முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கைதாகி சிறை சென்ற ஊழல் பெருச்சாளிகள்

கோயம்பத்தூர் தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரி உதவி ஆணையர் , கணவருடன் கைது  கோயம்பத்தூர் வடக்கு வணிகவரித்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி வயது 48. இவர், வணிகவரித்துறை தொடர்பான ஒரு விசாரணையை முடிப்பதற்காக சிங்காநல்லூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூபாய் 60,000 லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்.லஞ்சம் தர மறுத்த அந்த நிறுவனத்தினர் இதுகுறித்து கோயமுத்தூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில், நிறுவனத்தினர் பினாப்தலீன் தடவிய லஞ்சப் பணத்தைத் தருவதற்கு வந்த போது மகேஸ்வரிக்காக லஞ்சப் பணத்தை வாங்க வந்த அவரது கணவர் தனசேகரன், வயது 51, ஐ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவிக்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். கணவன் மனைவி இருவரையும் நேருக்கு நேராக வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகேஸ்வரியும் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இருவரும் ...
சமீபத்திய இடுகைகள்

பாஜகவின் தமிழ்நாட்டுக் குழப்பம் தீர்க்க வந்த தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ்

பாரதிய ஜனதா கட்சியில் யாராவது  தலைவராகலாம் ஆனால் அமைப்புப் பொதுச்செயலாளராக ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் மட்டுமே பதவி வகிக்க முடியும் பிரதமர் நரேந்திர மோடி கூட குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவர் தேர்தல் தொகுதிப் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அதுகுறித்து விமர்சனம் வைத்ததாக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மீது பாஜகவின் ஒரு தரப்பு புகார் எழுப்பிய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயநகபாஜகவின் நகரில் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது. சென்னை தியாகராயநகரில்...

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி இராதாகிருஷ்ணண் 92 வயதில் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்! அவருக்கு வயது 92 ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகவும் , உளவுப்பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றினார். மேலும், சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.  நாமறிந்த நேர்மையான உயர் அதிகாரி எனப் பெயர் எடுத்த ராதாகிருஷ்ணனுக்கு எழுத்து மற்றும் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் இந்த நிலையில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.  சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில், முன்னாள் டிஜிபி ஓய்வு இராதாகிருஷ்ணன் மறைவையொட்டி,  பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள்,  இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி.காவல்துறை டி.ஜி.பி. என பணியில் கலக்கியவர். ராதாகிருஷ்ணன் IPS- ADGP பணி ஓய்வு... ஒரு வரலாற்றுப் பார்வை:-         திருநெல்வேலி மாவட்...

மலேசியாவில் இந்தியப் பிரதமர் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது

மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ  ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர். மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். மலேசியாவில் உள்ள இந்திய ...

டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி

டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 8, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.பிப்ரவரி மாதம் 1897 ஆம் ஆண்டு பிறந்தநாள் 3 மே 1969 ல் காலமானார் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை, குடியரசுத் தலைவர் பதவி வகித்தார். 1962-1967 காலத்தில், இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார் இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும், திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[ உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அலிகார் முஸ்லிம் பல்கல...

வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கு

வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கை மத்திய நீர் ஆணையம் நாளை புதுதில்லியில் நடத்துகிறது மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம், முன்னறிவிப்பு சேவைகள், வெள்ள மேலாண்மை ஆகியவை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கை நாளை (பிப்ரவரி 9, 2026) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. பயிலரங்கை நீர்வளம், நதி மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு வி.எல். காந்த ராவ், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் திரு அனுபம் பிரசாத், மத்திய நீர் ஆணைய உறுப்பினர்கள், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் தொடங்கி வைக்கின்றனர். இந்த பயிலரங்கின் போது, வெள்ள முன்னறிவிப்பு, தயார்நிலை, வெள்ள மேலாண்மை திட்டமிடலில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவது குறித்து கவனம் செலுத்தப்படும். காலையில் தொழில்நுட்ப அமர்வுகளும், பிற்பகலில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்தல் குறித்த அமர்வும் நடைபெறும்.

அஜய் பிரஹாரி' நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆய்வு   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது ஜம்மு பயணத்தின் இரண்டாம் நாளில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ‘குர்நாம்’ மற்றும் ‘போபியா’ எல்லைப் பாதுகாப்புப் படை சாவடிகளுக்குச் சென்றார். 'அஜய் பிரஹாரி' நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், வீரர்களின் நலனுக்காக ரூ. 7 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், ரூ. 242 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வீரர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, "கடினமான சூழல்களிலும் தேசத்தைக் காக்கும் பிஎஸ்எஃப் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது. 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 118 எல்லைச் சாவடிகள் மற்றும் 3 பயங்கரவாத முகாம்களை அழித்து பிஎஸ்எஃப் வீரர் சாதனை படைத்துள்ளனர். இதில் வீரமரணம் அடைந்த முகமது இம்தியாஸ் அகமது மற்றும் தீபக் சிங்காக்கம் ஆகியோருக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை" என்றார். மேலும், பிஎஸ்எஃப்...