முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மேகேதாது விவகாரம் சட்டமன்றப் பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது

மேகேதாதுவில் தடுப்பணைக் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஐ (எம்) பாஜக,  மமக, கொமதேக,  தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் மேகதாது தடுப்பு அணை விவகாரத்தில் ஒருமித்த நிலையில் பேசியிருப்பது சிறப்பு !  தற்போது சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புகளாகக் காட்டப்பட்டு பெருவாரியான மக்களால் பார்க்கப்படுவதால், உணர்ச்சிகரமாகவே பேசுகிறார்கள்! எப்படியானாலும் நல்ல கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவது நல்லது, காவிரி, முல்லைப் பேரியாறு , பாலாற்றுப் பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களுடனான நமது நீண்ட நெடிய முடிவில்லாத போராட்டங்கள், தீர்வை எட்ட முடியாத முட்டுக்கட்டை நிலை ஆகியவற்றுக்கு இரண்டு அம்சங்களே காரணமாகும், மாநிலக் கட்சிகள் தங்களை அந்த மண்ணின் மக்களுக்கான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே ஆறுகள் சார்ந்த நீர் பிரச்சினையை அணுகுவது. தேசியக் கண்ணோட்டத்துடன்  ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு ஓய்வூதிய TAPS விதிகள் முறையாக அறிவிக்கும் வரை தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிவாரணம் வழங்க அரசாணை

தமிழ்நாடு ஓய்வூதிய TAPS விதிகள் முறையாக அறிவிக்கப்படும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிவாரண அரசாணை  (தமிழாக்கம்) - G.O.(Ms) No.111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026 சுருக்கம்: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – 01.01.2026 முதல் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைக்கால காலத்திற்கு வாழ்வாதார ஆதரவு – இடைக்கால தொகை வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (நிலை) எண்.111 நாள்: 16.06.2026  திருவள்ளுவர் ஆண்டு: 2057. பார்வை: அரசாணை (நிலை) எண்.7, நிதி (PGC) துறை, நாள்: 09.01.2026. ஆணை: 1.மேற்கண்ட அரசாணையில், தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. TAPS-க்கான விரிவான விதிகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறை தனியாக அறிவிக்கப்படும் எனவும், TAPS 01.01.2026 முதல் அமலுக்கு வரும் எனவ...

மணல் கொள்ளையில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) உயர் அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை ஏற்கனவே நடத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கில் காட்டப்படாமல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்  செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.சோதனைக்கு உள்ளான  நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய மணல்  ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த அத...

தோழர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்

1971ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் தோழர் சி.மகேந்திரன், பல பொறுப்புகளை வகித்தார்.  அரசியல்வாதியாக மட்டுமேயல்லாமல், கட்டுரையாளர், பேச்சாளர் போராளி என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முன்னிருந்த முத்தரசனை எதிர்த்துப்  போட்டியிட்ட தோழர் சி.மகேந்திரன், தேர்ந்தெடுக்கபடாத நிலையில், கட்சியின் தீவிர செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.  எந்த அரசுப்பணிக்கும் செல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்! 3 ஆண்டுகளாக அவர் கட்சியில் செயல்பட வில்லை தற்போது த.வெ.கவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சி.மகேந்திரன் பேட்டி  சி.மகேந்திரனை கம்யூனிஸ்ட் என அழைப்பதை விட தமிழ்த் தேசியவாதி எனலாம் கட்சிக்குள் பலருக்கு உதவியாக இருந்தவரால் தா. பாண்டியன் மறைவுக்கு பின் அக் கட்சியில் அவரால் மேலே வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் கூறலாம். பல தமிழ்த்தேசியவாதிகளைப் தோழர் சி.மகேந்திரன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) நிறுவனத்துடன் நீண்ட காலத் தொடர்பு கொண்டிருந்தார், இ...

உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்த FSSAI உத்தரவு

உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கையாளுதலின் போது துருப்பிடிக்காத பிளேடுகள்,கத்திகள் உள்ளிட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI அறிவுறுத்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேம்பாடு என்பது உணவு உற்பத்தியில் தூய்மையைக் கடைப்பிடிப்பது, ஆபத்துகளைக் குறைப்பது மற்றும் நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்வதாகும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை பரிந்துரைத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்களில் முக்கிய முறைகள் மற்றும் தரநிலைகள் நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP/GHP): உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதலின் போது தூய்மையான உபகரணங்களைப் பயன்படுத்துதல், கையுறைகளை அணிதல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரித்தல், (ஆபத்து பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள்): உணவு தயாரிப்பில் நிகழக்கூடிய இயற்பியல், வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை ஆரம்பத்திலேயே தடுக்கும் முறை.முறையான பொட்டலமிடுதல், உணவின் காலாவதி தேதி, மூலப்...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஆளுநர் உரையுடன் துவங்கியது,

தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது  சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் வெளியிட்ட x தளப் பதிவின் தமிழாக்கம் :-“தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய சகாப்தம் உதயமாகிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்த இடையூறும் இன்றி இன்று சட்டசபையில் வாசிக்கப்பட்டது மனதுக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது.  மேலும், மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடிய வரலாற்று நிகழ்வு ஜனநாயகத்தின் மாண்பிற்குச் சான்றாக விளங்குகிறது - இது மிகையாகாது. ஜனநாயகத்தில், ஆளும் ஒரு அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைக்கப்பட்ட, இணக்கமான உறவை ஏற்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றி, நிலையான, முன்மாதிரியான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அந்...

நடிகை கௌதமி சொத்து மோசடி நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் நடிகை கௌதமி தடிமல்வா அதிமுகவில் இருந்து விலகினார் 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். 13 ஆண்டு காலம் கமலஹாசன் உடனிருந்த பின் பிரிந்து பாஜகவில் இருந்த காலத்தில் இவர் தான் சென்சார் வாரிய பதவி பெற்றார், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பொது அதிகார முகவராக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார். அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நடிகை கௌதமி பெயரிலும் அவரது மனைவி நாச்சம்மை பெயரிலும் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரில், கோட்டையூர் அழகப்பன், நாச்சம்மை, மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு ...