ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகமான சொத்துகளைக் குவித்தேன்' - அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் ஆட்சி அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்' என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஊழல் தடுப்புத் தகவல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் இரண்டு நாள் காவல்துறை காவலில் எடுத்து மதுரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஜெய்பாலாஜி அவர்களிடம் அளித்த வாக்குமூலத்தில் : ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ஆம் ஆண்டில் மருதம் லேண்ட் புரொமோட்டர் எனும் நிறுவனம் துவங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்வேறு ஊர்களில் கிளைகளைத் த...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது . கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம் வழங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அட...