முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

HDFC வங்கியின் புதிய பகுதிநேரத் தலைவராக கேக்கி மிஸ்திரி நியமனம்

HDFC வங்கியின் சமீபத்திய முன்னேற்றங்களை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டுள்ளது. வங்கியின் பகுதி நேரத் தலைவர்: இந்திய ரிசர்வ் வங்கியின் பதவியைப் பொறுத்தவரை, வங்கியால் கோரப்பட்ட மாற்றம் ஏற்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் பகுதி நேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி, நெறிமுறைக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தார் அதானு சக்ரவர்த்தி, எச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் (பகுதிநேரம்) சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். "கடந்த இரண்டு வருடங்களாக தான் பணிபுறிந்த வங்கியில் சில நிகழ்வுகள் மற்றும் சில நடைமுறைகள் எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. இதுவே எனது மேற்கூறிய முடிவின் அடிப்படையாகும்." எனக் குறிப்பிட்ட நிலையில்  கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத் தலைவராக நியமிக்கப்பட்டார். பிஎஸ்இயிடம் ராஜினாமா கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அவரது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை.   அதானு சக்ரவர்த்தி ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் பதவியில் இருந்து மார்ச் 18 முதல் ராஜினாமா செய்தார். கேக்கி மிஸ்திரி தற்காலிக பகுதி நேரத...
சமீபத்திய இடுகைகள்

விளாத்திகுளம் பாலியல் கொலையில் பத்து நட்களுக்குப் பின் குற்றவாளி கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், யாதவர் சமூகத்து பன்னிரண்டாம் வகுப்பு படித்த மைனர் குழந்தையான பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்ற நிலையில். அந்த பஞ்சமாபாதகக் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களும் வியாபரிகளும் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்த்த சாயல்குடியில் வசித்து வந்த தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளியைக் கைது செய்திருப்பதாக,  அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.  கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, இதே சாயல்குடியில் வசிக்கும் தர்ம முனீஸ்வரன் என்ற நபர் குற்றவாளி எனக் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு ...

திரைப்படத் தணிக்கை குறித்து எதிர்கட்சித் தலைவர் வினாவும் அமைச்சரின் பதிலும்

உலக அளவில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு படத்திற்குத் தணிக்கை பெற்ற பின்னரே இந்தியாவில் திரைப்படங்களைத் திரையிட முடியும். சினிமாட்டோகிராபி சட்டம் 1952 மற்றும் சினிமாட்டோகிராப் (சான்றிதழ்) விதிகள் 2024ம் ஆண்டின் படி மத்திய தணிக்கை வாரியம் திரைப்படங்களைத் தணிக்கை செய்கிறது. தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் தணிக்கை வாரியம் குறித்த பத்திரிகைச் செய்தி ஒன்றை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி 2024 - 25 ம் ஆண்டில் மொத்தம் 15,444 படங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 3033 படங்களுக்கு 'கட் மற்றும் மாற்றங்களை' பரிந்துரைத்து பின்னர் சான்றிதழ் வழங்கியும், 2 படங்களுக்கு சான்றிதழ் தர மறுத்தும் உள்ளார்கள். 2020 முதல் 2025 வரையில் மொத்தம் 71,693 படங்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 41,817 படங்களுக்கு 'யு' சான்றிதழ், 28,268 படங்களுக்கு 'யுஏ' சான்றிதழ், 1,878 படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். 2025ம் ஆண்டில் உயர்நீதிமன்ற வழக்குகளின் மூலம் 10 படங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு...

சடடச்சிக்கலான சோதனைக் களத்தில் பழனிசாமி தேஜகூ முதல்வர் வேட்பாளர் யார்? கூட்டணிக் குழப்பம் தீர்வை நோக்கி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜகவிடம் பிடி கொடுக்காமல் கறார் காட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, சட்ட ரீதியான சிக்கல்கள் மூலம் பணிய வைக்க டெல்லி மேலிடம் திட்டமிடுகிறதா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு  எக்ஸ்க்ளூசிவ் தகவல்  விரிவாகப் பார்ப்போம். என்டிஏ கூட்டணிக்குள் தவெக விஜய் வருவதற்காக பாஜக தேசிய தலைமை பல ரகசிய உத்தரவாதங்களைக் கொடுத்திருந்தது.. ஆனால், "பாஜக தருகிற அந்த உத்தரவாதங்களுக்கு அதிமுக தலைமைக்கு உடன்பாடு வரவில்லை முதலில் அவர்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுங்கள்" என்று பாஜகவுக்குத் தகவல் தந்து விஜய்யும் ஒரு செக் வைத்தார். ஆனால் இங்கு உள்ள கூட்டணி சின்டிகேட் அரசியல் காரணங்களை மீறி அது நடக்கவில்லை. " பிரதமர் வர்றாரு. செல்வம் என் கூட வந்து மேடையில் நிக்கனும்னு" மேலூர் தொகுதி MLA-வை கூடவே கூட்டிச் சென்றிருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி  அவர் தான் மேலூர் MLA - பெரியபுள்ளான் (எ) செல்வம், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.  ஆனல் தற்போது அமமுக கேட்கும் தொகுதி மேலூர் அதில் காலமான முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சாமி மகனை நிறுத்த  டி...

