மோர்பி நகரில் மோர்ச்சு ஆற்றின் கேபிள் பாலம் இடிந்ததில் 350 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த பரிதாபம்
குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் ஓடும் மோர்ச்சு ஆற்றின் மீதுள்ள கேபிள் பாலம் இடிந்ததில் 350 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோர்பியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு முன்பு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500 க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் அவர்கள் 350 பேருக்குக் குறையாதவர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலைத் தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்புப் பணிகளைத் துரிமாக மேற்கொள்ளத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் முதல்வருடன் தொலைபேசியில் பேசியதை தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர பட்டேல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். இது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நிலைமையைத் தொடர்ந்து உண்ணிப்பாகக் கண்காணித்து தேவையான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கருத்துகள்