முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பொதுச் சொத்து சேதமான வழக்கு விவசாய சங்கத் தலைவர் பிஆர். பாண்டியனுககு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் 2015 ஆம் ஆண்டில் ONGC நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சார்பு அரசியல் சார்ந்த ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.குறிப்பிட்டுக் கூறினால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து  போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிற நிலையில்  2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கண...
சமீபத்திய இடுகைகள்

அணைத்து விமான நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய சிவில் ஏவியேஷன் நடவடிக்கை

 விமானங்களின் பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து  அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள்,...

குடியரசுத் துணைத் தலைவர் சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை

குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில்  பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய  பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.  1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று  சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். "அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு மனிதருக்கு...

தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் சிறப்பு அடிப்படை பாடத்திட்ட நிறைவு விழா

தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு அடிப்படை பாடத்திட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய இணையமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி பங்கேற்பு மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும், 5 நட்சத்திர தரமதிப்பீடு பெற்ற மத்திய பயிற்சி நிறுவனமான தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப் பிரிவு பயிற்சி நிறுவனத்தின் சார்பில்  இன்று (டிசம்பர் 6, 2025), நடைபெற்ற இந்த ஆண்டுக்கான (2025) சிறப்பு அடிப்படை பாடத்திட்ட நிறைவு விழாவில், மத்திய இணையமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு அடிப்படைப் பாடத்திட்ட வகுப்புகள், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமியுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை நடத்தப்பட்டது. இதில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 அகில இந்திய, மத்திய குடிமைப் பணி பிரிவுகளைச் சேர்ந்த 176 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் அரசு ஊழியர்களை இந்தியாவின் நிர்வாக, சமூக-பொருளாதார, அரசியல் சூழலுக்கு ஏற்ப வழிநடத்தவும், ச...

இரஷ்ய அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியக் குடியரசுத் தலைவர் ரஷ்ய கூட்டமைப்பின் அதிபருக்கு நடந்த விருந்தோம்பலில் பேசியதாவது, ரஷ்ய அதிபர் புட்டீன் இந்திய - ரஷ்ய உச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடித்து சில அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்,நிலக்கரி,அணுசக்தி என எரிபொருள் அனைத்தும் தருவதாக உறுதியளித்துள்ளது,மேலும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பும் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார், எங்கள் நட்பு பல ஆண்டுகளாக உறுதியானது, மேலும் பல ஆண்டுகளுக்கு செழிப்பாக இருக்கும்: என இந்திய ஜனாதிபதி, ஸ்ரீமதி திரௌபதி முர்மு, டிசம்பர் 05, 2025 அன்று இராஷ்டிரபதி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் திரு விளாடிமிர் புடினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விருந்து ஒன்றையும் நடத்தினார். ஜனாதிபதி புடின் மற்றும் அவரது தூதுக்குழுவை ராஷ்டிரபதி பவனுக்கு வரவேற்ற ஜனாதிபதி, தனது வருகை ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது: இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மையின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது அக்டோபர் 2000 ல் தனது முதல் இந்தியா பயணத்தின் போது நிறுவப்பட்டது. இந்தியா-ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மைக்கு ஜனாதிபதி புடி...

உயர் நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு வழக்கில் சிக்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள்

 உச்ச நீதிமன்றம் மறுப்பு:   திருப்பரங்குன்றம் மலை பாரம்பரிய பழமையான இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது ஆவணங்கள் சரியாகக் கொடுத்திருந்தால் வரிசை அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் விளக்கம்.  உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் இராம.ரவிக்குமார் சார்பில் கேவியட் மனுவும் தாக்கல்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது! நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு  வழக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 144 தடை உத்தரவை ரத்து செய்தார் , தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு.மாநகர காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு. மனுதாரர் இராம.ரவிக்குமார் உடன் 10 பேர் சேர்ந்து சென்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை விளக்கேற்ற அனுமதித்த உத்தரவை பின்பற்றாவிட்டால் விளைவுகள் ஏற...