சமூகநலத்துறை அரசுத் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய வட்டார விரிவாக்க அலுவலர் கைது! சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பகுதியில், அரசு திட்ட பயனாளியிடம் ரூபாய் .1,000 லஞ்சம் பெற்றதாக வட்டார விரிவாக்க அலுவலர் (Extension) ஜெயராணியை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) கைது செய்தனர். அரசுத் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய நலன்களை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பயனாளியிடம் சட்டவிரோதமாக ரூபாய் .1,000 லஞ்சம் கேட்டதாக புகார், இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் பொறிவைக்கும் திட்டத்தின்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் புகார்தாரர் கொடுத்த போது, வட்டார விரிவாக்க அலுவலர் ஜெயராணி அந்த லஞ்சப் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்...
பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி ஆலயத்தின் டிரஸ்ட் சொத்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட குற்றம் நடந்த நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்ட போது வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அ...