1985 முதல் அதிமுகவில் பவர் சென்டரானவர் இப்போது கால் சென்டராகக் காரணம் அவர் காலைச் சுற்றிய பிறகு கடித்துத் தப்பிய விஷப் பூச்சிகள் வேதனையில் சசிக்கலா நடராஜன்
அதிமுகவில் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் வி.கே சசிக்கலா நடராஜன் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ,.
"தொண்டர்களுக்காக இனிமேல் பின்வாங்க மாட்டேன், " என சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகியுடன் வி.கே.சசிகலா நடராஜன் பேசிய ஆடியோ வெளியானது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிக்காமல் ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். அதற்கு காரணம் பல தேர்தல் முடிந்து, அதிமுக ஆட்சியை இழந்தநிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து செல்லுலார் தொலைபேசி மூலம் பேசி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
தற்போது சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் சரவணன் என்பவரிடம் பேசிய உரையாடல் வெளியாகியுளளதில் பேசியதாவது: அதிமுக தொண்டர்கள் கவலையாக உள்ளனர். என்னை மீண்டும் வர வேண்டுமென தொண்டர்கள் விரும்புகின்றனர்.
தற்போது வெற்றி பெற்ற தொகுதிகள், ஏற்கெவே தலைவர் (எம்ஜிஆர்), அம்மா (ஜெ.ஜெயலலிதா) காலத்திலயே வென்றவை தான். தொண்டர்கள் என்னுடன் இருப்பதால் நிச்சயம் வந்துவிடுவேன்.
தனிநபர்கள் கட்சி நடத்துகின்றனர் என நான் நினைத்தேன். அதையே தொண்டர்களும் கூறுகின்றனர். இதனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் வருவேன். இனிமேல் பின்வாங்க மாட்டேன். என்னால் அம்மா (ஜெ.ஜெயலலிதா) ஆட்சி அமைவது கெட்டுபோகக் கூடாது என்பதற்காக ஒதுங்கியிருந்தேன். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. கோடான கோடி தொண்டர்களை பணத்தால் வாங்க முடியுமா? கே.பழனிச்சாமி சார்ந்துள்ள சமுதாய மக்கள் தலைவர், அம்மா காலத்திலிருந்தே அதிமுகவிற்கு தான் வாக்களித்து வந்துள்ளனர்.
மேலும் தலைவர் காலத்து ஆட்களை கைவிட்டுவிட்டனர் என்பதைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. நமது கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் கட்சி. தொண்டர்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்," என்றார். மற்றொரு பக்கம் நத்தம்.விஸ்வநாதன் பேட்டி மற்றொரு தரப்பினர் ஆத்திரப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றார்,அவரது பேட்டியில்: ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறி பலர் ஆத்திரமும், கோபமும் பட பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். அதில் சசிகலாவிடம் யாரும் பேசக்கூடாது. அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, “சசிகலா அதிமுகவில் உறுப்பினரே கிடையாது. ஆனால் ஜெயலிதாவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் சசிகலா. ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால் ஜெயலலிதா எவ்வாறு இறந்தார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 0.பன்னீர்செல்வத்துக்கு எதுவும் தெரியாது, சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சியில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சசிகலா தற்போது தன்னை தாய் என்று கூறிவருகிறார், அவர் தாய் அல்ல பேய்தான். அவரது சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். கட்சியினர் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்” என்று கூறினார். இக்கூட்டத்தில் ஜெ பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தச் செய்தி வெளியானதும் நத்தம் பேருந்து நிலையம் முன்பு கூடிய வி.கே.சசிக்கலா நடராஜன் ஆதரவாளர்களில் பலர் ஒன்றுகூடி நத்தம் விஸ்வநாதனின் கொடும்பாவியை கொளுத்தி அதிமுக உள்கட்சி மோதல் பற்றி எரிகிற சூழ்நிலையில் ஊழல் செய்த முன்னால் மந்திரிகள் ஏழு நபர்களின் மீது வரும் நடவடிக்கைகளுக்குப் பின்னர் தான் கட்சியினர் யார் பக்கம் அணி திரள்கிறார்கள் என்று அறிய முடியும்..அது விரைவில் நடக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு முன் மோதல் முடிவுக்கு வரும்.உள்ளாட்சி தேர்தல் குறித்த திமுக வழக்கால் சென்ற ஐந்தாண்டில் முழுமையான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
குறைகளை காரணமாகக் கொண்டு வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால்
இன்று உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆறுமாதம் அவகாசம் தேவை என்றதற்கு, மறுப்புத் தெரிவித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை நடத்த வேண்டும் எனஉத்தரவிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள். திமுக வழக்கமாக கொண்டாடும் முப்பெரும் விழா
அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தும் (நடுவில் நடந்த தேர்தலை கலைக்கலாம்) அல்லது கலைக்காமலும் நடத்தலாம்.
அரசியல் வாழ்க்கையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் உள்ளாட்சி அமைப்புகளி தேர்தல்களில் வெற்றி பெற்று படிப்படியாக மேலே வருவது நல்லது.
பொது மக்களின் தேர்தலாக இது இருக்கட்டும். 1985 முதல் அதிமுகவில் பவர் சென்டராக இருந்தவர் இப்போது கால் சென்டராகக் காரணம் அவர் காலைச் சுற்றிய பிறகு கடித்துத் தப்பிய கருநாகங்களில் சில என அரசியல் முதிர்ந்த பலர் நினைக்கக் காரணம்.! அதிமுக வினர் பலர் சின்னம்மா என அவர் அறிந்தவர்கள் அழைக்கும் காரணம் அவர் செய்த தலைவருக்குச் செய்த சத்தியமும் அவரது தியாக வாழ்க்கையுமே...டி.டி.வி. தினகரன் அமமுக பின்னணி பல நல்ல புத்திசாலிகள் இருந்தும் சில திருடர்கள் ஊழல் வாதிகள் மாவட்டப் பொறுப்பாளராக இணைந்திருந்தனர். அவர்கள் களையெடுப்பு அவசியம் அவர்கள் மீது மக்களின் கோபமே பலர் டெப்பாசிட் இழந்த நிலை.
கருத்துகள்