முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு,

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட த...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை ராஜினாமா செய்தனர்

திமுக ஆட்சியில் தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவரான ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை தற்போது தான் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் காலியாகின. திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக அப்போதய முதல்வர் மு. க.ஸ்டாலின் செயல்பட்டார். அவருக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதாரம் அறிந்தவர் என  பலரும் கூறும் ஜெ. ஜெயரஞ்சன், ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருந்தனர் .அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த  பின் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் ...

வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளிடமிருந்து பொது மன்னிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை இபிஎஃப்ஓ வரவேற்கிறது

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்  வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளிடமிருந்து பொது மன்னிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை இபிஎஃப்ஓ வரவேற்கிறது மத்திய அரசின் 2026-ம் ஆண்டிற்கான பொது மன்னிப்புத் திட்டம் (Amnesty Scheme), வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிலையை முறைப்படுத்திக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை வழங்குகிறது. வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையை  நிர்வகித்து வரும் அதே வேளையில், மத்திய அல்லது மாநில அரசு போன்ற உரிய அரசிடமிருந்து முறையான விலக்கு அறிவிப்பைப் பெறாத நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 6 மாத காலத்திற்கு இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும். இத்திட்டம் 2026 ஜூன் 29-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ் உள்ள நிபந்தனைகள் மீதான விலக்கு: குறைந்தபட்ச ஊழியர் எண்ணிக்கை மற்றும் நிதியத்தின் அளவு தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு...

இந்திய அணுசக்தி துறையின் சாந்தி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

இந்திய அணுசக்தி துறையின் சாந்தி சட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நிதி ஆயோக் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான நீடித்த அணுசக்திப் பயன்பாடு, மேம்பாடுச் (சாந்தி) சட்டத்தை  செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நிதி ஆயோக், 2026 ஜூலை 10 அன்று புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் 'சம்ரஸ்தா' அரங்கில் நடத்தியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் செயல்பாட்டு கட்டமைப்பு குறித்து விவாதிக்க, அரசு, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திரு. பங்கஜ் அகர்வால் (செயலாளர், எம்ஓபி), திரு. கன்ஷ்யாம் பிரசாத் (தலைவர், சிஇஏ), திரு. குர்தீப் சிங் (சிஎம்டி, என்டிபிசி), டாக்டர் அன்ஷு பரத்வாஜ் (திட்ட இயக்குநர், நிதி ஆயோக்), திரு. ராஜ்நாத் ராம் (ஆலோசகர், நிதி ஆயோக்), டாக்டர் கரிமா சர்மா (தலைவர், எஸ்எஸ்எஸ்டி, டிஏஇ),  திரு. ஹரி குமார் (சிறப்பு விஞ்ஞானி, இயக்குநர் ஏஇஆர்பி) உள்ளிட பல்வேறு ம...

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம் இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது. தூண் I: அரசியல், ராஜ்ய ரீதியிலான ஈடுபாடு. பிரதமர்கள், அமைச்சரவை, அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான அடிப்படையில் சந்திப்புகளையும் பரஸ்பரப் பயணங்களையும் திட்டமிட முயற்சித்தல். வழக்கமான வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல் மூலம் பயனுள்ள உயர் மட்ட ஒத்துழைப்பை உறுதி செய்தல். பொதுவான நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த, தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையேயான சந்திப்புகளையும...

வியட்நாம் படகு விபத்து பாரதப் பிரதமர், தமிழ்நாடு முதல்வர் இரங்கல்

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியட்நாமிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து நபர்கள் பலியானதாகவும், கேரளத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் பலியானதாகவும் இந்தியத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது அதிகாரிகள் தரப்பு முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு கவிழ்ந்தது. அதில் 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது. வியட்னாமில் நடந்த படகு விபத்தில் திருச்சிராப்பள்ளி, பழநி, தர்மபுரி, சேலம், வேலூரை சேர்ந்த 7 பேர் பலியாகினர். திருச்சிராப்பள்ளி கிராப்பட்டி அருணாசலம் நகர்...

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டம்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார், 1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம்  வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, ...