முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ரூபாய் .15 கோடி மதிப்பு போதைப்பொருளைக் கடத்த முயன்ற நான்கு குருவிகள் கைது விசாரணை தீவிரம்

சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (வயது 35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபுசகுபர் சாதிக் (வயது 26), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 28), முகமதுரபீக் (எ) பாபு (வயது 30) ஆகிய நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது  அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ அளவுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. அதனுடன் 3 செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். காவல்துறை தகவல் படி இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதைப் பங்கிட்டுக் கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், காவல்துறைக்கு தகவல் வரவே பிடத்துள்ளனர் அந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளி...
சமீபத்திய இடுகைகள்

இரு பேருந்துகள் மோதிய சாலை விபத்தில் ஆறு பேர் மரணம் 41 பேர் படுகாயம்

மதுரை- திருச்சிராப்பள்ளி நான்கு வழிச்சாலை வஞ்சிநகரத்தில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி  KMR Tranz  தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில்  செல்லும் சாலையில் நுழைந்த போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்றுச் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் மீது, வேகமாக மோதிய விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை சுற்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் மோதியது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கொட்டாம்பட்டி காவல்நிலையத் தகவல்....

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு,

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட த...

தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை ராஜினாமா செய்தனர்

திமுக ஆட்சியில் தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவரான ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை தற்போது தான் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் காலியாகின. திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக அப்போதய முதல்வர் மு. க.ஸ்டாலின் செயல்பட்டார். அவருக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதாரம் அறிந்தவர் என  பலரும் கூறும் ஜெ. ஜெயரஞ்சன், ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருந்தனர் .அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த  பின் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் ...

வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளிடமிருந்து பொது மன்னிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை இபிஎஃப்ஓ வரவேற்கிறது

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்  வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளிடமிருந்து பொது மன்னிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை இபிஎஃப்ஓ வரவேற்கிறது மத்திய அரசின் 2026-ம் ஆண்டிற்கான பொது மன்னிப்புத் திட்டம் (Amnesty Scheme), வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிலையை முறைப்படுத்திக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை வழங்குகிறது. வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையை  நிர்வகித்து வரும் அதே வேளையில், மத்திய அல்லது மாநில அரசு போன்ற உரிய அரசிடமிருந்து முறையான விலக்கு அறிவிப்பைப் பெறாத நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 6 மாத காலத்திற்கு இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும். இத்திட்டம் 2026 ஜூன் 29-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ் உள்ள நிபந்தனைகள் மீதான விலக்கு: குறைந்தபட்ச ஊழியர் எண்ணிக்கை மற்றும் நிதியத்தின் அளவு தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு...

இந்திய அணுசக்தி துறையின் சாந்தி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

இந்திய அணுசக்தி துறையின் சாந்தி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிதி ஆயோக் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான நீடித்த அணுசக்திப் பயன்பாடு, மேம்பாடுச் (சாந்தி) சட்டத்தை  செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நிதி ஆயோக், 2026 ஜூலை 10 அன்று புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் 'சம்ரஸ்தா' அரங்கில் நடத்தியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் செயல்பாட்டு கட்டமைப்பு குறித்து விவாதிக்க, அரசு, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திரு. பங்கஜ் அகர்வால் (செயலாளர், எம்ஓபி), திரு. கன்ஷ்யாம் பிரசாத் (தலைவர், சிஇஏ), திரு. குர்தீப் சிங் (சிஎம்டி, என்டிபிசி), டாக்டர் அன்ஷு பரத்வாஜ் (திட்ட இயக்குநர், நிதி ஆயோக்), திரு. ராஜ்நாத் ராம் (ஆலோசகர், நிதி ஆயோக்), டாக்டர் கரிமா சர்மா (தலைவர், எஸ்எஸ்எஸ்டி, டிஏஇ),  திரு. ஹரி குமார் (சிறப்பு விஞ்ஞானி, இயக்குநர் ஏஇஆர்பி) உள்ளிட பல்வேறு ம...

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம் இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது. தூண் I: அரசியல், ராஜ்ய ரீதியிலான ஈடுபாடு. பிரதமர்கள், அமைச்சரவை, அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான அடிப்படையில் சந்திப்புகளையும் பரஸ்பரப் பயணங்களையும் திட்டமிட முயற்சித்தல். வழக்கமான வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல் மூலம் பயனுள்ள உயர் மட்ட ஒத்துழைப்பை உறுதி செய்தல். பொதுவான நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த, தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையேயான சந்திப்புகளையும...