முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கொள்ளையடிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கெஞ்சிப் பேசி சில்லறை பார்க்கும் போக்குவரத்து அலுவலர்களும் பாதிப்பில் மக்கள்

விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணங்கள் வார இறுதி தொடர் விடுமுறையை ஒட்டி, தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகழின் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை விமானம் போல கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.ஆன்லைன் முன்பதிவு ரெட்பஸ் உள்ளிட்ட தளங்களின்படி பல்வேறு முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:முக்கிய வழித்தடங்களின் பேருந்து கட்டண விவரம்சென்னை - கோயம்பத்தூர் ரூபாய் 6,154 வரை உயர்வு (வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகம்). பெங்களூரிலிருந்து கோயம்பத்தூர் செல்ல ரூபாய் 650 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 3,200 ஆக மாறியுள்ளது.சென்னை - மதுரை: ரூபாய் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது.சென்னை - திருச்சிராப்பள்ளி: ரூபாய் 3,999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருநெல்வேலி: வழக்கமாக ரூபாய் 750 - ரூபாய் 1,000 ஆக இருந்த டிக்கெட், தற்போது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுகிறது.சென்னை - கும்பகோணம்: ர...
சமீபத்திய இடுகைகள்

அமைச்சர் CTR நிர்மல் குமார் குறித்து எம்பி ஆ. ராஜா செய்த அவதூறுக்கு எதிர்ப்பு மற்றும் மிசா குறித்த உணமை கூறும் அறிக்கை நிலையும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யபடவில்லை என்பது குறித்து அமைச்சர் CTR நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ஆம் தேதி பல்வேறு வருவாய் மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மாநில அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மக்ஙளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உறுவாக்கியதுடன், மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்கள் தனிப்பட்ட குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மற்றும் திமுக நாடாளுமன்ற கட்சித்தலைவர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர், அதற்கு  ஆ.ராசா   சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி...

திருமலை திருப்பதிக் கோவிலுக்காக ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள்

திருமலை திருப்பதிக் கோவிலுக்காக ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்காக திருமலைக்கு கொண்டுவந்துள்ளது  கடந்த ஜூன் மாதம் திருமலை திருப்பதிக்கு வருகை தந்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதாக அறிவித்திருந்ததன்படி, திருமலை திருப்பதியில் புரட்டாசி வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் அனந்த் அம்பானி ரூபாய் .27.5 கோடி மதிப்பிலான 25 புதிய மின்சாரப் பேருந்துகள், மற்றும் 50 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு மின்னேற்ற நிலையம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க உள்ளாா். இதன் ஒரு பகுதியாக, இந்த 25 பேருந்துகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேச மாநிலம் திருமலை திருப்பதிக்கு வந்தடைந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு பேருந்து திருமலைக்கான சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது அலுவலர்கள் அதன் செயல்பாட்டை மதிப்பீடு செய்தனர். திருமலை திருப்பதிக்கு தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதியை அளிப்பதே இந்தப் பேருந்துகளின...

5 முனைப் போட்டியில் இடைத்தேர்தல் அரசியல் களம் வெற்றி யாருக்கு வீழ்ச்சி யாருக்கு

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 ஆம் தேதி நடைபெறும் நிலையில் இடதுசாரி மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் களம் 5 முனைப் போட்டியாகியுள்ளது. - "தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் . போட்டி; தமிழக வெற்றிக்கழக கூட்டணி ஆட்சிக்கு திமுக கூட்டணியில் வென்று பின் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்"என  திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . ஆலோசனைக்கு பிறகு சண்முகம் பேட்டி தந்த நிலை,  தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, போட்டியிடும் நிலையில்  நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையில், இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெள...

தமிழ்நாடு தலைமைச் செயலகம் 100 வருடங்கள் கடந்து வந்த பாதையும் சில தடைகளும்

தமிழ்நாடு தலைமைச் செயலகம் கடந்து வந்த பாதைகள்  செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்,                            - மாதிரி அமைப்பு - 'புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்' என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்தார். தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 21.76 ஏக்கர் நிலத்தை  செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564 அரசாணையை வெளியிட்டு ஒதுகீடு செய்து நடவடிக்கையை அரசு தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் பெரும்பாலான தவெகவின் எதிர் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன.  புதிய தலைமைச் செயலகம் தேவை என்ற விவாதம் இப்போது தொடங்கியதல்ல. சென்னையின் பறந்து விரிந்த கடற்கரையில் கல்கத்தா தலைமையிடமான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மையத்தை பொதுஆண்டு 1639-ல் இப்பகுதியை நிர்வகித்து வந்த தாமர்ல வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி பிரான்சிஸ் டே வர்த்தக மையம் அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றார். அவரது ...