பொன்னமராவதி ஸ்ரீ ஆவுடையநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம் 04.06.2026 ஆம் தேதி வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று யாக சாலை வேள்வி துவக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைத்து எழுப்பி மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, 6 கால யாக வேள்வி பூஜைகளுடன் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாத்துப் புனரமைப்பதில் தங்களின் விலைமதிப்பற்ற ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும், தொல்லியல் பன்பாட்டுக் கலாச்சார அமைச்சகம், இந்திய அரசின் கலாச்சாரச்த்துறையின் செயலாளர் ஸ்ரீ விவேக் அகர்வால் ஜி மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் முயற்சிகள் இந்த பொக்கிஷமான பாரம்பரிய ஸ்தளத்தையும் அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் இந்த புன்னியமான நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ இராஜேந்திர சோழீஸ்வரரின் திருவருளைப் பெறவும். கலாச்...
தமிழ்நாட்டின் அமைச்சரவை மூப்புப் பட்டியலில் நிதித்துறை அமைச்சர் இருபத்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். கட்சியில் உள்ள சீனியாரிட்டி என்பது வேறு. அமைச்சக நிர்வாகத்தில் அது வேறு என்பதை எப்படிக் கவனிக்காமல் விட்டனர், மாநிலத்தில் முதன்மை அமைச்சர் எப்போதுமே முதலிடம் வகிப்பார். அவர் பொறுப்பில் தான் இஆப, இகாப உள்ளிட்ட குடிமைப்பணி நிர்வாகம் மற்றும் காவல் கட்டுப்பாடு இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் கு.காமராசர் ஆட்சியில் மட்டும் தான் காவல் துறை அமைச்சர் பொறுப்பு பூ.கக்கன் வசம் கொடுக்கப்பட்டிருந்தது, முதலமைச்சர் பொறுப்புக்கு அடுத்து நிதித்துறை அமைச்சர் இடம்பெறுவார். நாட்டின் நிதியை பெருக்குதல், நிதிப்பற்றாக்குறையை சீர் செய்தல், நிதி தொடர்பான இன்னபிற முக்கிய திட்டமிடல்களை நிதியமைச்சர் கைக் கொள்வார். வருவாய்த்துறைக்கான வழிகாட்டியாக இவரது துறை இருக்கும். மூன்றாவது வருவாய்த்துறை. இந்தத் துறையின் அமைச்சர், நிதியமைச்சரின் ஆலோசனை பெற்று வருவாய்க்கு உண்டான வழிவகையை செய்வார். மிக முக்கியமான துறையாக இது கவனம் பெறுகிறது. நான்காவது உயர்கல்வி அல்லது சட்டம் மற்றும் சிறைத்துறை அல்லது மின்சா...