முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய்.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் குறித்து விசாரணை

கேரளா மாநில எல்லையில் வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய்.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் குறித்து காவல்துறை விசாரணை, வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் கைவசமின்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் சந்தை மதிப்பு ரூபாய். 10 கோடி .கோயம்பத்தூர் மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் ஜனவரி மாதம். 28  ஆம் தேதி காவல்துறையினர் வாகனங்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலக்காட்டிலிருந்து கோயமுத்தூர்  நோக்கி வந்த பேரூந்தை நிறுத்தி சோதனை செய்த போது, நிபின் (வயது 29) என்பவர், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த 6 கிலோ.140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். ரூ.9 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை எடுத்து வந்ததால் வருமான வரித்துறை உயர் அலுவலர்கள் வாலிபர் நிபினிடம் விசாரித்து வருகிறார்கள். முறையாக கணக்கு காட்டினால் மட்டுமே வருமான வரித்துறை அலுவலர்கள் தங்கத்தை கேரள வியாபாரியிடம் ஒப்படைப்பார்கள். விசாரணை நடந்து வருகிறது.தங்கக்கட்டிகள் கடத்தி வந்த அந்த நபர், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட...
சமீபத்திய இடுகைகள்

சிங்க மராட்டியர் பவர் செக்டரான அஜீத் பவார், ஓடாமல் நின்று போனது அந்தக் கடிகாரம்

சிங்க மராட்டியர் பவர் செக்டரான அஜீத் பவார், ஓடாமல் நின்று போனது அந்தக் கடிகாரம். மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார். அந்தச் சிறு விமானம், பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகித் தீப்பிடித்தது. அஜித் பவார், அவரது பாதுகாப்பு அலுவலர், (PSO) உதவியாளர் மற்றும் இரு விமானிகளென ஐவரும் உயிரிழந்தனர். அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 'சூப்பர்-லைட்' (Super-light) ரக  ஜெட் சொகுசு விமானம். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை சுமார் ரூபாய்.100 கோடி முதல் 130 கோடி வரை! ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரக விமான உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் பெரிய ரக விமானங்களை மட்டுமே தற்போது தயாரிக்கிறது. ஆனால் விபத்துக்குள்ளாகி இருக்கும் லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானம் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. Federal Aviation Administration தரச் சான்றிதழும் பெறப்பட்டது. Honeywell Primus 1000 எனும் நவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம்...

திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது

புதுக்கோட்டை மாநகர் திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கேவில் கும்பாபிஷேக விழா சிறப்பு திரளான பக்த கோடிகள் பங்கேற்பு  2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி யாகசாலை பூஜையுடன்  துவங்கியது  தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிச்சைக் குருக்கள் தலைமையில்  யாகசாலையில் கணபதி பூஜை வாஸ்து பூஜை அனுக்ஞை கோ பூஜை லட்சுமி பூஜை நடத்தி புனித நீர் வைக்கப்பட்ட குடங்களுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க அக்னி குண்டத்தில் மங்களப் பொருட்களை யிட்டு பூஜை செய்து வந்தனர் காலை முதல் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களுக்கு பூஜை நடத்தப்பட்டு சிவாச்சாரிகள் புனித நீர் வைக்கப்பட்ட கலசங்களை யாகசாலையில் இருந்து ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்  காலை சுப வேளையில் 9.30 மணிக்கு மூலகோபுரம் மற்றும் ராஜ கோபுரத்தில் புதப்பித்து வைக்கப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கற்பூர தீபம் காட்டினர். அப்பொழுது கோவிலைச் சுற்றி இருந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு மெய் சிலித்து மகமாயிக்கு அரோகரா, முத்துமாரி அம்மனுக்கு அரோகரா,ஓம் சக்தி, மகா சக்தி என்று கோஷமிட்டு வழிபட்டனர் தொ...

வலுவான, வளமான இந்தியாவிற்கு' அடித்தளம் மோடி அரசு என மத்திய அமைச்சர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சிகள் 'வலுவான, வளமான இந்தியாவிற்கு' அடித்தளம் அமைத்து வருகின்றன மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று 77 - வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமரின் முறைசாரா தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆற்றிய சேவைகள், இந்த முன்னோடி சமூகப் பாதுகாப்புத் திட்டத்துடனான அவர்களின் தொடர்பு ஆகியவற்றைப் பாராட்டி, நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். மத்திய அரசின் சார்பில் பயனாளிகளை வரவேற்ற அமைச்சர், மக்கள் மையப்படுத்திய நிர்வாகம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் உறுதியான நடவடிக்கைகளைப்  பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், அம...

தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யும் சக்தியாக விஜயின் தவெக

தேஜகூ எதிராக தவெக மாற்றாக மட்டுமே திமுக நாம் தமிழர் இதுவே இப்போதைய அரசியல் களம் மாமல்லபுரத்தில்  நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனா பேசும்போது: தேர்தல் ஆணையத்தில், விஜய் ரசிகர் இருந்து கையெழுத்துப் போட்டதால், நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தி.மு.க., அமைச்சர்கள், மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், த.வெ.க.வின் 'ஸ்லீப்பர் செல்கள்' இருக்கின்றனர். வி சி கட்சித் தலைவர் திருமாவளவன், என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கட்சி மொத்தமாக த.வெ.க.,வுக்கு எப்போதோ மாறி விட்டது. தற்போது, அவருடன் 20 பேர் மட்டும் தான் அங்கு இருக்கின்றனர். திருமாவளவனை அடியாள் போலத்தான் தி.மு.க., பயன்படுத்துகிறது. கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பின், திராவிடம் என்பதற்கு முன், 'திருட்டு' என்பதை இணைத்து, 'திருட்டு தி.மு.க.,'வாகி விட்டனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து விட்டனர்; அதை முறியடிக்கப் போவதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் கூறுகிறார். த.வெ.க., தலைவர் விஜயின் பெயரைச் சொல்வதற்கே, மு.க. ஸ்டாலின் பயப்படுகிறார். வி.சி.கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிய...