முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தலைமைத்துவம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கருத்து

தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடே தொடங்கி வைத்த இரண்டு மாத கால பயிற்சித் திட்டமான 'எம்.பி. லீட் ஃபெலோஷிப்' என்ற பயிற்சித் திட்டப் பங்கேற்பாளர்களுடன் இன்று (02.07.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். இளைஞர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர் இளைஞர்கள் தேச சேவையில் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைமை என்பது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை எனவும், மாறாக பணிவு, நேர்மை, கருணையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒருவரின் திறனால்தான் அளவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைத்த அவர், பிராந்தியம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியாவின் பகிரப்பட்ட கலாச்சாரமே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தை அறிமுகப்படுத்துவத...
சமீபத்திய இடுகைகள்

மை பாரத்' டிஜிட்டல் தளம் மூலம் தொழில் துறை சங்கங்களின் மாநாடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  மை பாரத்' டிஜிட்டல் தளம் வாயிலாக, தொழில்துறை - இளைஞர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பை உருவாக்க, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார் நாட்டில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு - தொழில் துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  இளைஞர் விவகாரங்கள் துறை, புது தில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தொழில் துறை சங்கங்களின் மாநாட்டை' நடத்தியது. 'மை பாரத்'  தளத்தின் மூலம் உத்திகள் சார்ந்த ஒத்துழைப்புக்களை உருவாக்க, 20-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை சங்கங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிஎஸ்ஆர்  அமைப்புகள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், திறன் மேம்பாடு, தன்னார்வத் தொண்டு, தொழிற்பயிற்சி, தொழில்முனைவு, புத்தாக்கம்,  பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின்...

சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருவெறும்பூர் அரசு உதவிப்பெறும் பள்ளியில்  இடைநிலை ஆசிரியையின், 6 லட்ச ரூபாய் சம்பள நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூபாய் .30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கைது செய்தனர். திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் புகழேந்தி. இவரது பணிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு TET தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக் கேட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு சந்தித்து கோரிக்கை வைத்த போது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்ய புகழேந்தி ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார் அதன் தொடர்ச்சியாக நேற்று ஆசிரியர் இளமுருகு திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபா பதிவு செய்யப்பட்டு, த...

முதல்வரை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கைது

முன் ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்த முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு  கூட்டிச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர்.  திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக திமுக என மாறி தொடர்ந்து 7 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார் " கைதான பின் "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ” என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் பேசியதால் புகார் அதற்கு முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் ஆத்தூருக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச் சென்றனர். த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் அரசியல் கைது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.  கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக  நடாளுமன்ற...

கோவில் திருப்பணி அனுமதிக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

கோவில் திருப்பணி அனுமதிக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது.   தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஆலயம்     மங்களாம்பிகை சமேத  ஸ்ரீ வன்மீகநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணியை நாகப்பட்டினம் ஒப்பந்ததாரர் மதியழகன் மேற்கொள்கிறார். இந்த நிலையில் திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மதியழகனிடம் தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியை அனுகி அனுமதி கேட்ட போது ரூபாய் .1 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர்  தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார் அவர்கள் ஆலோசனைப்படி  தஞ்சாவூர்: கோவில் திருப்பணி செய்யும்,ஒப்பந்தக்காரரிடம் அரசு சாட்சி முன்னிலையில் ரூபாய் ஒரு லட்சம்  லஞ்சம் வாங்கிய, தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு புரோக்கராகச் செயல்பட்டு வந்த அவரது தோழி இருவரையும...

ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த காவல்துறை

ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் பேரம் தேடுதல் தீவிரம் முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த காவல்துறை பேரம், கூட்டு சதி நடவடிக்கை மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி வரை பேரம் நடந்த நிகழ்வில் இதுவரை வி.செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒன்பது நபர்கள் கைதாகியுள்ளனர்,  ஆளும் தவெக கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல் உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் ஆளுநர் உத்தரவின் பேரில் நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்ட சில  எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ரூபாய் 35 கோடி வீதம் லஞ்சம் பேரம் பேசப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு விவகாரத்தில், தனியார் யூடியூபரும் ஐபிடிஎஸ் நடத்தும் திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தற்போது 9 நபர்களாக அது உயர்ந்துள்ளது இவர்...

அவசர சிகிச்சையை வலுப்படுத்த ஆம்புலன்ஸ்களுக்கான பாதுகாப்பு விரிவாக்க அம்சங்களில் திருத்தம்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அவசர சிகிச்சையை வலுப்படுத்த ஆம்புலன்ஸ்களுக்கான பாதுகாப்பு விரிவாக்க அம்சங்களில் திருத்தம் நாடு முழுவதும் ஆம்புலன்ஸ்களின் பாதுகாப்பு, செயல்பாடு, மருத்துவ திறன்களை வலுப்படுத்த போக்குவரத்து தொழில்துறை தரநிலை – 175-ல் திருத்தங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. 1.    பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் – வழக்கமாக உயர்நிலை மருத்துவ சிகிச்சைக்காக என்பதை மாற்றி, நோயுற்ற அல்லது வளர்ச்சி குறைவுற்ற பச்சிளங்குழந்தைகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  2.    பல படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் – ஒரே நேரத்தில் ஒரு நோயாளிக்கு தீவிர சிகிச்சைக்கு உதவி செய்ய பல படுக்கைகளை கொண்டுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.    மீட்புக் கருவிகள் கட்டாயமாக்கப்படுதல் – ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கினாலும் மீட்புக்கு உதவி செய்யும் வகையில் அனைத்து அவசர கால மற்றும் மீட்புக் கருவிகளை கொண்டிருக்கும் பி சி மற்றும் டி வகை ஆம்புலன்ஸ் ...