முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்மைக் காலங்களில் ஐஐடி மெட்ராஸில் பெறப்பட்ட முன்வேலைவாய்ப்புகள்

ஐஐடி மெட்ராஸில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முன் வேலைவாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் கிடைக்கப் பெற்றுள்ளன


சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மாணவர்கள், 2022-23ம் கல்வி ஆண்டில் மிக அதிக அளவில் முன் வேலைவாய்ப்புகளைப் பெற்று சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்து உள்ளனர். வலுவான கோடைக்கால உள்ளகப் பயிற்சி ஒன்றை இக்கல்வி நிறுவனம் முற்றிலும் ஆஃப்லைன் முறையில் நடத்தியது. தொழில்துறையினரையும் மாணவர்களையும் நேரடியாக இணைக்க இந்த முயற்சி உதவியதுடன், முன் வேலைவாய்ப்பு (PPOs) எண்ணிக்கையையும் உயர்த்தியது.

2021-22ல் மொத்தம் 231 ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் மட்டுமே முன்வேலைவாய்ப்புகளை (Pre-Placement offers) பெற்றிருந்த நிலையில், 2022-23 கல்வியாண்டில் ஏறத்தாழ 333 பேருக்கு (13 நவம்பர் 2022 நிலவரப்படி) இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. முதல்கட்ட வளாக வேலைவாய்ப்பை 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அதுவரை முன்வேலைவாய்ப்புக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்.


இந்த அளவிற்கு முன்வேலைவாய்ப்புகளின் செயல்திறன் இருப்பதற்கு இக்கல்வி நிறுவனத்தின் உறுதியான உள்ளகப் பயிற்சித் திட்டம் முக்கிய காரணியாக விளங்குகிறது. மாணவர்கள் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து முன்வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த நடைமுறை உதவிகரமாக இருந்து வருகிறது. உள்ளகப் பயிற்சி காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால்தான் முன்வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது.

முன்வேலைவாய்ப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கான காரணிகளை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (வேலைவாய்ப்பு) பேராசிரியர் சத்யன், "இந்த ஆண்டு பிபிஓ-க்கள் (முன்வேலைவாய்ப்பு) அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சியை அளித்து அவர்களின் திறனை மதிப்பிடும் வகையில் நீண்டகால நேர்காணல் நடைமுறையை மேற்கொள்ளவும், முன்வேலைவாய்ப்புகளை வழங்கவும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். மாணவர் ஒருவருக்கு நிறுவனம் அளிக்கும் முன்வேலைவாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நிறுவனத்துடன் நீண்டகாலத்திற்கு நல்லதொரு தொடர்பு ஏற்பட வழிவகுக்கும்" என்றார்.

அண்மைக் காலங்களில் ஐஐடி மெட்ராஸில் பெறப்பட்ட முன்வேலைவாய்ப்புகள் (PPOs)

ஆண்டு

2016-17

2017-18

2018-19

2019-20

2020-21

2021-22

2022-23

பிபிஓ

73

114

135

170

186

231

333*

(*13 நவம்பர் 2022 நிலவரப்படி)

வளாக வேலைவாய்ப்புகளுக்கு உள்ளகப் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (உள்ளகப் பயிற்சி) பேராசிரியர் பி.முருகவேல், "மாணவர்கள் தாங்கள் கற்றறிந்த திறன்களை வெளிப்படுத்தவும், தாங்கள் விரும்பும் திறமையான மாணவர்களை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கவும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ன் உள்ளகப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதும், நடப்பாண்டில் முன்வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

அதிக எண்ணிக்கையில் முன்வேலைவாய்ப்புகளை (PPOs) வழங்கிய முதல் ஐந்து நிறுவனங்கள்

2022-23

முன்வேலை வாய்ப்பு -2022

குவால்காம்

19

ஹனிவெல்

19

மைக்ரோசாப்ட்

17

கோல்ட்மேன் சாக்ஸ்

15

டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்

14

ஆரக்கிள்

13

ஐஐடி மெட்ராஸ்- வளாக உள்ளகப் பயிற்சி தரவுகள்

விவரம்

2020-21 (மொத்தம், ஆன்லைன் முறை)

2021-22 (மொத்தம், ஆன்லைன் முறை)

2022-23* (ஹைபிரிட் முறை)

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்

132

146

122

பதிவு செய்யப்பட்ட சுயவிவரங்கள்

242

247

203

தேவையுள்ள பயிற்சிஇடங்கள்

618

772

557

பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்

970

1330

1397

உள்ளகப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்

542

708

504

உள்ளகப் பயிற்சி சதவீதம்

57%

54%

36% till date

(*13 நவம்பர் 2022 நிலவரப்படி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...