காவலர்களிடம் கை நீட்டும் இடைநிலை காவல் அதிகாரிகள்: தடுக்க காவல்துறை இயக்குனர் அனுப்பும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்
காவலர்களிடம் கை நீட்டும் இடைநிலை காவல் அதிகாரிகள்: தடுக்க காவல்துறை இயக்குனர் அனுப்பும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்
காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தகவல்
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு இயக்குனர் சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்துகிறார். ஆரம்பம் முதல் இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது காவலர்களின் பணியிடமாறுதல், தண்டனையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்னர், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு வந்ததை தொடர்ந்து காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு கையெழுத்திட்ட அடுத்த நிமிடமே, அந்தத்தகவல் சம்பந்தப்பட்ட காவலருக்கு தற்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் இடையிலிருப்பவர்கள் லஞ்சம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இத்திட்டத்தை அண்மையில்
நடைமுறைப்படுத்தினார். காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத்தலைவர், மண்டலகாவல்துறை தலைவர் என மூன்று நிலைகளில் நடத்தப்பட்டதன் மூலம் 366 காவலர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. 164 காவலர்களின் தண்டனை குறைக்கப்பட்டது. 51 காவலர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் படி சொந்த மாவட்டங்களுக்கு பணி இடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன காவல் துறையைச் சார்ந்தோர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் 'காவல் குடும்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், வேலூரில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கிகள், உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதில், 274 தனியார் நிறுவனங்கள் பங்கு கொண்டன. 1,046 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
கருத்துகள்