முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலங்களவைத் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் மாநிலங்களவைத் துணைத் தலைவராக திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து. மாநிலங்களவைத் துணைத் தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றம் சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும் திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். சமூக சேவை மற்றும் பத்திரிக்கை துறையில் திரு. ஹரிவன்ஷ் நேர்மையானவராக திகழ்ந்ததற்காக, அவர் மீது அதிக மரியாதை வைத்திருப்பதாக பிரதமர் கூறினார்.  இன்று இதே உணர்வு மற்றும் மரியாதை, அவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரிடம் உள்ளது என அவர் கூறினார். திரு.ஹரிவன்ஷின் பணியாற்றும் விதம்,  அவையை நடத்திய விதம், அவையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் அவரின் பங்கு ஆகியவற்றை  பிரதமர் பாராட்டினார். அவையை சுமூகமாக நடத்த, மாநிலங்களவை உறுப்பினர்கள், துணைத் தலைவருக்கு உதவியாக இருப்பர் என பிரதமர் தெரிவித்தார்.  எதிர்கட்சியினர் உட்பட ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் ஹரிவன்ஷ், அவர் எந்த கட்சிக்கும் பாகுபாடு காட்டியதில்லை என பிரதமர் கூறினார்.  விதிமுறைகள் படி நாடாளுமன்ற உறுப்பினர்களை செயல்பட வைப்பது மிகவும் சவாலான பணி, இதில் அனைவரது நம்பிக்கையையும் ஹரிவன்ஷ் பெற்றுள்ளார். மசோதாக்களை நிறைவேற்ற ஹரிவன்ஷ், தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அவையில் இருந்துள்ளார். இதில் அவரது வெற்றியை நாம் கடந்த 2 ஆண்டுகளில் பார்த்தோம். நாட்டின் எதிர்காலத்தை மாற்றிய, பல வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேறியுள்ளன. 10 ஆண்டுகளில் அதிகளவிலான பணிகளை இந்த அவை நிறைவேற்றியுள்ளது, அதுவும் மக்களவை தேர்தல் முடிந்த ஓராண்டுக்குள், மாநிலங்களவை நிறைவேற்றியதை பிரதமர் பாராட்டினார். இந்த அவையில் அதிகளவிலான பணிகள் நடந்ததோடு, நேர்மறையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரும் தங்கள் கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க முடிந்தது. ஹரிவன்ஷ் தாழ்மையான பின்னணியில் இருந்து வந்ததால், அவர் எளிமையாக உள்ளார் என பிரதமர் கூறினார்.  அரசின் முதல் கல்வி உதவித் தொகையை ஹரிவன்ஷ் பெற்றபோது, அதை அவர் வீட்டுக்கு எடுத்துச்  செல்லாமல் புத்தகங்கள் வாங்கினார். அவர் புத்தகங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஜெயப்பிரகாஷ் நாரயணால் கவரப்பட்வர் ஹரிவன்ஷ். 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றிய பின், அவர் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ல் நுழைந்தார். ஹரிவன்ஷ் தனது பண்பான நடத்தை மற்றும் பணிவால்  அறியப்பட்டவர் என பிரதமர் கூறினார். நாடாளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பு போன்ற சர்வதேச அரங்கிலும், பிற நாடுகளில் இந்தியா கலாச்சார குழு உறுப்பினராகவும் இந்தியாவின் நிலையை உயர்த்த,  ஹரிவன்ஷ் பணியாற்றினார் என பிரதமர்  குறிப்பிட்டார்.  மாநிலங்களவையின் பல குழுக்களுக்கு தலைவராக இருந்து ஹரிவன்ஷ், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தினார் என பிரதமர் கூறினார்.  நாடாளுமன்ற உறுப்பினராக ஹரிவன்ஷ் ஆன பின்பு, அனைத்து உறுப்பினர்களும் நெறிமுறையுடன் செயல்படுவதை உறுதி செய்ய அவர் முயற்சிகள் எடுத்தார். நாடாளுமன்றப் பணிகள் மற்றும் பொறுப்புகளில், ஹரிவன்ஷ் தீவிரமாகவும், அறிவுஜீவியாகவும், சிந்தனையாளராகவும் இருந்தார்.  ஹரிவன்ஸ், இன்னமும், நாடு முழுவதும் பயணம் செய்து, நாட்டின் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் சவால்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைக்கிறார்.  ‘‘அவரது புத்தகம், நமது முன்னாள் பிரதமர் திரு.சந்திரசேகரின் வாழ்க்கையையும், ஹரிவன்ஷின் எழுத்து திறமையையை வெளிப்படுத்துகிறது. அவையின் துணைத் தலைவராக, ஹரிவன்ஸின் வழிகாட்டுதலைப் பெறும் பாக்கியத்தை,  நானும் மற்ற அவை உறுப்பினர்களும் பெற்றுள்ளோம்’’ என பிரதமர் கூறினார்.   ஹரிவன்ஷ்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், சபையில் 250க்கும் மேற்பட்ட அமர்வுகள்  நடந்தன என்பது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சிக்கு சான்றாகும் என குறிப்பிட்டார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு