சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் இராஜலட்சுமி தனது அரசு பணியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் அசையாச் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். இது போன்ற சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் அரசு பணிசெய்யும் அலுவலர்கள் மீது. அரசு மற்றும் நீதித்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு விஜிலென்ஸ் அறிக்கை அனுப்பப்பட்டு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தலைமையகத்தின் அனுமதி பெற்ற பிறகு இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எழும்பூர், சென்னை என்ற முகவரியில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் 2(சி) ன் கீழ் இவர் அரசுப் பணியாளராவார். குற்றம் சாட்டப்பட்ட கே.ர...
திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் தான் அதன் உரிமையாளர் தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், அதன் உரிமை வாங்கிய நிலையில் '2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா சட்ட விரோதமாக வழங்கியுள்ளார்' என்கிறது.'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி திரைபடத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்த நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இசைஞானி இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் க...