கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும். கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும். அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22...
சமூக ஆர்வலராக சில அரசியல் குழுவின் மூலம் அறியப்படும் சோனம் வாங்சுக் 26 நாட்களுக்குப் பிறகு அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த பாஜகவின் தலைவர்கள் முன்னிலையில் அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்," என வாங்சுக் குறிப்பிட்டுள்ளார். பல நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். "மிக விரைவில் ஒரு தனி வீடியோவில் இந்த நிபந்தனைகள் குறித்து நான் விரிவாக விளக்குவேன். நீங்கள் எங்கும் எந்தவொரு வன்முறையும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என வாங்சுக் அதில் எழுதியுள்ளார்.சமூக விரோ...