போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் காவலர் ஜெயராஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கிய புகார் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். புத்தூர் கட்டு பாண்டி என மாற்றுப் பெயரில் மருத்துவம் படிக்காமல் நுட வைத்தியம் பார்க்கும் நாட்டு மருத்துவர் நெடுஞ்செழியன் என்பவர் சமீபத்தில் போலி மருத்துவர் என கைது ஆனார் பின் ஜாமீனில் வெளிவந்தார் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டதில், தன்னிடம் மக்கள் மருத்துவம் பார்க்க அனுமதிப்பதற்கு காவல் ஆய்வாளர் சீனிபாபு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தராவிட்டால் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு காவலர் ஜெயராஜ் தன்னிடம் லஞ்சம் வாங்கியதற்கான CCTV பதிவு காட்சிகளையும் அவர் ஆதாரமாக வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத...
வளர்ச்சிப் பணிகளில் இளைஞர்களின் ஒத்துழைப்பு, பங்கேற்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் இளையோர் நல அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர் மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இளையோர் நலன் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிக்ஸ் இளையோர் நல அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், 2026 ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டம், மத்திய இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது. இதில் அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, செயலாளர் திரு சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டத்தில், பிரிக்ஸ் இளையோர் உச்சிமாநாடு, இளைஞர் குழுக் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, விவாதங்கள் நடைபெற்றன. இதில் பெறப்பட்ட பரிந்துரைகள், கருத்துக்கள், அமைச்சர்கள் நிலையிலான விவாதங்களுக்கு முக்கிய அடித்தளத்தை வழங்கின. இதில் பங்கேற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே உரையாற்றிய மத்திய இளையோர் நலன், விளையா...