உணவகங்கள் வரிக்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டுகின்றனவா? என நாடு முழுதும் வருமான வரித்துறை சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்த அறிக்கை. உணவு மற்றும் பதப்படுத்துதல் துறையில் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல உணவகங்கள் அவர்களது கணக்கியல் மென்பொருளில் விற்பனைத் தகவல்களை நீக்குவது உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்து உண்மையான விற்பனை அளவைக் குறைத்துக் காட்டியிருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனைத் தரவுகளை ஏ.ஐ. அடிப்படையிலான பகுப்பாய்வு மென்பொருட்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட தரவுகள் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளில் (Income Tax Returns) காட்டிய வருமானத்துடன் ஒப்பிடப்பட்டதில் பெருமளவில் வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சில சந்தர்ப்பங்களில், பதிவு செய்யப்பட்ட விற்பனைகள் முழுமையாக கணக்குகளில் அல்லது வரி தாக்கல்களில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை; மேலும் சில பரிவர்த்தனைகள் அறிக்கைகளிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந...
மானாமதுரை விசாரணைக் கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இரண்டு அட்டவணை பட்டியல் சமூகத்திற்கு இடையில் நடந்த சம்பவம் இதில் மற்றவர்கள் தலையீடு இல்லை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மகன் ஆகாஷ் டெலிஷன் வயது 26 எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த நபர் நேற்று முன் தினம் மானாமதுரை காவல் நிலைய, காவலர் மற்றும் அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் அடித்துத் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என முதலில் தகவல் வந்த நிலையில். அதை காவல்துறையினர் தரப்பு மறுத்து செய்தியளித்தது, தமிழ்நாட்டில் இது போன்று மனித உரிமை மீறல் தொடர் காவல் கைதி மரணங்கள் சில இடங்களில் நடந்தேறி வருகிறது. இதில் குறிப்பாக, அட்டவணைப் பட்டியலின , மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது விசாரணை என்ற பெயரில் 70 சதவீதம் உண்மை ஆராயாமல் பொய் வழக்குகள் புனைவதும் அதை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தராமல் கை, கால்களை உடைத்து பின் வழுக்கி விழுந்ததாகக் கூறுவதும் க...