வழிபாட்டு ஸதலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 அரசு மது விற்பனைக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டிருந்ததன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டதாக உள்ள விவரம் :- சென்னை வடக்கு மாவட்டத்தில் 13 கடைகள், சென்னை மத்தியில் -9 , சென்னை தெற்கில்-9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு-8, திருவள்ளூர் கிழக்கு-27, திருவள்ளூர் மேற்கு-6 என சென்னை மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், கோயம்பத்தூர் வடக்கு-48, கோயம்பத்தூர் தெற்கு-23, கரூர்-8, ஈரோடு-42, திருப்பூர்-31, நீலகிரி-27 என கோயம்பத்தூர் மண்டலத்தில் மொத்தம் 179 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரக்கோணம்-7, தர்மபுரி-7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல்-14, சேலம்-22, திருவண்ணாமலை-19, வேலூர்-6 என சேலம் மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 21 கடைகள், நாகப்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் , 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொடிய குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்ன...