முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரேநாடு ஒரே வினியோகம் தமிழக அமல்படுத்தியதில் சாதகநிலை

ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது அடுத்த ஆண்டு மார்ச் முதல் தேசிய ரேசன் அட்டை நாடு முழுவதும் பிரபலமடைந்த ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தமிழகத்தில் இன்று முதல், 2020 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, இத்திட்டம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்  நடைமுறைக்கு வந்துவிடும். பெருந்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகள், ஒரு மாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி/ கோதுமை வீதம் நவம்பர் மாதம் வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார்.  தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பெறும் மாதாந்திர பொருட்களுடன் கூடுதலாக இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சமான, ரேசன் அட்டை மாற்றும் திட்டம், ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாறிச் செல்லும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு  பெரிதும் உதவும். தங்களது மாதாந்திர தேவைக்கான பொருட்களை அருகில் உள்ள ரேசன் கடைகளில் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பொது விநியோக முறையின் ஒருங்கிணைந்த மேலாண்மை 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடு தழுவிய ரேசன் அட்டை மாற்றும் முறையை அறிமுகப்படுத்துவதாகும். ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை முறை மூலம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இது பயனளிக்கும். சொந்த மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள ரேசன் அட்டைகளைப் பயன்படுத்தி, புலம் பெயரும் தொழிலாளர்கள் வேலைக்காக செல்லும் இடங்களில், விரும்புகின்ற கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்லலாம். நியாய விலைக் கடைகளில் வைத்திருக்கும் பயோமெட்ரிக் உபகரணத்தில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்களைப் பெறலாம். தமிழகத்தில், 34,773 நியாய விலைக் கடைகள் உள்ளன. 2.09 கோடி குடும்ப அட்டைகள் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. இதில் 6.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில், அனைத்து ரேசன் கடைகளும், டிஜிடல் ரேசன் ஸ்மார்ட் அட்டைகளை வழங்கியுள்ளன. மாநிலத்தில் ePOS கருவி மூலம் பயோமெட்ரிக் முறை செயல்பட்டு வருகிறது. அனைத்து ePOS கருவிகளும், பயோமெட்ரிக் விரல் ரேகையைச் சரிபார்க்கும் கருவியுடன் மேம்படுத்தப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. அரசு அதிகாரியான திரு. தருண், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இருப்பிடத்தை மாற்றுகின்றவர்களுக்கு, உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். ஒரு மாநிலத்திலிருந்து மற்றோர் மாநிலத்துக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கும் மாறிச் செல்வபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். முன்பு தற்போது உள்ள ரேசன் அட்டையை ரத்து செய்து, மற்றொரு மாநிலத்தில் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.  திருச்சியில், பொது விநியோக கடை விற்பனையாளர்கள், வழக்கமாக அளிக்கும் அரிசியுடன், செறிவூட்டப்பட்ட அரிசியையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டை ஒன்றுக்கு, 5 கிலோ, 15 கிலோவாகவும், 10, 10 கிலோ விகிதத்திலும் இரு அரிசிகளையும் வழங்க வேண்டும். இந்த நடைமுறை வழக்கமாக அளிக்கப்படும் அரிசி வழங்கும் வரை அக்டோபர் மாத கடைசி வரையில் அமலில் இருக்கும். வேலை வாய்ப்பு மற்றும் இதர வேலைகளுக்காக தங்கள் இருப்பிடத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். கோவிட்-19 முடக்கத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் போது, வேலை நிமித்தம் இடத்தை மாற்றிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே பயன் விளைவிக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...