முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீதிமன்ற பிடியாணையில் கைதான ரமேஷ் விவகரத்தில் லாட்டரி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலையீடு தவறு மன்னிப்பு கேட்க தேவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ரமேஷ் கைது செய்யப்பட்டது கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றத்தால் நிலுவையிலிருந்த வழக்கு பிடியாணையன Warrant அதை காவல்துறை நிறைவேற்றியதே தற்போதைய கைது    மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் மகன் ரமேஷ் சேதுராமன்.  2012-13 ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களைத் தாக்கியதாகவும், சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கிற்காக மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் வழக்கில் ஆஜராகவில்லை என்பதால் , நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணைப்பில் வெளிவர முடியாத பிடியாணையை  பிறப்பித்தது. சுமார் 14 வருடங்களாக உத்தரவு நிலுவையில் இருந்த நிலையில், காவல்துறை சிறப்புப் படை அமைத்து தற்போது இவரைக் கைது செய்தது. இவரது சகோதரி டாக்டர் பிரதீபா  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது தந்தை உருவாக்கிய மருத்துவமனைச் சொத்துக்களை ரமேஷ் அபகரிக்க முயன்றதாகவும், அவரது கைதிற்கு இதுவே உண்மையான பின்னணி என்றும் தெரிவித்துள்ளார்         மதுரை மீன...
சமீபத்திய இடுகைகள்

உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது

தமிழ்நாடு மாநிலம் சார்பாக உச்சநீதிமன்ற வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசின் புதிய மூத்த வழக்கறிஞர்களுக்கு வரிசைப்பட்டியல் வெளியானது  தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் நடக்கும் வழக்குகளை நடத்துவதற்கான புதிய  மூத்த வழக்கறிஞர் வரிசை பட்டியலை அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது. அரசாணை G.O.(Ms.) No.276, Home (Courts-IV) Department, dated 14.08.2026 மூலம், அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் பரிந்துரைத்த 35 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட புதிய வரிசைப் பட்டியலை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த புதிய வரிசைப் பட்டியலில் Attorney General for India, Solicitor General of India மற்றும் அனைத்து Additional Solicitors General உட்பட மொத்தமாக பரிந்துரைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்குகளை நடத்த மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான Standard Operating Procedure (SOP) பின்பற்றப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான கட்டணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி செயல்படுத்தப்படும் என்றும் அரசு அந்த அரசாணை மூலம் தெரிவித்துள்ளது .தமிழ்நாடு அர...

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வர் கு.ராமச்சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் தகை சால் பதக்கம்

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!  கு.ராமச்சந்திரன், த/பெ.குழந்தைவேலு 03.03.2026 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முதல்வராக பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் 13.07.2022 ஆம் தேதி முதல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சென்னை நகர சிறப்பு பிரிவு-1, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி அயல்பணியாக விருதுநகர் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் சிவகங்கை, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும், மேலும் திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம் & ஒழுங்கு பிரிவிலும் காவல்துறை உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தில் பிறந்து பள்ளி படிப்பை (வாராப்பூர் மற்றும் TELC புதுக்கோட்டை ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் (B.com & M...

78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கு, மறைவுக்குப் பின் வழங்கப்படும் 13 விருதுகள் உட்பட, 78 வீரதீர விருதுகளுக்கு குடியரசுத்  திருமதி திரௌபதி முர்மு அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார். அவையாவன: மறைவுக்குப் பின் வழங்கப்படும் 7 விருதுகள் உட்பட 9 கீர்த்தி சக்ரா விருதுகள்; கூடுதல் சௌரிய சக்கரா 1; மறைவுக்குப் பின் வழங்கப்படும் 1 விருது உட்பட 19 சௌரிய சக்ரா; 5 கூடுதல் சேனா பதக்கங்கள்; மறைவுக்குப் பின் வழங்கப்படும் 5 பதக்கங்கள் உட்பட 36 சேனா பதக்கங்கள்; 3 நவ் சேனா பதக்கங்கள்; 5 வாயு சேனா பதக்கங்கள் .2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் (ஜனாதிபதி) பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தகைசால் சேவைக்காக 3 பேருக்கும், சிறந்த சேவைக்காக 17 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் காவல் பதக்கங்களும் 15 பேர...

80 ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் முதல்வரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று 15 ஆகஸ்ட் 2026 டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வரலாற்று சாதனை சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த முறை விழா முழுவதும் 'வந்தே மாதரம்' மையக் கருப்பொருளாக இருந்தது பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டை மற்றும் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மலர்களைத் தூவி மரியாதை செலுத்தியது, 21 குண்டுகள் முழங்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட '105mm லைட் ஃபீல்ட்' துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்பட்டு தேசியக் கொடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது, இந்த ஆண்டு விழா "வளர்ந்த இந்தியா 2047-க்கான யுவ சக்தி" (Youth Power for Viksit Bharat) என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது சக்தி கி சப்த தாரா எனும் 7 சீர்திருத்தங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உற்பத்தி, விவசாயம், த...