மனையிட வரன்முறைக்கு அனுமதி வழங்க ரூபாய்.10,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற அளவையர் கைது திருவேற்காட்டில் மனையிட வரன்முறை செய்து அனுமதி வழங்க ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், சான்றுபெற்ற நில அளவர் ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்குச் சொந்தமான திருவேற்காடு பகுதியில் உள்ள நிலத்திற்கான மனையிட வரன்முறை அனுமதி வாங்குவதற்காக திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு பிரிவில் பணம் செலுத்தி மனு அளித்திருந்தார். அந்த நிலத்திற்கு மனையிட வரன்முறை அனுமதி வழங்குவதற்கு ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என நகரமைப்பு அலுவலர் சாந்தி கேட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால், அது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜெயலெட்சுமி கொண்டு வந்த பணத்தை பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட் டுகளாக ஜெயலட்சு...
“தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - நாடாளுமன்ற மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு:- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.( நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) ஓரளவு உண்மை தான். தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! என நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் உரையாற்றியவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவ...