கடலுக்குள்ளும் தொல்லியல் ஆய்வு. மீளும் 2000 ஆண்டு கடந்த தமிழ்
வரலாற்றுக் களஞ்சியம்
கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க இருக்கும் நிலையில். முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் முடிவையும் அரசு எடுக்கும் நிலையிலுள்ளது.
மதுரை தென்கிழக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கீழடி கிராமம். இங்கு ஏழாம் கட்ட அகழ்வாய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது.
கீழடி அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களில் நடத்தப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்றானது. ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பான காலம்
கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு நூல் எழுதிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆய்வில் உடன் இருந்தார். இங்கு அருங்காட்சியகம் அமைப்புப் பணிகளையும், கட்டுமானங்களையும் நேரில் ஆய்வு செய்தனர்.
அங்கு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்படுமென தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். இந்த நிலையில் கீழடி போலவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் வரலாற்று புதையல்கள், படிமங்கள் ஆராய்ச்சி செய்யப்படாமலேயே உள்ளன.
கீழடியிலேயே 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுத் தொன்மையான பொருட்கள் கிடைக்கும் போது, கடலுக்குள்ளே இதை விட பழமையான வரலாற்று சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை நடத்தும் நிலையுள்ளது.
கீழடிதமிழர்களின் தொல்லியல் வரலாற்றுக்கு கீழடி ஒரு சான்று. ஆனால் இது மிகப்பெரிய சோற்று பானையின் சின்ன பருக்கைதான். இன்னும் பல வரலாற்று பின்னணிகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சி சவாலான காரியம். வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட கடல் சார்ந்த வர்த்தகம், கடல் சார்ந்த பயணங்கள் குறித்த உண்மையான வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழும். இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசு செயல் வடிவம் கொடுக்க ஆய்வு செய்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் தொல்லியல் ஆராய்ச்சி முன்பே கடற்கரைக்கருகே நடத்தப்பட்டு வருகிறது. கடற் கரையில், சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்துவருகிறது. இதேபோல் மற்ற வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் விரைவில் ஆராய்ச்சியை தொடங்க உள்ளது நல்ல முன்னேற்றமாகும். இதேபோல் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்ற புதுப்பிக்கப்படும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அங்கிருந்த கல்வெட்டு ஒன்றைப் படித்த நிகழ்வும் நடந்தது.கல்வெட்டில் கண்ட புதையல் குறித்து மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
நேற்று, மாண்புமிகு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுடன் சென்று திருமலைநாயக்கர் மஹால் அரண்மனையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட போது
அரண்மனையின் நாடகசாலைப் பகுதியைப் பார்த்துவிட்டு, உள்ளறையில் வைக்கபட்டிருந்த சிலைகளையும் கல்வெட்டுகளையும் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு கல்வெட்டின் அருகில் நின்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவ்விடத்தைக் கடந்த. சிறிது நேரத்தில் ஆய்வுப்பணி முடிந்தது.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, அரசாங்கக் கருவூலத்தின் மூலம் திருவள்ளுவருக்கு தங்க நாணயத்தை வார்த்து வெளியிட்ட மாமனிதர், எல்லீஸ் பதித்த கல்வெட்டு அது 1818 ஆம் ஆண்டு சென்னையில் கடுங்குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, எல்லீஸ் அவர்கள் மக்களின் குடிநீர் தேவையைக் கருதி 27 கிணறுகளை வெட்டிவித்தார். அதில் ஒரு கிணறு ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் வெட்டப்பட்டது. அக்கிணற்றின் கைப்பிடிச்சுவற்றில் கல்வெட்டு ஒன்றினை பதித்துள்ளார்.
வழக்கமான ஆங்கிலேயர் பாணியில் இல்லாமல், அழகிய தமிழ் செய்யுள் வடிவில் இக்கல்வெட்டினை வடிவமைத்தார். அதில் ”இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு” என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.அக்கெல்வெட்டுதான் இப்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்திலே இருக்கிறது.
பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட அக்குறள் எத்தனையாவது வரியிலே இருக்கிறது எனத் தேடி, அதனை 34 ஆவது வரியில் கண்டு விரல்தொட்டு வாசித்தார் அமைச்சர்.
அதன்பின் எல்லீஸ் பற்றி பங்களிப்பு செய்த பலரைப்பற்றி பேசிக்கொண்டோம். அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் துவங்கி ஐராவதம் மகாதேவன், வேதாசலம், தாமஸ் டிரவுட்மென், ஆ.இரா.வெங்கடாசலபதி வரை பேசியபடி விடைபெற்றோம்.
நாற்பது வயது நிறைவுறும் வரை நூற்களை எழுதி வெளியிடக்கூடாது என கருதியிருந்த எல்லீஸ் நாற்பத்தி ஓராவது வயதில் சட்டென இறந்து போனது தமிழுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.
செய்தித்தாளினைப் போல கல்வெட்டினை படிக்கிறார் தமிழக அமைச்சர். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரோ, இந்தியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள 80 000 கல்வெட்டில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்டாமல், படிக்காமல் கிடக்கிறது. அதற்குப் பணியாளர்களை நியமியுங்கள் என்றால் ஒருவரைக்கூட நியமிக்க மாட்டேன் என்கிறார்.
தங்கம் தென்னரசைப் பாராட்டிய கையோடு பிரகலாத் சிங் பட்டேலுக்கு நீண்ட கடிதம் எழுத ஆரம்பிக்கிறேன்.
வரிகளை விரல்களால் தொடுவது, அதனைப் பொறித்தவனது பாதங்களைத் தொடுவதைப் போன்றது. கிணறுகளை மண்மூடலாம். நிரம்பிய நீர் வற்றலாம், தமிழுக்கு தொண்டாற்றியவனின் புகழ் ஒருபோதும் மறையாது.
எல்லீஸ் புகழ் நீடுறும். என மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். முடித்தார்.
தமிழகத்தின் அறிவார்ந்த அமைச்சர்கள் தற்போது வந்த நிலையில் சரியான பாதையில் பயணிக்கின்றனர். மதியூகி மந்திரிகள் வரவு கடந்த காலத்தில் இது இல்லாமல் இருந்த காரணத்தால் இப்போது இது பலருக்கும் ஆச்சரியம் .கீழடி அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கார்பன் மாதிரிகளின் மீது அமெரிக்காவில் நடந்த சோதனையில் அவைகள் சுமார் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்