முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

குற்றவாளிகளுக்கு குடைபிடித்து சொத்துக் குவித்த ஊழல் காக்கி பெண் ஆய்வாளர் ராஜலக்ஷ்மி

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் இராஜலட்சுமி தனது அரசு பணியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் அசையாச் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். இது போன்ற சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் அரசு பணிசெய்யும் அலுவலர்கள் மீது. அரசு மற்றும் நீதித்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு விஜிலென்ஸ் அறிக்கை அனுப்பப்பட்டு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தலைமையகத்தின் அனுமதி பெற்ற பிறகு இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எழும்பூர், சென்னை  என்ற முகவரியில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் 2(சி) ன் கீழ் இவர் அரசுப் பணியாளராவார். குற்றம் சாட்டப்பட்ட கே.ர...
சமீபத்திய இடுகைகள்

காப்புரிமைச் சட்டத்தை மீறிய இசைஞானி இளையராஜா தடை விதித்த நீதிமன்றம்

திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் தான் அதன் உரிமையாளர் தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், அதன் உரிமை வாங்கிய நிலையில் '2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா சட்ட விரோதமாக வழங்கியுள்ளார்' என்கிறது.'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி திரைபடத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்த நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இசைஞானி இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் க...

உறவும் அரசியலும் கலந்து ஒன்றான திமுக தேமுதிக கூட்டணி

தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், தனித்து களம் கண்டு பின் அ.தி.மு.கவுடன் முதல் கூட்டணி அமைத்தார். பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க  தி.மு.க-வுடன் நடிகர் விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை சேரவில்லை. இந்தச் சூழலில் வரும் தேர்தலில் பத்துக்கும்  மேல் தொகுதிகளை என் டி ஏ கூட்டணியில் கேட்ட பிரேமலதா பாமக கேட்ட தொகுதியைக் கேடடார் ஆகவே கூட்டணி அமையவில்லை  ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை என்டிஏ அணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்த நிலையில், நேற்று காலை திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்  தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன் வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்ற இராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் எனக் கூறியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என முடிவெடுத்து. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச்...

பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும்

பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும் இந்திய ரயில்வே துறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது  குறிப்பிட்டுள்ள ரயில்வே நிறுத்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிவில் ஏறத் தவறினால் அவரது இருக்கை உடனடியாக காவியாக இருப்பதாக அறி விக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகயும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே உத்தரவு வந்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பயணி தனது பபயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்தப்  பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒருக்கப்படும். முந்தைய விதிமு றைகளின்படி, ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிளையங்கள் அல்லது ஒரு மணிநேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியதிருந்தது ஆனால், தற்போது அனைத்து இரயில்களி லும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் எனப்படும் கையடக்கக் கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பய...

பூட்டான் பிரதமர், செர்பிய குடியரசின் அதிபருடன் பாரதப் பிரதமர் சந்திப்பு

பூட்டான் பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 இல் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தந்த பூட்டான் பிரதமர் மேதகு திரு ஷெரிங் டோப்கேவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். 2025 நவம்பரில் பிரதமர் திரு மோடி பூட்டானுக்கு மேற்கொண்ட பயணத்தின் மிகவும் வெற்றிகரமான விளைவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பூட்டானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கும், கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்திற்கும் இந்தியா அளித்த ஆதரவிற்காக பூட்டான் பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார். எரிசக்தி, இணைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மை போன்ற முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் பூட்டானும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பரஸ்பரம...

தமிழ்நாட்டில் ஆறு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும்  நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2026 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக நாடாளுமன்ற இராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி சிவா, கனிமொழி சோமு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட நாடாளுமன்ற 6 உறுப்பினரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதையொட்டி, நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள  காலியாகும் 37 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில்  வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 5 ஆம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை  மார்ச் மாதம் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் மாதம் 9 ஆம் தேதி. போ...