தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான சி. ஜோசப் விஜய் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் வெனியிட்ட அறிக்கையில். "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில்...
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் நிதித்துறை செயலாளரான திமுக ஆட்சியில் இருந்து பல ஊழலுக்கு துணையாக செயல்பட்ட உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாலராக இருந்து திமுகவுக்கு ஆதரலாக பல தீய காரியங்கள் செய்த நிலையில் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார் .அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் தவெக தலைவர் முதல்வர் விஜய் மற்றும் கட்சி மீது சுமத்த முயன்றதால் அவர் செய்த செயல் ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலை...