முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'மால்வன்' ஜூலை 22 அன்று கடற்படையில் இணைகிறது

புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'மால்வன்' ஜூலை 22 அன்று கடற்படையில் இணைகிறது இந்திய கடற்படை தமது புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான மால்வனை ஜூலை 22 அன்று படையில் இணைக்கிறது. இவ்விழாவில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீஃப்  மார்ஷல் தலைமை தாங்குகிறார். மேற்குக் கடற்படைத் தளத்தின் தலைமை தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலை வகிக்க உள்ளார். கடற்படை உயர் அதிகாரிகள், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகள், முன்னாள் படை வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட மால்வன் கப்பல் நாட்டின் தற்சார்பு தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பலின் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டுமானத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சமீபத்திய இடுகைகள்

இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உயிரி-மருத்துவ ஆராய்ச்சி பணித் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்திட்டத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ 1,500 கோடியாகும். இதில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பாக ரூ 1,000 கோடியும், லண்டனைச் சேர்ந்த 'வெல்கம் டிரஸ்ட்' அமைப்பின் பங்களிப்பாக ரூ 500 கோடியும் ஆகும். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலகளவிலான  போட்டித்தன்மை ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பம் ஒரு முக்கிய சக்தியாக அமையவுள்ளது என்று குறிப்பிட்டார். உயிரித் தொழில்நுட்பப் புரட்சியில், இந்தியா பங்கேற்பாளராக மட்டுமின்றி, வளர்ந்து வரும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இத்துறையில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றத்தை ச...

தமிழ்நாடு ஊழல் செய்த அலுவலர்கள் பணியிடை நீக்கம்

பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டிருந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்  பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது  சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்,  சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடு...

லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,

இந்தியா முழுவதும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எழுச்சி தான் மக்கள் மத்தியில் வரவேண்டும் நாணயத்தின் மறுபக்கம் நாளும் வளரும் ஊழல் தானே, ஏழையின் வியர்வைத் துளிகளை எச்சில் துளியாய் விழுங்கும் ஒரு லஞ்சப் பெருங்கூட்டம்,  நான்கு கால்களில் அமைந்த ஜனநாயக நாற்காலிக்கு இரண்டு கால்கள் பழுது எனில் அதன் அடியில் செல்லும் ஊழல் கைகள்,  நாட்டின் உரிமையை விற்கும் நேர்மை இல்லாத அந்தகக் கண்கள்!சாமானியனின் உரிமை மறுக்கப்பட்டு, சட்டத்திலுள்ள சிறிய எலிப்பொறி ஓட்டைகளில் தப்பிக்கும் பெரிய ஊழல் பெருச்சாளிகள், மூலம் லஞ்சம் நுழைந்து தானே உண்மை !   இனி நாளை மலரும் விடியலாய்,ஒன்றாகுவோம் வாரீர்!  தற்போது தமிழ்நாடு அரசாணை  நேர்மையின் ஒளியை ஏந்தி, ஊழலை வேரறுப்போம் பாரீர் என வந்தாலும் !    ஊழல் என்பது பலவகை   "தானும் செய்யாது தருபவரையும் தடுத்தல் அதுவே  தகுதியில் செய்யும் ஊழல், காணும் அனைத்திலும் காழ்ப்புடன் எழுதல் கற்பனையில் செய்யும் ஊழல், மானம், மரியாதை, மதிப்பைக் கெடுத்தல்  மனிதம் அழிக்கும் ஊழல், வீணாய் தர்க்கித்து விவாதம் ...

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் : ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார். காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதுல் ஆன...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தத் தடை இல்லை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை ஜூலை மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை  வழக்கை விசாரித்து, ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலை நடந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கில் அஸ்வத்தாமன், பொன்னா பாலு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை சார்பில் 7,000 பக்கங்களுக்கும் மேல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணைக்காக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய  திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. இந்த நிலையில் முக்கியத் திருப்பமாக ஜூலை 2026 நிலவரப்படி தமிழ்நாடு அரசியல் சூழல் மாற்றங்கள...

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண் கலைஞர்கள் பைஜாம அல்லது வேட்டி, சட்டை அணிந்திருந்த வேண்டும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி, அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார். கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இந்த மனுக்களை விசாரணை செய்து உரிய நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கிவருகிறனர். இந்த நிலையில் தஞ்சை வளப்பக்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழா 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி ...