முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம். தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிறப்பித்த உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர்  மற்றும் ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு  அல்லது தேவை முடியும் வரை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார்,  ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய இடுகைகள்

மத்திய கல்வித் துறை செயலாளராக புதிதாக: நரேஷ் பால் நியமனம்

மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டார். நீட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களான Fast Track Courts  அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளரான வினீத் ஜோஷி மாற்றப்பட்டார், அதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நீட் (NEET) போன்ற முக்கிய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் மேலும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதே இந்த விரைவு நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும்.  வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டார்.புதிதாக : நரேஷ் பால் கங்வார் (உயர் கல்வி) மற்றும் டி.கே. அனில் குமார் (பள்ளி கல்வி) பொறுப்பேற்பு.       இதனிடையே வினாத்தாள் கச...

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 முக்கிய ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகள் பணியிட மாற்றம், அரசின் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் ஐஏஎஸ் உத்தரவு  அதன்படி எம். விஜயலட்சுமி, IPS: திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை டி.ஐ.ஜி (DIG)-யாக இருந்தவர், சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.ஆர். சிவபிரசாத், IPS: சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் குப்தா, IPS: தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். டி. சண்முகப்பிரியா, IPS: சென்னை சிபிசிஐடி (CB-CID) மத்திய மண்டல எஸ்பி-யாக இருந்தவர், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு (DVAC) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.      பி.ஆர்.மீரா, IPS: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)- ஆக இருந்தவர், சென்னை டிஜிபி தலைமையகத்தின் அலுவலக மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு உதவி காவ...

வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது. மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (30) என்பவரின் தந்தையார் கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி வருவாய் பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூபாய் .5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. என்பவர் தனது பின்னர் அது ரூபாய் .4,000 ஆகக் குறைக்கப்பட்டது.  லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறையில் (DVAC) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு துறை அலுவலர்களின் பொறிவைப்பு திட்டப்படி, பினாப்தலீன் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் புகார்தாரர் அரசு சாட்சிகள் முன்னிலையில் ஹேமலதாவிடம்  வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் வைத்து, ஈஸ்வரியிடம் இருந்து...

பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம்

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தை அரசு இன்று நடத்தியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம்  இன்று (19. 07. 2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூட்டிய இந்தக்கூட்டத்தில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் உட்பட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 58 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகவுரை ஆற்றி, அனைத்துத் தலைவர்களையும் வரவேற்றார். அ...

மால்டோவா அதிபருடன் குடியரசுத்தலைவர் இருதரப்பு பேச்சு

மால்டோவா அதிபருடன் குடியரசுத்தலைவர் இருதரப்பு பேச்சு நடத்தினார் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, முதற்கட்டமாக இன்று காலை மால்டோவாவின் சிசினாவ்  சென்றடைந்தார். குடியரசுத்தலைவருடன் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் தினேஷ் சர்மா, மக்களவை உறுப்பினர் திரு விஜய் பாகெல் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சிசினோவ் சர்வதேச விமான நிலையத்தில் குடியரசுத்தலைவரை மால்டோவா துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான திரு மிஹாய் பாப்சாய் வரவேற்றார். பின்னர் மால்டோவா அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், அதிபர் மேடம் மையா சாந்து குடியரசுத்தலைவரை அன்புடன் வரவேற்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் நிலையில் ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டனர். இருதரப்புக் கூட்டாண்மை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அப்போது பேசிய குடியரசுத்தலைவர், மால்டோவாவிற்கு முதன்முறையாக...

இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம்

விரிவான மறுவாழ்வு மூலம் யாசகர்கள் இல்லாத இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வை கண்ணியத்துடனும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடனும் உறுதி செய்வதற்காக விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு (SMILE) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாசகர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மறுவாழ்வு, திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆலோசனை மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 216 நகரங்களில் ஸ்மைல் யாசகர்கள் மறுவாழ்வுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2030-31 நிதியாண்டுக்குள் மொத்தம் 295 நகரங்களை திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2026-31 நிதியாண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட நிலையான நிதிக் குழுவின்...