முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்     

  25 கிலோ வரைக்கும் தானே ஜிஎஸ்டி? இந்தா பிடி 26 கிலோ.அரிசி பை.தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவால், தமிழகத்தில் அரிசியின் விலை இன்று முதல் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.




ஜிஎஸ்டி கவுன்சில் 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அரிசி பிராண்டுகளுக்கு வரி விதித்திருந்தது. ஆனால், பதிவு செய்யப்படாத பிராண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தத் தளர்வுகள் நீக்கப்பட்டு அரிசி பிராண்டுகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது.




சில்லறை முறையில் அரிசி (Loose rice) ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வராது என்றாலும், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் FSSAI சட்டத்தின் கீழ் பேக் செய்யப்பட்ட வடிவில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.






இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயர்ந்தது. மேலும் ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயர்ந்தது.                     ஆட்சியாளர்கள் தன் சாமானியக் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். என்கிறார்


திருவள்ளுவர். இது போன்ற பல குறள் அதன் தொடர்ச்சியாக. ஆட்சியாளர்கள் அறியும் வகையில்.   "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி."   எனவும்     "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை." எனவும்.  "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு."         எனவும், பல வகையான கருத்துக்கள் வள்ளுவர் வாக்குள்ளது.       உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு சலனமுமின்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் படித்து புரிந்து கொள்கிற போது, திருவள்ளுவர் சமூகச் சீர்த்திருத்த அறிஞரென உலக மக்களின் மனதில் பதிகிறார். " நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்  நாடொறும் நாடு கெடும்." எனும் குறள் தந்த திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்தவர், ஆக இந்த வருடத்துடன் (2022) பிறந்து 2053 ஆண்டுகளாகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதரமாகக் கொண்டு தி.மு, எனவும் தி.பி எனவும் காலத்தைப் பிரித்துப் பயன்படுத்துகின்றனர்.


பொன்னோ, பொருளோ கேட்பாரற்றுக் கிடந்தால் எவரும் தனது, என உரிமைகோருவர் இல்லையா?   அப்படி உருவம் பெற்றது தான் வள்ளுவரின் தோற்றம், அவர் முன் வாழ்ந்த புலவர்கள் பற்றிய  தகவல் கூட பெரிதுமிருக்க வள்ளுவரைப் பற்றிய தகவல்கள் இல்லாதது வியப்பு தான்."வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு." இதுவும் அவர் கூற்றே..  ஒரு பக்கம் அரிசி கூட வரிவிதிப்பு செய்த நிலையில் மறுபக்கம் மற்றும் ஒரு நிகழ்வு வறுமை ஒழிப்பு என்று உணர்ந்து தமிழகத்தின் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் சிறார் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி உணவு திட்டம். 

அரசாணையை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

பள்ளிகளில் காலை சிற்றுணவு என 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  1922-ஆம் ஆண்டில்  திட்டத்திற்கான அரசாணை.

பிறகு காமராஜர் ஆட்சிக்காலத்தில் மாநில அளவில் மதிய உணவு திட்டம்.

பிறகு டாக்டர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக அடுத்த கட்டம். 

பின்னர் டாக்டர் கலைஞரும் ஜெ.ஜெயலலிதாவும் சத்துணவிற்கு மேலும் விஷயங்களை சேர்த்து பொலிவுபடுத்தினர்.

இப்போது நூறாண்டுகள் கழித்து தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்  முதற் கட்டமாக 1545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு.

அவசியமான கல்விக்கும் முன்னே பசிக்காத பிள்ளைகளின் வயிறு இருக்கவேண்டும் எப்போதுமே நினைத்து வருகிறது தமிழ்நாடு.1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 


1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு.பசி நீக்கி   கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி.மாநிலம் முழுவதும்  விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி.   ஒரு பக்கம் பெற்றோர்கள் வாங்கும் அரிசிக்கு வரி மற்றோரு பக்கம் படிக்கும் அவன் பிள்ளைக்கு இரண்டு வேளை உணவு இதுவே இப்போது நிகழ்வு அதன் உடே நேற்று இரு வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.

முதலாவது உபேர் - ஓலா இரண்டு நிறுவனங்களையும் இணைத்தல் குறித்த உரையாடலில்  முன்னேற்றம்.

இரண்டாவது கேரளாவில் அரசே வாடகை வாகனங்களை வசதிகளை இணைய வழி சேவையாக நிர்வகித்தல்.

 

குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று.  இங்கு அணைத்து விவசாயிகளும் விவசாய நிலத்தை விற்று வீடு கட்டி, கடை கட்டி, கார் வாங்கி வெள்ளையும் சொள்ளையுமா திரியும் ஒரு கூட்டம். இல்லைன்னா ஊழல் செய்து சம்பாதித்து, ஊரை அடிச்சு உலையில் போட்டு அலையும் மற்றுமொரு கூட்டம் 

தமிழகத்தின் பொருளாதாரமும் விவசாய நிலங்களின் விற்பனையுமென்று தான் எழுத முடியும்.

அரசியல் கருத்தியலில் ஏமாற்றுவதோடு நிற்கவில்லை. அதை புத்தகமாகவும் போட்டும் விற்கிறார்கள் சிலர்.

கால காலமாக எழுதியும் பேசியும் மட்டுமே சம்பாதித்த கூட்டம். வேறு என்ன செய்யும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...