முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது

நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை அளந்து அத்துமால் செய்து தர அரசு கடடணம் போக ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய பரந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு ஊழல் தடுப்புக் காணிகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனா். காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்குச சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் வழங்க முடிவு செய்து அதற்கான இழப்பீடு பெற விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் நில எடுப்புப் பிரிவுக் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு தனக்கு ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை லஞ்சமாகத் தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிபபுத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகாா் செய்த நிலையில் அவர்கள் ஆலோசனைப்படி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடைத் தெருவுக்கு வருமாறு க...
சமீபத்திய இடுகைகள்

மாசிக் கருவாடு ஓசி கேட்ட ஊழல் காக்கி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை

மாசிக் கருவாடு ஓசி வாஙகிய ஊழல் காக்கி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை பணம் தராமல் மாமூலாக மாசிகருவாடு வாங்கியதுடன், கடையிலிருந்தவர்களை மிரட்டியதாக பாம்பன் காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக உள்ளதாக மனுதாரர்  தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் பரவிய நிலையில் உயர்நீதிமன்றத்நில் வழக்கு விசாரணை சம்பவம்: பணம் கொடுக்காமல் காவலர் மாசிக் கருவாடு வாங்கிச் சென்றதுடன்   உரிமையாளர்களைக் காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படடுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கருவாடு வாங்கி பணம் தர மறுத்த விவகாரம் குறித்து டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு அருகில் அமைந்த பாம்பனைச்  சேர்ந்தவர் மீனவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மாசிக் கருவாடு வாங்கிய பாம்பன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், பணம் தர மறு...

ராகுல் நாட்டை தவறாக வழிநடத்துவதாக நிஷிகாந்த் துபே குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்  நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் எதிர் கட்சித் தலைவர் ராகுலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவர்கள் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கவும் கோரினார். "தேசத்திற்கு தீங்கு விளைவிக்க விரும்பும் (ஜார்ஜ்) சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒரு தீர்மானத்தை நான் கொண்டு வந்துள்ளேன். அதில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை நீக்க வேண்டும், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்" என்றார். நேற்று மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், மத்திய அரசு தேசிய நலன்களில் சமரசம் செய்து கொள்வதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இது எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, உலகம்...

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கைதாகி சிறை சென்ற ஊழல் பெருச்சாளிகள்

கோயம்பத்தூர் தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரி உதவி ஆணையர் , கணவருடன் கைது  கோயம்பத்தூர் வடக்கு வணிகவரித்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி வயது 48. இவர், வணிகவரித்துறை தொடர்பான ஒரு விசாரணையை முடிப்பதற்காக சிங்காநல்லூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூபாய் 60,000 லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார். லஞ்சம் தர மறுத்த அந்த நிறுவனத்தினர் இதுகுறித்து கோயமுத்தூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில், நிறுவனத்தினர் பினாப்தலீன் தடவிய லஞ்சப் பணத்தைத் தருவதற்கு வந்த போது மகேஸ்வரிக்காக லஞ்சப் பணத்தை வாங்க வந்த அவரது கணவர் தனசேகரன், வயது 51, ஐ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவிக்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். கணவன் மனைவி இருவரையும் நேருக்கு நேராக வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகேஸ்வரியும் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இருவரும்...

பாஜகவின் தமிழ்நாட்டுக் குழப்பம் தீர்க்க வந்த தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ்

பாரதிய ஜனதா கட்சியில் யாராவது  தலைவராகலாம் ஆனால் அமைப்புப் பொதுச்செயலாளராக ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் மட்டுமே பதவி வகிக்க முடியும் பிரதமர் நரேந்திர மோடி கூட குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவர் தேர்தல் தொகுதிப் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அதுகுறித்து விமர்சனம் வைத்ததாக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மீது பாஜகவின் ஒரு தரப்பு புகார் எழுப்பிய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயநகபாஜகவின் நகரில் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது. சென்னை தியாகராயநகரில்...

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி இராதாகிருஷ்ணண் 92 வயதில் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்! அவருக்கு வயது 92 ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகவும் , உளவுப்பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றினார். மேலும், சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.  நாமறிந்த நேர்மையான உயர் அதிகாரி எனப் பெயர் எடுத்த ராதாகிருஷ்ணனுக்கு எழுத்து மற்றும் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் இந்த நிலையில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.  சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில், முன்னாள் டிஜிபி ஓய்வு இராதாகிருஷ்ணன் மறைவையொட்டி,  பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள்,  இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி.காவல்துறை டி.ஜி.பி. என பணியில் கலக்கியவர். ராதாகிருஷ்ணன் IPS- ADGP பணி ஓய்வு... ஒரு வரலாற்றுப் பார்வை:-         திருநெல்வேலி மாவட்...

மலேசியாவில் இந்தியப் பிரதமர் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது

மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ  ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர். மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். மலேசியாவில் உள்ள இந்திய ...