அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
ஒருவரது பிறந்தநாளில் மெழுகுவர்த்திகள், கேக், வெளிச்சம் மற்றும் நண்பர்கள் என இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஜிம்மி தனது 45வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கடற்கரை இல்லத்தில் கொண்டாடுகிறார். கேக் வெட்டிய பிறகு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது.
ஆர்டுரோ மாண்டினீக்ரோ இயக்கிய பர்த்டே பாய் (கம்ப்ளேனெரோ) (2022) பனாமியன் த்ரில்லர் திரைப்படமாகும். கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது ‘டேபிள் டோக்ஸ்’ நிகழ்ச்சியில் தனது திரைப்படத்தைப் பற்றிப் பேசிய , ஆர்டுரோ மாண்டினீக்ரோ, உலகில் தற்கொலைகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்டார். “பர்த்டே பாய் நட்பைப் பற்றி பேசும் படம்” என்று அவர் கூறினார்.
படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரி ஜே பேரியண்டோஸும் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். “படத்தின் கருப்பொருள் பற்றிய யோசனை தொற்றுநோய் காலங்களில் உருவானது. நாங்கள் பெரிய அளவில் மரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கதாநாயகனுக்கு கண்டறியப்பட்ட அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் பற்றி படம் பேசுகிறது. இந்த படத்தின் கருப்பொருள் முன்னர் தொடப்படாதது" என்று அவர் கூறினார்.
இப்படம் இந்த ஆண்டு அகாடமி விருதுகளுக்கான போட்டியில் உள்ளது.புகழ்பெற்ற அனிமேட்டர் டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் அனிமேஷன் பற்றி விளக்கம்
"அனிமேஷன் தொடருக்கான திரைக்கதை எழுதுவது புத்தகங்களில் பயன்படுத்தப்படும் திரைக்கதை மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது " என்று டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸில் உரையாற்றிய அவர், அனிமேஷன் ஷோ தயாரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம் என்று தெரிவித்தார். 26 நிமிட அனிமேஷன் நிகழ்ச்சிக்கு 7-10 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அவர் கூறினார்.
வீடியோ கேம்ஸ், விஎஃப்எக்ஸ், அனிமேஷன் துறையில் பரிணாம வளர்ச்சியை விளக்கிய டாக்டர் ஜெஸ்டிக் கூறுகையில், இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பாரம்பரிய தொழில்துறையை மாற்றுகிறது என்றார்.
அனிமேஷன் டிவி தொடரை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்க ஓடிடி தளங்கள் வழிவகுத்தன: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் முகேஷ் சாப்ரா
இந்தியத் திரைப்படத் துறையில் நடிகர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை மிகவும் பழைமையானது என்றும், நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையேயான இணைப்பாக நடிப்பு தேர்வு இயக்குனர் செயல்படுகிறார் என்றும் இத்துறைக்கான இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறினார். முன்பெல்லாம் இயக்குனர்கள் யார் கிடைக்கிறார்களோ அவர்களை நடிக்க வைத்தனர், ஆனால் இப்போது இந்த செயல்முறை மிகவும் தொழில்முறையாகிவிட்டது என்றார் அவர்.
53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் ‘புதிய இந்திய சினிமாவில் நடிப்பு’ என்ற தலைப்பில் “உரையாடல்” நிகழ்ச்சியில் முகேஷ் சாப்ரா கலந்து கொண்டார்.
இந்தியத் திரையுலகில் நடிகர்கள் தேர்வுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு உந்து சக்தியாக விளங்கும் முகேஷ் சாப்ரா, க்ஷிதிஜ் மேத்தா ஆகியோர் இதில் பேசினர். நடிகர்கள் தேர்வு செயல்முறையின் பரிணாமம், இந்தியத் திரைப்படத் துறையில் நடிப்புத் துறையில் ஓடிடி தளங்களின் தாக்கம், ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றில் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்தின் தாக்கம் குறித்து பேசிய முகேஷ் சாப்ரா, இவற்றின் அதிகரிப்பு நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்றார்.
படங்களில் மிகச் சிறிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பதால், இவற்றுக்கு வரவேற்பு காணப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
நடிகர்களுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்துவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விவரித்த முகேஷ் சாப்ரா, இந்தப் பட்டறைகள் படத்தில் வாய்ப்புகளையும், புதிய நடிகர்கள் சிரமமின்றி செயல்படவும், அவர்களை பாத்திரத்திற்குத் தயாராகவும் வைக்கும் வகையிலும் நடத்தப்படுகின்றன. அவை நடிகர்களை மேலும் தயார்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் உதவுகின்றன. பட்டறைகளை நடத்துவது பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட க்ஷிதிஜ் மேத்தா, இந்த செயல்முறையின் மூலம் செல்லாமல் யாராவது வெற்றியை அடைந்தால், அவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்தால் வித்தியாசத்தை உணருவார்கள் என்று கூறினார். இது நீண்ட காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
கருத்துகள்