ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரைச் சேர்ந்தவர்
கிருஷ்ணாராவ். (வயது 54).மனைவி சுனிதா (வயது 50). தம்பதிகளுக்கு சாய் சந்த், கோபி சந்த் என்ற 2 மகன்களுக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசிக்கின்றனர். கிருஷ்ணா ராவ் மின்சார வாரிய அலுவலகமருகே ஹோட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து வீட்டிற்கு சென்று தூங்கிய நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அறையிலிருந்த பீரோவை உடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கத்திக் கூச்சலிட்டனர். ஆனால் யாரும் வரவில்லை அதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி இருவருக்கும் வாயில் துணியை வைத்து அடைத்து சரமாரியாகத் தாக்கி கத்தியால் இருவரின் கழுத்தையும் அறுத்துள்ளதில் இருவரும் இரத்த வெள்ளத்தில் இறந்தனர். கொள்ளையர்கள் பீரோவிலிருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை ரமணம்மா என்பவர் கிருஷ்ணா ராவ் வீட்டில் காலையில் பால் ஊற்றுவதற்காக வந்தார்.அப்போது கணவன், மனைவி இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து. அது குறித்து பாடூர் பள்ளி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் பிரேதமும் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பேர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்துல் சுபான் மற்றும் காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்