முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிமக்களுக்குப் பயன்படும்படியான டிஜிட்டல் மாற்றம் அமைந்ததாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்திய குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது: ரவிசங்கர் பிரசாத் அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்தியக் குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் சட்டம், நீதித் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், இப்போதைய நோய்த் தாக்குதல் சூழ்நிலையில், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற மூன்று வசதிகள் காரணமாக, மக்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற முடிகிறது, மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது, தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினிகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க முடிகிறது, நோயாளிகள் தொலைவில் இருந்தே ஆலோசனை பெற முடிகிறது, இந்தியாவில் எளிதில் அணுக முடியாத தொலை தூரங்களில் இருக்கும் விவசாயிகளும் பிரதமரின்-கிசான் திட்டப் பயன்களை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெற முடிகிறது என்று கூறினார்.      டிஜிட்டல் பாரத் - தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் துறையின் அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே, சில மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், திரு. நந்தன் நில்கேணி, அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், அமைச்சகங்கள், தொழில்துறை மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் இருந்து இதில் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.      கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயணம், அதிகாரம் அளித்தல், உள்ளடங்கிய வளர்ச்சி, டிஜிட்டல் நிலைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முன்னேறி வந்துள்ளது. இந்தியக் குடிமக்களின் அடையாள மேலாண்மையில் ஆதார், நேரடி ஆதாயப் பரிமாற்றம், பொதுச் சேவை மையங்கள், டிஜிலாக்கர், செல்போன் அடிப்படையிலான உமாங் (UMANG) சேவைகள், MyGov, ஜீவன் பிரமான் முதல் UPI வரையிலான தளங்கள், ஆயுஷ்மான் பாரத், இ-ஹாஸ்பிடல், பிரதமரின்-கிசான், இணையவழி சந்தை (e-NAM), மண் வள அட்டைகள், ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய கல்வி உதவித் தொகை முனையம், இ-பாடசாலா மற்றும் பிற சேவைகள் மூலம் மக்களின் வாழ்வில் அனைத்து வகைகளிலும் ஆக்கபூர்வமான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. `தேசிய செயற்கை நுண்ணறிவு முனையம்'  மற்றும் `இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு தளங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. செயற்கைப் புலனறிதல் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்கிட இவை தொடங்கப்பட்டன. கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் ஆரோக்கிய சேது, இ-சஞ்சீவனி, MyGov மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தகவல்களை அளித்தல் மூலமாக டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.      2014இல் இ-சேவைகளின் எண்ணிக்கை 2,463 ஆக இருந்த நிலையில் 2020 மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 3,858 ஆக உயர்ந்திருப்பதாகவும், தினசரி பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 2014இல் 66 லட்சமாக இருந்த நிலையில், 2020இல் 16.3 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 125.7 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், 4,216 கோடி அத்தாட்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ``56 அமைச்சகங்களின் மூலம் 426 திட்டங்களுக்கான பணப்பயன்கள் ரூ.11.1 லட்சம் கோடி அளவுக்கு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் ரூ.1.7 லட்சம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 38.73 கோடி பயனாளிகள் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் பயன் பெற்றுள்ளனர். இத் திட்டத்தில் பயனாளிகளின் கணக்கில் ரூ.1.33 லட்சம் கோடி உள்ளது என்றார் அவர். கைபேசி மற்றும் இணைய வசதிகளை முறையே 117 கோடி மற்றும் 68.8 கோடி பயனாளர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். 2015 ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட டிஜிலாக்கர் சேவையில் 378 கோடி ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய-யுக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த கைபேசிச் செயலி (UMANG) மூலம் 860க்கும் மேற்பட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதில் 3 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்பு நிலையை அளிக்க வசதியாக MyGov தளம் தொடங்கப்பட்டது. அதில் 1.17 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு உதவியாக இது உள்ளது என்று அவர் கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு