தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் புதிய திருத்தம் பிரிவு 34-C சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ரத்து செய்தது. போலிப் பத்திரப்பதிவுகளைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தன்னிச்சையானதாக இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.பிரிவு தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இந்த புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியதன்படி, அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது அசல் மூலப் பத்திரம், சொத்தின் முந்தைய அசல் பத்திரம் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பத்திரம் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட தற்போதைய வில்லங்கச் சான்றிதழ் . பூர்வீகச் சொத்தாக இருந்தால் வருவாய்த்துறை வழங்கிய பட்டா.அசல் பத்திரம் தொலைந்திருந்தால் காவல்துறை வழங்கிய கண்டுபிடிக்க முடியவில்லை என்ற Non-traceable Certificate மற்றும் ஆங்கில தமிழ் நாளிதழ்களின் விளம்பரம். தேவை என்ற நிலையில் இந்தச் சட்டத்திருத...
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ஏல இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் (நாஃபெட்) NAFEX.in என்ற ஏல இணையதளத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜா, கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் அஷீஷ் குமார் பூடானி, நாஃபெட் தலைவர் ஜீதாபாய் அஹிர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு இன்று NAFEX.in, டிரிஷ்டி, ஈஆர்பி, நாஃபெட் கல்யாண் ஆகிய நான்கு பெரும் முன்முயற்சிகளை தொடங்கியுள்ளதாக கூறினார். NAFEX.in, இதர முன்முயற்சிகள் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். ஏனென்றால், 2014-ம் ஆண்டு நாஃபெட் மூடப்படும் நிலையில் இருந்தது என்றும், இந்த முயற்சிகளின் காரணமாக, தற்போது நாஃபெட் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். அத்துடன் ரூ.500 கோடி லா...