முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பாதை மாறிய பயணம் அதிமுகவில் தலைவர்கள் கட்சி மாறும் நிலை

" அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே  ஒட்டி உறுவார் உறவு. " ஔவையின் மூதுரை 17 :  தற்போது கட்சி மாறி வருகிறவர்களுக்கெல்லாம் ஒதுங்கி வழிவிட்டு வழிவிட்டு இப்போது வந்தவர் யாரு? காலகாலமாக கட்சியை வளர்த்தவர் யாருன்னு தெரியாத அளவுக்கு வந்தவர்களின் ஆதிக்கம் திமுக மற்றும் பாஜகவில் வலுத்துப் போனது, திமுக மற்றும் பாஜக ஆரம்ப காலக் கட்சிக்காரர்களை சோகமாக மனசொடிஞ்சி நிக்கும் நிலைமைக்குத் தள்ளியது, மூன்று முறை முதல்வர் தேனி மாவட்டம் பெரியகுளத்து தேனீர் கடைக்காரர், பின்  நகராட்சித் தலைவர் "O. பன்னீர் செல்லம் திமுக வில் இணைந்தார்" அதற்கு முன், பல அமைச்சர்கள் ஆர் எம். வீரப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,   ஏ.வ.வேலு,     எஸ்.ரகுபதி, தென்னவன்,   ஈரோடு S. முத்துச்சாமி,  அனிதா ராதாகிருஷ்ணன்,    ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,    செந்தில்பாலாஜி,  சேகர் பாபு, ஃ நிலோபர் கபில்,  அன்வர்ராஜா,  தங்கதமிழ்ச்செல்வன், வ. மைத்திரேயன், பி.எச். மனோஜ் பாண்டி...
சமீபத்திய இடுகைகள்

தவெக தலைவர் நடிகர் விஜய் மீதான விவாகரத்து வழக்கு அவரது அரசியலைப் பாதிக்காது மேலும் மெருகூட்டும்

குடும்ப நல வழக்கு விவரங்களை இணையத்தில் காணவே இயலாது. பெயர்கள் பெருக்கல் குறியீட்டில் தான் இருக்கும். அது HMOP ஆனாலும் SMOP ஆனாலும் DVC ஆனாலும்  தனி மனித குடும்ப நல வழக்கு மனு எப்படி இணையத்தில் பரவி்யது. செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கு மனு பொது வெளியில் விதைத்தவர்கள் யார்? மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து சூமோட்டோவாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விஜய் ஒரு சினிமா நடிகர் அவர் சினிமாவில் டூயட் பாட வேண்டும், நடிகை இல்லாமல் நடிகர் இல்லை, அது அரசியலில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகட்டும் எஸ்.எஸ்.ஆர். ஆகட்டும். நடிகர் விஜயகாந்த் நடிகை ராதிகா ஆகட்டும் நடிகை பானுமதி ஆகட்டும், நடிகர் கமலஹாசன் நடிகை கௌதமி ஆகட்டும், சினிமா உலகம் தனி அரசியலுக்கு தகுதி நேர்மை, தூய்மை, ஊழலற்ற நிலை மடடுமே தலைவருக்கு மனைவி யார்? துணைவி யார்? உப துணைவி யார் என சமூகம் பார்க்காது, ஆந்திராவில் என்.டி. ராமாராவுடன் சிவபார்வதி வந்த பின்னர் தான் அதிக மக்கள் வாக்களித்தனர்,  இதுபோல 200 உதாரணம் கூறமுடியும், அரசியல் நேர்மை மட்டுமே தேவை அது தவெக தலைவர் நடிகர் விஜயிடம் அதிகம் உள்ளதாகவே மக்கள் நம்பும் நிலையை நாம் காண்கிறோம்....

அமலாக்கத்துறை சிக்கலில் காங்கிரஸ் ப.சிதம்பரம், ஊழல் வழக்கில் சிக்கப்போகும் அமைசசர் கே. என்.நேரு

அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன், நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி  அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது  ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள்...

தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போகும் நிலை தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், 2026  ஏப்ரல் மாதத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை வெளியீடு, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் எனத் தகவல்  இது தொடர்பாக ஆலோசனை நடத்த, “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் குழு, சென்னை வந்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளின் பதவிக்காலம், 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் மக்கள் புதிய அரசுகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வாயிலாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, 5 மாநிலங்களிலுள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 5 கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., கொண்ட தேர்தல் பணி அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், 497 செலவி...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT. மற்றும் CBSE உறுவாக்கிய கணித வினாத்தாளும்

உச்ச நீதிமன்றத்தின்  கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT. 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு; அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை.  சமூக அறிவியல் பாடப்புத்தகம் பகுதி 2 NCERT தற்போதுள்ள நடைமுறையின்படி, 24-02-2026 அன்று 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகமான எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியோண்ட், தொகுதி II ஐ NCERT வெளியிட்டது. பாடப்புத்தகத்தைப் பெறும்போது, ​​"நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" (பக்கம் 125 முதல் 142 வரை ) என்ற தலைப்பில் சில பொருத்தமற்ற உரைகள் மற்றும் தீர்ப்பின் பிழைகள் கவனக்குறைவாக அத்தியாயம் எண் 4-ல் ஊடுருவியிருப்பது (எழுதியவர் தவறு அச்சடித்தவர் தவறு இல்லாமல் எப்படி ஊடுருவும் ) கவனிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையும் (கல்வி அமைச்ச...