முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் துவக்கம்

நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், நேபாள்கஞ்ச் சாலை-நான்பாரா-பஹ்ரைச் அகல ரயில் பாதை, மின்மயமாக்கல் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தனர். 56.15 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை சுமார் ரூ.730 கோடி செலவில், அகலப் பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நான்கு ரயில் சேவைகளும் நேபாள்கஞ்ச் சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இதற்கான நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவும் நேபாளமும் வலுவான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்தடையும் பயணிகளுக்காக, ரயில்வே ஏற்பாடுகளைச் செய்து ...
சமீபத்திய இடுகைகள்

தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்த இணை அமைச்சர்

மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு, உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் முதல் “கிரீன் ஃபோர்ஜ்” வளாகத்தைத் திறந்து வைத்தார். மரபணு மாற்றப்பட்ட பயிர் புரட்சியில் இது ஒரு மைல்கல் என்று அமைச்சர் கூறினார். பிரிக்-தேசிய வேளாண் உணவு உயிரி உற்பத்தி நிறுவனத்தில் நடைபெற்ற, உயிரி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கிரீன் ஃபோர்ஜ் மையம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பரிசோதனை செய்யவும், வெவ்வேறு பகுதிகளுக்கு அவற்றின் பொருத்தத்தை மதிப்பிடவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்றும் கூறினார்.  மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வளர்ப்பதற்கும் பரிசோதனை செய்வதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்காக, ஒளி, ஈரப்பதம், வெப்பநிலையின் அளவு, உருவகப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் கொண்ட அறைகளை கிரீன் ஃபோர்ஜ் வழங்குகிறது என்று அவர் கூறினார். ...

ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள்

ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் 8 சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து தவெக அரசின் சீர்திருத்த நடவடிக்கை காவல்துறை மற்றும் DVAC விசாரணைகளை விசாரிக்கும் அதிகாரம்  அரசாணை எண்.259 ன்படி வெளியீடு! தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்கும் நோக்கில், 8 சிறப்பு நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-II) அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டம் (Prevention of Corruption Act, 1988) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை செய்யும் வழக்குகளை விசாரிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை, இந்த நீதிமன்றங்கள் துணை நீதிபதி (Sub Judge) அந்தஸ்தில் இருந்தன. தற்போது, அவை மாவட்ட நீதிபதி (District Judge) அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு, ஊழல் வழக்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கா...

ஒடிஷா பெண்ணை தாம்பரம் பகுதியில் கொன்று பிரியாணி செய்த குற்றவாளி மனிப்பூரில் கைதாகி சென்னையில் விசாரணை தீவிரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த xxxx xx (வயது 42)  இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்,  இவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் வைத்து வேகவைத்து அழிக்க முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மணிப்பூரில் கைது விசாரணை தீவிரம்                    தாம்பரம் கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில்  பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில்  தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாடெங்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (வயது 2...

இணைய - இயல் உலக ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கான அடித்தளம்

இணைய - இயல் உலக ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கான அடித்தளம்  டிஜிட்டல் உலகையும் இயல் உலகையும் இணைக்கும் இணைய இயல் உலக அமைப்புகள் (சிபிஎஸ்), இயந்திரங்களை நுண்ணறிவுடன் உணரவும், பகுப்பாய்வு செய்து பதிலளிக்கச் செய்யவும் உதவுகின்றன. மத்திய அறிவியல் & தொழில்நுட்பத்துறையின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய அளவிலான பல்துறை சார்ந்த இணைய இயல் உலக ஒருங்கிணைப்புக்கான இயக்கம் (என்எம்- ஐசிபிஎஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறை, சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்நாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள், ஆராய்ச்சி பூங்காக்கள் மூலம், முக்கியமான துறைகளில் ஆராய்ச்சிகள் நடைமுறை பயன்பாடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் புதுமையான, தற்சார்பு கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தை வலுப்படுத்துகின்றன. இயந்திரங்கள் வெறுமனே பணிகளைச் செய்வதிலிருந்து மேம்பட்டு, உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அமைப்புகளாக மாறிவரும் சூழலில், சிபிஎஸ் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கணினித் தொழில்நுட...

FQL கிரிப்டோ எனும் பிளாக் ஜெயின் வர்த்தக முறைகேடு EWO வந்த நிலையில் னி ED தானாகவே வந்துவிடும்

FQL கிரிப்டோ எனும் பிளாக் ஜெயின் வர்த்தக முறைகேடு மற்றும் MLM  மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவு, 17 பேர் கைது,           FQL கிரிப்டோ மற்றும் MLM (Multi-Level Marketing) முதலீட்டு மோசடி வழக்குகள், மேல் விசாரணைக்காகப் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு (EOW) மாற்றப்பட்டுள்ளன. தென் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆன்லைன் செயலிகளின் மோசடி தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். FQL Exchange மற்றும் VG Investment போன்ற போலி செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி எனும் மறைபொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், வெறும் 45 நாட்களில் பணம் உங்களுக்கு இரட்டிப்பாகும் என விபரம் அறியாத கிராமத்து மக்களை ஆசை காட்டியுள்ளனர். ஆரம்பத்தில் 50,000 முதல் 1,000,000 வரை பொதுமக்களிடம் இருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆன்லைன் வழியே வசூலிக்கப்பட்டுள்ளது...

தமிழ்நாட்டில் ஏ.எஸ்.பி. நிலையில் உள்ள 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவு,

தமிழ்நாட்டில் ஏ.எஸ்.பி. நிலையில் உள்ள 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து  உத்தரவு,  தமிழ்நாட்டில் ஏ.எஸ்.பி. நிலையில் உள்ள 15 ஐ.பி.எஸ்  அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் க. மணிவாசன ஆகஸ்ட் 31, 2026 இனறு உத்தரவு. காவல்துறை நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய இடமாற்றத்தின் மூலம் ஏ.எஸ்.பி  அந்தஸ்தில் உள்ள பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களின் முக்கிய உள்கோட்டங்களுக்கும் மற்றும் மாநகரக் காவல் சரகங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஊரக ஏ.எஸ்.பியாக அஞ்ஜித் நாயர், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பியாக அன்கிதா நியமனம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி-யாக இருந்த ஆஷிஷ் புனியா, மதுரை மாநகர் அண்ணா நகர் சரக ஏ.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் ஊமச்சிகுளம் உள்கோட்டத்திற்கு புதிய ஏ.எஸ்.பி-யாக தனு சிங் பொறுப்பேற்க உள்ளார். நேகா IPS - ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர், அஷ்வினி IPS - திருச்செங்கோடு துணைப்பிரிவு, ஆஷிஷ் பூனியா IPS - மதுரை அண்ணா நகர் பகுதி (இவர் இதற்கு முன்பு கா...