மதுரை மாவட்ட கிராம உதவியாளரிடம் ரூபாய்.67.25 கோடி சொத்து வருமானத்திற்கு மீறியது என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு மதுரை மாவட்டம் கிராம உதவியாளர் (தலையாரி) பணி தனது வருமானத்தை மீறி ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் செக் கானுாரணியைச் சேர்ந்தவர் பாண்டி வயது 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளததில் கிராம உதவியாளராகப் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்தது.குறித்து விசாரித்த குழுவினர், ஆவணங்களின் அடிப்படையில் ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதி செய்த நிலையில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராகப் பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி அவரது பெயரிலும், அவர் மனைவி ராணி, மற்றும் மகன்கள் பெயர்களிலும...
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்யத் தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், சங்கர் கணேஷ் என்பவரை சிறையிலடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் - துணைக் கண்காணிப்பாளர்., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் துணைக் கண்காணிப்பாளரைக் கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்ய...