முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டின் நிதிநிலை குறி த்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!             தமிழ்நாட்டில் புதிய தமிழக வெற்றிக் கழக  அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில்  நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் பதவியேற்பு உரையிலும் வாக்குறுதி அளித்தபடி, கடந்த தி.மு.க.  2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் உள்ள நிதி நிலைமையைப் பகிரங்கமாக ஆவணப்படுத்துதிற அறிக்கை, வெளிப்படைத்தன்மைக்கான உறுதியை வலியுறுத்துகிறது. இது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு அடித்தளமாகும் ஆவணம். அறிக்கையின்  முக்கியமான தகவல், மாநிலத்தின் நேரடிக் கடன் 2021-ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதாகும். off-budget liabilities உள்ளிட்ட உண்மையான பொறுப்புகளைச் சேர்த்தால் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன்-ஜ...
சமீபத்திய இடுகைகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரருக்கு முதல்வர் மரியாதை

சென்னை தலைமைச்செயலகத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் சி ஜோசப் விஜய் தூக்கி மகிழ்ந்தார். கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி அரசு சார்பாக ரூபாய் 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார். தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியில் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம் தாக்குதலுக்கு உள்ளானபோதும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி , அவரது குழுவினரைக் காத்து 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது ...

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும் சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி ஆகவும்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரகத்தின் டிசிபி ஆகவும்  சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காணிப்பாளர் ஆகவும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்காணிப்பாளர் கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும்  காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம்,  சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம்...

முதல்வர் அறிவித்த அரசு மது விற்பனைக் கடைகள் 717 மூடிய பட்டியல் வெளியானது

 வழிபாட்டு ஸதலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 அரசு மது விற்பனைக் கடைகளை மூடுவதற்கு முதல்வர்  உத்தரவிட்டிருந்ததன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டதாக உள்ள விவரம் :-  சென்னை வடக்கு மாவட்டத்தில் 13 கடைகள், சென்னை மத்தியில் -9 , சென்னை தெற்கில்-9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு-8, திருவள்ளூர் கிழக்கு-27, திருவள்ளூர் மேற்கு-6 என சென்னை மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், கோயம்பத்தூர் வடக்கு-48, கோயம்பத்தூர் தெற்கு-23, கரூர்-8, ஈரோடு-42, திருப்பூர்-31, நீலகிரி-27 என கோயம்பத்தூர் மண்டலத்தில் மொத்தம் 179 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரக்கோணம்-7, தர்மபுரி-7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல்-14, சேலம்-22, திருவண்ணாமலை-19, வேலூர்-6 என சேலம் மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 21 கடைகள், நாகப்...

வடமாநிலக் குடியிருப்பில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக் கொலை பீகார் மாநில குற்றவாளி கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் , 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொடிய குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.  இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்ன...