மூன்று தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைந்து. ஒரு தொகுதியை தவெக பெற்ற நிலையில், பண்ருட்டி தொகுதியில் பாமகவின் பழைய மாணவர் பிரிவுச் செயளாளரான வேல்முருகன் போட்டியிட்டார். அதில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் அதிமுகவின் ராஜேந்திரனை வீழ்த்தி வென்றார் அதேபோல் தற்போது வேல்முருகன் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக சார்ந்த தே ஜ கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தணை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். இதனால் வேல்முருகன் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு செய்வாரென்றும். கூறுகின்றனர்....
வீட்டில் நிகழும் எதார்த்த இயற்கை மரணங்களுக்கு இறப்புச் சான்றிதழ் பதிவுக்கு இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயமல்ல ,- - சுவாமி விவேகானந்தர் வீட்டில் இயற்கையாக நிகழும் மரணங்களைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களைத்த் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வயது முதிர்வு, மாரடைப்பு அல்லது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் மரணம் சம்பவிக்கும் போது, அதற்கு இறப்புச் சான்றிதழ்கள் பதிவு 21 நாட்களுக்குள் பதிவு செய்ய உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி பிறப்பு, இறப்புப் பதிவு அமைப்புகள், மருத்துவச் சான்றிதழை (MCCT - பார்ம்.A) கட்டாயமாகக் கேட்டு வந்தன. இதனால் முறையான பதிவு மருத்துவர் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் 1969 ன் படி பதிவுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் ஆனால் சிகிச்சை பெறாமல் வீட்டில் இயற்கையாக உயிரிழப்பவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சிலர் ந...