முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம்

 தமிழ்நாட்டில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம். சிங்கப்பெண் சிறப்புப் படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநவ் நியமனம். வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம். கோயம்பத்தூர்    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமனம். அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிருந்தா நியமனம். விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம். திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர்  மாவட்ட காவல...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு முதலமைச்ச ர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு..முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் தனிச் செயலாளர்கள் ஆட்சிப்பணி நிர்வாகத்தில் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு  இதில் துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடைப பராமரிப்பு , போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அரசு துறைகளிலிருந்து, முதல்வர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை, துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் விபரங்களை, முதல...

ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

மனித உயிர்களின் பாதுகாப்பைக் கருதி, வெறிநாய்க்கடி பாதித்த மற்றும் ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளனர்  பதிவு செய்யப்பட்ட வெறிநாய்கடி அதாவது ராபிஸ் மரணங்களுக்கு ஈடாக குடித்து விட்டு போதையில் நிகழ்த்தும் வாகன விபத்து மரணங்கள் அதிக எண்ணிக்கை உள்ளது.   இதற்கு என்ன செய்யலாம்.? குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க வேண்டும். ஆண்டிற்கு சராசரியாக 5000 ராபீஸ் மரணங்கள் பதிவாகின்றன. பதிவு செய்யப்படாத மரணங்களும் உள்ளது. அதையும் சேர்த்தால் 10,000 என்ற அளவில் கூட இருக்கலாம். ஒவ்வொரு உயிரும் நாட்டிற்கும் அதைவிட சார்ந்த குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு உயிரிழப்பு என்பது அந்த குடும்பத்தை முற்றிலும் சிதைத்து விட கூடும். ராபீஸ் மரணங்களுக்கு தீர்வு அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கருணைக்கொலை செய்வதும் அந்த இனத்தை அழிப்பதும் தீர்வு அல்ல. அது அயல் நாட்டு நாய்கள் வளர்க்க உதவுமே தவிர நம் நாட்டு இன நாய்கள் அழிகப்பட்டுவிடும் அபாயம் உள்ளதை இங்கு கவனிக்க வேண்டும். ராபீஸ் மரணங்களுக்கு யாரெல்லாம் காரணம்? இதற்கு காரணம் முறையாக நாய...

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணி உள்ளிட்ட 17 பேருக்கு வாய்ப்பு வரலாம்

தவெக அரசு அமைச்சரவை விரிவாக்கம்.. விஎஸ் பாபு, சத்யபாமா உள்ளிட்டோருக்கு  காத்திருக்கும் வாய்ப்பு    முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இரண்டொரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, சேலம் தொகுதி தமிழன் பார்த்திபன், இராணிப்பேட்டை தொகுதி தாஹிரா உள்ளிட்டோர் தவெக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. வேளாண்மை, உயர்கல்வி, ஹந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை, வனத்துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 19 நபர்களை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 19 பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை, !சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது  அதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 18, மே 2026 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 10 வழக்கறிஞர்கள் மற்றும் 9 மாவட்ட நீதிபதிகள் (ju...

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகி டாக்டர் விஜயகுமார் ரெட்டி

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகியாக அப்பல்லோ மருத்துவமனை தொழிலதிபர் விஜயகுமார் ரெட்டி நியமனம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 2026 மே மாதம் 7 ஆம் தேதி , அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின் படி அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் ' ராஜாசார் வாரிசு முத்தையா செட்டியார் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி' (Kumara Rajah Muthiah School of Traditional Arts and Crafts) என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக,  தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கத்தின் செயலாளரான மீனா முத்தையா கடந்த மே 2, 2026 ஆம் தேதி அன்று காலமானதை அடுத்து இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தொழிலதிபர் அய்யப்பன் எனும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் 5 நபர்கள் இணைந்து சென்னை உயர...