வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியட்நாமிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து நபர்கள் பலியானதாகவும், கேரளத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் பலியானதாகவும் இந்தியத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது அதிகாரிகள் தரப்பு முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு கவிழ்ந்தது. அதில் 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது. வியட்னாமில் நடந்த படகு விபத்தில் திருச்சிராப்பள்ளி, பழநி, தர்மபுரி, சேலம், வேலூரை சேர்ந்த 7 பேர் பலியாகினர். திருச்சிராப்பள்ளி கிராப்பட்டி அருணாசலம் நகர்...
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார், 1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, ...