முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஜி.கே.மணி ச ம உ வை பாமகவிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ்

ஜி.கே.மணி ச ம உ வை பாமகவிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜி.கே.மணிக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் துவங்கிய நிலையில் பாமகவில் தந்தை நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கும், மகன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸு க்குமான மோதல்  சமாதானத்தை எட்டாமல் தீவிரமடைகிறது. தேர்தல் நேரம் நெருங்கியும் தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில் இருதரப்பும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''என்னை துரோகி என அன்புமணி கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் நான் தான் பேசினேன். அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்த நேரத்திலும் நானே அவருக்காக பேசினேன். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் வைத்து பேசியதால்தான் இந்த பிரச்சனையே முழுமையாக ஆரம்பித்தது'' எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜி.கே....
சமீபத்திய இடுகைகள்

இந்தியாவில் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.

இந்தியாவில் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும். காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்பே, நாடாளுமன்ற மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்குள்ள நடைமுறைக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.1925-ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய மெட்ராஸ், பம்பாய், கொல்கத்தா மாகாணங்களில்  ஹிந்து, பௌத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதி இஸ்லாமியர்களுக்குப் பொ...

தவெக தலைவர் விஜய் விஜயம் செய்யும் விஜயமங்கலம் கூட்டம்

தவெகவில் இணைந்த முன்னால் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்  20 நாட்களில் கோயம்பத்தூர் ஈரோடு சார்ந்த  கொங்கு மண்டலத்திற்கு நடிகர் விஜயை அழைத்து, சொந்த மாவட்ட மண்ணில் பிரமாண்டத்தை காட்டுகிறார். ஆளுங்கட்சி திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தின் செல்வாக்கைக் காட்ட முனையும் கே. ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் பிரமாண்டமான பொதுக் கூட்டம் எனும் மக்கள் சந்திப்புக்கு 7 ஏக்கர் பரப்பளவில் நடக்கும்  ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கே. ஏ. செங்கோட்டையன் நேரடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். அதில் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 75 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பெரிய கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியானதும்,  தவெக ஆதரவாளர்களிடையே  உற்சாகம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த அனுமதியை ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா வழங்கினார்.  அனுமதியுடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன...

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது அவமதிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,'' என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஏழுமலை கிராமம் ராமர.விக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர்  மாதம்., 3 ஆம் தேதியில் கார்த்திகைதா தீபத்தை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது காவல்துறையினர் கடமை என உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல்துறை ஆணையர்  லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்  யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக...