முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

IIS குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளின் பயிற்சி நிறைவுப் பட்டமளிப்பு விழா

ஐஐஎஸ் அதிகாரிகள், நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கிறார்கள்: தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனமான ஐஐஎம்சி, இன்று (01.09.2026) 2009, 2023, 2024 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) குரூப் ‘ஏ’ பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவையும் பட்டமளிப்பு விழாவையும் நடத்தியது. ஐஐஎம்சி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு முதன்முறையாக ஐஐஎஸ் பயிற்சிப் பெறுபவர்களுக்கு முதுகலைப் பட்டங்களை வழங்கியதன் மூலம், இந்த விழா ஐஐஎம்சி-க்கும் இந்தியத் தகவல் பணிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது. இந்த விழாவில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் பேசுகையில், மக்கள் தொடர்பு என்பது நிர்வாகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். அது மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பரிணமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தவறான தகவல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை புதிய சவால்களை உருவாக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த திருப்புமுனையாகவும் உருவெடுத்து வருகிறது என்று அவ...
சமீபத்திய இடுகைகள்

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர செயல்திறன் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2026 செப்டம்பர் 01) புதுதில்லியில் 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்தரச் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தின் போது, ​​பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் ஆகியோருக்கு, இந்த நிறுவனங்களின் முக்கிய சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி, தயாரிப்புத் திறன்களை மேம்படுத்துதல், மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரித்தல், முக்கியத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார். தமது உரையில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில் சூழலமைப்பை உருவாக்கும் அதே வேளையில் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசுப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்...

மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்,சென்னையில் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தார்,  விமான நிலையத்திலிருந்து கார் மற்றும் பிரச்சார வேன் மூலமாக மேட்டூர் அணைக்குச் சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்களும் விவசாயிகளும் திரண்டு வந்து அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டூர் அணை திறப்புபாசனத்திற்கு நீர்: டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்காகக் காவிரி நீரை அணையிலிருந்து திறந்து வைத்தார். அணையில் தேங்கிய காவிரி ஆற்று நீரை மனமுருகி வேண்டி, மலர் தூவி தண்ணீரைத் திறந்து வைத்தார்.   காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையை செப்டம்பர் 1, 2026 இன்று காலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மேட்டூர் அணைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வமான வருகை இதுவாகும். அணையின் நீர்மட்டம் 88 அடியைத் தாண்டியதைத் தொடர்ந்து, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேச்சேரி மற்றும் மேட்டூர் பகுதிக...

அரசியல் ராஜதந்திர வழியில் இசக்கி சுப்பையா நடத்திய சட்டப் போராட்டம்

ஏற்கனவே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது சடடமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமாவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் மனுவாக அளித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்,26,மே 2026 ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார் இடைத்தேர்தல் நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் மற்றும் தாமதம் காரணமாக, தனது தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், பொது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சட்டமன்றப்பேரவைச் செயலக வட்டாரங்களின்படி, ஒருமுறை ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட பிறகு அதைத் திரும்பப் பெற சட்டத்தில் எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது : இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, இ...

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு -அலசல் ஆய்வுக் கட்டுரை

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள  அறிவிப்பு !?, -அலசல் ஆய்வுக் கட்டுரை,.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை (Demand No. 37) மீதான விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புத் தாக்கல் செய்த ஆகஸ்ட் 31, 2026 அன்று  இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டதில். கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கள்ளச்சாராய உற்பத்தியை முழுமையாக ஒழிப்பதற்காகவும், போலி மதுபானப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு உத்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன, கள்ளச்சாராயத் தொழிலை கைவிட்டு, திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் பொருளாதார மறுவாழ்விற்கான தனிநபர் நிதியுதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கள்ளச்சாராய நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தடுக்கவும் காவல் மற்றும் ஆயத்தீர்வை துறைகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகனங்கள் மேம்படுத்தவும். டாஸ...