தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி (அகில இந்திய சேவை) அதிகாரிகள், தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கான 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி மற்றும் ஆசிரியர் வைப்பு நிதி ஆகியவற்றுக்கான ஆண்டு கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் இன்று (2026 மே 25) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின் https://cag.gov.in/ae/tamil-nadu/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள்/அதிகாரிகள் தங்களது கணக்கு விவரப் பக்கத்தில் ஆண்டு கணக்கு அறிக்கையினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் சந்தாதாரர்களுக்கு இது குறி...
பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 25, 2026) நடைபெற்ற பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேருக்கு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார் புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (25.05.2026) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேரந்த ஏழு பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷன் விருது பெற்றார். நாற்பது ஆண்டுக...