முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரடங்கில் அதிகம் பாதிப்புகள் அடித்தட்டுத் தினக்கூலிகளுக்கே பட்டினி ச் சாவுகள் வராமல் தடுக்க தலைவர்கள் கோரிக்கை










வாழும் மக்களில் மூன்று வகை அதில் தற்போது அதிகம் பாதிப்புகள் அடித்தட்டு தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று மாலை வந்த பிறகு உணவு சமைத்து உண்ணும் அடித்தள மக்களின் நிலை தான் தற்போது மிகவும் பாதிப்பு . உழைக்கும் வர்க்கம் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்து சனிக்கிழமை ஊதியம் வாங்கி சனியோ, ஞாயிறன்று தான் அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்க இயலும்.

சரி, மற்ற அடுத்த வர்க்கமும் சற்று இரண்டு வாரமோ, தேவைக்கு நித்தமும் வாங்கும். அரிசி , பருப்பு ஒரு மாதம் வாங்கும் குடும்பம் மாத ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் வாங்கிய மளிகை அப்போது இந்த முழு ஊரடங்கை எதிர் நோக்கி முன் தீர்மானிக்கும் சக்தியும் இல்ல்லாமல் இருக்கிறதை வைத்து வாங்கி இருப்பார்கள்.

இப்போது தொடர்ந்து இழுத்து மூடி வைத்தால் எப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டிய உணவுப் பொருள்களை வாங்குவது?

அரசு உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் போன்று எங்கிருந்தோ வரும்.

பொது மக்கள் எங்கு போவார்கள்? இது ஒரு நாடோடி பழைய  இரும்பு குப்பை நெகிழி (பிளாஸ்டிக்) சேகரிப்பு நபர்கள் கயலான் கடை அருகில் பேசிய வார்த்தைகள் இவை மனதை உருக்கும் சீக்கிரம் மூடிவிட்டார்கள். தள்ளுவண்டியில் பிளாஸ்டிக்,  இரும்பு பொருளுடன் ஒருவரும், பெரிய கோணிபை நிறைய பாட்டில்களுடன் ஒருவரும் அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறார்கள். ஓனர் வருவதாக சொல்லியிருப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தில் ஏதாவது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர். அப்படித் தாமதமாகும் பட்சத்தில் அருகிலிருக்கும் மளிகை கடைக்காரர் குறிப்பிட்ட தொகைக்கு பொருள் வாங்கி செல்லுமாறும் பின்பு பணம் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். 

எனினும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என காத்திருக்கின்றனர். இவர்களுக்காகவே கடையை மீண்டும் திறக்க வரும் ஓனர்,  கடைக்காரர்கள் என இவர்கள் இக்கொடுங்காலத்தில் உதவிக் கொள்வதில் அன்பு தளைக்கிறது. 

இவர்களை போல எத்தனை பேர் வாடுகிறார்களோ தெரியவில்லை. ஒரு யோசனையாக அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களை அவர்களுக்காக திறக்கலாம். அரசு பள்ளி அவர்கள் அனைவருக்கும் அணுக எளிதாக இருக்கும். நோய்த் தொற்றைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எளியவர்களின் பசியாற்றுவதும்.முக்கியம் தானே இந்தச் சூழ்நிலையில்   மத்திய 

நிதி அமைச்சருக்கு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் கோரிக்கைக் கடிதம்

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - தண்டத் தொகை இரத்து - காலக் தவணை கெடு நீட்டிப்புக் கோரி

நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் இது.

அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை.

இ‌ந்த அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA) - தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகையுண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது. 

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்புத் தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020- இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அ‌ஞ்ச‌ல் துறை).

இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தேசத்தின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன. ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடன் அறிவிக்குமாறு அக் கடிதத்தில் கோரி  உள்ளனர்..

ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.                வண்டியில் காய்கறி மளிகை. வாங்கக் காசு இல்லை. பட்டினியில் லட்சக் கணக்கான ஏழை மக்கள்..யார் இதை கேட்பது?. சிலருக்கு போன ஆட்சியின் பாசம், பலருக்கு இந்த ஆட்சி மேல் காதல் எங்களிடம் ரேஷன் கார்டு கூட இல்லை

கேட்கவே யாருமில்லை..அம்பலமேறாத ஏழை சொல்!                   ‌இனி பட்டினிச் சாவு தற்கொலைகள் தவிர்க்க முடியாத்தாகி விடும்.கொரோனாவுக்கு மூன்று அலை இருக்கலாம். ஏழைகளுக்கு இரண்டாவது பட்டினி மூன்றாவது பட்டினி என சோகத்தைத் தாங்க முடியாது. அரசு கருனை காட்டினால் தான் இவர்கள் வாழ்வு விடியும். செய்வார்களா?

.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாதத் தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது குறித்து பல தலைப்புகளின் கண்டனத்திற்கு இது வரை தகுந்த பதிலில்லாத நிலை.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச்  செய்திட வேண்டிய மத்திய அரசும் காலம் தாழ்த்தி பார்ப்பது நியாயமா என்று வினா வருகிறது. இப்பிரச்னையில்   பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெறும் நிலை.

தமிழக முதலமைசரும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்  மாதத்தவணைகளிலிருந்து மக்கள் விலக்குப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் விரும்பும் நடவடிக்கையாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...