தமிழ் நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மிக கன மழை பொழியுமென தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ் நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மிக கன மழை பொழியுமென தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தில் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்யுமெனவும் மேலும் இது வெறும் தான் முன்னோட்டம் தான் இனிமேல் தான் இதைவிட பலத்த மழை இருக்குமென்றும் நவம்பர் 11 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மழை அளவு அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார். முகநூலில் பதிவிட்ட பதிவில், கடந்த நாட்களில் தமிழகத்தில் பெய்த மழை அளவை விட நவம்பர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னையில் அதிக அளவு மழைப் பொழிவிருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகி, கடந்த 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடற்கரையை நோக்கி வரும் காரணமாக, நவம்பர் மாதம் 11ஆம் தேதி 15 மாவட்டங்களில் மிக கன மழை பொழியும் எனவும் 12 ஆம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் மிகக் கன மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08.11.2022 மற்றும் 09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியக்கூடும்.
10.11.2022: தமிழ்நாடு, புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.11.2022: தமிழ்நாடு, புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பொழிய வாய்ப்புள்ளது.
12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பொழிய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சென்னை நுங்கம்பாக்கம் 6, திருக்குவளை (நாகப்பட்டினம்) 5, மகாபலிபுரம் ( செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு) தலா 4, அண்ணாமலை நகர் (கடலூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் (கடலூர்), சிவகிரி (தென்காசி), சிதம்பரம் (கடலூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), மயிலாடி (கன்னியாகுமரி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), காவல்துறை இயக்குனர் அலுவலகம் (சென்னை), இராதாபுரம் (திருநெல்வேலி), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தலா 3 செ.மீ மழை பதிப்வாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை 08.11.2022 மற்றும் 09.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழ்நாடயடில் கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.11.2022 முதல் 12.11.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள்