இந்தியன் ஆயில் பவனில் 2022 ஆம் ஆண்டின் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நிகழ்ச்சிகளின் நிறைவு நிகழ்ச்சி
சென்னை இந்தியன்ஆயில் பவனில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் (2022) நிறைவு நிகழ்ச்சியில் ஆவடி காவல்துறை ஆணையர் திரு. சந்தீப் ராய் ராத்தோர் இ.கா.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
2022ஆம் ஆண்டின் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நிகழ்ச்சிகளின் நிறைவு நிகழ்ச்சி, நவம்பர் 8, 2022 அன்று சென்னை இந்தியன்ஆயில் பவனில், ஆவடி காவல்துறை ஆணையர் திரு சந்தீப் ராய் ராத்தோர் இ.கா.ப., அவர்கள், தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு. S.B. கல்யாணி, தலைமை பொது மேலாளர் (மனித வளம்) - SRO திரு. T.V. சிவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பார்வையாளர்கள் இடையே உரை ஆற்றிய திரு. சந்தீப் ராய் ராத்தோர் அவர்கள் கூறியதாவது : " விஜிலன்ட் ஆக இருத்தல் என்பதை ஒழுக்கம் தவறாது இருத்தல் என்றோ பணம் பெறாமல் இருத்தல் என்று வரையறை செய்து விட முடியாது. விஜிலென்ஸ் என்கிற லஞ்சம் தவிர்த்தல் பல்வேறு பிற அம்சங்களையும் தன்னுள் அடக்கியது என்றே கூற வேண்டும். நேர்மை என்பது நமது பண்புநலனின் உள்ளார்ந்த ஒன்றாகும். சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சக குடிமக்களை மதித்து நடத்தல் என்பதே நம்முடைய பணியிலும் சொந்த வாழ்விலும் நம்மை வலிமையாக்கும்".
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த தகவல்களைப் பரப்பும் வகையில், வட்டார அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நமது ஊழியர்களுக்கு திரு. சந்தீப் ராய் ராத்தோர் அவர்கள், பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக, தலைமை பொது மேலாளர் (விஜிலென்ஸ்) /SR திரு. ஹைமா ராவ் அவர்கள், வரவேற்புரை நிகழ்த்தி, 2022 ஆம் ஆண்டின் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஒரு வாரமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 2022 ஆண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் செய்தியான "வளர்ச்சி பெற்ற நாட்டிற்காக ஊழல் இல்லாத இந்தியா" என்பது பரப்புரை செய்யப்பட்டது. தெற்கு மண்டலத்தின் அனைத்து அமைவிடங்களில் ஊழியர்களுக்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு நடத்தப்பட்டது. CVC வலைதளம் மூலமாக, ஊழியர்கள், ஆன்லைனில் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்க வலியுறுத்த பட்டார்கள். இந்த வாரத்தில், சில்லரை விற்பனை நிலையங்களில் Q&O சோதனை இடங்களில் இந்த கருப்பொருளைப் பற்றிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வட்டாரத்தில் 3000க்கு மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களில் இந்த வாரம், சோதனை செய்து நிரப்புதல் (செக் அண்ட் பில்) நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
கேபெக்ஸ், கான்ட்ராக்டர்ஸ், சப்ளைர்ஸ் ஆகியோர் குறித்து தென் மண்டல பொறியியல் துறையினர் வெண்டார் சந்திப்பு கூட்டங்கள் நடத்தினர். தென் மண்டல விஜிலென்ஸ் குழுவினர்,
ஊழியர்கள், செக்யூரிட்டி கார்டுகள் & பிற பங்கேற்பாளர்கள், பயன் பெறும் வகையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்த்தினர். SRO /TNSO ஊழியர்கள் இடையே தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசகம், கட்டுரை எழுதும் போட்டி, பெயின்ட்டிங் போட்டி நடத்தப்பட்டது.
கருத்துகள்