காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபாடு
காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபட்டார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் வழிபாடு செய்ததை பெரும் பாக்கியமாகவும், ஆசிர்வாதமாகவும் கருதுகிறேன். நமது கலாச்சார பாதுகாப்பு தொடர்பான ஆதி சங்கராச்சாரியாரின் பெரும் பங்களிப்பிற்காக எதிர்கால சந்ததியினர் கடமைப்பட்டிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கொச்சியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்று வழிபட்டார். மேலும் கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
பிரதமர் திரு.நரேந்திர மோடி கொச்சியில் ரூ.4500 கோடி மதிப்பிலான மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்தில் பிரதமர் வழிபட்டார்.
பிரதமர் பேசும் போது, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருப்பதை உணர முடிகிறது. இந்த நல்ல நாளில் கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைப்பது சிறப்பு. இந்த திட்டங்கள் மூலம் பொது மக்களின் வாழ்வியலை முன்னேற்றி அவர்கள் தங்களது பணிகளை தடையின்றி செய்வதற்கு பயன்படும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று அதன் முதல் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைப்பதிலும், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
கொச்சியில் உள்ள ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகளால் அனைத்து போக்குவரத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் விளைவாக மக்கள் பயணம் செய்யும் நேரம் குறைக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து குறைவது மட்டுமல்லாமல் காற்று மாசும் குறைகிறது.
கடந்த 8 வருடங்களாக மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதன்மையான போக்குவரத்தாக மாற்றுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மேலும், மத்திய அரசு, மாநில தலைநகரங்களுக்கு மட்டுமின்றி, பெரிய நகரங்களுக்கும் மெட்ரோ சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த 30 ஆண்டுகளில் 250 கிலோ மீட்டர் பாதைகள் மட்டுமே இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும், 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், 1000 கிலோ மீட்டருக்கும் மேலான மெட்ரோ வழித்தடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “நாங்கள் தற்போது இந்திய ரயில்வே துறையை முற்றிலுமாக மாற்றி வருகிறோம். நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் விமான நிலையங்களை போன்று மேம்படுத்தப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்தார்.
கேரளாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்புப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் விவசாயம் முதல் தொழில்துறை வரை பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் தனது உரையின் நிறைவில், “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சி செய்வோம்” என்ற கொள்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு நாட்டை மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார். கேரளாவின் கொச்சின் மெட்ரோ மற்றும் ரயில்வே தொடர்பான முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து நி்கழ்த்திய உரையின் தமிழாக்கம்
கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமதுகான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராய் விஜயன் அவர்களே, கேரள அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, கொச்சி நகரின் சகோதர சகோதரிகளே!
இன்று கேரளாவின் அனைத்துப் பகுதிகளும் ஓணம் பண்டிகையில் மூழ்கியிருக்கிறது. இந்த உற்சாகமான விழாவின் போது கேரளாவிற்கு ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போக்குவரத்துத் திட்டங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
கொச்சி மெட்ரோவின் அலுவா-பலரிவட்டம் பிரிவை 2017 ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்ததை நினைவு கூர்கிறேன். கொச்சி மெட்ரோ முதல் கட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். மேலும், இரண்டாவது கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கொச்சியின் இந்தத் திட்டம் ஒட்டுமொத்த தேசத்தின் நகர்ப்புற மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும். கொச்சியில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஆணையம் மெட்ரோ, பேருந்து, நீர்வழித் தடங்கள் ஆகிய அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைக்கும்.
தலைநகரிலிருந்து மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ வலைப்பின்னலை, மத்திய அரசு விரிவுப்படுத்தியுள்ளது. முதலாவது மெட்ரோ ரயில், நாற்பது ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில், நாட்டில் 250 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே மெட்ரோ வலைப்பின்னல் தயாரானது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான புதிய வழித்தடங்கள் தயாராகி உள்ளன. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ வழித்தடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவின், போக்குவரத்துத் தொடர்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கேரளாவின் வாழ்வாதாரம் என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை-66, ஆறு வழித்தடமாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ரூ.55,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
சமூகத்தின் மீது அக்கறையும், கவலையும் வாழ்க்கையின் பகுதியாக இருப்பது கேரள மக்களின் தனிச்சிறப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் கேரள மண்ணில் தோன்றிய அன்னை அமிர்தானந்தமயி அவர்களின் ஆசிகளை நான் பெற்றேன். அவரது கருணையால் ஹரியானாவில் அமைக்கப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.
நண்பர்களே,
இத்தகைய வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்களுக்கு நான் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் வாழ்த்துகள்
மிக்க நன்றி
கருத்துகள்