ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் 100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட குளிர் நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ₹100 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்கா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். குளிர் நீரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியாளர்களின் வருமானத்தை வலுப்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டலை மேம்படுத்தவும், ஏற்றுமதி சந்தைகளில் நுழையவும் வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதில் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் திரு உமர் அப்...
தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா உரையாற்றினார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா இன்று மொராதாபாத்தில் உள்ள தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அவர், இந்த விழா மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும் என்றும், அது பல வருடங்களாகச் செய்த உழைப்பு, ஒழுக்கம் மற்றும் கல்விச் பணியினை பிரதிபலிக்கும் என்றும் கூறினார். பட்டமளிப்பு என்பது கல்விப் பயணத்தின் முடிவு மட்டும் அல்ல, புதிய பொறுப்புகளும், சேவையின் தொடக்கமும் ஆகும். மாணவர்கள் சமூகத்துக்கும் நாட்டிற்கும் முக்கியமான பங்களிப்பு செய்யும் பொறுப்பு கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாட்டு முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இன்றைய காலத்தில் இளம் தொழில்துறையினர் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர். தீர்த்தாங்கர் மஹாவீர் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வியை முன்னேற்றுவதற்கான பங்க...