1801 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனி அரசுக்கு எதிராக திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர்களை மீட்கப் படைதிரட்டி புறப்பட்டு கத்தப்பட்டில் வாளுக்கு வேலி அம்பலம் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட இடத்தில் அவரது தம்பி கருத்த ஆதப்பனால் வீரநடுகல் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது, அதில் வாளுக்குவேலி அம்பலத்தின் ஒரு கையில் ஈட்டியும் மறு கையில் வளரியும் உள்ளது. ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் நன்னி அம்பலம், கிழக்கு நாட்டு தலைவர்களான சேதுபதி அம்பலமும் - சண்முகபதி அம்பலமும், பாகனேரி நாட்டுத் தலைவரான வாளுக்கு வேலி அம்பலமும் சுதந்திரப் போராட்டத்தில், சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலங்களில் முக்கியமானவர்கள். இதில் நன்னி அம்பலம், சேதுபதி அம்பலம், சோலைமலை அம்பலக்காரர், கருப்பண்ண அம்பலக்காரர் பற்றிய குறிப்புகள் நேரடியாகவே உள்ளன. ஆனால் வாளுக்கு வேலி அம்பலம் நடுகல் வழிபாடு தவிர, அவரை பற்றிய நேரடிக் குறிப்புக்கள் இல்லை, சிறுகதை மன்னன் திருக்கோஷ்டியூர் எஸ். எஸ். தொன்னரசு எழுதிய கதையில் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் மூல...
தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி பயணத்தை நாளல 12 ஆம் தேதி முடிக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அங்கிருந்தபடி நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாகத் தகவல. இங்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சென்று வழிபட்ட நிலையில் தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் செல்கிறார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றவர். டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவையும் குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினார். அதன்பிறகு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை ஜூன் 12 ஆம் தேதி டெல்லியிலிருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் சென்று அங்கிருந்து காரில் ஸ்ரீ...