முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

முதல்வர் சித்தராமையா ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார் புதிய முதல்வராக சிவக்குமார் தேர்வாவார்

கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்து கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தாம் இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். டெல்லியில் மீண்டும் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்த தகவல் உறுதியானதும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக, கர்நாடக மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுவார்.  அதன் பின்னர், அவர் அதிகாரபூர்வமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார். முன்னதாக, வியாழக்கிழமை (மே 28) தனது அமைச்சரவை சகாக்களுக்கு காலை விருந்து அளித்தார் முதல்வர் சித்தராமையா. பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பதவி விலகும் முடிவை அமைச்சர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. புதிய முதல்வராகும் டி.கே. சிவகுமார், பதவி விலகிய சித்தராமையாவின் காலில் ...
சமீபத்திய இடுகைகள்

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 லிருந்து 37ஆக உயர்த்தி அவசரச்சட்டம் பிறப்பித்தார் பாரதக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத்தலைவர்  கொலீஜியம் பரிந்துரை படி மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அருண் பாலி ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. மூத்த வழக்கறிஞர் வி.மோகனா,பிஏ,பிஎல் வயது 59 (27/6/1966) கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் (இப்போது ஜிஎல்சி, கோயம்புத்தூர்) ஐந்தாண்டு சட்டப் படிப்பின் இந்தியாவின் முதல் தொகுதியாக 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்  அவர் 23 ஏப்ரல், 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிம...

காவல்துறை புதிய இயக்குனர் நியமனம் மற்றும் 30 ஆட்சிப்பணி அதிகாரிகள் பணி மாற்றமும்

மூத்த ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.மகேஷ் குமார் அகர்வால், வயது:,54,  பி.ஏ.(சட்டம்),எல்.எல்.பி.,எம்.டி.பி.எம்.,பி.எச்.டி டிஜிபி மற்றும் காவல் படையின் தலைவராக பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான  எம்.டி.பி.எஸ். உயர் பதவிக்கு UPSC மூலம் அனுமதி தமிழ்நாடு காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் சட்டம் ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். காவல் ஆணையர், தூத்துக்குடி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர்.சிசிடிவி கேமராக்களை சென்னை நகரின் நிறுவுதலில் முதன்மையாக செயல்பட்டவர்.நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர் மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வரின் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார் அகர்வால் இவர் நியமிக்க வாய்ப்பு என மே மாதம் 15 ஆம் தேதியே பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி வந்தது  இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இன்று 30...

கம்யூனிஸ்ட் கட்சித் கேரளாத் தலைவர் பினராயி விஜயனின் ஊழல் மகள் வீணா

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார்.மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கேரளம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். மாநிலம்'!!ED,கொச்சி மண்டல அலுவலகம் 27/05/2026 அன்று PMLA, 2002 ன் கீழ் M/s கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (CMRL) க்கு சொந்தமான கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் உள்ள 10 வளாகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தியது. எஸ்.கார்த்தா, ஸ்ரீமதி.வீணா என்பவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.பினரயி விஜயனின்...