முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர் வாழ்த்து

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் ;

“இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.”உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ள நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடட தீர்ப்புகளைக் காண்போம் 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இன்று காலை உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ளார் வழக்கறிஞராகப்பணியைத் தொடங்கி, பேராசிரியராகவும், இந்திய அரசின் சொலிஸிட்டர் ஜெனரலாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,


அலஹாபாத் உயர்நீதிமன்ற்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த பின் 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் ஏற்றார்.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக  ஆறண்டுகளாக இருந்து வரும் சந்திரசூட் 1057 அமர்வுகளில் சக நீதிபதிகளுடன் 513 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் 94 சேவை வழக்குகளிலும் 89 குற்ற வழக்குகளிலும் சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளில் 45 ம், சிவில் வழக்குகளில் 56 ம், நுகர்வோர் வழக்குகளில் 37 தீர்ப்புகளையும்  வழங்கியுள்ளார்

கேரளத்தின் மருத்துவ மாணவி ஹாதியா, இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஷபீன் ஜஹானை திருமணம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதையும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் உரிமை வயது வந்த பெண்ணுக்குள்ளது.' என்று திருமணம் செல்லும் எனத் தீர்ப்பளித்தார். மேலும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், '10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். தீண்டாமைக்குத் தடை விதித்திருக்கும் சட்டத்தையும் இது மீறுகிறது. பெண்களின் சுய உரிமை, சுதந்திரம், மற்றும் கண்ணியத்தை இது சீர்குலைக்கிறது.' என விமர்சித்தார். டெல்லி அரசில் துணை நிலை ஆளுநரின் தலையீடு தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், 'ஆளுநர் டெல்லியின் நிர்வாகத் தலைவர் கிடையாது.

ஜனநாயகம் என்பதே நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத அம்சம். எனவே நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவே வழிநடத்த வேண்டும். முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அவருக்கென ஜனநாயகத்தில் சுதந்திரமான அதிகாரமில்லை.' என்று தீர்ப்பளித்தார்.    

 மேலும்  உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்று இருக்கும் நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாக 

 377 வது சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், இதை எதேச்சதிகராம் கொண்ட காலணியாதிக்க சட்டம் என்று விமர்சித்தார். இந்த சட்டம் சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கு எதிராக உள்ளது என்று கூறி LGBTQ சமூகத்தினருக்கு அரசியலமைப்பு உரிமையுள்ளதாகக் கூறினார். மேலும்

நீதிபதி லோயா வழக்கில்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான சொராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தெஹ்சீன் பூணாவாலா தொடர்ந்த வழக்கை விசாரித்த சந்திரசூட், அதனைத் தள்ளுபடி செய்தார். என்பது குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...