பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனால், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமித்துக் கொள்ளலாம் எனப் பொருளல்ல. உயர்நீதிமன்றம் அவசர கால வழக்காக எடுத்து விசாரித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசின் சட்டங்கள் சரியா என்பது குறித்து முதலிலிருந்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் புதிதாக முதலிலிருந்து விசாரித்தாலும் தமிழ்நாடு அரசின் சட்டங்கள் உயிர் பெறுமா என்பது சந்தேகமே அச்சட்டங்கள் ஆளுநரின் உரிமையில் குறுக்கிடுவதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான பிரச்சனை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஜனாதிபதி ஆளுநர் தாமதமே செய்தாலும், அவர்களின் அதிகாரத்தில் மாநில அரசுகளோ நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாக ஏற்றுக்கொண்டு விட்டது. அது தீர்ப்பு அல்ல என்றாலும் சட்ட ரீதியான கர...
காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில் நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல், காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம் காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார். சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும...