தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிகவின் தலைவர் திருமா மறுபரிசீலனை செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மாநில அரசியலுக்கு திருமா வருவதை திமுக விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஒரு வேளை வெற்றி பெற்றால் திருமாவுக்கு அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி கொடுக்க நேரிடுமாம். வி சி கட்சித் தலைவர் திருமா போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான க. இளையபெருமாள் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிகட்சி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமா போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிப...
அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி, மற்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர், இப்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும், கொள்கை முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார் அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் : "பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா? சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அ...