திருவண்ணாமலையில் சாதாரணமான் நபராக இருந்த நித்யாநந்தா நாட்டுக்கோட்டை செட்டியார்கள் (நகரத்தார் பெருமக்கள் ) ஆதரவில் பிடதியில்
ஆஸ்ரமம் அமைத்துக் கொண்ட நிலையில் பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் பதிவான வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க தனது சில ஆண் பெண் சீடர்களுடன் தலைமறைவானவர் நித்தியானந்தா.தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை (ஈக்வைடா) குத்தகைக்கெடுத்து,
அதனை கைலாசா என்ற தனி நாடாக உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது
,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்திதமான அதிகாரபூர்வமான புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை. அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் அவரது கைலாசா நாட்டின் சார்பில், ஐ.நா. சபையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறும் விஜயபிரியா நித்தியானந்தா என்பவர் கலந்து கொண்டார்.
பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியவர், கைலாசாவின் அரசியல் சாசனம் என்று கூறப்படும் பகவத் கீதையின் முன்னுரையையும் வழங்கிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நித்தியானந்தா எட்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாகவும் அவை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்
கைலாசா எனும் மூலநூல் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அதன்படி,ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் உச்சரித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள், ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், ஆன்மிக அமைப்பால் கொண்டாடப்பட்ட அதிகபட்ச பிரம்மோத்ஸவங்கள், ஒரு குழுவால் பத்மாசன யோகா ஆசனத்தை நடத்துவதற்கான நீண்ட காலம் மற்றும் ஒரு தனிநபரால் அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது ஆகிய சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தற்போது மக்கள் இந்த போலிச் சாமியார் இவ்வளவு விபரம் வெளியிடும் இவர் குறித்த தகவல் நம்மை ஏமாற்றவா என்பதும், வெளியிடும் நபர் யார் என்பதே? இப்போதய எழுவினா?
கருத்துகள்