முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி  நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை ! கள்ளக்குறிச்சியில் விபத்து இழப்பீட்டுத் தொகையான ரூபாய் .38.79 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரது மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்தத் தண்டனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. மோசடித் தொகை  ரூபாய் .38.79 லட்சம்! நீதிமன்ற ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறை! மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை! விதித்து தீர்ப்புகள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை (MCOP வழக்குகளில் ) போலி ஆவணங்கள் மற்றும் நீதிபதியின் போலிக் கையெழுத்து மூலம் மோசடி செய்த முன்னாள் நீதிமன்றப் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை நீதித்துறை நடுவர் நீதிம...
சமீபத்திய இடுகைகள்

தாராபீத் நகரில் 17 ஆம் தேதி அதிகாலை தனியார் ஹோட்டல் தீ விபத்து பலி 7 பிரதமர் நிவாரணம்

மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம்  மாவட்டம் தாராபீத் நகரில் 17 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை ஒரு தனியார் ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தாராபீத் காளி கோயில் அருகே உள்ள நான்கு மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில் அதிகாலை 4:30 முதல் 5:00 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு  காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததால், நச்சுப் புகை வேகமாக பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களாவர்.  தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஏணிகள் மூலம் கட்டிடத்தில் சிக்கியிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டனர் காயமடைந்தவர்கள் உடனடியாக ராம்பூர்ஹத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்...

தஞ்சாவூர் ஒரு சட்டவிரோதப் போராட்டமும் மூன்று குற்றங்களும்.- உண்மை அலசல்

தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விசிக வின் ஃப்ளக்ஸ் பேனர்கள், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூட்டணிக் கட்சியாக ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிகவினர், அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் செயகின்றனர், இதுவே முரணாகும், எங்கள் கட்சியின் பேனரைக் கிழித்துவிட்டார்கள் என விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். அதற்கு எப்போதுமே காவல்துறை அனுமதி கொடுக்க மாட்டார்கள், எனவே அனுமதி இல்லாமல் நடந்த அந்த மறியலைக் கலைக்கவே காவல்துறையினர் அங்கு வருகின்றனர், ஒரு இளைஞன்,சாலை மறியல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேற பைக்கில் இருந்தபடியே முன்னேற  என்ன அவசரவேலையோ !  அல்லது மாற்று வழி இல்லையோ தெரியவில்லை!  அவன்  விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 26) மற்றும் திருக்கனூர்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 27)  மறியலுக்கு ஆதரவு தரப்பு, அந்த இளைஞனோடு ஏதோ வம்பாகப் பேச, பதிலுக்கு இளைஞனும் பேச, மையமாக நுழைந்த  காவலர்களும் ஏதோ பேச. அந்த ஏதோ அது ஏதோ என்ற ஹம்மிங்கின் பின்னணி தான் எப்போதுமே F.I.R. ன் நேரமும...

பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார். தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது தேசிய அளவில் 65 நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நியமனங்களின் முக்கியப் பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேசியத் தலைவர்: நிதின் நபின் தேசியப் பொருளாளர்: பியூஷ் கோயல் (மத்திய அமைச்சர்) தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர்: பி.எல். சந்தோஷ் இவர் பதவக நீடிக்கிறார் சமூக ஊடகப் பொறுப்பாளர் தீபக் மஸ்கே இவர் அமித் மால்வியாவுக்குப் பதிலாக நியமனம் ஊடகப் பொறுப்பாளர் அனில் பலூனி மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 8 பேர் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டேசுனில் பன்சால்பிப்லாப் குமார் தேவ்அருண் சிங் உள்ளிட்டோர ஆவர் தேசியத் துணைத் தலைவர்கள் 13 நபர்கள் அதில் முன்னாள் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளடக்கிய 13 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்....

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரை

சென்னை எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்றவை எதிர்காலத்தை வடிவமைக்கும்: குடியரசு துணைத்தலைவர் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு: குடியரசு துணைத்தலைவர் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (16.08.2026) கலந்துகொண்டார். அப்போது, ​​'தேசமே முதன்மையானது - தேசமே முக்கியமானது' என்ற கொள்கையின் அடிப்படையில், தங்கள் அறிவு, திறன்கள், புதுமைச் சிந்தனைகள் ஆகியவற்றைத் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்துமாறு பட்டம் பெறும் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டங்களைப் பெறும் நிகழ்வு மட்டுமல்ல என்றார். இது பல ஆண்டுகால விடாமுயற்சி, ஒழுக்கம், கற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுவ...

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் S.சர்வேஷ்ராஜ் ஐ.பி.எஸ் சகோதரர் S.ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் (DVAC) தேடப்படும் முக்கியக் குற்றவாளியும், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருமான ரத்தேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் எனும் Look-out Circular பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் TASMAC நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்புக் ஙண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மதுபான பிராண்டுகளுக்கான அனுமதி, பார் உரிம ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் ஆகியவற்றில் இவர் தனது செல்வாக்கைப...

புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகில் பழங்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் . 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி (வயது 53) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை 24 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குருவிக்குளம் அருகில் உள்ள கொக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் காளிராஜ் (வயது 32).காரணம்: அவரது தந்தையின் பழைய வீட்டைப் புதுப்பித்து, அதற்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இணைய வழியில் விண்ணப்பித்து, பதிவு செய்து ரூபாய் . 5,575 கட்டணத்தையும் செலுத்தியுள்ளார் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்னதாக இடத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை (Site Inspection Report) அனுப்ப வேண்டும் எனக் கூறி, அதற்கு வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூபாய் . 2,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி த...