முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

உணவகங்களில் நாடு முழுவதும் வருமான வரித்துறையின் சரிபார்ப்பு நடவடிக்கை

 உணவகங்கள் வரிக்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டுகின்றனவா? என நாடு முழுதும் வருமான வரித்துறை சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்த அறிக்கை. உணவு மற்றும் பதப்படுத்துதல் துறையில் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல உணவகங்கள் அவர்களது கணக்கியல் மென்பொருளில் விற்பனைத் தகவல்களை நீக்குவது உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்து உண்மையான விற்பனை அளவைக் குறைத்துக் காட்டியிருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனைத் தரவுகளை ஏ.ஐ.  அடிப்படையிலான பகுப்பாய்வு மென்பொருட்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட  தரவுகள் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளில் (Income Tax Returns) காட்டிய வருமானத்துடன் ஒப்பிடப்பட்டதில் பெருமளவில் வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சில சந்தர்ப்பங்களில், பதிவு செய்யப்பட்ட விற்பனைகள் முழுமையாக கணக்குகளில் அல்லது வரி தாக்கல்களில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை; மேலும் சில பரிவர்த்தனைகள் அறிக்கைகளிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந...
சமீபத்திய இடுகைகள்

கிருஷ்ணாபுரம் விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

மானாமதுரை விசாரணைக் கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இரண்டு அட்டவணை பட்டியல் சமூகத்திற்கு இடையில் நடந்த சம்பவம் இதில் மற்றவர்கள் தலையீடு இல்லை    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம்  கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்   மகன் ஆகாஷ் டெலிஷன் வயது 26 எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த நபர் நேற்று முன் தினம் மானாமதுரை காவல் நிலைய, காவலர் மற்றும் அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் அடித்துத் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என முதலில் தகவல் வந்த நிலையில். அதை காவல்துறையினர் தரப்பு மறுத்து செய்தியளித்தது, தமிழ்நாட்டில் இது போன்று மனித உரிமை மீறல் தொடர் காவல் கைதி மரணங்கள் சில இடங்களில் நடந்தேறி வருகிறது. இதில் குறிப்பாக, அட்டவணைப் பட்டியலின , மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது விசாரணை என்ற பெயரில் 70 சதவீதம் உண்மை ஆராயாமல் பொய் வழக்குகள் புனைவதும் அதை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தராமல் கை, கால்களை உடைத்து பின் வழுக்கி விழுந்ததாகக் கூறுவதும் க...

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மற்ற பொருள்களும் விலை உயர்வைச் சந்திக்கும்

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலருக்கு மேல் நீடித்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்களின் விலையை 1 முதல் 3% வரை உயர்த்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இலாப வரம்பைத் தக்கவைக்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அவர்கள் கூறுகின்றனர்.    இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணைக்கு 5 சதவீதம் தள்ளுபடியை அறிவித்தது ரஷ்யா.  அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரிகளை விதித்ததன் காரணமாக இந்தியாவிற்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடு செய்வதற்காக இந்தத் தள்ளுபடியை வழங்கியது .பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த போது சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 102 டாலர் ஆக இருந்தது . தற்போது 71 டாலர் தான். ஆனால், 70 முதல் 75 சதவீதம் வரிகள் விதித்து, சர்வதேச சந்தையில் விலை குறைந்த போதும், இங்கே விலையை ஏற்றி விற்கிறார்கள்.கானா நாட்டில் நமது பிரதமர்.  இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 70 சதவீதம் இந்த நாட்டில் இருந்து தான் வருகிறது.  பெட்ரோல் இங்கு அதிகமாகவே கிடைக்கிறது.  ஐரோப்பிய, அரபு நாடுகளில் பெட்ரோல் இறக்குமதி செய்வதைத் தவிர்க்க இந்தியா ம...

மாநில மாவட்ட சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கடலூரில் பாராட்டு

கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் கடலூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, பெண்ணாடம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிலம்பாட்டக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம், எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், தொடு புள்ளி (Touch point) போன்ற தொழில்நுட்பங்களுடன் சிலம்பக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது.கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற பரங்கிப்பேட்டை சாக்ரடீஸ் பள்ளி மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஜெயந்தி அர்ச்சுனன் பாராட்டினார். சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது  மார்ச் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலுாரில் மாநில மற்றும் மாவட்ட அளவி லான சிலம்பப் போட் டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளையாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . நிகழ்வில...

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 ஆளுநர்கள் மாற்றமும் நியமனமும்

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதிலாக கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன்படி, தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஹிமாசலப் பிரதேச ஆளுநரான ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம். டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்     தெலங்கானா மாநில ஆளுநரான ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம். நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம். பிகார் மாநில ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமனம்,.லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம். லடாக் துணை நிலை ஆள...