முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிறுவனுக்கு மருத்துவச் சேர்க்கை வழங்கிய உச்சநீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 142 ன்படி  தீர்ப்பு.உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மகன் பிறர் உதவியில்லாமல்  ஆன்லைன் மூலம் மனுதாக்கல் செய்து 10 நிமிடத்தில் தன் வாதத்தை  எடுத்துரைத்து வெற்றி பெற்ற 19 வயது மாணவர் மருத்துவ எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு கிடைக்காததால் 10 நிமிடம் வாதாடிய மாணவன்  7 நாளில் இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அதர்வா சதுர்வேதி ( வயது 19), முற்பட்ட பிராமணர் வகுப்பைச் சேர்ந்த நபர் நீட் தேர்வில் 530 மதிப் பெண் பெற்றார். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரான OC யில் 20 சதவீதம் (இடபிள்யூஎஸ்) படி அவருக்கு, அந்தப் பிரிவில் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட வில்லை. ம.பி.யில் இடபிள்யூஎஸ் பிரிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படாததே இதற்குக் காரணம்.  என்பதனால் அதர்வா, தந்தை பிரபல வழக்கறிஞர் மனோஜ் சதுர்வேதியின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (Special Leave Petition - SLP) ஆன்-லைனில் தாக்கல் செய்தார்.  அதர்வா சது...
சமீபத்திய இடுகைகள்

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம்

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம். தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் எடுத்த சர்வேயால் சத்திய மூர்த்தி பவனில் பிரியாணி பரிமாறி விருந்து.! தவெகவுடன் கூட்டணிக்கு வரவுள்ளது எனும் தகவல், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள் வரவேற்பு நிலையிலிருக்கின்றனர். ஆனால் ப. சிதம்பரம் மற்றும் அவர் சார்ந்த செல்லம் என்ற பெருந்தகை ஆதரவாளர்கள் 12 பேர் திமுக தரப்பு ஆதரவாக மாறிய நிலையில் புதிய கட்சி துவங்கும் நிலைக்கு அவர்கள் மாற உள்ளதாகத் தகவல் வருகிறது   ‘‘பொது மேடையில், ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக திமுக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை  முதல்வர் மு. க. ஸ்டாலின் அவமதித்து விட்டதாகவே கருதுகிறார். ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகளின் பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளைத் தேர்வு செய்து தருமாறு வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காங்கிரஸ...

திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு 3 ஆண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை

திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மூன்றேகால் ஆண்டுகள் சிறை தண்டனை திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்த எழும்பூர் நீதிமன்றம்  2023-ஆம் ஆண்டு ஆளுநர்-நடிகை குஷ்பூ பற்றி ஆபாசமாக, அவதூறாகப் பேசிய பேச்சுக்கு விசாரணை முடிவில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது . பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்வதென்றால் ஒரு மாத கால அவகாசம் என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மாநில ஆளுநர் குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பா...