தவெக அரசு அமைச்சரவை விரிவாக்கம்.. விஎஸ் பாபு, சத்யபாமா உள்ளிட்டோருக்கு காத்திருக்கும் வாய்ப்பு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இரண்டொரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, சேலம் தொகுதி தமிழன் பார்த்திபன், இராணிப்பேட்டை தொகுதி தாஹிரா உள்ளிட்டோர் தவெக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. வேளாண்மை, உயர்கல்வி, ஹந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை, வனத்துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 19 பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை, !சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுஅதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 18, மே 2026 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 10 வழக்கறிஞர்கள் மற்றும் 9 மாவட்ட நீதிபதிகள் (judicial...