டாஸ்மாக் முறைகேடு வழக்கில் S.சர்வேஷ்ராஜ் ஐ.பி.எஸ் சகோதரர் S.ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் (DVAC) தேடப்படும் முக்கியக் குற்றவாளியும், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருமான ரத்தேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் எனும் Look-out Circular பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் TASMAC நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்புக் ஙண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மதுபான பிராண்டுகளுக்கான அனுமதி, பார் உரிம ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் ஆகியவற்றில் இவர் தனது செல்வாக்கைப...
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகில் பழங்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் . 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி (வயது 53) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை 24 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குருவிக்குளம் அருகில் உள்ள கொக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் காளிராஜ் (வயது 32).காரணம்: அவரது தந்தையின் பழைய வீட்டைப் புதுப்பித்து, அதற்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இணைய வழியில் விண்ணப்பித்து, பதிவு செய்து ரூபாய் . 5,575 கட்டணத்தையும் செலுத்தியுள்ளார் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்னதாக இடத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை (Site Inspection Report) அனுப்ப வேண்டும் எனக் கூறி, அதற்கு வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூபாய் . 2,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி த...