கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது . கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம் வழங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அட...
மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன. வங்காள மொழிக் கவிஞர் பங்ஹிம் சந்திர சட்டர்ஜி 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி எழுதிய ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. ’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல் உத்தரவுகளைக் கொண்டுவந்துள்ளதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப்பூர்வமான முழுப் பாடல் பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான...