முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வேட்புமனு தாக்கல் நான்கு தினம் மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் தகவல்

நான்கு நாட்கள் விடுமுறை: தேர்தல் ஆணையத்தின் வேட்புமனு பற்றிய முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் 2026 ல் வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுமென ECI தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் - ஏப்ரல் மாதம் .6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய் கிழமை ), ஏப்ரல் மாதம் .1 ஆம் தேதி (புதன்கிழமை ), ஏப்ரல் மாதம் .3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ), ஏப்ரல் மாதம் .5 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) விடுமுறை தினம் என்றும், மற்ற நான்கு நாள்களில் (மார்ச் மாதம் 30 , ஏப்ரல் மாதம் . 2, மற்றும் 4, மற்றும் 6 ஆம் தேதிகளில் ) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக 3 நாள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது புது அறிவிப்பு ஆகும்.
சமீபத்திய இடுகைகள்

14 அமைச்சர்கள் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுங்கிய அதிமுக

அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளைத் தவிர்த்து,   தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) - 5,  ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி- 2, ,  ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் -2,   பச்சமுத்து உடையார் எனும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி - 2,  கே.சி.திருமாறன் ஜியின் தேசிய பார்வடு பிளாக் -1, மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் -1, என  மேலும் சில சிறிய கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 37 முதல் 40 தொகுதிகளில் தாமரையில் களம் இறங்குகின்றனர்  இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு முதற்கட்டமாக 23 வேட்பாளர்களை முதலில் அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடியில்:-  எடப்பாடி K. பழனிசாமி,    வேப்பனஹள்ளியில்:  கே.பி.முனுசாமி, திண்டுக்கல்:-  திண்டுக்கல் C. சீனிவாசன்,      நத்தம் :-  நத்தம் இரா. விசுவநாதன்,      தொண்டாமுத்தூர்:-   S.P. வேலுமணி,    குமாரபாளையம்:-  பி.தங்கமணி,    இராயபுரம்:-  D. ஜெயக...

வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள், எண்ணெய் வள பூமியைப் பிளந்தன

சிறப்புச் செய்திகள் : ரெங்கநாதன் திருப்பதி                                                           " பாலைவனத்து வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள்,    எண்ணெய் வளமான பூமியைப் பிளந்தன! கரிய புகைக்குள், கத்தார் அழுகை மறைந்தது!  நிழல் தேடிய மரங்கள் கூட, நெருப்பாய் எரிந்தன! நிம்மதி தேடிய மனிதர்கள் குழந்தைகள்,அனாதையாய் நின்றனர்! வளைகுடா மண் வரலாற்றில் கறை படிந்தது! போரின் முடிவில், பூமிக்கு மிஞ்சியது எரியும் தழும்புகள்,  அதில்                                விளிம்பில் சமையலுக்கு காத்திருக்கும் எரிவாயு அடுப்புகள் உலகம் முழுவதும்.  பூமி உருண்டையைப் பொரி உருண்டை யாக்கி உடைத்துத் திண்ணும் பசியில் வல்லாதிக்க நடவடிக்கை" .              "அமெரிக்கா (USA) இல்லை யெனில், நேட்டோ (NATO) காகிதப் புலிதான். அணு ஆயுதம் க...