முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஓய்வூயதியம் அறிவிப்பு வெற்றி ஊழியர்களுக்கா அரசுக்கா என்பதே எழுவினா

தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பெற்ற ஓய்வு பெறும் கடைசி மாதத்தில் பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவே வழங்கப்படும். 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீதம் பங்களிப்பு பணம் பிடித்தம் செய்து பணிக்காலத்தில் எடுக்கப்படும். ஓய்வூதியதாரர் திடீரென இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு ஓய்வூதியம்  அரசு பணியாளர்களுக்கு 22 வருடம் முடிந்து, இந்த ஆட்சியில் கடைசி மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வந்த அறிவிப்பு இது, காப்பா!இல்லை முழுமையான ஆப்பா!  என்பது குறித்து ஒரு விரிவான பார்வை  பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் எனும் ஓய்வூதியம்  CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது அவர்களின் பிடித்தம் செய்து செலுத்திய 10 சதவீதம் அரசு செலுத்திய 10 சதவீதம் இதற்கு வட்டி 8 சதவீதம் எல்லாம் சேர்த்து, சுமாராக ர...
சமீபத்திய இடுகைகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். வெனிசுலா கம்யூனிச நாடு. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் எப்போதுமே ஆகாத நிலை. இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல்கள் இருந்து வந்த வண்ணமுள்ளன. வெனிசுலா மீது பல வர்த்தகத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகவே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த முறை அதனை நடத்தியம் விட்டார். வெனிசுலா தலைநகர் கராகஸிஸ் வெடிகுண்டு சத்தமும் பயங்கர தாக்குதல் சத்தமும் கேட்பதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் பறக்கும் சத்தங்கள் கேட்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணுவ நடவடிக்கையை சுட்டிக்காட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கொலம்பியா, கியூபா...

புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார் "ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்" என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி,  2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார். இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்ட பிப்ரவாவைச் சேர்ந்த உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுடன் முதல்முறையாக ஒன்றிணைக்கிறது. இந்தக் கண்காட்சி கருப்பொருள் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மையத்தில் சாஞ்சி ஸ்தூபியால் ஈர்க்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட மாதிரி ஒன்று உள்ளது. இது தேசிய சேகரிப்புகளிலிருந்து உண்மையான நினைவுச்சின்னங்கள் மற்று...

தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டாக்-களுக்கு, கேஒய்வி வழக்கமான தேவையாக அன்றி இனிக் கட்டாயமில்லை.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 2026 பிப்ரவரி 1-க்குப் பின் புதிய ஃபாஸ்டாக்-ஐப் பயன்படுத்தும் கார்களுக்கு உங்கள் வாகனத்தை அறியுங்கள் (கேஒய்வி) நிறுத்தப்படுகிறது பொது வசதியை மேம்படுத்துவதற்கும், நெடுஞ்சாலை பயனர்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டுக்குப் பிந்தைய இன்னல்களைப் போக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக,  2026, பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் அனைத்து புதிய ஃபாஸ்டாக்-ஐ பயன்படுத்தும் கார்களுக்கும் (கார்/ஜீப்/வேன் வகை ஃபாஸ்டாக்) உங்கள் வாகனத்தை அறியுங்கள்  (கேஒய்வி) நடைமுறையை நிறுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. செல்லுபடியாகும் வாகன ஆவணங்கள் இருந்தபோதும், ஃபாஸ்டாக் செயல்படுத்தலுக்குப் பின் கேஒய்வி தேவைகள் காரணமாக சிரமத்தையும் தாமதத்தையும் சந்தித்த லட்சக்கணக்கான பொதுவான சாலைப் பயனர்களுக்கு இந்த சீர்திருத்தம் பெருமளவு நிவாரணத்தைத் தரும். ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட ஃபாஸ்டாக்-களுக்கு, கேஒய்வி வழக்கமான தேவையாக அன்றி இனி கட்டாயமாக இருக்காது. ஃபாஸ்டாக்-கள் தவறவிடுதல், தவறாக வழங்கப்பட்டிருத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்...

விரைவில் குவஹாத்தி-ஹவுரா இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை

இந்திய ரயில்வேயின் புத்தாண்டு பரிசு: குவஹாத்தி-ஹவுரா இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் புது தில்லி ரயில் பவனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அசாமின் குவஹாத்திக்கும் மேற்கு வங்கத்தின் ஹவுராவிற்கும் இடையே முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் என்று அவர் அறிவித்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முழுமையான சோதனை மற்றும் சான்றளிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். ஜனவரி மாதத்தில், இந்த வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிளின் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ள காம்ரூப் பெருநகரம் மற்றும் போங்கைகான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கூச்பெஹார், ஜல்பைகுரி, மால்டா, முர்ஷிதாபாத், பூர்பா பர்தாமன், ஹூக்ளி மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்கள் பயனடையும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும், இதில் 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏ...

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயருக்கு பிரதமர் கடிதம்

கேரளா மாநில  பாஜக தலைவரும் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயருமான வி.வி.ராஜேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி  கடிதம் எழுதியுள்ளார் "பண்டிகைக் காலத்தின் மத்தியில், 2026 ஆம் ஆண்டு துவங்கும் போது, திருவனந்தபுரம் மாநகரின் மேயராக நீங்கள் பதவியேற்றதும், துணை மேயராக ஸ்ரீமதி ஜி.எஸ். ஆஷா நாத் ஜி பதவியேற்றதும் திருவனந்தபுரத்தில் பாஜக வரலாறு படைத்தது. இதற்காக உங்களையும் ஆஷாஜியையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். கேரளாவில் யாருடைய மோசமான ஆட்சியின் விளைவு இந்த நிலை வெற்றி  என்பது எல்லோருக்கும் தெரியும், இந்த கம்யூனிஸ்ட் முன்னணிகள், கேரளாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஊழல் மற்றும் கொடூரமான வன்முறைக் கலாச்சாரத்தை நிலைநிறுத்தியுள்ளன. அதை மாற்றி நல்ல நிர்வாகத்தை மக்கள் விரும்பும் நிலை போல தரவேண்டும் என்பதே தற்போது பாஜகவின் வெற்றி துவக்கம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவைக் காட்டி திமுகவுக்கு கெடு வைத்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் திருமாவளவன் போன்றோர் தலையிட கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கருத்து  காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் விசிகட்சி, மதிமுக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் தலையிட வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர்  ப.மாணிக்கம் தாகூர் அவரது வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தார். திருமாவளவன், வைகோ,  உள்ளிட்டோர் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டுமெனவும் பதிவு, சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராகுல் காந்தியின் நண்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்தார். அதனால் மாநிலத்தில் திமுக தலைமையிலான இன்டிக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிவிடும் நிலை உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசை விமர்சித்தார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் கடன் அளவு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு விமர்...