முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய அளவிலான மாநாடு

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய அளவிலான மாநாடு மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தேசிய அளவிலான மாநாட்டை ஏற்பாடு செய்தது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவின் மென்சக்தியும் படைப்பாற்றல் பொருளாதாரமும் வலிமையின் ஏழு தூண்களான சப்ததாராவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் பரந்த ஆக்கத்திறன் ஆற்றலைப் பயன்படுத்தவும், பொதுத் தகவல்தொடர்பை வலுப்படுத்தவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வலுவான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பதைச் செயலாளர் வலியுறுத்தினார். கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்பாற்றல் பொருளாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவின் உலகள...
சமீபத்திய இடுகைகள்

இந்தியா-நியூசிலாந்து உத்திசார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை வெலிங்டனில் நடைபெற்றது

இந்தியா-நியூசிலாந்து உத்திசார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை வெலிங்டனில் நடைபெற்றது இந்தியா - நியூசிலாந்து இடையேயான பாதுகாப்பு உத்திசார் உரையாடலின் இரண்டாவது பதிப்பு, நேற்று (2026 ஆகஸ்ட் 24) வெலிங்டனில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத், நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் திரு ரிச்சர்ட் ஷ்மிட் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், கூட்டு ராணுவப் பயிற்சி, ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அமைந்திருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டு நிலையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பகிரப்பட்ட ஒத்துழைப்பின் அடிப்படையில், ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தூதுக்குழுக்களும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு செயல்திட்டம் 2030-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலக்குகளைச் செயல்படுத்துவது குறித்தும் இதில் கவனம் செலுத்தப்பட்டது. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு...

சுதேசி முறையில் தயாரான நிபுன் கப்பல் இந்தியக் கடற்படையுடன் இணைப்பதற்குக் தயார் நிலை

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் பாதுகாப்புப் பணிக்கான திறன் கொண்ட நிபுன் கப்பல் இந்தியக் கடற்படையுடன் இணைப்பதற்குக் தயார் நிலையில் உள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள ஏதுவாக நிஸ்தார் வகையைச் சேர்ந்த முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டாவது கப்பலான நிபுன், இம்மாதம் 31-ம் தேதி இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளது. மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கப்பல் ஆழ்கடல் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவிடும். இது கப்பல் கட்டுமானம் முதல் செயல்பாட்டுச் சேவை வரை கடற்படைப் பயணத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதைக் குறிக்கிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட நிபுன் கப்பல் பாதுகாப்புத் துறை சார்ந்த கப்பல் கட்டுமானப் பணிகளில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க நிலை எட்டப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் போர் கப்பலில் தேவையான உபகரணங்களைப் பொருத்தும் பணிகள், சோதனைகள் நிறைவட...

இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பின் ஏழு விருதுகளை வென்ற தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பின் ஏழு விருதுகளை வென்றுள்ளது இந்திய வெளியீட்டாளர்கள் விருது கூட்டமைப்பின் மதிப்பிமிக்க 7 விருதுகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு வென்றுள்ளது. இந்தி, ஆங்கிலம், உருது மொழி வெளியீடுகளில் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுப் புத்தகம், பருவ இதழ்கள், புத்தகங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 7 விருதுகளில் 4 வெளியீடுகள் 2-வது பரிசையும் 3 வெளியீடுகள் 3-வது பரிசையும் வென்றுள்ளன. விருதுவென்ற புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களை வெளியீட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் டாக்டர் தீரஜ் கக்கடியா பாராட்டினார். இந்த சாதனையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தீரஜ் கக்கடியா, வெளியீட்டுப் பிரிவு பெற்றுள்ள 7 விருதுகள் அதனுடைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு சான்றாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். உயர்தரமிக்க, நம்பகமான, பயனுள்ள தகவல்களை வெளியிட இந்த அங்கீகார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும் இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதத்தில்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் இந்தாண்டிற்கான விழா வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எ...

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டம் மற்றும் மகளிர் கடடணமில்லாத பேருந்து திட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்  24.8.2026தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்றும், 'வெற்றிப் பயணம்' திட்டம் செயலாக்கம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், தற்போது முக்கியத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் அவையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி, நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் மீதான விவாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.அரசியல் காரசார விவாதங்கள்: தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு மக்கள்...

தன்னம்பிக்கைக் கொள்கை மட்டுமல்ல; போர்க்களத் திறனுக்கான சக்தி பெருக்கி:அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

 ரக்ஷா மந்திரி மற்றும் மேற்கு வங்க முதல்வர் கொல்கத்தாவில் இருந்து GRSE & YIL இன் ஐந்து விரிவாக்க திட்டங்களுக்கு பூமி பூஜை செய்கிறார்கள் தோராயமாக மதிப்பு. ரூ.3,500 கோடி, நாட்டின் கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, உலோகவியல் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள், ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’, மேக் ஃபார் தி வேர்ல்டு’ ஆகியவற்றுக்கு பெரும் உந்துதலை அளிக்கிறது. வேலைகளை உருவாக்குவதற்கும், MSMEகள் உட்பட துணைத் தொழில்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும் திட்டங்கள் தன்னம்பிக்கை என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல; இது போர்க்களத் திறனுக்கான ஒரு சக்தி பெருக்கி: ஸ்ரீ ராஜ்நாத் சிங் "வளர்ந்து வரும் 'திறன் முரண்பாடு' இந்தியா உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக உருவெடுக்க ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது" ரக்‌ஷா மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் ஸ்ரீ சுவேந்து அதிகாரியுடன் இணைந்து, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) மற்றும் யந்த்ரா இந்தியா லிமிடெட் (YIL) இன் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கான பூமி பூஜை விழாவிற்கு தல...