புதுச்சேரி சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தலில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும, பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 16 இடங்களை இந்தக் கூட்டணி பெற்றிருந்தது. இதனால் வெற்றி பெற்ற அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதில், அமைச்சரவை பதவி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளும் பேசிக் கொண்டபின் பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதுச்சேரி யூனியன் முதலமைச்சராக மே மாதம் 7ஆம் தேதி என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நலமுடன் திரும்பியவர் தனிமையில் இருந்தார். இதனால் அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் தள்ளிப்போன.
நிலையில், பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமண எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரசை விட பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. மே மாதம் 26 ஆம் தேதி புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பதவிகள் குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது துணை முதலமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் சபாநாயகர் பதவியும் கேட்டு வந்தது.
புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி என்பது இதுவரை இல்லாத ஒன்று, முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் கொண்ட சட்டமன்றத்தில், பாஜகவுக்கு சமமான இடம் கொடுக் முதல்வர் என்.ரங்கசாமி தயக்கம் காட்டியதால் இந்தக் கோரிக்கையில் பாஜக விடாப்பிடியாக இருந்தது. இதனால், அமைச்சரவை விரிவாக்கமும் தள்ளிப்போனது.
தற்போது மேலிட அழைப்பின் பேரில் பாஜக தலைவர்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லிக்குச் சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர்.
இந நிலையில், முதல்வர் என்.ரங்கசாமியுடன் அமைச்சரவை பதவி இடங்கள் பகிர்ந்து கொள்வது குறித்து டெல்லி மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே உடன்பாடு
எட்டப்பட்டு. அதன்படி சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவிக்கான இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தர முதல்வர் என்.ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம் துணை முதலமைச்சர் பதவியை கேட்டபதை பாஜக கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்து
இதனைத் தொடர்ந்து, பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி மற்றும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் இன்று புதுச்சேரி வரவுள்ளனர். அவர்கள், முதலமைச்சர் என். ரங்கசாமியைச் சந்தித்து சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர்களுக்கான பட்டியலை அளிக்க உள்ளதால் ஜூன் 7 ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலும், ஜூன் 14 ஆம் தேதி பாஜகவின் 2 அமைச்சர்கள், மற்றும் என்.ஆர்.காங்கிரசின் 3 அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்