இளம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அதிக அளவிலான வாய்ப்புகள், வலுவான சர்வதேசத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், 2026 ஆகஸ்ட் 21 அன்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை-2-ல் நடைபெற்றது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தத் திரைப்பட விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவாக, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2026 நவம்பர் 20 முதல் 28 வரை, கோவாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன், இளம் மாணவர்கள், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இந்தியத் திரைப்படத் துறையின் அதிகம் அறியப்படாத சாதனையாளர்களுக்கு, அதிக வாய்ப்புகள் வழங்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் திறமையாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படு...
புனேவில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார் 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று (21.08.2026) மகாராஷ்டிராவின் புனேவில், இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிக்குழுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவின் கருப்பொருளான “மீள்திறன் கொண்ட எதிர்காலத்திற்காகப் புதுமை, ஒத்துழைப்பு, மாற்றங்கள்” என்பதை எடுத்துரைத்தார். அதன் நான்கு தூண்களான மீள்திறன் கொண்ட டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலமைப்புகள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் திறன் மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இன்று, உலகம் ஒரு ஆழமான தொழில்நுட்ப மாற்றத்...