முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் சந்திப்பு

அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில்  சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன்,


அவரது உடல் நலம் விசாரித்தார் பின்னர் அவரது சந்திப்பு முடிந்த நிலையில் செய்தியாளர் மத்தியில் பேசினர் “ எங்கள் மூத்த அண்ணன் இவர், எனவே மரியாதை நிமித்தமாக பார்ப்பதற்காக வந்தேன். அரசியல் ரீதியாகவும் கலந்து பேசினோம்” எனத் தெரிவித்தார்.

நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டுமெனத் தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா நடராஜன், “ அதிமுகவிலுள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ஜாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இப்போது வரை எனது மனதில் உள்ளது. அதிமுக அனைத்து ஜாதி, மதத்தை ஒன்றாக நினைக்கும் இயக்கமாகும். அந்த வழியில் எனது பயணம் தொடரும்” எனக் கூறியவர்.

மேலும் ஒரு இயக்கத்தில் சில நேரங்களில் இது போல சோதனை உருவாகும், பின்னர் அது சரியாகிவிடும். அதுபோல இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் சரியாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அனைவரும் இணையும் சூழல் உருவாகும். ஓபிஎஸ், ஈபிஎஸ் என யார் பக்கமும் நான் இல்லை. நான் தொண்டர்களின் பக்கம் தான் உள்ளேன். தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக விரைவில் இயங்கும் என தெரிவித்தார்.                       அதிமுக பொதுச்செயலாளர்   சசிகலா நடராஜன் புறப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிமுக  இரு தனித்தன்மை கொண்டது. ஒன்று ஏழைகளுக்கான கட்சி , இரண்டு யார் வேண்டுமானலும் இணையலாம் சம வாய்ப்பு வழங்கப்படும். அதன் மூலம் தான் டாக்டர் ஹண்டே போன்றவர்கள் கட்சியில் உயர்ந்தனர். ஒற்றைத் தலைமை ,  இரட்டை தலைமை என்பதெல்லாம் முக்கியமல்ல.  ஒற்றைத் தலைமை இருந்து என்ன சாதித்து விட்டார்கள்? கட்சியின் உருவ அமைப்பில் இன்று மாறுதல் ஏற்படலாம். எம்ஜிஆரே கட்சியில் 3 பிறவி எடுத்தார். பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக இடைக்காலம், கடைக்காலம் என்பதெல்லாம் தற்காலிகம்தான் .


எம்ஜிஆர் தனது காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தாரா..? இல்லை மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது தான் முக்கியம். பொழுது விடியும் போது தான் நாடகத்தின் கிளைமாக்ஸ் தெரியவரும். இப்போதே கூற முடியாது. எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்றினர், அதனால் என்ன நடந்து விட்டது ? கட்சியில் இன்னும் பல குழப்பங்கள் ஏற்படும் ? அதன்பின்பு தான் தீர்வு ஏற்படும் . அதிமுக விசயத்தில் பாஜக தலையிட வேண்டிய அவசியமில்லை. பாஜக தலையிடுவதாக வெளியாகும் தகவல்  தவறானது. எடப்பாடி பழனிசாமியால்  நியமிக்கப்பட்டவர்கள்தான் அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். 

தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்வானர்கள் இல்லை. சாணியில் பிள்ளையார் செய்து,  அந்தப் பிள்ளையாரை செய்தவர்களே அதை விழுந்து கும்பிடுவது போலத் தான் தற்போது பொதுச்செயலாளர் நியமனம் உள்ளது. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை ஆற்றில் நுரை போல மேலாக தெரிகிறது. ஆனால் கீழ்மட்டத்தில் எடுக்கும் முடிவுதான் முக்கியம். மேல்மட்டத்தில் உள்ள பிரச்சனை காற்றில் நுரை பறப்பது்போல பறந்துவிடும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை.  சும்மா வாயால் சொல்லுகின்றனர் .  ஆதார் அட்டை மூலம் கணக்கெடுத்தல் தான் உண்மையான தொண்டர்கள் எண்ணிக்கை தெரியவரும். கட்சியில் ஒன்றரை கோடி... மூன்று கோடி.. தொண்டர்கள் எல்லாம் கிடையாது. தற்போதைய சூழலில் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். எம்ஜிஆரின் உண்மை வாரிசு தொண்டர்கள் தான். மேல்மட்ட பிர்ச்சனை குறித்து தொண்டர்கள் கவலைப்பட  வேண்டாம், அவை தீர்ந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

வேங்கை வயல் விவகாரத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரான நிலையில் வழக்கில் விசாரணை சூடுபிடித்துள்ளது

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  எண்-2-க்கு மாற்ற வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி வசந்தி தெரிவித்தார்.             இந்த நிலையில் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலையை மாற்றியவர். பவானியில்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் மூத்த வழக்கறிஞர்  வாச்சாத்தி வழக்கை சட்டப்போராட்டம் மூலம் வென்று  காவல்துறை, மற்றும் வனத்துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஏழைகளின் பங்காளன் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுடன் வேங்கை வயல் வழக்கு பிரச்சனைக்கான சமூக நீதிக்கான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அணைத்துக் கட்சியின் வழக்கறிஞர் குழுமம் சார்பில் வழக்கறிஞர் சு.பழனிவேலு, வழக்கறிஞர் சத்யா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் ஆ...