வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்
25 கிலோ வரைக்கும் தானே ஜிஎஸ்டி? இந்தா பிடி 26 கிலோ.அரிசி பை.தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவால், தமிழகத்தில் அரிசியின் விலை இன்று முதல் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.ஜிஎஸ்டி கவுன்சில் 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அரிசி பிராண்டுகளுக்கு வரி விதித்திருந்தது. ஆனால், பதிவு செய்யப்படாத பிராண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தத் தளர்வுகள் நீக்கப்பட்டு அரிசி பிராண்டுகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது.
சில்லறை முறையில் அரிசி (Loose rice) ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வராது என்றாலும், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் FSSAI சட்டத்தின் கீழ் பேக் செய்யப்பட்ட வடிவில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயர்ந்தது. மேலும் ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயர்ந்தது. ஆட்சியாளர்கள் தன் சாமானியக் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். என்கிறார்
திருவள்ளுவர். இது போன்ற பல குறள் அதன் தொடர்ச்சியாக. ஆட்சியாளர்கள் அறியும் வகையில். "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி." எனவும் "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." எனவும். "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு." எனவும், பல வகையான கருத்துக்கள் வள்ளுவர் வாக்குள்ளது. உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு சலனமுமின்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் படித்து புரிந்து கொள்கிற போது, திருவள்ளுவர் சமூகச் சீர்த்திருத்த அறிஞரென உலக மக்களின் மனதில் பதிகிறார். " நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்." எனும் குறள் தந்த திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்தவர், ஆக இந்த வருடத்துடன் (2022) பிறந்து 2053 ஆண்டுகளாகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதரமாகக் கொண்டு தி.மு, எனவும் தி.பி எனவும் காலத்தைப் பிரித்துப் பயன்படுத்துகின்றனர்.
பொன்னோ, பொருளோ கேட்பாரற்றுக் கிடந்தால் எவரும் தனது, என உரிமைகோருவர் இல்லையா? அப்படி உருவம் பெற்றது தான் வள்ளுவரின் தோற்றம், அவர் முன் வாழ்ந்த புலவர்கள் பற்றிய தகவல் கூட பெரிதுமிருக்க வள்ளுவரைப் பற்றிய தகவல்கள் இல்லாதது வியப்பு தான்."வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு." இதுவும் அவர் கூற்றே.. ஒரு பக்கம் அரிசி கூட வரிவிதிப்பு செய்த நிலையில் மறுபக்கம் மற்றும் ஒரு நிகழ்வு வறுமை ஒழிப்பு என்று உணர்ந்து தமிழகத்தின் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் சிறார் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி உணவு திட்டம்.
அரசாணையை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
பள்ளிகளில் காலை சிற்றுணவு என 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1922-ஆம் ஆண்டில் திட்டத்திற்கான அரசாணை.
பிறகு காமராஜர் ஆட்சிக்காலத்தில் மாநில அளவில் மதிய உணவு திட்டம்.
பிறகு டாக்டர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக அடுத்த கட்டம்.
பின்னர் டாக்டர் கலைஞரும் ஜெ.ஜெயலலிதாவும் சத்துணவிற்கு மேலும் விஷயங்களை சேர்த்து பொலிவுபடுத்தினர்.
இப்போது நூறாண்டுகள் கழித்து தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முதற் கட்டமாக 1545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு.
அவசியமான கல்விக்கும் முன்னே பசிக்காத பிள்ளைகளின் வயிறு இருக்கவேண்டும் எப்போதுமே நினைத்து வருகிறது தமிழ்நாடு.1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில்
1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு.பசி நீக்கி கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி.மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி. ஒரு பக்கம் பெற்றோர்கள் வாங்கும் அரிசிக்கு வரி மற்றோரு பக்கம் படிக்கும் அவன் பிள்ளைக்கு இரண்டு வேளை உணவு இதுவே இப்போது நிகழ்வு அதன் உடே நேற்று இரு வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.
முதலாவது உபேர் - ஓலா இரண்டு நிறுவனங்களையும் இணைத்தல் குறித்த உரையாடலில் முன்னேற்றம்.
இரண்டாவது கேரளாவில் அரசே வாடகை வாகனங்களை வசதிகளை இணைய வழி சேவையாக நிர்வகித்தல்.
குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கு அணைத்து விவசாயிகளும் விவசாய நிலத்தை விற்று வீடு கட்டி, கடை கட்டி, கார் வாங்கி வெள்ளையும் சொள்ளையுமா திரியும் ஒரு கூட்டம். இல்லைன்னா ஊழல் செய்து சம்பாதித்து, ஊரை அடிச்சு உலையில் போட்டு அலையும் மற்றுமொரு கூட்டம்
தமிழகத்தின் பொருளாதாரமும் விவசாய நிலங்களின் விற்பனையுமென்று தான் எழுத முடியும்.
அரசியல் கருத்தியலில் ஏமாற்றுவதோடு நிற்கவில்லை. அதை புத்தகமாகவும் போட்டும் விற்கிறார்கள் சிலர்.
கால காலமாக எழுதியும் பேசியும் மட்டுமே சம்பாதித்த கூட்டம். வேறு என்ன செய்யும்?
கருத்துகள்