முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நடிகை கௌதமியை நிலமோசடி செய்த குற்றப் பணமோசடிக்கு அழகப்பன் குடும்பத்தினரைக் கைது செய்த அமலாக்கத்துறை

நடிகை கௌதமிக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்தது தொடர்பாக, அவருக்கு வேண்டப்பட்ட அழகப்பன்,வயது 66, மற்றும் அவரது குடும்பத்தினரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  சென்னை காவல்துறையில் நடிகை கௌதமி, கடந்த, 2023 ஆம் ஆண்டு அளித்த புகார்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், அவரது குடும்பத்தினருடன், சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலம் உள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவும், மகளின் எதிர்கால படிப்புக்காகவும், அந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன். அது பற்றி, என் குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்தேன். அவர் தன் பெயருக்கு பொது அதிகாரப் பத்திரம் பெற்றார். ஆனால், '6 கோடி ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது' எனக் கூறி, பண மோசடி செய்துள்ளார். இதற்கு, அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, சென்னை காவல்துறை மத்திய குற...
சமீபத்திய இடுகைகள்

இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து நில மோசடி நால்வர் கைது

இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து ரூபாய் .4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நால்வர் கைது, இராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி  மனைவி ஹாஜாபானு. இவருக்கு இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ரூபாய் .4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் காலி இடமாகவே இருந்துள்ளது. இதை போலியான பொது அதிகாரப் பத்திரம் மூலமாக  சின்னக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரும், அவருடைய கூட்டாளிகளான  செந்தில் குமார், சந்திரகுமார் , ஆகியோரும் 80 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை பத்திரம் பதிவு செய்து வாங்கிக்கொண்டு மீதமுள்ள பகுதியையும் விற்பனை செய்வதற்காக போலி பவர் பத்திரம் தயார் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நில உரிமையாளர் ஹாஜா பானு இராமநாதபுரம் நில மோசடி தடுப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில் குமார், மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.  மேலும் அதற்கு உதவிய சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை க...

நீர்நிலைகளை ஆக்கிரமித்த கட்டிடங்களால் நேபாள உயிர் சேதம் அதிகரிப்பு

திபெத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள லெண்டே கோலா ஆற்றில் ஈஷா அறக்கட்டளையின் S3 குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குழுவினர், ஜக்கி வாசுதேவின் ஈஷா மற்றும் அவரது குழு சாகா  பகுதியில் சந்தித்ததாகவும், பின்னர் அவர்கள் கைரோங்கில் இறங்குவதற்காகப் புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்: 80 பேர் (34 ஆண்கள், 46 பெண்கள்)  நாடுகள் வாரியாக: 22 அமெரிக்கா, 12 கனடா, 11 ஆஸ்திரேலியா, 9 இங்கிலாந்து, 4 ஜெர்மனி, 3 பிரான்ஸ், 3 நேபாளம், 2 நெதர்லாந்து, 2 நியூசிலாந்து, 2 சிங்கப்பூர், 2 ஸ்பெயின், தலா ஒருவர் பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றவர்கள்: 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு மருத்துவர்   ஆனால், அனைத்து தொலைப்பேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன, அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன, சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன நேபாளத்தில்:165 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 579 பயணிகள் (466 வெளிநாட்டினர் மற்றும் 113 நேபாளிகள்) காணவில்லை. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. மொ...