மேற்கு வங்காள சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இந்திய தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை மார்ச் 15, 2026 அன்று வெளியிட்டது. 2026 ஏப்ரல் 29 அன்று நடைபெறவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 9 ஆகவும், மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி 2026 ஏப்ரல் 10 ஆகவும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 13 அன்று பிற்பகல் 3:00 மணி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது . வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்குப் பிறகு, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை: மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி 152 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 28-ம் தேதி 142 தொகுதிகளுக...
நிபந்தனை ஜாமீன் விதிமுளைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூப் நடத்திய சவுக்கு சங்கரை ஆந்திராவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் மோசடி வழக்குகளில் கைதாகி, பின்னர் உடல்நலக் குறைவால் 12 வார கால இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆஜராகத் தவறியதனால் அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனிப்படைகாவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரை ஆந்திராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை ‘குண்டர் தடுப்பு சட்டத்தின்’ (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை சிறையிலேயே அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர், அவர் மகன் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்நால் அரசு அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி கே. பழனிசாமி தெரி...