முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

விபி ஜி ராம் ஜி திட்டத்தை செயல்படுத்த மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை

ஊரக வளர்ச்சி அமைச்சகம்  விபி ஜி ராம் ஜி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் காணொலி மூலம் ஆலோசனை ₹1.25 லட்சம் கோடி ஒதுக்கீட்டிலான திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது - தமிழ்நாட்டுக்கு ₹7,957.57 இடைக்கால ஒதுக்கீடு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், விபி ஜி ராம் ஜி எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு இன்று (09.06.2026) தலைமை வகித்தார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திரு சௌகான், 2026 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம், எந்தவித இடையூறும் இன்றி, தொழிலாளர்களை மையமாகக் கொண்ட முழுமையான சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். இது பழைய திட்டத்தை மாற்றுவது மட்டுமல்ல எனவும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, வாழ்வாத...
சமீபத்திய இடுகைகள்

மினாமோர்க்கில், ஸோஜிலா சுரங்கப்பாதையை அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஸோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம் கார்கில் மாவட்டத்தில் உள்ள மினாமோர்க்கில், ஸோஜிலா சுரங்கப்பாதையின் முதன்மைச் சுரங்கப் பாதையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சுமார் ரூ. 6,800 கோடி மதிப்பீட்டில், பால்டல் மற்றும் மினாமோர்க் இடையே சுமார் 14 கி.மீ நீளத்தில் கட்டப்படும் இந்த இருவழிச் சுரங்கப்பாதை, இந்தியாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டமாகும். கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடினமான புவியியல் சூழல்களையும் தாண்டி இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நவீன காற்றோட்டம், தீயணைப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் இந்தச் சுரங்கம் அமைகிறது. இந்தத் திட்டம் சோனமார்க் மற்றும் மினாமோர்க் இடையிலான பயண நேரத்தை 2 மணி நேரத்தி...

இயக்குனர் இமயம் காலமானார், அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இயக்குனர் இமயம் காலமானர்   தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் பிறந்து தமிழ் நேசராக வாழ்ந்த மனிதர்,  "என் இனிய தமிழ் மக்களே" என்ற வரிகள் நினைவு படுத்தும் இயக்குனர், பணம் படைத்த நபர்கள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற நிலையை மாற்றியவர்  அரங்கத்திற்குள் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடித்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத பாடல்களைத் தந்தவர்.ஸ்ரீ தேவி, ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரோஜா உள்ளிட்ட கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படமாக்கிய பாரதிராஜா மருத்துமனை தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் தராத நிலையில் தற்போது ஏதோ ஒரு காரணம் அவரது முதல்மரியாதை துவக்கக் காட்சிகள் போல நடக்கிறது கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தவரின் இ...

உச்சநீதிமன்றத்தில் வழக்கும் மாநில சபாநாயகர் வழங்கிய தீர்ப்பும் இனி வரப்போகும் இறுதி முடிவும்

தமிழ்நாடு அரசியல் ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சியைக் காப்பாற்ற நடந்த குதிரை பேரப்புகாரில் தவெக அரசின் பொதுச்செயலாளரும் மாநில அமைச்சருமான புஸ்ஸி N.ஆனந்த், மற்றும் மாநில சபாநாயகர் J.C.D.பிரபாகர் மற்றும் அஇஅதிமுகவிலிருந்து தவெவிற்கு ராஜினாமா செய்த பின் மாறிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது CBI விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் அதன் விசாரணை துவங்க உள்ளது, இந்த நிலையில் அந்த நால்வர் சார்பில் கேவியட் மனு மட்டுமே தாக்கல் செய்து காத்திருக்கும் நிலையில் ”முதலமைச்சர் சி ஜோசப் விஜய் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். அதிமுகவின் 21 பேர் மீது நடவடிக்கை இல்லை. ராஜினாமா செய்த 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று கூறியதாவது:- 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்...

சிங்கப்பெண் காவல் படை இந்தியச் சட்டத்தின் வழி நீதிமன்றம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளப் பாதுகாக்கும்

தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ,தொடங்கி வைத்தார் முதல்வர்.  எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டது. முதல்வரது நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில்  சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலட்சினையை அறிமுகம் செய்து திட்டத்தின் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டார். பின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்சி. ஜோசப் விஜய் , காவலர்கள் இருந்த வாகனத்தையும் இயக்கினார், நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களின் மரியாதை, கண்ணியத்தைக் காக்க அரசு அதிமுக்கிய முன்னுரிமை அளிக்குமென்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போதைபொருள் நடமாட்டம் தான் காரணம் எனக்கூறிய முதலமைச்சர், பல வருடங்களாக போதைப்பொருள் பிரச்சனை கண்டுகொள்ளப்படாமல் இருந்ததாக விமர்சித்தார். பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்க வேண்டாம் என எச்சரித்...

பாஜகவின் வரலாற்றில் தலைவராக அண்ணாமலை பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதது

பாஜகவில் இருந்து விலகிய புதிய பரினமத்தில் உறுவான தலைவர் கே அண்ணாமலையின் புதிய இயக்கம் ஒரே லிங்க் மட்டுமே அதில் எழுட்சியாக 17  லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளனர், இது கடந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட அதிகம் தமிழ்நாடு பாஜக வின் தலைவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் தான், ஒரே பரபரப்பு. திரும்பிப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியம் ஆன டெல்லி தேசியத் தலைமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பார்வையும் மக்கள் தலைவராக உறுவான கே.அண்ணாமலை என்ற தனித் தலைவர் பக்கமே  இப்போது திருப்பியிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, மூன்று தினம் முன் "வீ தி லீடர்ஸ்" (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் களமாட உள்ளார் பொதுத்தேர்தலில் தங்களது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்ததுமே அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்புத் தான் ஏற்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக வெளியாகி வரும் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைமையை அ...