மக்களை நேசிக்காத கிழட்டுக் ஹீரோவின் மலட்டுச் சிந்தனைகள் உண்மைகளை உரக்கப் பேசிய ஆதவ் அர்ஜுனா

மக்களை நேசிக்காத கிழட்டுக் ஹீரோவின் மலட்டுச் சிந்தனைகள் உண்மைகளை உரக்கப் பேசிய ஆதவ் அர்ஜுனா   24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளாக  அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய எதார்த்தமான பேச்சுக்குப் பிறகு தான்  நடிகர் சங்கம் கொதிக்கிறது, இதற்கு முன்பு யார் யார் யாரெல்லாம் எப்படி ஆபாசமாகத் திட்டிப் பேசினார்கள் என்ற காணொளிக்காட்சிக்கள் சமூக வலைத்தளங்களில் முழுவதும் புயலாக, பூகம்பமாக, சுனாமியாக வந்து வளரி, பூமராங் போல வந்து தாக்கி இருக்கிறது. சிவாஜிராவ் ஹெய்க்வாட் எனும் ரஜினி காந்த் பிறப்பால் மராத்தியராகவம் வளர்ப்பால் கன்னடியராகவும், வளர்ச்சியால் தமிழ்நாடு சார்பாக வாழும் ரஜினிகாந்தன் எனும் ஒரு காலத்தில் உச்ச நடிகன், தற்போது 80 வயதை நெருங்கும் நிலையில் 20 வயதில் கதாநாயகி உடன் நடிக்கும் அவர் எழுதிய கடித அறிக்கைக்கு பிறகு தான் அவரை இதற்கு முன்பு யார் யாரெல்லாம் எப்படித் தாக்குதல் செய்து பேசி இருக்கிறார்கள் என்ற காணொளிக்கட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் வருகின்றன.  அடுத்து பாவமன்னிப்பு கேட்பவர்கள் பட்டியல் நீளும் போல,  தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜுனா.. அதிமுக பிர...

ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் இராணுவ அமைச்சர் தகவல்

இஸ்ரேல் இராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டார்:  பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி.இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவத்திற்கு (IDF) முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு தாக்குதலுக்கும் அரசின் தனிப்பட்ட ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், உளவுத்துறை உறுதி செய்யும் எந்தவொரு இலக்கையும் ராணுவம் உடனடியாக அழிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் (Esmail Khatib) நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்தத் துணிச்சலான முடிவு ஈரானியத் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் 5 மாநில யூனியன் பிரதேசங்களில் 1,111 மத்தியப் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் ஆணையம் 5 மாநி லங்கள்/யூனியன் பிரதேசங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்காக 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், கேரளம் , பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்காக 1,111மத்திய தேர்தல் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது. CEC ஸ்ரீ ஞானேஷ் குமார், பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்கும் போது, ​​தேர்தல்கள் வன்முறையற்ற மற்றும் தூண்டுதலின்றி நடத்தப்படும், இதனால் ஒவ்வொரு வாக்காளர்களும் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனக் கூறியது நினைவிருக்கலாம். அதன்படி, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் கண்காணிப்பாளர்கள் ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவார்கள். தற்போது நடைபெற்று வரும் பொது மற்றும் இடைத்தேர்தலில் பணியமர்த்தப்பட்டுள்ள 1,111 மத்திய தேர்தல் பார்வையாளர்களின் விவரங்கள் பின்வருமாறு: நடந்துகொண்டிருக்கும் பொது/தேர்தலில் பணியமர்த்தப்பட்ட பொது மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை - 2026 மாநிலம்/யூனியன் பிரதேசத்த...