தமிழ்நாடு முதலமைச்சரை இன்று இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் ஆர். வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம். சில்வெஸ்டர், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் Chief Strategy Officer ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
ஏழைகளுக்கு அதிகாரமளித்த ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின்...