திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் உண்மை என்பதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பி அநாகரிகமாக காவல் உதவி ஆய்வாளர் நடந்து கொண்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ராஜகோபால் (வயது 43). சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சினை குறித்து புகார் அளிப்பதற்காக காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணிடமிருந்து புகாரை பெற்றுக்கொண்ட எஸ்ஐ ராஜகோபால், அவரிடமிருந்து அலைபேசி எண்ணைக் கேட்டு பெற்றுள்ளார். தொடர்ந்து, பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அவர், அந்த பெண்ணிற்கு தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உறவினர்கள் காவல் பணி அலுவலர் ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்கள...
திமுக முன்னால் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்
திமுக மற்றும் அதிமுக முன்னாள் மாநில அமைச்சரும் திமுக தூத்துக்குடி மாவட்டப் பிரமுகருமன அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையின் சார்பாக குற்றஞ்சாட்டியது. தொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. என்ற நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும். சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழ்ந...