மால்டோவா அதிபருடன் குடியரசுத்தலைவர் இருதரப்பு பேச்சு நடத்தினார் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, முதற்கட்டமாக இன்று காலை மால்டோவாவின் சிசினாவ் சென்றடைந்தார். குடியரசுத்தலைவருடன் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் தினேஷ் சர்மா, மக்களவை உறுப்பினர் திரு விஜய் பாகெல் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சிசினோவ் சர்வதேச விமான நிலையத்தில் குடியரசுத்தலைவரை மால்டோவா துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான திரு மிஹாய் பாப்சாய் வரவேற்றார். பின்னர் மால்டோவா அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், அதிபர் மேடம் மையா சாந்து குடியரசுத்தலைவரை அன்புடன் வரவேற்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் நிலையில் ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டனர். இருதரப்புக் கூட்டாண்மை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அப்போது பேசிய குடியரசுத்தலைவர், மால்டோவாவிற்கு முதன்முறையாக...
விரிவான மறுவாழ்வு மூலம் யாசகர்கள் இல்லாத இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வை கண்ணியத்துடனும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடனும் உறுதி செய்வதற்காக விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு (SMILE) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாசகர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மறுவாழ்வு, திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆலோசனை மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 216 நகரங்களில் ஸ்மைல் யாசகர்கள் மறுவாழ்வுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2030-31 நிதியாண்டுக்குள் மொத்தம் 295 நகரங்களை திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2026-31 நிதியாண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட நிலையான நிதிக் குழுவின்...