முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கியப் பொறுப்பாகும். இதில் இருப்பவர் பொதுவாக முதல்வரின் அரசியல் நடவடிக்கைகள், கட்சித் தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் ஒருங்கிணைப்பார். அவரின் முக்கிய பணிகளாக முதல்வரின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு பேணுதல் அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருக்குத் தகவல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஊடகங்களில் வெளியாகும் அரசியல் செய்திகள் மற்றும் எதிர்வினைகளைக் கண்காணித்தல் கட்சியின் செய்தி பரப்பல் மற்றும் பொதுத் தொடர்பு நடவடிக்கைகளில் உதவுதல் தேர்தல் மற்ற...
மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலை 2026 நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவையடுத்து தேசியத் தேர்வு முகமையான என்.டி.ஏ ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின் இத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்தது. இத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் எனவும் புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என என்.டி.ஏ கூறியது. ராஜஸ்தானில் மே மாதம் 10-ஆம் தேதி வினாத்தாள் கசிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட இத் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் இனி மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இருப்பினும், இதற்காகத் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. தேசியத் தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிபிஐ-யிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு என்.டி.ஏ முழு ஒத்துழைப்பு வழங்கும்; தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் விசாரணை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்...