தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மத்திய தணிக்கைத்துறைக்கு என்ன பிரச்சினை என நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் மத்திய அரசின் வழக்குரைஞர் படத்தில் இந்தியாவில் பாதுகாப்புத்துறை சம்மந்தமான சீருடை, இலட்சினை உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு ரிவ்யூ கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். இது வழக்கமான நடைமுறைதான். இதை படக்குழு முன்கூட்டியே தவிர்த்திருக்க முடியும். உதாரணத்துக்கு - ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தில் மிகத்துல்லியமாக இராணுவ அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். படம் தயாரானதுமே பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்தத் தகவல்களை தெரிவித்து, அந்த அடையாளங்களை ஏன் பயன்படுத்தினோம் என்று விளக்கமளித்து சென்சாருக்கு முன்பாகவே தடையில்லாச் சான்று பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பாக இராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடல்களை நடத்தி, அவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணையா...
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாட்டில் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது பொது சுகாதார சேவைகளின் தரத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2025 டிசம்பர் 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது. இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ள விரிவான தரக்கட்டமைப்பாகும். தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்புக்காக இந்திய பொது சுகாதார சேவை முறை 50,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். 2015-ம் ஆண்டில் தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்பு முறை மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு, நோயாளிகளை மையமாகக் கொண்ட மற்றும் தரஉத்தரவாத சேவைகளை உறுதி செய்ய தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனைகளில் வெறும் 10 சுகாதார சேவைகளுக்கு சான்றளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தக் கட்டமைப்பு மாவட்ட துணை மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் உள்ளிட்டவற...