முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இலஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா? கண்டித்த உயர்நீதிமன்றம்

வி ஏ ஓ வுக்கு ஜிபேயில் லஞ்சம் ! லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா? கண்டித்த உயர்நீதிமன்றம்!தபால் துறையை போல் செயல்படுவதற்காக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை  தெரிவித்தது. கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழ்நாடு அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலை அதிகாரிப்பட்டி மலர்விழி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "என் கணவர் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் எங்கள் பரம்பரை சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரித்த போது, தில்லையம்பல நடராஜன் என்பவர் அலுவலர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் பரம்பரை சொத்துகளை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தது தெரியவந்ததை சரி செய்ய வருவாய்த் துறை அலுவலர்களைச் சந்தித்தபோது ரூபாய்.2 லட்சம் லஞ்சமாகத் தரும் படி கேட்டனர். அதன் காரணமாக பல தவணைகளில் ரூபாய் .2 லட்சம் வழங்கினேன். கடைசியா...
சமீபத்திய இடுகைகள்

நடிகை அருணா மன்மோகன் குப்தா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில், நடிகை அருணா வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். புதுச்சேரி யூனியன் பிரதேச பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் சென்ற அமலாக்கத் துறை அலுவலர்கள், மன்மோகன் குப்தா வீட்டில்,  காலை 7:00 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரை சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அலுவலர்கள்  அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. அருணா மற்றும் மன்மோகன் குப்தாவின் சொகுசு பங்களாவை பார்த்து பலரும் வியந்தனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடந்தப்பட்டு அவரது நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில்  சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரை பகுதியில் சொகுசு பங்களாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உண்டு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள் அலங்காரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த மாநிலங்களிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி மரணத்தில் மர்மம்

திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீன் பொலினேனி மரணத்தில் மர்மம். சென்னையில் மோசடிப் புகாரில் விசாரிக்கப்பட்ட திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலையாக இல்லாமல் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பும் அரசியல் தலைவர்கள்.  அந்த வழக்கை விசாரித்த துணை காவல் ஆணையர் பாண்டியராஜன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது குடிநீர் பிரச்சனைக்காக அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்திய போது அவர் பெண்களை கை நீட்டி அடித்த  குற்றச்சாட்டில் அங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர் மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த பிரச்னையை மூடி மறைக்கப் பார்த்தார். என்ற குற்றச்சாட்டில் அங்கிருந்தும் பணியிடம் மாற்றப்பட்டார், இப்போது திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அதன் மேலாளர் நவீன் FIR பதிவு செய்யப்படாமலே சட்ட விரோதமாக விசாரிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இது தற்கொலையா அல்லது மர்ம மரணமா என்பதை விசாரிக்க வேண்டும். ஏனென்றால் துணை ஆணையர் பாண்டியராஜனின் கடந்...

மடப்புரம் லாக்கப் மரணக் கொடுங் குற்ற வழக்கில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் லாக்கப் மரணக் கொலை வழக்கில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சிபிஐ விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு . சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் தற்காலிகத் தனியார் காவலாளி அஜித் குமார் மீதான நகை திருட்டு விசாரணையின் போது தனிப்படை காவலர்கள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டது நிலையில், அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப் பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது. நீதி விசாரணைக்கு நியமிக்கப்பட்ட மதுரை மாவட்ட நீதிபதி சிறப்பாக விசாரணை நடத்தினார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் அஜ்மல்கான், “வழக்கு விசாரணை சிபிஐக்கு மாறிவிட்டது. அஜித்குமாரின் சகோதரருக்கு ஆவின் நிறுவனம் மூலம் அரசு வேலை வழங் கப்பட்டது. வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப் பட்டுள்ளது. இதனால் தனியாக இழப்பீடு எதுவும் வாழத் தேவை இல்லை” என்றார்...

