தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் ஸ்தலங்கள் மட்டுமல்ல, அவை தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கலந்த பொருளாதாரத்தின் உன்னத அடையாளங்களாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தத்தொகை, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையச் சட்டத்தின் பிரிவு 96-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாக நிதி' என்ற கணக்கில் சேர்க்கப்படும். நிதியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரே முழுமையாக நிர்வகிக்கிறார். HR & CE சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, இந்த நிதியைக் கொண்டு துறையின் அன்றாடச் செலவுகள், அலுவலர்கள் மற்றும் பணி ஊழியர்களின் ஊதியங்கள், இதர சலுகைகள் போன்ற நிர்வாக ரீதியான செலவினங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்; வேறு எந்தவொரு காரியத்திற்கும் இதைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை. ஆனால், கடந்த காலங்களில் இந்த நிர்வாக நிதி அதன் உண்மையான நோக்கத்தை மீறி, சட்டத்...
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார். திரையுலகினராலும் ரசிகர்களாலும் அன்போடு "ஜானகி அம்மா" என்றும், "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" (இசைக்குயில்) என்றும் அவர் போற்றப்படுகிறார். 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்தார். மூன்று வயது முதலே பாடல்களைப் பாடத் தொடங்கினார். 1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' தமிழ்த் திரைப்படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, கொங்கணி, துளு, சிங்களம், ஆங்கிலம் உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார். ஒரு சிறு குழந்தை, 16 வயதுப் பெண், நடுத்தர வயதுப் பெண் மற்றும் வயதான பாட்டி என எந்தவொரு வயதினருக்கும் ஏற்கும் வகையில் தனது குரலை மாற்றிப் பாடும் அசாத்தியத் திறமை பெற்றவர். எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் போன்ற தலை...