முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி.              குற்றவாளிகள் காவல் துறை ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை பணியாளருக்குமே தூக்கு தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு. செல்போன் விற்பனைக் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஆறாண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி கொரோனா பரவல் காலத்தில் காவல்துறை பணியில் இருந்த காவலர் சிலரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு  21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்படவர்கள். ஜூன் மாதம் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம்  பெரிய அளவில் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. வழக்கை சூமோட்டோவாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , அறிக்கை தாக்கல் செய்யம்படி மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப்...
சமீபத்திய இடுகைகள்

வேலூர் பிரமுகரை மேலூருக்கு வேட்பாளராக்கிய காங்கிரஸ்

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி  தென்பாண்டி நாட்டின் கீழ்திசை தன்னாட்சிக் கள்ளர் நாடுகளான வெள்ளளூர், மற்றும் மேலவளவு மற்றும் முத்தரையர் என அழைக்கப்படும் வலையர் சமூக மக்கள் நிறைந்த கொடடாம்பட்டி யூனியனில் அதிகம் வசிக்கும் சட்டசபை தொகுதியாகும் இங்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூரைச் சேர்ந்த முன்னாள் காஞ்சிபுரம் நடாளுமன்ற உறப்பினரான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும்  தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளராகவும் உள்ளார். தேர்தலில் போட்டியிட தனக்கு பொதுத் தொகுதி வேண்டுமென விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்தார் அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “மேலூர் தொகுதி என்பது எனக்கு புதிதல்ல, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து  முன்னாள் எம்.எல்.ஏ.  ராஜமாணிக்கத்துடன் இணைந்து தொகுதியின் அனைத்து...

பின் வாங்கிய திருமா காட்டுமன்னார்கோவிலில் ஜோதிமணி போட்டியிடுவதாக அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிகவின் தலைவர் திருமா மறுபரிசீலனை செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மாநில அரசியலுக்கு திருமா வருவதை திமுக விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஒரு வேளை வெற்றி பெற்றால் திருமாவுக்கு அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி கொடுக்க நேரிடுமாம்.  வி சி கட்சித் தலைவர் திருமா போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான க. இளையபெருமாள் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிகட்சி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமா போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிப...

கோட்ஷேக்கள் கட்சியாக காந்தி கடசி விலகிய பிரமுகர் விளாசல்

அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி, மற்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர், இப்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும், கொள்கை முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார்  அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் : "பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா? சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அ...