முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிவேல் துக்க நிகழ்வுகளில் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ள குடும்ப நிகழ்ச்சி தான் காரணம்

அமமுக வில் டிடிவி தினகரன்.. தன் கட்சியின் பொருளாளராக. இருந்த வெற்றிவேல் நல்லடக்கம் செய்த துக்க நிகழ்வில். கலந்து கொள்ளவில்லை. என சிலர் கூறுவது அறியாமை இந்துக்கள் வாழ்வில் வீடுகளில் உள்ள பிள்ளைகளின் திருமணம் நிச்சயம் அல்லது சம்பந்தம் பேசி. திருமணம் நிச்சியக்கப்பட்ட நாளிலிருந்து.. திருமணம் நடக்கும் நாள் வரை. துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். இந்துக்களில் பூர்வகுடிகளும் அப்படியே. தமிழர் பாரம்பரியமும் அதுவே ஆகவே அதில்‌ தினகரன் கலந்து கொள்ள இயலாத சூழல் என்பது பலர் அறிவார்கள். சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை துவங்கி,காசிமேடு வரை ஒரு மீனவர் போல செயல்பட்ட அறிஞர் அண்ணாத்துரை உறவினர் வெற்றிவேல் அவரை பலமுறை திட்டித்திட்டியே கூர் தீட்டிய பின் எம் எல் ஏ ஆகியது முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான், அந்தத் தலைவருக்காக இரண்டு முறை தன் எம் எல் ஏ பதிவியை விட்டுக்கொடுத்தவர் . அவர் பெற்ற அனைத்தும் டாக்டர் ஜெ. ஜெயலலிதாவிடமிருந்து, அதை அவருக்கா விற்கே திருப்பிக் கொடுத்தவர் வெற்றி வேல் அப்போது ஜெ.ஜெயலலிதா போட்டியிட ஒரு தொகுதி தேவை என்றதும் ஓடோடி வந்து ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை ராஜிநாமா செய்து தந்தார்.ஆரம்பத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவன் வாசலில் எப்போதுமே கண்ணை உறுத்தும் மூன்று பேனர்கள் வைக்கப் பட்டிருக்கும். மூன்றிலும் பி.வெற்றிவேல், ராயபுரம் ஆர். மனோ, கராத்தே ஆர். தியாகராஜன் என்று மூன்று பெயர் மட்டுமே இருக்கும். பெயருக்கு மேலே ஜி.கே. மூப்பனார் நின்றபடியே சிரித்துக் கொண்டிருப்பார்.மூன்று பேருமே பத்திரிக்கை நண்பர்களுடன் ஒரே அலைவரிசையில் தொடர்பில் இருக்கும் அளவில் நட்பு வட்டத்தை வளர்த்துக் கொண்டவர்கள். சென்னை மாநகர மேயராக திமுக வின் மு.க.ஸ்டாலின் இருந்த போது துணை மேயர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்ற பொறுப்புகள் இதே மூவருக்குமே கிடைத்தது, சென்னை ரிப்பன் மாளிகையில் அந்தப் பொறுப்புகளை அலங்கரித்தனர். கால ஓட்டத்தில் வெற்றிவேல், அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏ. ஆனார். பைபாஸ் சிகிச்சை பெற்றவர் என்றாலும் தில் மனிதர், நடிகர் விஜயின் அசோகருக்குப் கூட வெற்றிவேல் என்பதை அவருடன் நெருக்கத்தில் இருந்த அனைவருமே அறிவர். 'நான் பேட்டியில் அப்படிச் சொல்லலியே? ' என எந்தச் சுழ்நிலையிலும் நடுக்கம் காட்டாதவர். சொன்னால் அது சொன்னது தான் அமமுக டிடிவி தினகரன் மீதும் சசிகலா மீதும் மரியாதை வைத்திருந்தார் அதை அவருடைய ஒவ்வொரு நகர்விலும் பார்க்க முடியும்.. அமமுகவுக்கும் அவரை அறிந்தோர்க்கும் மிகப் பெரிய இழப்பு, இவர் இறப்பு வடசென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதால் சென்னையில் கட்சி பாகுபாடு இல்லாமல் பலருடன் நட்பில் இருந்தார், எதிர்த்தாலும் இறுதிவரை உறுதியாகவே எதிர்த்தார். பாசம் காட்டினால் இந்த எல்லை - எதிர்த்தாலோ அந்த எல்லை... அதுதான் வெற்றிவேல் அரசியல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம