காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்தார்
காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் கண் கவர் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“தேவ் தீபாவளி என்பது சிறப்பான பண்டிகை, அதிலும் காசியில் இந்தப் பண்டிகை நினைவை விட்டு அகலாது. என்றென்றும் நிலைத்திருக்கும் காசி நகரத்தில் எடுக்கப்பட்ட இந்த ஒளிமயமான புகைப்படங்களைக் காணுங்கள்...”கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் வாழ்த்து
கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய சின்னங்களின் புனிதநாளான கார்த்திக் பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். புனித நீராடுதல் மற்றும் விளக்கு தானத்துடன் தொடர்புடைய இந்த தருணம் அனைவரின் வாழ்விலும் புதிய சக்தியை ஏற்படுத்தட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்