முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மால்டோவா அதிபருடன் குடியரசுத்தலைவர் இருதரப்பு பேச்சு

மால்டோவா அதிபருடன் குடியரசுத்தலைவர் இருதரப்பு பேச்சு நடத்தினார் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, முதற்கட்டமாக இன்று காலை மால்டோவாவின் சிசினாவ்  சென்றடைந்தார். குடியரசுத்தலைவருடன் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் தினேஷ் சர்மா, மக்களவை உறுப்பினர் திரு விஜய் பாகெல் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சிசினோவ் சர்வதேச விமான நிலையத்தில் குடியரசுத்தலைவரை மால்டோவா துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான திரு மிஹாய் பாப்சாய் வரவேற்றார். பின்னர் மால்டோவா அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், அதிபர் மேடம் மையா சாந்து குடியரசுத்தலைவரை அன்புடன் வரவேற்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் நிலையில் ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டனர். இருதரப்புக் கூட்டாண்மை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அப்போது பேசிய குடியரசுத்தலைவர், மால்டோவாவிற்கு முதன்முறையாக...
சமீபத்திய இடுகைகள்

இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம்

விரிவான மறுவாழ்வு மூலம் யாசகர்கள் இல்லாத இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வை கண்ணியத்துடனும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடனும் உறுதி செய்வதற்காக விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு (SMILE) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாசகர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மறுவாழ்வு, திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆலோசனை மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 216 நகரங்களில் ஸ்மைல் யாசகர்கள் மறுவாழ்வுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2030-31 நிதியாண்டுக்குள் மொத்தம் 295 நகரங்களை திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2026-31 நிதியாண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட நிலையான நிதிக் குழுவின்...

இந்திய-மால்டோவா வர்த்தக மன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை

இந்திய-மால்டோவா வர்த்தக மன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று மால்டோவா நாட்டின் நகரில் நடைபெற்ற இந்திய-மால்டோவா வர்த்தக மன்றக் கூட்டத்தில், மால்டோவா குடியரசுத்தலைவர் மாண்புமிகு திருமிகு மாயா சாண்டுவுடன் இணைந்து உரையாற்றினார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் அடிப்படையில் கூட்டாண்மைகளை நாடுகிறோம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். தொழில்முனைவு, டிஜிட்டல் மாற்றம், உற்பத்தித் துறையில் சிறந்து விளங்குதல் மற்றும் இளம், திறமையான தொழிலாளர் சக்தி ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், சீர்திருத்தததை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டம், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், திறமையான மனித வளம் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடனான வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மால்டோவா கொண்டிருப்பதால், அது இந்திய வணிகங்களுக்கு ஒரு முக்கியமான இடமாக விளங்க...

புது தில்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் மாணவர்கள் போராட்டம் காரணமாகப் பதற்றம்

புது தில்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் தீவிரப் போராட்டம் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.  பேரணியைத் தடுத்து நிறுத்த டில்லி காவல்துறை தடியடி  நடத்தியதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தியது. இந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் 118 பாதுகாப்புப் பணியாளர்களும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.  திங்கட்கிழமை இரவு போராட்டக் களத்தில் இருந்த தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் மேடைகளைக் காவல்துறை அகற்றியது. இருப்பினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மொபைல...

பழனி மடச் சொத்து மோசடியில் ஜடக் கும்பல் அட்டகாசம்

150 ஆண்டுகள் பழமையான பழனி தண்டபாணி மடத்திற்கும் விழுப்புரம் எம்.தண்டபாணி மகன் முருகதாஸுக்கும் இந்தThirupugal Swamigal Murugadas Swamigal @ Dhandapani Swamigal Trust மடம் டிரஸ்ட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?, மோசடிக் கும்பல் விழுப்புரம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள முருகதாஸின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு,  அவரது வீடு சிபிசிஐடி காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. காலையில் தொடங்கி இரவு வரை சோதனை நீடித்தது. தலைமறைவாக உள்ள முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிசிஐடி காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் காக்கும் ஐயனார் களவு போன கதைபோல விற்பனை உரிமை இல்லாத மடம் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்காமல் HR&CE சட்டம் மற்றும் விதிமுறை மீறல்,    அடுத்து டிரஸ்ட் சட்டம் விதிமுறை மீறல்.(TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS- ACT, 1959   (Tamil Nadu Act 22 to 1959) மற்றும் THE INDIAN TRUSTS ACT, 1882) மற்றும் ஆள்மாறாடடம் மோசடி காரணம் ஊழல் லஞ்சம் லாவண்...