முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022 வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து

மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து

“பூஜா, உங்களது பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல”

பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது: 

“பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல. உங்களது வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது... தொடர்ந்து சாதனை புரியுங்கள்.”பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய பவினா பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:


“பாராட்டுக்குரிய பவினா பட்டேல் @BhavinaOfficial, நமக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தமது முதல் பதக்கமாக, பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உயரிய தங்கப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அவரது சாதனை, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பவினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.”குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான 67 கிலோ குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“ரோஹித் டோகாசின் சாதனையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சிறந்த பலன்களை வழங்கியுள்ளன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை அவர் அடைவார் என்று நம்புகிறேன்.பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு   பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திறமையான மல்யுத்த வீரராக பூஜா சிஹாக் முத்திரை பதித்துள்ளார். தமது விடா முயற்சியால் ஏராளமான சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்காலங்களிலும் இந்தியாவிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன்.ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு  பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மற்றொரு மல்யுத்த வீரர், இந்தியாவிற்கு கூடுதல் புகழ்! காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அசாதாரணமான துணிச்சலையும், உறுதித் தன்மையையும் தீபக் வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்புல்வெளி பந்து உருட்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் எனப்படும் புல்வெளி பந்து உருட்டுதல் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக, இந்திய ஆடவர் அணியின் வீரர்களான சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; 

"லான் பவுல்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் குறித்து பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் குழுப்பணியும் விடாமுயற்சியும் போற்றத்தக்கவை. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...