மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பூர் ஊராட்சிச் செயலாளர் ரூபா மீது தொடரப்பட்ட ஜாதிய வன்கொடுமை எனும் PCR வழக்கு பொய்யானது என காவல்துறை விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அது காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. கம்பூர் ஊராட்சியில் தூப்புறவு ஊழியர் சசிகலா என்பவர், ஊராட்சிச் செயலாளர் ரூபா தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் மேலூர் காவல்துறையினரிடம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்ததன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலரால் ரூபா தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து தீவிர புலனாய்வு விசாரணை நடத்தினர். அதில், சசிகலா குறிப்பிட்ட தேதியில் ரூபா அங்கு பணியிலேயே இல்லை என்பதும், தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக முந்தைய ஊராட்சிச் செயலாளரின் தூண்டுதலின் பேரில் இந்த பொய்யான புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் உண்மையில்லை என முடிவு செய்யப்பட்டு, 'Mistake of Fact' என்ற அடிப்படையில் எஸ்சி/எஸ்டி (PCR) வழக்கு முற்றிலு...
தலையை சந்திக்கும் தளபதி தவெகவின் அரசியல் எழுட்சி நடவடிக்கை தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் - அஜித்குமார் சந்திப்பு மற்றும் திமுகவின் அரசியல் முரண்பாடுகள், தமிழக அரசியல் களம் தற்போது ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில் நிற்கிறது. தனி விமானம் அல்லாமல் பயணிகள் விமானத்திலேயே இலண்டன் சென்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இதற்காக நேற்று இரவு 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் (EK 547) பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் செல்ல உள்ளார். இந்த விமானம் மூலம் துபாய் சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து லண்டன் செல்லும் அதிநவீன ‘டபுள் டக்கர்’ முதல் வகுப்பு விமானத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.அதேவேளையில், முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன்-தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற அரசு உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரின் இந்த அரசுமுறை லண்டன் பயணத்தின் மூலம், தமிழ் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிற்துறை வளர்ச்சியும் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரி...