முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவி ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில் பு(வி)தைக்கப்பட்டது அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..!

கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் பள்ளி  மாணவி ஸ்ரீ மதி மர்மமாக மரணமடைந்த நிலையில்




உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை மாணவியின் பெற்றோர் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா?.. இல்லையா?. என நீதிபதியே கேள்வி எழுப்பினார்.            சந்தேக மரணம் எனக் கருதப்படும் மாணவி ஸ்ரீமதி உடற்கூராய்வை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சீராய்வுசெய்ய உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு இந்த . வழக்கை விசாரித்த நீதிபதி,"உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்த நிலையில்,


ஏற்கெனவே தான் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலினை செய்யப் போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். 






இந்த வழக்கு  மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு மதியம் வந்தபோது தான் உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த, தடயவியல் நிபுணர் சாந்தகுமார் தரப்பில் மர்மமாக மரணமான மாணவியின் மறு உடற்கூறாய்வு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. 



 "இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளுமே காணொளிக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும். இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், புதிதாக எதுவும் கண்டுபிடக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை சரிபார்த்துக் கொள்ளலாமென்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மாணவியின் தந்தை தரப்பில்,  "உடற்கூறாய்வறிக்கை திரிக்கப்பட்டுள்ள"தென்று குற்றம்சாட்டியதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, " மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டுமென்றும்  உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் காணொளிக் காட்சிகளின் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



மேலும், மாணவியின் உடலை இன்று காலையில் பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.   





அதன்படி இன்று உடலைப் பெற்ற ஸ்ரீமதியின் பெற்றோர் உடல் தகனம் செய்யப்பட இருந்த ஏற்பாடுகள் அணைத்தையும் மறுத்து நிறுத்தி விட்டு  உடலைப் புதைக்க உறவினர்கள் திடீர் முடிவு செய்தனர். கடந்த 13 ஆம் தேதி மாணவி பள்ளியில் மர்மமாக உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீ மதியின் மரணம் தற்கொலை என பள்ளி மற்றும் காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டாலும்,


அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், மாணவியின் உடல் 13 ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த. நிலையில்,





மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவியின் உடல்  காவல்துறை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதனிடையே மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் சமூகத்தின் சார்பாக அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அஞ்சலி செலுத்தினர்  மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.


அதையடுத்து மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. சொந்த ஊரில் உள்ள மக்கள் அங்கு குவிந்திருந்த நிலையில் பலர் அஞ்சலி செலுத்தி அழுத கண்ணீர் காட்சிகள் அணைவருக்கும் சோகத்தை வரவழைத்தது அங்குள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக ஏற்பாடுகள் இருந்த நிலையில். அதை மாற்றி, தற்போது மாணவியின் உடலை இடுகாட்டில் புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. அதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் மாணவியின் இல்லத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆம் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.... ஆம் நீதி கேட்டு அது கிடைக்கும் வரை ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில்  பு(வி)தைக்கப்பட்டது.  'பப்ளிக் ஜஸ்டிஸ்' இதழ் சார்பில் இறுதியாக கண்ணீர் அஞ்சலி.

உன் மரணத்தில் விளையாடிய  எல்லா நடிகர்களுக்கும் இது சத்திய சோதனை, தர்ம நெரி சார்ந்த பெரிய இழப்புண்டு மகளே.

கொடும் கண்ணீரில்.உன் நீதி வெல்லும்.! என்று பலரும் நம்பும் நிலையில் ஸ்ரீ மதியின் தந்தை தாய் இறுதியில் கூறிய அழியாத வார்த்தைகள் ."அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..! அங்கு வராத பலரையும் கண்ணீர் மூலம் கதறவைத்தார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...