முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீதிமனற அவதூறு வழக்கால் டி ஆர் பாலு மீது ஊழல் வழக்காக மாறப் போகும் அணணாமலை நடத்திய குறுக்கு விசாரணை

ரூபாய் .10,841.10 கோடி வருமானத்திற்கு அதிகமாக திமுக பொருளாளர் முன்னால் மத்திய அமைச்சர் T.R.பாலு, (வயது 85) சொத்து சேர்த்துள்ளதாக DMK Files-1 சொல்லியுள்ளது. அவர் மீது ஒரே ஒரு வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு எங்கேயாவது பதியப்பட்டுள்ளதா?என்ளால் இல்லை ஏன்றே கூற வேண்டும், காரணம் யாரும் அந்த விவகாரத்தில் யாரும் போகவில்லை, ஆனால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் , டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 17வது பெருநகரக் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் , நேற்று விசாரணைக்கு வந்தது.தி.மு.க., உறுப்பினரான, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 10 பெரிய கப்பல்களை, நான் வாங்கியதாக பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக, கடந்த, 2014 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் .,4 ஆம் தேதியில், பத்திரிகையில் செய்தி வெளியாகி "இருப்பதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த வழக்கிற்கும், நீங்கள் கேட்கும் கேள்விக்கும் சம்மந்தம் இல்லை. என்னைப் பற்றி மு. க.அழகிரி அப்படிச் சொல...
சமீபத்திய இடுகைகள்

நடிகை திரிஷா கிருஷ்ணன் பாஜக நயினார் நாகேந்திரனுக்கு சட்ட அறிவிக்கை

உயர் பதவியிலுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய மோசமான கருத்தை எதிர்பார்க்கவில்லை"  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறுக்கத்தக்க மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் (நடிகை த்ரிஷா) எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல.” - என திரிஷாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அதில் என் கட்சிக்காரர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல! எனது கட்சிக்காரர் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை; அவருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் அவரது பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் - ன நடிகை திரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பய பின் வருத்தம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  நடிகை திரிஷாவை குறிப்பிட்டு த.வெ.க தலைவர் நடிகை  விஜயை விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்தார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா குறித்து தாம் பேசியது வாய் தவறி வந்த வார்த்தை; அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் அழைத்து ...

விசாரணை வளையத்தில் ஊழல்,மோசடி மூலம் சொத்துக் குவித்துக் கைதான அமைச்சரின் முன்னால் உதவியாளர்

ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகமான சொத்துகளைக் குவித்தேன்' - அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்' என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஊழல் தடுப்புத் தகவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் இரண்டு நாள் காவல்துறை காவலில் எடுத்து மதுரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஜெய்பாலாஜி அவர்களிடம் அளித்த வாக்குமூலத்தில் : ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ஆம் ஆண்டில் மருதம் லேண்ட் புரொமோட்டர் எனும் நிறுவனம் துவங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்வேறு ஊர்களில் கிளைகளைத் த...

குளித்தலை அருகில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது .    கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம  விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்  பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000   ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம்   வழங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அட...

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவது கட்டாயம் என உத்தரவு

மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன. வங்காள மொழிக் கவிஞர் பங்ஹிம் சந்திர சட்டர்ஜி 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி எழுதிய  ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. ’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல் உத்தரவுகளைக் கொண்டுவந்துள்ளதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப்பூர்வமான முழுப் பாடல் பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான...