முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சடடச்சிக்கலான சோதனைக் களத்தில் பழனிசாமி தேஜகூ முதல்வர் வேட்பாளர் யார்? கூட்டணிக் குழப்பம் தீர்வை நோக்கி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜகவிடம் பிடி கொடுக்காமல் கறார் காட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, சட்ட ரீதியான சிக்கல்கள் மூலம் பணிய வைக்க டெல்லி மேலிடம் திட்டமிடுகிறதா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு  எக்ஸ்க்ளூசிவ் தகவல்  விரிவாகப் பார்ப்போம். என்டிஏ கூட்டணிக்குள் தவெக விஜய் வருவதற்காக பாஜக தேசிய தலைமை பல ரகசிய உத்தரவாதங்களைக் கொடுத்திருந்தது.. ஆனால், "பாஜக தருகிற அந்த உத்தரவாதங்களுக்கு அதிமுக தலைமைக்கு உடன்பாடு வரவில்லை முதலில் அவர்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுங்கள்" என்று பாஜகவுக்குத் தகவல் தந்து விஜய்யும் ஒரு செக் வைத்தார். ஆனால் இங்கு உள்ள கூட்டணி சின்டிகேட் அரசியல் காரணங்களை மீறி அது நடக்கவில்லை. இதனையடுத்து, பாஜகவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசனையின் பேரில் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல், எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதித்தார். கான்ஃப்ரன்ஸ் காலில் நடந்த  விவாதத்தின் போது, பாஜகவின் துணைத் தலைவரான ஜே.பி. எனும் ஜெயப்பிரகாஷும் இணைந்திருந்தார். பியூஸ்கோயலுக்கும் எடப்பாடி கே. பழனிசாம...
சமீபத்திய இடுகைகள்

மக்களை நேசிக்காத கிழட்டுக் ஹீரோவின் மலட்டுச் சிந்தனைகள் உண்மைகளை உரக்கப் பேசிய ஆதவ் அர்ஜுனா

மக்களை நேசிக்காத கிழட்டுக் ஹீரோவின் மலட்டுச் சிந்தனைகள் உண்மைகளை உரக்கப் பேசிய ஆதவ் அர்ஜுனா   24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளாக  அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய எதார்த்தமான பேச்சுக்குப் பிறகு தான்  நடிகர் சங்கம் கொதிக்கிறது, இதற்கு முன்பு யார் யார் யாரெல்லாம் எப்படி ஆபாசமாகத் திட்டிப் பேசினார்கள் என்ற காணொளிக்காட்சிக்கள் சமூக வலைத்தளங்களில் முழுவதும் புயலாக, பூகம்பமாக, சுனாமியாக வந்து வளரி, பூமராங் போல வந்து தாக்கி இருக்கிறது. சிவாஜிராவ் ஹெய்க்வாட் எனும் ரஜினி காந்த் பிறப்பால் மராத்தியாகவம் வளர்ப்பால் கன்னடியராகவும், வளர்ச்சியால் தமிழ்நாடு சார்பாக வாழும் ரஜினிகாந்தன் எனும் ஒரு காலத்தில் உச்ச நடிகன், தற்போது 80 வயதை நெருங்கும் நிலையில் 20 வயதில் கதாநாயகி உடன் நடிக்கும் அவர் எழுதிய கடித அறிக்கைக்கு பிறகு தான் அவரை இதற்கு முன்பு யார் யாரெல்லாம் எப்படித் தாக்குதல் செய்து பேசி இருக்கிறார்கள் என்ற காணொளிக்கட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் வருகின்றன.  அடுத்து பாவமன்னிப்பு கேட்பவர்கள் பட்டியல் நீளும் போல,  தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜுனா.. அதிமுக பிரம...

ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் இராணுவ அமைச்சர் தகவல்

இஸ்ரேல் இராணுவ அமைச்சர் தகவல் ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டார்:  பசிஜ் படைப்பிரிவின் தலைவரும் பலி.இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவத்திற்கு (IDF) முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு தாக்குதலுக்கும் அரசின் தனிப்பட்ட ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், உளவுத்துறை உறுதி செய்யும் எந்தவொரு இலக்கையும் ராணுவம் உடனடியாக அழிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் (Esmail Khatib) நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்தத் துணிச்சலான முடிவு ஈரானியத் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் 5 மாநில யூனியன் பிரதேசங்களில் 1,111 மத்தியப் பார்வையாளர்கள் நியமனம்

தேர்தல் ஆணையம் 5 மாநி லங்கள்/யூனியன் பிரதேசங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்காக 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம், கேரளம் , பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்காக 1,111மத்திய தேர்தல் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நியமித்துள்ளது. CEC ஸ்ரீ ஞானேஷ் குமார், பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்கும் போது, ​​தேர்தல்கள் வன்முறையற்ற மற்றும் தூண்டுதலின்றி நடத்தப்படும், இதனால் ஒவ்வொரு வாக்காளர்களும் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனக் கூறியது நினைவிருக்கலாம். அதன்படி, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் கண்காணிப்பாளர்கள் ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவார்கள். தற்போது நடைபெற்று வரும் பொது மற்றும் இடைத்தேர்தலில் பணியமர்த்தப்பட்டுள்ள 1,111 மத்திய தேர்தல் பார்வையாளர்களின் விவரங்கள் பின்வருமாறு: நடந்துகொண்டிருக்கும் பொது/தேர்தலில் பணியமர்த்தப்பட்ட பொது மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை - 2026 மாநிலம்/யூனியன் பிரதேசத்த...

ஆர் எஸ் எஸ் குறித்து யுனிசெப் பரிந்துரை நியாயமானதா என்பதே இங்கு எழு வினா

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமான USCIRF, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் RSSமற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதாவது R&AW ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. உண்மை நிலை தான் என்ன, உலகம் முழுவதும் மதம் தானே ஆட்சி செய்கிறது அதை ஏற்கும் போது இதை தடை செய்ய என்ன அவசியம் வந்தது,  அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந...

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடா. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம்

முன்னாள் பிரதமர் எச்.டி .தேவகௌடா. இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் . நாடாளுமன்றத்தை அடிக்கடி சீர்குலைப்பது மற்றும் நாடாளுமன்ற மரபுகளை புறக்கணிப்பது குறித்து அவரது அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் வளத்தை எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அவரது சகாக்களிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். "பாராளுமன்றத்தின் உள்ளேயும், அதன் பெரிய வளாகங்களிலும், முதன்மையாக எதிர்க் கட்சிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழப்பத்தால் நான் பெரிதும் கலக்கமடைந்துள்ளேன். இதுபோன்ற தடையற்ற செயல்பாடு மற்றும் எதிர்மறை ஆற்றல் புழக்கத்தின் விளைவுகளை நீங்கள் கற்பனை செய்து பார்க்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் பயப்படுகிறேன்,  அது திருத்துவதற்கான அறிகுறிகளாகத் தெரியவில்லை. அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும், தங்களுக்கும், அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நீங்கள் அவர்களைக் கேட்கலாம். எனக் குறிப்பிட்...