திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்றிரவு இருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நேற்றிரவே தென்மண்டல ஐஜி மற்றும் திருநெல்வேலி சரக டிஐ ஜி நேரில் சென்று விசாரணை நடத்தினர் தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நாங்குநேரி அருகே ஒரு கும்பல் ஒன்பது நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலை 'நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக' தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் சீரழித்து விட்டது ஆட்சி முடிவில் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தம...
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் இரவிப்புதூர் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசுகையில், " ஜெயலலிதா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, ஜெயலவிதாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு ஜெயலலிதாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்...