நெதர்லாந்திலிருந்து நமது பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள், முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட 30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் ஒரு பொக்கிஷமாகும். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தை அமைத்த ஸ்ரீ விஜய பேரரசு மன்னருக்கு, ஆனைமங்கலம் கிராமத்தை தானமாக வழங்கியதை இவை பதிவு செய்கின்றன.இந்தச் செப்பேடுகள் முதலாம் இராஜராஜ சோழனின் 21-வது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1010-1012) வெளியிடப்பட்டன. கடாரத்தை (தற்போதைய இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பகுதிகள்) ஆண்ட ஸ்ரீ விஜய மன்னன் 'சூளாமணிபன்மன்' கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமம் தானமாக வழங்கப்பட்டது. சோழப் பேரரசின் கடல் கடந்த வர்த்தக வலிமையையும், இந்து மன்னரான இராஜராஜ சோழன் பௌத்த மதத்திற்கு அளித்த சமய சகிப்புத்தன்மையையும் இந்த தானம் உலகிற்கு பறைசாற்றுகிறது. செப்பேடுகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தொடக்கப் பக்கங்கள் சமஸ்கிருதத்திலும், பெரும்பான்மையான தகவல்கள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் சின்னமான ...
லோக் பவன், தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பு :- மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்கள் பரிந்துரை ஏற்று அமைச்சர்கள் குழுவிற்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 10.05.2026 அன்று அவருடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர்கள் குழுவிற்கான இலாகாக்கள் மற்றும் பொறுப்புகள் ஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளார் .தமிழ்நாடு அமைச்சரவை முழுத் துறை விவரங்கள் சி. ஜோசப் விஜய் - முதல்வர் தமிழ்நாடு அமைச்சரவை - பதவி ஏற்ற அமைச்சர்களின் துறை விவரங்கள்: முதல்வர் சி. ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, மகளிர் நலம், இளைஞர் நலன், குழந்தைகள் நலம், முதியோர் நலம், மாற்றுத் திறனாளிகள் நலம், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல். என்.ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துறைகள்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், வறுமை ஒழி...