நாடாளுமன்ற உறுப்பினரும் முன்ளாள் செய்தியாளருமான கரூர் செ. ஜோதிமணியின் ஆதங்கம் இது "காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எவ்விதமான வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் த்லைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது" என செ.ஜோதிமணி காட்டம் வெள...
உலகின் பிற நாடுகள் ஒற் றைப்படை-இரட்டை, 4 நாள் வேலை வாரங்கள், பள்ளி மற்றும் அலுவலகங்களை மூடுதல் மற்றும் எரிபொருள் விலையை 20-30 சதவீதம் உயர்த்துதல் போன்ற கடுமையான எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் போது, நமது பரதப் பிரதமரின் கீழ் இந்தியாவுக்கு எல் பி ஜி எரிசக்தி பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலையில் ஒரு சோலையாக உள்ளது. வணிக ரீதியான LPG விநியோகத்தை எளிதாக்குவதற்கு மேலும் ஒரு நடவடிக்கை எடுத்து, இந்திய அரசு மாநிலங்களின் வணிக LPG ஒதுக்கீட்டை 70 சதவீதம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது, மேலும் 20 சதவீதம் ஒதுக்கீடு எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற உழைப்புத் தொழில்கள் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படுகிறது. குழாய் எரிவாயு மாற்றாக இல்லாத தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பெட்ரோலின் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரிகளை லிட்டருக்கு ரூபாய் .13 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும், டீசல் மீதான நில் (பூஜ்ஜியம்) லிட்டருக்கு ரூபாய் .10 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும் குறைக்கிறது இந்திய அரசு.