எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பித் தருவேன் டாக்டர் சுவாமி பிரதமர் உள்துறை அமைச்சருக்கு ட்டுவிட்டர் மூலம் தாக்கு
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வீராட் ஹிந்துஸ்தான் சங்க்தின் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
சில மாதங்களாகவே மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார். இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாகும் மாறியுள்ளது. ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி 'பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஹரேன் பாண்டியா போல் என் மீது திட்டமிடவில்லை என்று நான் நம்புகிறேன்.
அது உண்மை என்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பி தருவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இருவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத்தில் இருப்பவர்களைக் கூட அவமானப்படுத்தி உள்ளனர்.'
என்று பதிவிட்டு உள்ளார். இது நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி திரைப்படத்தில் பேசிய முறை போல பார்த்தால் தேரியும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா. பிசிசிஐ செயலாளராக இருப்பவர். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் என்பதால் இவர் மீது பல விமர்சனங்கள் வந்த நிலையில் பெயர் குறிப்பிடாமல் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. செப்டம்பர் மாதம் இந்திய அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது பற்றி பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் ஒரு பதிவை அப்போது வெளியிட்டார். அதில், 'ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாகக் கேட்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரேன் பாண்டியா கொலையின் மர்மம்.குறித்து டாக்டர் சுப்ரமணியன் சாமி தற்போது பதிவில்
2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னால் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைப் போல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் திட்டமிடவில்லை என்று தான் நம்புவதாக' பரபரப்புக் கருத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து ட்விட்டரில் விமர்சித்தது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.
கருத்துகள்