முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மலேசியாவில் இந்தியப் பிரதமர் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது

மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ  ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர். மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். மலேசியாவில் உள்ள இந்திய ...
சமீபத்திய இடுகைகள்

டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி

டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 8, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.பிப்ரவரி மாதம் 1897 ஆம் ஆண்டு பிறந்தநாள் 3 மே 1969 ல் காலமானார் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை, குடியரசுத் தலைவர் பதவி வகித்தார். 1962-1967 காலத்தில், இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார் இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும், திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[ உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அலிகார் முஸ்லிம் பல்கல...

வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கு

வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கை மத்திய நீர் ஆணையம் நாளை புதுதில்லியில் நடத்துகிறது மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம், முன்னறிவிப்பு சேவைகள், வெள்ள மேலாண்மை ஆகியவை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கை நாளை (பிப்ரவரி 9, 2026) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. பயிலரங்கை நீர்வளம், நதி மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு வி.எல். காந்த ராவ், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் திரு அனுபம் பிரசாத், மத்திய நீர் ஆணைய உறுப்பினர்கள், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் தொடங்கி வைக்கின்றனர். இந்த பயிலரங்கின் போது, வெள்ள முன்னறிவிப்பு, தயார்நிலை, வெள்ள மேலாண்மை திட்டமிடலில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவது குறித்து கவனம் செலுத்தப்படும். காலையில் தொழில்நுட்ப அமர்வுகளும், பிற்பகலில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்தல் குறித்த அமர்வும் நடைபெறும்.

அஜய் பிரஹாரி' நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆய்வு   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது ஜம்மு பயணத்தின் இரண்டாம் நாளில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ‘குர்நாம்’ மற்றும் ‘போபியா’ எல்லைப் பாதுகாப்புப் படை சாவடிகளுக்குச் சென்றார். 'அஜய் பிரஹாரி' நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், வீரர்களின் நலனுக்காக ரூ. 7 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், ரூ. 242 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வீரர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, "கடினமான சூழல்களிலும் தேசத்தைக் காக்கும் பிஎஸ்எஃப் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது. 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 118 எல்லைச் சாவடிகள் மற்றும் 3 பயங்கரவாத முகாம்களை அழித்து பிஎஸ்எஃப் வீரர் சாதனை படைத்துள்ளனர். இதில் வீரமரணம் அடைந்த முகமது இம்தியாஸ் அகமது மற்றும் தீபக் சிங்காக்கம் ஆகியோருக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை" என்றார். மேலும், பிஎஸ்எஃப்...

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட்" அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா

 2026-27 மத்திய பட்ஜெட்டை வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான செயல்திட்டம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா புகழாரம் சூட்டியுள்ளார் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 மத்திய பட்ஜெட், 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கும் இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிப்பதாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்கோத்ரா குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டத்தில் இந்த பட்ஜெட் ஆழமாக வேரூன்றி இருப்பதுடன், நெகிழ்தன்மை வாய்ந்த, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  இந்த பட்ஜெட், வளர்ச்சியை முன் வைப்பதுடன், பொதுமக்களை மையமாகக் கொண்டதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில், வெளிப்படை தன்மை மற்றும் எளிதான வாழ்க்கையை வலியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது உண்மையிலேயே "140 கோடி இந்தியர்களுக்கான ...

இரயில்வேயில் 6,142 பகுதிகளில் ‘"தடப்பகுதி சரிபார்க்கும் அச்சு கணக்கிடும் கருவிகள்.

இரயில்வே சிக்னல் செயலின்மை 58 சதவீதம் குறைவு: விபத்துகளைத் தடுக்க நவீன உள்கட்டமைப்பு இந்திய ரயில்வேயின் சிக்னல் அமைப்பை நவீனப்படுத்த எடுத்த தொடர் நடவடிக்கைகளால், கடந்த 11 ஆண்டுகளில் சிக்னல் செயல்படாமை 58 சதவீதம் குறைந்துள்ளதோடு, ரயில் விபத்துகளும் கணிசமாகச் சரிந்துள்ளன. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, பழைய இயந்திர முறைக்கு மாற்றாக 6,660 நிலையங்களில் மின்ணுமுறை இன்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. லெவல் கிராசிங் கேட்களில் பாதுகாப்பை அதிகரிக்க 10,097 இடங்களில் இன்டர்லாக்கிங் வசதியும், 6,665 நிலையங்களில் மின்சார முறையில் தண்டவாள ஆக்கிரமிப்பைச் சரிபார்க்கும் ‘டிராக் சர்க்யூட்டிங்’ வசதியும் வழங்கப்பட்டுள்ளன. ரயில்கள் முழுமையாக வந்து சேர்ந்ததை மனிதத் தலையீடின்றி உறுதி செய்ய 6,142 பகுதிகளில் ‘"தடப்பகுதி சரிபார்க்கும் அச்சு கணக்கிடும் கருவிகள் "பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் ரயில்களை இயக்க ஏதுவாக 6,625 கி.மீ நீளத்திற்குத் தானியங்கி சிக்னல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உதிரி மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் சிக்னல் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, ஊழியர்களுக்குத் ...

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா -இந்தியா வர்த்தக ஒப்பந்தக் கூட்டறிக்கை

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா -இந்தியா கூட்டறிக்கை அமெரிக்காவும் (யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் இந்தியாவும் பரஸ்பரம் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை எட்டியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றன. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13  ஆம் தேதியன்று ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பரந்த அமெரிக்க-இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (BTA) பேச்சுவார்த்தைகளுக்கான நாடுகளின் உறுதிப்பாட்டை இன்றைய கட்டமைப்பானது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தமானது, பரஸ்பர நலன்கள் மற்றும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் பரஸ்பர மற்றும் சமநிலையான வர்த்தகத்திற்கான பொதுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும், நமது நாடுகளின் கூட்டாண்மையில் ஒரு வரலாற்று மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகள்: உலர் காய்ச்சி தானியங்கள் (DDGs), கால்நடைத் தீவனத்திற்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய ம...