முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' சிலர் வரவேற்பும் பலர் எதிர்ப்பும்

 திரைப்படக் கவிஞர் வைரமுத்துவுக்கு 'ஞானபீடம்' கவிஞர் வைரமுத்துவுக்கு `ஞானபீடம்' விருது அறிவிப்பு. அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவதாக ஞானபீடம் விருது பெறும் தமிழ் இலக்கியவாதி பாடலாசிரியர் வைரமுத்து. "இதுவரை தமிழ் பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்று குறை இப்போது கழிந்தது. இந்த விருது அவரது வயதைக குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்" எற்கிறார்  வைரமுத்து நெகிழ்ச்சிக்கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஏழு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் வென்றவர் கவிஞர் வைரமுத்து திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: என வைரமுத்து தகவல்  இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிப்பு 1975 ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002 ல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இவ்விருத...
சமீபத்திய இடுகைகள்

ஐந்து மாநிலங்கள் உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு

ஐந்து மாநிலங்கள்  உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு மொத்தத் தொகுதிகள்  234 ல் ஒரே கட்டமாக நடக்கும்  தேர்தல் வாக்குப்பதிவு நாள்  23.04.2026 பதிவான வாக்குகள் எண்ணிக்கை  04.05.2026 ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026 ஆம் தேதி,  வேட்புமனு தாக்கல் முடிவு – 06.04.2026  ஆம் தேதி,    தமிழ்நாட்டு திமுக அரசு உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தனது அதிகாரத்தை இன்று மாலை முதல் இழக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை காபந்து அரசு தான் செயல்பாட்டில் இருக்கும். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அமையவுள்ள புதிய ஊழலற்ற அரசு அமைவதற்கு மக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டிய காலம் இது தான்,  புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் இனி வெளியிட முடியும். எனவே தற்போதுள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்கள் என அனைவரும் இன்று மாலை அதிகாரத்தை இழக்கவுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி நாளாகவே இன்றைய தினம் பார்க்கப்படுகிறது. காபந்து அரசாக மாறும் தமிழ்நாடு அரசு...

அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர் நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டில்  மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ₹100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  குளிர் நீரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியாளர்களின் வருமானத்தை வலுப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டலை மேம்படுத்தவும், ஏற்றுமதி சந்தைகளில் நுழையவும் வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதில் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் திரு உமர் அப்...

தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை

தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா உரையாற்றினார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா இன்று மொராதாபாத்தில் உள்ள தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.  பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அவர், இந்த விழா மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும் என்றும், அது பல வருடங்களாகச் செய்த உழைப்பு, ஒழுக்கம் மற்றும் கல்விச் பணியினை பிரதிபலிக்கும் என்றும் கூறினார்.  பட்டமளிப்பு என்பது கல்விப் பயணத்தின் முடிவு மட்டும் அல்ல, புதிய பொறுப்புகளும், சேவையின் தொடக்கமும் ஆகும். மாணவர்கள் சமூகத்துக்கும் நாட்டிற்கும் முக்கியமான பங்களிப்பு செய்யும் பொறுப்பு கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  நாட்டு முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இன்றைய காலத்தில் இளம் தொழில்துறையினர் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர். தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வியை முன்னேற்றுவதற்கான பங்க...

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்து பெண் நிர்வாகிக்கு வழங்கி நடவடிக்கை

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ? திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து  திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவரு...