முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் ராணுவத்தினருக்கு ஏராளமான உதவித் திட்டம் மத்திய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வத் தகவல்

பாதுகாப்பு அமைச்சகம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஏராளமான உதவித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல் மக்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு.ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக, மீள்குடியேற்ற தலைமை இயக்குனரகம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பு ஏஜன்சிகள், பெட்ரோல் பங்குகள், கேஸ் நிலையங்கள், கேஸ் சிலிண்டர் ஏஜென்ஸி ஒதுக்கீடு, தில்லியில் பால் பூத்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் ஒதுக்கீடு போன்றவை செய்து கொடுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவத்தினர்/ விதவைகள்/ போர் விதவைகள்/ அவர்களின் குழந்தைகளுக்கும் ஏராளமான நிதியதவிகளை கேந்திரிய சைனிக் வாரியம் செய்கிறது. ஓய்வூதியம் பெறாத ஹவில்தார் அந்தஸ்து வரையிலான வீரர்களுக்கு 65 வயதுக்கு மேல் மாதம் ரூ.4,000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. முதல் 2 குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. வீடு பழுதுபார்ப்பு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஹவில்தார் அந்தஸ்து வரையிலான முன்னாள் வீரர்களின் முதல் 2 மகள்களின் திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்டுகிறது.   இறுதி சடங்குக்கு ரூ.5000/- அளிக்கப்டுகிறது. மருத்துவ சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வழங்கபடுகிறது.  ராணுவத்தினர் வீரர்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரை ரூ.1000/- வழங்கப்படுகிறது. விதவைகளின் தொழிற்பயிற்சிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் நிதி மற்றும் இந்திரா காந்தி நகர் பரியோஜனாவில் 25 பிகாஸ் நிலம் அல்லது ரூ.25 லட்சம் நிதி மற்றும் எம்ஐஜி வீட்டு வசதி வாரிய இல்லம் அல்லது ரூ.50 லட்சம் பணம். ராணுவ வீரர்களுக்கு 1,86,138 குண்டு துளைக்காத உடைகள், 1,58,279 கவச ஹெல்மெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முறையே கடந்த 2018 மற்றும் 2016ல் முடிவடைந்தது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி, இவற்றை நாட்டில் உள்ள படைகலன் பொருட்கள் உற்பத்தி வாரிய ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகள் தயாரிக்கும். அம்பான், நிஷர்கா போன்ற புயல் சமயத்தில் மீனவர்களின் உயிரை காக்கவும், புயல் பாதிப்புகளைக் குறைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல் படையின் 6 கப்பல்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்கள் மேற்கொண்டன. நிஷர்கா புயல் சமயத்தில் 2354 மீன்பிடி படகுகளை, இந்திய கடலோர காவல்படை கரை சேர்த்தது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு