முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நடவடிக்கை

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணும் விதமாக, எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான சேவைத் தரத்தை உறுதிசெய்யும் விதமாகவும், கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பணியாளர்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தவும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான   இ.பி.எஃப்.ஓ. ,  எந்த இடத்திலும் வைப்புநிதியை திரும்பப்பெற விண்ணப்பிக்கும் வசதியை அன்மையில் தொடங்கியது.   இந்த வசதி, வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு  மண்டல அலுவலகத்திலும், சந்தாதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதித்திருப்பதன் மூலம்,  வைப்நி நிதி அலுவலக செயல்பாட்டில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   வைப்புநிதி,  ஓய்வூதியம்,  பகுதி தொகையை திரும்பப்பெறுதல் மற்றும்  பணத்தை முழுமையாக திரும்பப்பெறுதல் மற்றும் கணக்கு மாற்றம் தொடர்பான  இணையவழி கோரிக்கைகளுக்கு,  இந்த புதிய வகை முன்முயற்சி மூலம் தீர்வு காணப்படும்.    கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் 135 மண்டல அலுவலகங்களின் செயல்பாடு, அவை செயல்படும் இடத்தில் நிலவும்  பாதிப்பு அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது.   கோவிட் -19  பாதிப்பால்,  மும்பை,  தானே, ஹரியானா மற்றும் சென்னை மண்டலத்தின் பல்வேறு அலுவலககங்கள்,  மிக மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.   அதேவேளையில், அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  கோவிட் -19 முன்பணத் தொகையை பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.     வைப்புநிதித் தொகையை திரும்பப்பெறக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை  நாடுதழுவிய அளவில் பரிசீலிக்கும்போது,  பணிச்சுமை குறைவதோடு,    தற்போது செயல்பாட்டில் உள்ள அந்தந்தப் பகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு காண்பதற்குப் பதிலாக,  பல்வேறு இடங்களில் இந்தக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண புதிய நடைமுறை வழிவகை செய்யும் என கருதப்படுகிறது.   மேலும்,  குறைவான பணிச்சுமை உள்ள வைப்புநிதி அலுவலகங்கள்,  கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக, மனுக்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ள அலுவலகங்களின் பணிச்சுமையை பகிர்ந்துகொள்ளவும் புதிய நடைமுறை உதவும்.    அத்துடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பணியாளர்களை  தகுந்த முறையில் பயன்படுத்தி,  சந்தாதாரர்களின் கோரிக்கைகளக்கு விரைந்து தீர்வுகாணவும் இது உதவிகரமாக இருக்கும்.     வைப்புநிதி சந்தாதாரர்களின் வாழ்க்கை நடைமுறை அனுபவங்களை எளிதாக்குவதற்கான இந்த முன்முயற்சி,  குறிப்பிட்ட காலத்தில் சாதனை படைத்துள்ளது.   இந்தத் திட்டத்தின் கீழ்,  முதற்கட்டமாக, பல்வேறு மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட சந்ததாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது,  குருகிராம் மண்டல அலுவலகத்தில் 10 ஜுன் 2020 அன்று தீர்வு காணப்பட்டுள்ளது.    வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு அலுவலகத்திலும்,  பிற  எந்தப்பகுதியையும் சேர்ந்த சந்தாதாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வசதி,  தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.   தொழிலாளர்கள் நேரில் வராமலேயே,  வெளிப்படைத்தன்மை, செயல்துடிப்பு, போன்றவற்றுடன் கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடிய வகையிலான இந்த புதிய நடைமுறை, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சிந்தனைக்கு செயல்வடிவம் அளித்து,  இணையவழி விண்ணப்பங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும்  வகை செய்துள்ளது.    கோவிட் -19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள்,  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும்,  அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடமையாற்றுதல் மற்றும் பல்வேறு புதுமைகளை புகுத்தியதன் காரணமாக,   1 ஏப்ரல் 2020 முதல் இதுவரை,  80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஒவ்வொரு வேலை நாளிலும்,  ரூ.270 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.    எந்தவொரு அலுவலகத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியதன் மூலம், 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சேவையில் புதிய சாதனையைப் படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம