முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

விசாரணை வளையத்தில் ஊழல்,மோசடி மூலம் சொத்துக் குவித்துக் கைதான அமைச்சரின் முன்னால் உதவியாளர்

ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகமான சொத்துகளைக் குவித்தேன்' - அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்' என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஊழல் தடுப்புத் தகவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் இரண்டு நாள் காவல்துறை காவலில் எடுத்து மதுரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஜெய்பாலாஜி அவர்களிடம் அளித்த வாக்குமூலத்தில் : ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ஆம் ஆண்டில் மருதம் லேண்ட் புரொமோட்டர் எனும் நிறுவனம் துவங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்வேறு ஊர்களில் கிளைகளைத் த...
சமீபத்திய இடுகைகள்

குளித்தலை அருகில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது .    கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம  விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்  பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000   ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம்   வழங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அட...

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவது கட்டாயம் என உத்தரவு

மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன. வங்காள மொழிக் கவிஞர் பங்ஹிம் சந்திர சட்டர்ஜி 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி எழுதிய  ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. ’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல் உத்தரவுகளைக் கொண்டுவந்துள்ளதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப்பூர்வமான முழுப் பாடல் பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான...

சிறுவனுக்கு மருத்துவச் சேர்க்கை வழங்கிய உச்சநீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 142 ன்படி  தீர்ப்பு.உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மகன் பிறர் உதவியில்லாமல்  ஆன்லைன் மூலம் மனுதாக்கல் செய்து 10 நிமிடத்தில் தன் வாதத்தை  எடுத்துரைத்து வெற்றி பெற்ற 19 வயது மாணவர் மருத்துவ எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு கிடைக்காததால் 10 நிமிடம் வாதாடிய மாணவன்  7 நாளில் இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அதர்வா சதுர்வேதி ( வயது 19), முற்பட்ட பிராமணர் வகுப்பைச் சேர்ந்த நபர் நீட் தேர்வில் 530 மதிப் பெண் பெற்றார். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரான OC யில் 20 சதவீதம் (இடபிள்யூஎஸ்) படி அவருக்கு, அந்தப் பிரிவில் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட வில்லை. ம.பி.யில் இடபிள்யூஎஸ் பிரிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படாததே இதற்குக் காரணம்.  என்பதனால் அதர்வா, தந்தை பிரபல வழக்கறிஞர் மனோஜ் சதுர்வேதியின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (Special Leave Petition - SLP) ஆன்-லைனில் தாக்கல் செய்தார்.  அதர்வா சது...

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம்

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம். தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் எடுத்த சர்வேயால் சத்திய மூர்த்தி பவனில் பிரியாணி பரிமாறி விருந்து.! தவெகவுடன் கூட்டணிக்கு வரவுள்ளது எனும் தகவல், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள் வரவேற்பு நிலையிலிருக்கின்றனர். ஆனால் ப. சிதம்பரம் மற்றும் அவர் சார்ந்த செல்லம் என்ற பெருந்தகை ஆதரவாளர்கள் 12 பேர் திமுக தரப்பு ஆதரவாக மாறிய நிலையில் புதிய கட்சி துவங்கும் நிலைக்கு அவர்கள் மாற உள்ளதாகத் தகவல் வருகிறது   ‘‘பொது மேடையில், ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக திமுக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை  முதல்வர் மு. க. ஸ்டாலின் அவமதித்து விட்டதாகவே கருதுகிறார். ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகளின் பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளைத் தேர்வு செய்து தருமாறு வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ...