கள்ளக்குறிச்சி பள்ளியின் கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
கள்ளக்குறிச்சி அருகே சக்தி இண்டர்நேஷனல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின்னர் பள்ளியில் நடைபெற்ற வன்முறைகள் மூலம் .
50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு காவல்துறை விசாரணை உள்ள நிலையில் உள்ளூர் காவல்துறை அப்பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி பள்ளியின் கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
கள்ளக்குறிச்சி சட்டவிரோத கைதுகளுக்கு இழப்பீடு கோரும் வழக்கு -உயரநீதிமன்ற வேறு அமர்வுக்கு மாற்றம்.
கள்ளக்குறிச்சி சென்ற உண்மை கண்டறியும் குழு கண்டறிந்த உண்மைகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் இந்த வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு காவல்துறை, அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
ஆனால் இவ்வழக்கில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்; நடந்த சம்பவம் என்ன என்பது தெரியாமலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கமான பணிகளுக்கு சென்றவர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கிராம பொதுமக்கள் சென்னைக்கு வந்து டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாகவும் புகார் மனுவும் கொடுத்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யபப்ட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சிராப்பள்ளி சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்ர்.
வழக்கறிஞர் ரத்தினத்தின் இம்மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் கோரிக்கையை ஏற்று, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
கருத்துகள்