இரயில்வே2025-26 ஆம் நிதியாண்டில் 50,000 வேலைகளைத் திட்டமிடுகிறது

பெரிய ஆட்சேர்ப்பு உந்துதல்: ரயில்வே முதல் காலாண்டில் 9,000 வேலைகளை வழங்குகிறது; 2025-26 நிதியாண்டில் 50,000 வேலைகளைத் திட்டமிடுகிறது 2024 முதல் 1.08 லட்சம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; 2026-27 நிதியாண்டில் 50,000 பணி நியமனங்கள் நியாயமான தேர்வுகளை உறுதி செய்வதற்காக, ரயில்வே வேட்பாளர் அங்கீகாரத்திற்கு ஆதாரைப் பயன்படுத்துகிறது மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் மோசடி செய்வதற்கான வாய்ப்பைத் தடுக்க ஜாமர்களைப் பயன்படுத்துகிறது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) நவம்பர் 2024 முதல் 55197 காலியிடங்களை உள்ளடக்கிய ஏழு வெவ்வேறு அறிவிப்புகளுக்கு 1.86 கோடிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வுகளை (CBTs) நடத்தியுள்ளன. இது 2025-26 நிதியாண்டில் 50,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு நியமனங்களை வழங்க RRBs ஐ அனுமதிக்கும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9000 க்கும் மேற்பட்ட நியமனங்கள் ஏற்கனவே RRBகளால் வழங்கப்பட்டுள்ளன. RRB தேர்வுகளுக்கு CBTகளை நடத்துவது என்பது நிறைய திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படும் ஒரு பெரிய பயிற்சியாகும். RRBகள் சமீபத்தில் தேர்வு மையங்களை வேட்பா...

கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைச் செயலாளர் தலைமையில் மாநாடு

இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையை நவீனமயமாக்குதல் மற்றும் தரமான உற்பத்தி பங்குதாரர் பட்டறை கால்நடை பராமரிப்பு என்பது பணம் ஈட்டும் துறையாகும், இது நாட்டின் மொத்த விவசாய மொத்த மதிப்பு கூட்டலுக்கு (GVA) 30.7% பங்களிக்கிறது. நாட்டில் நவீன, மீள்தன்மை கொண்ட கால்நடை பராமரிப்புத் துறைக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போக DAHD-ன் உறுதிப்பாட்டை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் அல்கா உபாத்யாயா மீண்டும் உறுதிப்படுத்தினார். மீன்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD), இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையை தரமான உற்பத்திக்காக நவீனமயமாக்குவது குறித்த ஒரு பட்டறையை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று ஏற்பாடு செய்தது. “இந்தியாவின் விவசாயம், தோட்டக்கலை, பால்வளம், மீன்வளம் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றை தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் மாற்றியமைத்தல்” என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இது நடைபெற்றது . இது தலைமைச் செயலாளர்களின் ஆறு துறை உச்சிமாநாடுகளின் 4 வது மாநாட்டிற்கு ஏற்ப நடைபெற்றது  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திர...

நமீபியாவின் தேசிய சட்டமன்றத்தில் பிரதமரின் உரை

நமீபியாவின் தேசிய சட்டமன்றத்தில் பிரதமரின் உரை கௌரவ சபாநாயகர் அவர்களே, கௌரவ பிரதமர் அவர்களே, கௌரவ துணை பிரதமர் அவர்களே, கௌரவ துணை சபாநாயகர் அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எனது அன்பான சகோதர சகோதரிகளே, ஓம்வா உஹாலா போ நவா? வணக்கம்! ஜனநாயகத்தின் கோவிலான இந்த உன்னதமான சபையில் உரையாற்றுவது ஒரு பெரிய பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. ஜனநாயகத்தின் தாயின் பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். மேலும், இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் அன்பான வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வருகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துவதன் மூலம் தொடங்க என்னை அனுமதிக்கவும். இந்த மகத்தான தேசத்திற்கு சேவை செய்ய மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். அரசியலில், உங்களுக்குத் தெரியும், அது ஒரு மரியாதை மற்றும் ஒரு பெரிய பொறுப்பு. உங்கள் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நண்பர்களே , சில மாதங்களுக்கு முன்பு, நீங்கள் ஒரு வரலாற்று தருணத்தைக் கொண்டாடினீர்கள். நமீபியா அதன் முதல் பெண் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தது. உங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் நாங்க...