கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வேலைக்கு பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி பெண் கைது.
அவர் காவலர் உள்பட 5 நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்த காரணமாக நடவடிக்கை கரூர் ஆதிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சபரி (வயது 28). பி.காம் பட்டதாரியானவர் இவரது பெற்றோர் கரூரில் தேனீர் கடை நடத்தி வருகின்றனர். ஆடம்பர வாழக்கை வாழ ஆர்வம் கொண்ட சபரி, மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். புதுப்புது வழிகளில் பெயர் மாற்றம் செய்து ஏமாற்றுவது என்பது குறித்து. இவரது செயல்பாடுகள் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்களைப் பிரிந்து ராமநாதபுரம் பகுதியில் ஒரு விடுதி அறையில் தங்கியிருந்தார்.
அப்போது, அவருக்கு ராஜேஸ் என்ற பணியிலிருந்த காவலருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் அவர் மூலம் தான் ஆடம்பரமாக வாழ நினைத்த சபரி, அவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தனது கணவருக்கு மேலிடத்தில் நல்ல செல்வாக்குள்ளது எனக்கூறி தொடர்ந்து மோசடிச் செயல்களில் ஈடுபடத் துவங்கியதாக தெரிகிறது. கரூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கோடி கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டவர்,
பல காவலர்களிடமிருந்தும் பணத்தை அபகரித்துக் கொண்டு அணைவரிடமிருந்தும் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மோசடி செய்த பணத்தில் கரூர் மணவாடி பகுதியில் வீடு வாங்கியதாகவும் கூறப்படும் நிலையில், மோசடி தொடர்பான புகாரில் இராமநாதபுரம் காவல்துறை சௌரியை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் கூறப்படுவதில் அவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியவர், அவரையும் விட்டு கரூருக்கு வந்து காந்திகிராமம் பகுதியில் குடியேறி தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தவர், வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றுவதாகக் கூறி பலரிடம் கடன் வாங்கித் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் மீண்டும் மோசடியில் ஈடுபடத்துவங்கியதாகவும்.
மேலும் கரூரில் உள்ள ஒரு முக்கிய நபரின் உறவினர் எனக் கூறி, பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூபாய்.20 லட்சம் வரையிலும் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் தற்போது பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்குத் தெரிய வரவே அவர்கள், நேற்றுமுன்தினம் இரவு காந்திகிராமம் வீட்டில் வைத்து அவரைப் பிடித்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அவரிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட பின்னர், அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுசம்பந்தப்பட்ட வழக்கு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாறன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததும், ஐந்துக்கும் மேற்பட்டோரைத் திருமணம் செய்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, யார் யாரிடம் சௌரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்கள் யார், எத்தனை பேரை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது குறித்தும் இவரை மோசடி செய்த நபர்கள் யார்? யார்? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து காவல் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற விசாரணை முடிவில் இவர் செய்த குற்றம் உறுதியாக குற்றப்பத்திரிகையை தாக்கலாகும் போது தான் உண்மை தெரிய வரும்.
கருத்துகள்