முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும். கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.  அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22...
சமீபத்திய இடுகைகள்

26 நாட்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த மத்திய அமைச்சர்

சமூக ஆர்வலராக சில அரசியல் குழுவின் மூலம் அறியப்படும் சோனம் வாங்சுக் 26 நாட்களுக்குப் பிறகு அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த பாஜகவின் தலைவர்கள் முன்னிலையில் அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்," என வாங்சுக்  குறிப்பிட்டுள்ளார். பல நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளார். "மிக விரைவில் ஒரு தனி வீடியோவில் இந்த நிபந்தனைகள் குறித்து நான் விரிவாக விளக்குவேன். நீங்கள் எங்கும் எந்தவொரு வன்முறையும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என வாங்சுக் அதில் எழுதியுள்ளார்.சமூக விரோ...

மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்பு

மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்பு    ரவ்னீத் சிங் பிட்டு இந்தியாவில் மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்திய ஜனாதிபதி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தலில் இவரை முன்வைத்து களமிறங்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். ரவ்னீத் சிங் பிட்டு (ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம். தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிறப்பித்த உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர்  மற்றும் ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு  அல்லது தேவை முடியும் வரை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார்,  ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வித் துறை செயலாளராக புதிதாக: நரேஷ் பால் நியமனம்

மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டார். நீட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களான Fast Track Courts  அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளரான வினீத் ஜோஷி மாற்றப்பட்டார், அதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நீட் (NEET) போன்ற முக்கிய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் மேலும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதே இந்த விரைவு நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும்.  வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டார்.புதிதாக : நரேஷ் பால் கங்வார் (உயர் கல்வி) மற்றும் டி.கே. அனில் குமார் (பள்ளி கல்வி) பொறுப்பேற்பு.       இதனிடையே வினாத்தாள் கச...

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 முக்கிய ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகள் பணியிட மாற்றம், அரசின் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் ஐஏஎஸ் உத்தரவு  அதன்படி எம். விஜயலட்சுமி, IPS: திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை டி.ஐ.ஜி (DIG)-யாக இருந்தவர், சென்னை ஊர்க்காவல் படை டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.ஆர். சிவபிரசாத், IPS: சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் குப்தா, IPS: தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP)- ஆக இருந்தவர், சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். டி. சண்முகப்பிரியா, IPS: சென்னை சிபிசிஐடி (CB-CID) மத்திய மண்டல எஸ்பி-யாக இருந்தவர், சென்னை மேற்கு சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு (DVAC) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.      பி.ஆர்.மீரா, IPS: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)- ஆக இருந்தவர், சென்னை டிஜிபி தலைமையகத்தின் அலுவலக மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு உதவி காவ...

வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் .4,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது. மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (30) என்பவரின் தந்தையார் கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி வருவாய் பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூபாய் .5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. என்பவர் தனது பின்னர் அது ரூபாய் .4,000 ஆகக் குறைக்கப்பட்டது.  லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறையில் (DVAC) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு துறை அலுவலர்களின் பொறிவைப்பு திட்டப்படி, பினாப்தலீன் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் புகார்தாரர் அரசு சாட்சிகள் முன்னிலையில் ஹேமலதாவிடம்  வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் வைத்து, ஈஸ்வரியிடம் இருந்து...