முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மதம் மாறிய பின் ஜாதிச் சலகை தமிழ்நாடு அரசாணை (G.O. No. 31) அரசியலமைப்பிற்கு முரணானதென ரத்து செய்த உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார்.  அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் நியமனம்

விருதுநகர் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தற்போதைய தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2026 ல் TNCC தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை இவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளது.மாற்றம்: இதற்கு முன்னர் தலைவராக இருந்த கே. செல்வம் நீக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.  இவர் தமிழ்நாடு விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  விருதுநகர் தொகுதியில் 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று .மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் (Whip) செயல்படுகிறார். ஜூன் 1, 1975 அன்று பழைய இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்தார். தந்தை புலவர் பகீரத நாசசியப்பன் தமிழாசிரியர் மற்றும் சமூக நல்லினக்கம் கொண்ட பரோபகாரி  இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி (BA LLB) சட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆரம்பகாலத்தில்: 1994 ல் NSUI மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல...

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் காலமானார்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் காலமானார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். நடிகர், இயக்குநர், வசன கர்த்தா இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்,  அரசியல் தலைவர் எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் கே. பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர். தனது தாய் அமராவதி பெயரில் இல்லம், கோபிச்செட்டிபாளையம் வெள்ளாங்கோவில் மக்கள் மண் வாசனை தான் வாழ்வில் தன் உழைப்பு, தன் அறிவு, தன் முயற்சி மூலம் இந்தப் புகழ் வந்த நிலை,  சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குனர் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த மயில் கதை 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயண...

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, டில்லியில் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம்.  இது, அமைச்சர் பதவிக்கு இணையானது.  அந்த வகையில் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை மாநில அரசு நியமித்துள்ளது. இவர், முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். மற்றும் பல வகையில் ஆடசி அமைப்பதில் உதவியாக இருந்நவர், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படி பெற்றுத் தர கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும். கே.வெங்கட் நாராயணா  இந்தியாவின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் . தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முன்னணித் திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார். முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களின் தயாரி...

பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஊழலை அம்பலப்படுத்திய ஸ்ரீ தர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு கூறிய திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அரவிந்தோ வித்யாலயா திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள ஒரு இணை கல்வி, மூத்த மேல்நிலை உறைவிடப் பள்ளியாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் CBSE இணைப்பு எண்: 1930624 ன் படி இணைந்த நிறுவனம், கல்விக்கான "பண்டைய மதிப்புகள் கொண்ட நவீனப் பள்ளி" அணுகுமுறையை ஊக்குவிக்கும் முக்கியப் பள்ளி, 2012 ஆம் ஆண்டு விவேகானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை வகுப்புகளும் அதற்கு முன் நர்சரி முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (PCM, PCB) மற்றும் ஆர்ட்ஸ், ஆங்கில அணுகுமுறை மற்றும் முக்கிய தூண்கள் பாடத்திட்டம் முழுமையான வாழ்க்கை முறை பயிற்சியுடன் கல்வி கடுமையையும் ஒருங்கிணைக்கிறது. பள்ளி ஒருங்கிணைக்கிறது, CBSE பாடத்திட்டத்துடன் நேஷனல...