மறுமலர்ச்சி திமுகவின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூர் தலைமை நிலையமான தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது, பொதுச் செயலாளர் வைகோ எனும் வையாபுரி கோபால்சாமி சிறப்புரையாற்றினார், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி நாடாளுமனற மக்களவை உறுப்பினர் துரை வைகோ, எனும் துரை வையாபரி, துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா முருகன், தி.மு. ராஜேந்திரன், டாக்டர் ரோஹையா உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவுக்கு வந்தாலும் வைகோ திமுகவுடன், அவரது மதிமுகவை இணைத்து விடலாம். திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதில் அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும். மு. க.ஸ்டாலினை எதிர்த்து கட்சி தொடங்கியவர், இறுதியில் மு. க.ஸ்டாலினிடமே சரணடைந்துவிட்டார்.தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் இதுவரை மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை 1996 ஆம் ஆண்டு 177தனி அணியாக 2001 -ஆம் ஆண்டு 211 தனி அணியாக, 2006 ஆம் ஆண்டு 35 அதிமுக கூட்டணி, 2011 ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு 2016 -ஆம் ஆண்டு 28 மக்கள் நலக்கூட...
சிவகுமார் முருகேசன் எனும் இளைய புதிய இயக்குனர் தந்த முதிய சிந்தனைகள் தான் தாய் கிழவி (அப்பத்தா -ஆயா) தற்கால முதியோர் இல்லத்தில் மூழ்கடித்த பலரின் சோகம், சுயநலம் கலந்த கூட்டுக்குடும்பச் சிதைவுகள் கடக்க முடியாத இக்காலத்தில் 2K வுக்கு பின் பிறந்த தென்மாவட்ட பிள்ளைகளான மக்களுக்குத் தெரியாத நிகழ்வுகள் அதிகம். இனித் திரைப்பட விமர்சனம் :- 'அதிகாலையில் மூதாட்டி பவுனுத்தாயி கண் விழித்து, வட்டிப் பணத்தை வசூலிக்க வெளி வருகையில் கிராமமே அலறுகிறது. தாயை மறந்து சொத்தை மட்டுமே பிரிக்கப் பார்க்கும் மூன்று மகன்களும், மாமியாரை யாரோ என நினைக்கும் மூன்று மருமகள்களும், நகைக்காக மாமியாரை விரோதியாகவே, பார்க்கும் மருமகனும், வில்லன்களாகவே விரோதிகளாகவே கதாபாத்திரத்தில் ஜொலிக்க வைத்து, வாழாவெட்டியான மகள் மட்டும் தனது மகனுடன் தாய்க்குத் துணையாக இருக்கிறாள். பவுனுத்தாயி பக்கவாதத்தில் விழுந்து நினைவிழக்க, ஊரே அதை விழாவாவாகக் கொண்டாடுகிறது. ஒரு சிலரைத் தவிர எல்லோருமே பவுனுத்தாயின் மரணத்திற்குக் காத்திருக்க, கோல்டு குமாரின் வருகையால் காட்சி தலைகீழாக மாறுகிறது. நகைக் கடை...