முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய் தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக தேர்வான பின் முதல்முறையாக சி. ஜோசப் விஜய் அங்கு நடைபெறும் 80-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தலைமைச் செயலகம் சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வெளியிடப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் (தலைமைச் செயலகம்) நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் காலை 9:00 மணிக்கு தேசியக் கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து தகைசலான தமிழர் விருதுகள் மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்குவார்.விழா நிகழ்ச்சி நிரல் விவரங்கள்காலை 8:55 மணி: முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தருதல்.காலை 9:00 மணி: தேசியக் கொடி ஏற்றிவைத்தல் மற்றும் மலர் தூவுதல்.காலை 9:05 மணி: காவல்துறை மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்பு.காலை 9:15 மணி: சுதந்திர தின உரை ந...
சமீபத்திய இடுகைகள்

பங்களாதேஷ் ரயில்வேக்காக இந்தியாவில் தயாரான ரயில் பெட்டிகள்

பங்களாதேஷ் ரயில்வேக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, பங்களாதேஷ் ரயில்வேக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் 19 எல்.எச்.பி அகலப் பாதை ரயில் பெட்டிகள் அடங்கிய தொகுப்பை 2026 ஆகஸ்ட் 12 அன்று வழங்குகிறது.  இந்தத் தொகுப்பில் 3 குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 3 குளிர்சாதனத்துடன் கூடிய இருக்கை வசதி, 11  குளிர்சாதன வசதி  அல்லாத இருக்கை உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக சாய்வு நாற்காலிகள், சிசிடிவி, குழந்தைப் பராமரிப்பு அறை மற்றும் பிரார்த்தனைக்கான அறை போன்ற சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இயக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு மேற்கூரை அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய தரநிலைகளின்படி விபத்தை  தாங்கும் வடிவமைப்பு மற்றும் 415 வோல்ட் மின் அமைப்பும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2015-16 இல் 120 பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 200 பெட்டிகள் தயாரிப்பு ஆணையின் ஒரு பகுதியாக இந்த முதல் தொகுப்பு அனு...

CJI க்கு எதிராக NALSAR மாணவர்களின் விரோதப் பிரச்சாரம் BCI பதிவுத் தடையை திரும்பப் பெற்றது

CJI க்கு எதிராக NALSAR மாணவர்களின் விரோதப் பிரச்சாரம் BCI பதிவுத் தடையை திரும்பப் பெற்றது. ஹைதராபாத் NALSAR தேசிய சட்டப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அழைக்கப்பட்டதற்கு எதிராக 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். டெல்லி ஜந்தர் மந்தர் காவல்துறை அடக்குமுறை தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இளைஞர்கள் குறித்த அவரது கருத்துகள் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி மாணவர்கள் இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்திய இந்தப் பிரச்சாரம். கரணமாக இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் கலந்து கொள்ளவிருந்த பட்டமளிப்பு விழா அழைப்பை எதிர்த்து NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நடத்திய பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களின் வழக்கறிஞர் பதிவை இந்திய பார் கவுன்சில் (BCI) தற்காலிகமாகத் தடை செய்தது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் அப்பாவிகள் என்று கூறி அந்தத் தடை உத்தரவை BCI சில மணி நேரங்களிலேயே திரும்பப் பெற்றது. NALSAR ஹைதராபாத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை விருந்தினராக வர...

எம் எல் ஏ காடடுமன்னார் கோவில் எல் இ. ஜோதிமணி கோரிக்கை முதல்வர் கவனம் பெற்றது

காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகன வசதி கார் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 12, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் பேசிய உரையில் " சொந்த வாகனம் இல்லை: தான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்கு வர பயணப்படிகள் வழங்கப்பட்டாலும், தனக்கு சொந்தமான வாகனம் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து போகிறேன். தனது காட்டுமன்னார்கோவில் தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அங்கு மக்களைச் சந்தித்து நேரில் பணியாற்ற தன்னிடம் வாகன வசதி இல்லை. தனிச் செயலாளரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்கி வேலை வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய வசதி இல்லை. தற்போதைய சூழலில் முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை இதுதான். காலணி அதாவது செருப்புக் கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அவையில் இருக்கிறார்கள், மாநிலத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத, தூய்மையான அரசு அமைய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை அரச...

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைப்பு

 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைக்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு அறிவிப்பில்   சென்னை முதன்மை அமர்வில் 10.08.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Sitting Arrangement-ல் பகுதி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு பின்வரும் வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன: 1.நீதிபதி கே. கோவிந்தராஜனுக்கு பழைய முதல் முறையீடுகள் 2.நீதிபதி என். ரமேஷுக்கு பழைய குற்றவியல் திருத்தங்கள் 3.நீதிபதி ஜி.கே. முத்துக்குமாருக்கு சேவை தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 4.நீதிபதி ஆர். ராஜேஷ் விவேகானந்தனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள் 5.நீதிபதி எஸ். ரவீக்குமாருக்கு வரி தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 6.நீதிபதி இ.மனோகரனுக்கு– பழைய சிவில் சீராய்வு மனுக்கள் 7.நீதிபதி எஸ். அல்லிக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள் இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனி நீதிபதி ஆக அமர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த மாற்றம் 10 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு மற்றும் வழக்கு ...

மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை சேர்க்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதமரருக்கு கடிதம்

தெலங்கானா மாநில அரசு செய்ததுபோல், மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 9 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியவர். அதில் SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 ஜாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் ஜாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றைப் பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது. இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்: முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய ஜாதிப் பட்டியல்கள்  எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற...

FCRA திருத்தச் சட்டத்திற்கு JPC குழு அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களுடன் அமைப்பு

 பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் மசோதா, 2026  நாடாளுமன்ற கூட்டு  குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, விரிவான ஆய்வுக்காக இது 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு  அனுப்பப்பட்டது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வார இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.        தொண்டு செய்வதாக NGO என்ற பெயரை வைத்துக்கொண்டு தொண்டே செய்யாத தொண்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் பெரும் வெளிநாட்டு நிதிகளுக்கு வருமானவரித் துறைக்கு சரியான வரவு செலவு கணக்குக் காட்டாமல் இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள், மற்றும் பல நடவடிக்கை காரணமாக மற்றும் பாஜகவின் நரேந்திர மோடி அரசைக் கவிழ்க்க பெரும் நிதியை NGO க்கள் மூலம் இரக்கப்பட்டுள்ளது, இதற்கு முடிவு கட்டவே இ...