தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடே தொடங்கி வைத்த இரண்டு மாத கால பயிற்சித் திட்டமான 'எம்.பி. லீட் ஃபெலோஷிப்' என்ற பயிற்சித் திட்டப் பங்கேற்பாளர்களுடன் இன்று (02.07.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். இளைஞர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர் இளைஞர்கள் தேச சேவையில் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைமை என்பது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை எனவும், மாறாக பணிவு, நேர்மை, கருணையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒருவரின் திறனால்தான் அளவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைத்த அவர், பிராந்தியம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியாவின் பகிரப்பட்ட கலாச்சாரமே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தை அறிமுகப்படுத்துவத...
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத்' டிஜிட்டல் தளம் வாயிலாக, தொழில்துறை - இளைஞர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பை உருவாக்க, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார் நாட்டில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு - தொழில் துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் விவகாரங்கள் துறை, புது தில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தொழில் துறை சங்கங்களின் மாநாட்டை' நடத்தியது. 'மை பாரத்' தளத்தின் மூலம் உத்திகள் சார்ந்த ஒத்துழைப்புக்களை உருவாக்க, 20-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை சங்கங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிஎஸ்ஆர் அமைப்புகள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், திறன் மேம்பாடு, தன்னார்வத் தொண்டு, தொழிற்பயிற்சி, தொழில்முனைவு, புத்தாக்கம், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின்...