தமிழ்நாட்டின் நிதிநிலை குறி த்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்! தமிழ்நாட்டில் புதிய தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில் நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் பதவியேற்பு உரையிலும் வாக்குறுதி அளித்தபடி, கடந்த தி.மு.க. 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் உள்ள நிதி நிலைமையைப் பகிரங்கமாக ஆவணப்படுத்துதிற அறிக்கை, வெளிப்படைத்தன்மைக்கான உறுதியை வலியுறுத்துகிறது. இது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு அடித்தளமாகும் ஆவணம். அறிக்கையின் முக்கியமான தகவல், மாநிலத்தின் நேரடிக் கடன் 2021-ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதாகும். off-budget liabilities உள்ளிட்ட உண்மையான பொறுப்புகளைச் சேர்த்தால் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன்-ஜ...
சென்னை தலைமைச்செயலகத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் சி ஜோசப் விஜய் தூக்கி மகிழ்ந்தார். கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி அரசு சார்பாக ரூபாய் 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார். தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியில் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம் தாக்குதலுக்கு உள்ளானபோதும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி , அவரது குழுவினரைக் காத்து 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது ...