கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்து கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தாம் இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். டெல்லியில் மீண்டும் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்த தகவல் உறுதியானதும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக, கர்நாடக மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர், அவர் அதிகாரபூர்வமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார். முன்னதாக, வியாழக்கிழமை (மே 28) தனது அமைச்சரவை சகாக்களுக்கு காலை விருந்து அளித்தார் முதல்வர் சித்தராமையா. பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பதவி விலகும் முடிவை அமைச்சர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. புதிய முதல்வராகும் டி.கே. சிவகுமார், பதவி விலகிய சித்தராமையாவின் காலில் ...
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 லிருந்து 37ஆக உயர்த்தி அவசரச்சட்டம் பிறப்பித்தார் பாரதக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத்தலைவர் கொலீஜியம் பரிந்துரை படி மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அருண் பாலி ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. மூத்த வழக்கறிஞர் வி.மோகனா,பிஏ,பிஎல் வயது 59 (27/6/1966) கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் (இப்போது ஜிஎல்சி, கோயம்புத்தூர்) ஐந்தாண்டு சட்டப் படிப்பின் இந்தியாவின் முதல் தொகுதியாக 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர் அவர் 23 ஏப்ரல், 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிம...