Cloud) தரவுகள், மொபைல் ஆப்ஸ் மற்றும் மெய்நிகர் (Virtual) வங்கி பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். வங்கி ஆவணங்களை மேலாளர்கள் தங்களின் டிஜிட்டல் அல்லது மின்னணு கையொப்பம் (Digital/Electronic Signature) மூலம் சான்றளித்து வழங்கலாம். ஒவ்வொரு வழக்குக்கும் வங்கி அலுவலர்கள் நேரடியாக நீதிமன்றம் சென்று சாட்சியமளிக்கத் தேவையில்லை. நீதிமன்றம் 'சிறப்பு காரணம்' (Special Cause) இருந்தால் மட்டுமே அவர்களை நேரில் அழைக்க முடியும். சமர்...