மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையில்
நேற்று காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு சென்று அங்குள்ள ரேசன் (குடிமைப் பொருட்கள் அங்காடி) கடையில் ஆய்வு மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததால் கோபமடைந்தவர், அதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூபாய்.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுவதில் மத்திய அரசு முக்கிய பங்கும் வகிக்கும் நிலையில் பிரதமரின் படத்தை வைக்காதது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பியதையடுத்து காமரெட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலளிக்காததால், அரை மணி நேரத்திற்குள் விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ், 'நிர்மலா சீதாராமன் பேச்சு நகைச்சுவையானது. தேசிய உணவு விதிகளின் கீழ் 50 முதல் 55 சதவீதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரேஷன் அரிசி வழங்குகிறது. மீதமுள்ள 45 சதவீதம் பேருக்கு தெலுங்கானா மாநில அரசு தான் ரேஷன் அரிசி வழங்குகிறது. இதற்காக முதலமைச்சர் படத்தை வைக்கிறோமா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் படத்துடன் கூடிய ஒரு பேனரை எங்கள் ஆட்கள் வைப்பார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவராக அதற்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இல்லாவிட்டால் நானே, இங்கு பேனர் வைப்பேன் என்று பேசியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏன் இப்படி பேசினார்? அங்கு என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் தெலங்கானாவின் ரேஷன் கடைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாநில, இந்திய அரசின் பங்குகள் குறித்து சில தரவுகளை அடிப்படையாக கொண்டு தோராயக் கணக்கீடுகள் செய்து பேசினார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதற்கு பல தலைப்புகள் தங்கள் கருத்துக்களை பதிவு பதில்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கருத்துகள்