பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி தற்போதைய இந்திய மத்திய அமைச்சரவையில் மத்தியக் கல்வி அமைச்சராகக் (கூடுதல் பொறுப்பு) ஏற்றார், நீட்-யுஜி தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து தர்மேந்திரப் பிரதான் பதவியை ராஜினாமா செய்ததால், நேற்று இவருக்கு இக்கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக, இவர் வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராக கல்வித் துறைக்கு கூடுதலாகப் தற்போது பொறுப்பு வகிக்கிறார் கர்நாடகாவின் தார்வாட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலம் விஜயபுரால் 27 நவம்பர் 1962 ல் பிறந்து, ஹூப்பள்ளியில் உள்ள கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய பிரகலாத் ஜோஷி தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் கர்நாடகாவின் ஹூப்ளி இத்கா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தைப் பெற்றார். நாடாளு...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி அதை குடியரசுத் தலைவர் மாளிகை ஏற்றுக்கொண்டது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த நீட் உள்ளிட்ட தேர்வு கசிவு ஊழல்களுக்கு பொறுப்பேற்று அவர் விலகியிருப்பது, பாஜக அரசின் கல்வித் துறை நிர்வாகத்தின் முழுமையான தோல்வியை வெளிச்சமிட்டுக் காட்டும் நிகழ்வு பாஜக அரசுக்கு ஒரு பின்னடைவு அதில் சந்தேகமில்லை. பல நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள், கரப்பான் பூச்சி ஜனதா போன்ற சில இயக்கங்களின் உறுதி நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் பாஜக எதிர் நிலை ஆதரவு ஆகியவை இறுதியில் அரசை பின் வைத்துள்ளன. “தேசவிரோத சக்திகள்” என முத்திரை குத்தும் அரசின் முயற்சிகள் தோற்றுப்போனதோடு, மாணவர்களின் உண்மையான கோபத்தை அடக்க முடியவில்லை. தர்மேந்திரப் பிரதான் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தேர்வு அமைப்புகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான குளறுபடிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைப் பாதித்ததற்கு பொறுப்பேற்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்த அரசின் அணுகுமுற...