முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கேட்டு’ - ED பதில் மனு

‘டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழல் சோதனைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கேட்டு’ - அமலாக்கத் துறை பதில் மனு அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஊழல் சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது முதல் தவறு. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்திய ஊழல் சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில், அமலாக்கத் துறையினர் சார்பில் பதில் மனுவை இன்று தாக்கல் செய்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, விற்பனை பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது....
சமீபத்திய இடுகைகள்

சென்னை ஐஐடி யில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை ஐஐடி யில் பேசிய கருத்துக்கள் .  சென்னை ஐஐடி யில் படிக்கும் 30 சதவீதம் ஆந்திரப் பிரதேச மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நமது பொருளாதாரம் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா தற்போது கொண்டுள்ளது.இந்தியப் பிரதமர் என்னிடம் சொன்னார் நாம் (5,00,000) ஐந்து லட்சம் மெகாவாட் மின்சார  உற்பத்தியை சூரிய ஒளி மூலம் பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதில் 136 ஜிகாவாட்ஸ் மட்டும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து உற்பத்தி செய்யத் திட்டம். ஒருகாலத்தில் 1 யூனிட் தயாரிக்க 14 ரூபாயாக இருந்ததை இன்று 2 ரூபாயாக மாற்றியாகி விட்டது.  நரேந்திர மோடியின் ஒரு சிரிய தொடக்கம் டிஜிட்டல் இந்தியா கரன்சி ரூபே மூலம் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 16 ஆயிரம் கோடி ரூபே பரிவர்த்தனை நடந்து அதன் மூலம் 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு காகித பணமே இல்லாமல் கைமாறிய தொகை.  1 ட்ரில்லியன் = 83 லட்சம் கோடி ரூபாய் 200 லட்சம் கோடி 2014 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதா...

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை வழக்கில் நாளை விசாரணை அரசு சார்பில் திருத்த மனுவை தாக்கல் செய்தது

TASMAC அலுவலகத்தில் ED சோதனை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்  S.M சுப்பிரமணியன் அமர்வுக்கு மாற்றம் !நாளை சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை !       டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திருத்த மனுவை தாக்கல் செய்கிறது. இந்த மனு நாளை  நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.     மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி, 2025 வரை சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின்(TASMAC) தலைமையகத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) நடத்திய சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் தமிழ்நாடு அரசு தனது பிரார்த்தனையை திருத்தியுள்ளதுமுழு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையையும் சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அமலாக்கத்துறை தனது ஊழியர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கவும் டாஸ்மாக் தாக்கல் செய்த இரண்டு தனிநபர் ரிட் ...

பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரென சஞ்சய் ராவத் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி 75 வயதை நிறைவு செய்யும் நிலையில் விரைவில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தகவல்.  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகி இன்னும் ஓராண்டு காலம் நிறைவடைவதற்குள் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அடுத்த பிரதமர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகின்றன.இந்தத் தகவலை மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் சிவ சேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியின் முக்கியத் தலைவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மும்பையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தவர், “பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று. தனது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை அவர் கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு எப்போதுமே சென்றதில்லை. நாட்டின் பிரதமரை மாற்ற ஆர்.எஸ்.எஸ். தலைமை விரும்புகிறது. எனவே அவர் தனது பதவியை விட்டு விலக உள்ளார்” எனத் தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர...

இந்தியக் கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்' - நாக்பூரில் பிரதமர் பெருமிதம்

'இந்தியக் கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்' - நாக்பூரில் பிரதமர் பெருமிதம்  ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என நாக்பூர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.   மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான டாக்டர் கேசவ பலராம் ஹெட்ஹெவர், குருஜி எம்.எஸ். கோல்வர்க்கர் ஆகியோர் நினைவிடமான ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு மாதவ் நேத்ராலயா பிரிமீயம் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோடி பிரதமரான பின்னர் ஆர்எஸ்எஸ் தலைமையகம் செல்வது முதல்முறை  அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: நாட்டில் ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளும் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தினோம். மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்கியதோடு இல்லாமல், நாட்டில் செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். அதேபோல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கைகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம்...

உணவுக் கலாச்சார மாற்றம் காரணமாக புதிதாக உருவான இட்லி சந்தைகள்

பெருகும் இட்லிச் சந்தைகள் அவிநாசி மற்றும் ஈரோடு பகுதியில் உள்ளது போல அணைத்து ஊர்களில் இப்போது ஒரே இடத்தில் தயாரிப்பாகும் இட்லி தான் அணைத்து உணவகங்களிலும் விற்பனை ஆகிறது. தமிழன் உணவாக மட்டுமே இருந்த இட்லி இப்போது சர்வதேச இட்லி தினம். என 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி சர்வதேச இட்லி தினத்தை  கொண்டாடி வருகிறது.. அதே போல உலகின் பல பகுதிகளிலும் தற்போது இந்த சர்வதேச இட்லி பிரபலமான நிலையில் அது வெவ்வேறு வகைகளில் அவரவர் விருப்பம் போல் களைகட்டுகிறது. முதலில் ஈரோடு கருங்கல்பாளையம் இட்லி சந்தை :- திருநகர் காலனியில் தான் இட்லி சந்தை செயல்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், அருகே உள்ள கால்நடை சந்தைக்கு வருகிற வியாபாரிகளை இலக்காக வைத்து ஒரு சிலர் இட்லி வியாபாரம் செய்தனர். இப்போது இது இட்லி சந்தையாகவே விரிவடைந்தது. காலை 7 மணி முதல் இரவு வரை நடக்கும் சந்தையில் இட்லி வியாபாரம் மாலை 5 மணி அல்லது சில கடைகளில் இரவு 10 மணி வரை களை கட்டும். ஈரோடு மாநகரின் பல ஹோட்டல்களுக்கும் இட்லி மொத்தமாக இங்கிருந்து தான் போகிறது. இந்த இட்லி சந்தையில் ஒருநாளைக்கு சர்...

டெல்லியில் பாஜகவின் மஹிளா மோர்ச்சா சார்பில் இராணி வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் ஹிந்தியில் அரங்கேற்றம்

டெல்லியில், இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் வகையில், சரித்திர புகழ்மிக்க சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்றாவது இராணி வீரமங்கை வேலுநாச்சியார் வீர வரலாற்றை ஹிந்தியில் எடுத்துரைக்கும் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் மேதகு ராணி வேலு நாச்சியாரின் புத்தக வெளியீட்டு விழாவில், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஆற்காடு நவாப் கூட்டணியை மைசூர் ஹைதர் அலி படைத் தளபதி திப்பு சுல்தான் ஆதரவில் வென்று சிவகங்கை சமஸ்தானத்தின் விடுதலை பெற்ற வரலாற்று வீரமங்கை இராணி வேலு நாச்சியார் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரையாற்றிய நிகழ்வு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரி வல்லப D.S.K மதுராந்தகி நாச்சியாரை கௌரவித்தார். வீரமங்கை இராணி வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த நிகழ்வில்  சேதுபதி இராணி இராஜேஸ்வரி நாச்சியார் இராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி ஆகியோருக்கும் மரியாதை செய்த அமைச்சர் ராஜ்நாத்சிங். இராணி வேலு நாச்சியரின் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பாரதிய ஜனதா கட்சியி மஹிளா மோர்...