முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர் நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டில்  மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ₹100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  குளிர் நீரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியாளர்களின் வருமானத்தை வலுப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டலை மேம்படுத்தவும், ஏற்றுமதி சந்தைகளில் நுழையவும் வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதில் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் திரு உமர் அப்...
சமீபத்திய இடுகைகள்

தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை

தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா உரையாற்றினார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா இன்று மொராதாபாத்தில் உள்ள தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.  பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அவர், இந்த விழா மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும் என்றும், அது பல வருடங்களாகச் செய்த உழைப்பு, ஒழுக்கம் மற்றும் கல்விச் பணியினை பிரதிபலிக்கும் என்றும் கூறினார்.  பட்டமளிப்பு என்பது கல்விப் பயணத்தின் முடிவு மட்டும் அல்ல, புதிய பொறுப்புகளும், சேவையின் தொடக்கமும் ஆகும். மாணவர்கள் சமூகத்துக்கும் நாட்டிற்கும் முக்கியமான பங்களிப்பு செய்யும் பொறுப்பு கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  நாட்டு முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இன்றைய காலத்தில் இளம் தொழில்துறையினர் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர். தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வியை முன்னேற்றுவதற்கான பங்க...

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்து பெண் நிர்வாகிக்கு வழங்கி நடவடிக்கை

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ? திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து  திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவரு...

சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு

சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒரு வழக்கில் தோல்வியுற்றனர்.  அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1421 நாட்கள் சுமார் 4 ஆண்டுகள் காலதாமதமானது. அதாவது தாமதம் செய்தனர் காரணம் கேட்டால் அவர்கள் கூறிய பதில் "கோப்புகள் தொலைந்து விட்டது!" என்பதே  தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்ஷவா மற்றும் நீதிபதி G.அருள்முருகன் இணை அமர்வு அதை கடுமையாக கண்டித்தது:  "போதுமான காரணமே இல்லை மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது"  "இது ஒட்டு மொத்த அலட்சியமாகவே இருக்கலாம், அல்லது எதிர் தரப்புடன் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்!" அல்லது லஞ்சம் வாங்க பேரம் பேசுகின்ற முறையாகக் கூட இருக்கலாம்  "அரசு என்பதால் தாமதம் மன்னிக்கப்படும் என்று நினைக்கக் கூடாது" இந்த வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் இது அலட்சியமா, திட்டமிட்ட சதியா எனக் கண்டறிய வேண்டும் இந்தத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் உச்ச நீதிம...

வி.கே.சசிகலாவுக்கு கட்சியை விற்பனை செய்த மதரை சக்கரவர்த்தி

பாஜகவால் பழி வாங்கப்பட்டவர் பத்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் பதவி வரும் எனக் காத்திருந்த ஜெ உடன் பிறவா சகோதரி  வி.கே.சசிகலா நடராஜன் புதிதாக கட்சியைத் தொடங்கவில்லை! ஆனால் விலைக்கு வங்கி அதில் இணைந்துள்ளார் .மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி.  இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார். அதைத்தான் தனது கட்சிப் பெயராக விலைக்கு வாங்கி வி.கே.சசிகலா நடராஜன் அறிவித்தார். அதாவது அஇபுதமமுக கட்சியை வாங்கி இணைந்துள்ளார்.     அதுவே தேர்தல் ஆணையத்தின் பதிவு. கூறும் உண்மை.      இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 2019 ஆம் ஆண்டு ...