முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பழனி உள்ளிட்ட 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு

பழனி, சமயபுரம் உள்ளிட்ட பரம்பரை அல்லாத 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியீடு  கோயில்களின் விவரம், இணையத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் (Non-hereditary Trustees) விண்ணப்பங்கள் மூலம் முறையாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள், நியமன முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.1. அறங்காவலர்கள் தகுதிகள்இந்து மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.பின்னணி: ஒழுக்கமானவராகவும், இறை நம்பிக்கை உடையவரா...
சமீபத்திய இடுகைகள்

3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணிக்கு அரசு வழக்கறிஞர் நியமனம் அறிவிக்கை

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் கட்சி சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது.  தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் ...

கடந்த இளவேனிற் காலத்தை மறந்து தவெக நோக்கிப் பயணிக்கும் வசந்தகால அரசியல் பறவைகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமனன்றத்திற்குத் தேர்வானவவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி விஜயதாரணி. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு விஜயதாரணி தோல்வியடைய. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற்ற சூழலில் விஜயதாரணி ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி,  ”இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தும் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை இருந்ததாகவும்.  காரணம் கூறியவர் மேலும்  " த.வெ.க-வில் இன்றைக்கு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்கவும், போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் சூளுரைத்து, நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  இன்றைக்குத் தமிழகத்தை வழிந...