குவைத்தில் இறந்த. முத்துக்குமரனின் குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்கவும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் வைகோவின் முயற்சி வெற்றி
குவைத் நாட்டில் இறந்த ஆர்.முத்துக்குமரன் குடும்பத்திற்கு
உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவின் கோரிக்கை.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடி கிராமத்திலிருத்து ஆர்.முத்துக்குமரன் என்பவர் தனது பிழைப்புக்காக, 03.09.2022 அன்று, குவைத் நாட்டிற்கு சென்று உள்ளார். ஆர்.முத்துக்குமரனுக்கு விசா அனுப்பிய குவைத் நாட்டைச் சேர்ந்தவர் 07.09.2022 ஆம் தேதி அன்று, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார்.
இத் தகவல் 09.09.2022 அன்று, பிற்பகல் 4 மணியளவில், அவரது மனைவி மு.வித்யாவுக்கு தெரிந்ததோடு, அந்தத் தகவல் உண்மை எனவும் உறுதி செய்யப்பட்டது.
ஆர்.முத்துக்குமரன் வெளிநாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை. எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரைக் கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தரவும், தனது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் சடலத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறு, மு.வித்யா கண்ணீர் மல்க கடிதம் எழுதிய நிலையில்
தகவலறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ இது தொடர்பாக, 14.09.2022 இந்திய வெளியுறவுத்துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்.
அதன் படி கோரிக்கையை ஏற்று, பதிலளித்த குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் , இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம் எனவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மறைந்த முத்துக்குமரனின் உடல் 15.09.2022 அன்று மதியம் 02.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற ஆர்.முத்துக்குமரனின் குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்கவும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதற் கட்ட விசாரணை துவங்கப்பட்டு உள்ளதென
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்