இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக திரு எஸ் ஜி பணிக்கர் சென்னையில் பொறுப்பேற்றுக்கொண்டார்
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக திரு எஸ் ஜி பணிக்கர் சென்னையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கேரளா பல்கலைக்கழகத்தில் மின்சாரத் துறையில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர், மனிதவள நிர்வாகத்தில் தனிச்சிறப்புடன் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
1989ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரளாவின் உத்யோக் மண்டலில் உள்ள திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன (ஃபேக்ட்) நிறுவனத்தில் தமது பணியை தொடங்கிய திரு பணிக்கர், 1991 முதல் 1993 வரை மத்திய பொதுப்பணிகள் துறையில் பணிபுரிந்தார்.
1993ஆம் ஆண்டு முன்னாளைய தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேற்கு மண்டல மும்பை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக சேர்ந்தார். அந்த துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2016 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை சென்னை மண்டல தலைமையகத்தின் சென்னை விமான நிலைய திருச்சி திட்டத்திற்கு பொறியியல் பிரிவு பொது மேலாளராக பணியாற்றினார்.
தற்போது தென்மண்டல செயல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் புதுச்சேரி மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 விமான நிலையங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்.
கருத்துகள்