முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காவலர் பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை பாமக தலைவர் அறிக்கை

பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை, படி வழங்குவதில் பாகுபாடு: காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் அறிக்கையில். :-  காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு  பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க.  அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல. கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&ஆம்  ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்...
சமீபத்திய இடுகைகள்

உதயநிதி கைதை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு மீறிய திமுக தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல பிரிவுகள், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து திமுகவின் உதயநிதி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் ஆஜராகி, உதயநிதியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் எண்ணமில்லை என்றும், விசாரணைக்குப் பிறகு அன்றைய தினமே காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிமன்றம், விசாரணையை முடித்தவுடன் அன்றே காவல் நிலைய பிணையில் விடுவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், தேவையான போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதயநிதியையும் அறிவுறுத்தியது.  தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த பி...

போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் மூலம் 29 கோடி மக்களிடம் விழிப்புணர்வு

போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் மூலம் 29 கோடி மக்களிடம் விழிப்புணர்வு! இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்  போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற திட்டத்தைச்  செயல்படுத்தி வருகிறது. 2020 ஆகஸ்ட் 15-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 29.32 கோடிக்கும் அதிகமான மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இதில் 11.20 கோடி இளைஞர்களும், 7.92 கோடி பெண்களும் அடங்குவர். கல்வி நிறுவனங்களில் 21 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 768 மறுவாழ்வு மையங்கள் மற்றும் அடிமைத்தனம் ஒழிப்பு மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 8.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 294 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பயனாளிகள் உதவி பெற 14446 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம். மேலும், ‘NMBA ஆப் 2.0’ செயலி மூலம் நிகழ்நேரப் புகார்களும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கண்...

ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சலுக்கான ஐசிஏஆர்-ன் உள்நாட்டுத் தடுப்பூசி

இந்தியாவின் உயிரியல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சலுக்கான ஐசிஏஆர்-ன் உள்நாட்டுத் தடுப்பூசி ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் வைரஸால் (ASFV) ஏற்படும் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வளர்ப்புப் பன்றிகள் மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கும் மிக மோசமான, எல்லைகளைக் கடந்து பரவக்கூடிய விலங்கு நோய்களில் ஒன்றாகும். இந்தியாவில் இந்நோய்க்கான சிகிச்சையோ, வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ இல்லாத நிலையில், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் விரைவான நோயறிதல், பாதிக்கப்பட்ட விலங்குகளை அழித்தல் மற்றும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில், போபாலில் உள்ள ஐசிஏஆர்-தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்தின் (ICAR-NIHSAD) விஞ்ஞானிகள், பன்றிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு 'MA-104 செல் வரிசை' சார்ந்த, வீரியம் குறைந்த ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல்  தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். எம்ஏ -104 செல் வரிசையில் தனித்துவமான மரபணு நீக்கங்களைக் கொண்ட, வீரியம் குறைக்கப்பட்ட புதிய ...

பாங்கிபூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற பி. கே எனும் பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்  இந்திய அரசியலின் மிக முக்கியமான முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், தற்போதைய தீவிர அரசியல்வாதியும் மற்றும் ஜன் சூராஜ் கட்சியின்  நிறுவனர் பேச்சுவழக்கில் 'பிகே' PK என அழைக்கப்படுபவர், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற பிகார் மாநில பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத்  தேர்வானார். 1995 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின்  கோட்டையாகக் கருதப்பட்ட பாங்கிபூர் தொகுதியில், ஜன் சூராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 64,151 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இது ஜன் சூராஜ் கட்சியின் முதல் வெற்றி: கடந்த 2025 ஆம் ஆண்டு பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஜன் சூராஜ் கட்சிக்கு, பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாகவும் அக்கட்சியின் முதல் தேர்தல் வெற்றியாகவும் அமைந்தது. பிஹார் முழுவதும் சுமார் 3,000 கி.மீ தூரம் "ஜன் சூராஜ் பாதயாத்திரை" ...

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் உதயநிதி ஸ்டாலின் கைது

அவதூறாகப் பேசிய புகாரில் திமுக சார்ந்த எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் நகர் கிழக்கு காவல் துறையினர் எப்ஐஆர் பதிவு குற்ற எண். 287/2026-ல், பிஎன்எஸ் பிரிவு 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.       BNS 352: பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அல்லது குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டே ஒருவரை அவமதிப்பது BNS 79: கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைக்கும் வகையில் வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுதல் BNS 196: சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் செயல் BNS 192: பொது அமைதியைக் குலைக்கும் வகையில், கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் ஆத்திரமூட்டுவதுBNS 296(b): பொது இடங்களில் ஆபாசமான பாடல்களைப் பாடுதல் அல்லது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் BNS 61: குற்றத்தைச் செய்வதற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஈடுபடும் குற்றவியல் சதி BNS 351(2): குற்ற நோக்கத்துடன் ...

பச்சேரி சி.ஆர்.எஸ். உள்ளிட்ட பலர் தவெகவில் இணைப்பு விழா

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தவெக வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்கனவே நல்ல பொறுப்பு அக்கட்சியில் வகித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அதிகரிக்கும் நிலை, சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பக்கத்தில் ஆகஸ்ட் 2, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் ஙார்பில் பச்சேரி சி. ஆர். சுந்தர்ராஜன் ஏற்பாட்டில்  மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போல நடைபெற்றது. சிவகங்கை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதகுபட்டியில் கனிமம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு  இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மேடையில் உரையாற்றியபோது, மதியம் உணவாக பிரியாணி வழங்கும் இடத்தில் கூடிய மக்கள் கூட்டம் அலைமோதியது சிவகங்கையில் முதலில் தவெக சார்பாக நடந்த பிரம்மாண்ட அரசியல் நகர்வு! தவெகவில் 10,000 பேரை இணைக்க ரூபாய் . 2 கோடி செலவில் பிரம்மாண்ட மேடை தமிழக வெற்றிக் கழகத்தின்  உட்கட்சி பலத்தையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் வகையில்,  பிரம்மாண...