மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்காள மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மேற்கு வங்காளத்துக்கு தனி ஆளுநரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய ஜக்தீப் தன்கர், குடியரசு துணைத்தலைவராக ஆன நிலையில் அவ்விடத்தில் புதிய ஆளுநர் அறிவிக்கும் வரை கூடுதல் பொறுப்பாக இல.கணேசன் பதவி வகித்த நிலையில் தற்போது சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்காள மாநிலத்துக்கான ஆளுநராக குடியரசுத் தலைவர் மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளார். இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சி.வி.ஆனந்த போஸ் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் , மாவட்ட ஆட்சித்தலைவர் ல, முதன்மைச் செயலாளர், தலைமைச் செயலாளர், ஆளுநருக்கான சிறப்பு ஆலோசகர் என பல நிர்வாகப் பதவிகளை வகித்தார். மேலும் ஐநா-அவையிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். சுமார் 40 புத்தகங்கள் எழுதிய ஆசிரியர், 32 விருதுகளையும் பெற்றவர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளார் என இவரது பெயரிலான ட்விட்டர் பக்கம் விவரிக்கிறது.
மேற்கு வங்காளத்தின் முந்தைய ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்கொண்ட சச்சரவுகள் பற்றி முழுமையாக அறிந்த , நிர்வாகத் திறனில் நெடிய அனுபவம் பெற்றவர் ஆனந்த போஸ், ஆட்சியாளர்களுடன் கொள்கை ரீதியாக மோதல் போக்கில் சர்ச்சைக்கு ஆளாகும் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை சிறப்பாக சமாளிப்பாரா என்பது தான் இனிமேல் தெரியும்கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் மண்ணனம் கிராமத்தில் பிறந்த ஆனந்த் போஸ்.
தந்தை வாசுதேவன் நாயர், சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து ஐஎன்ஏ வில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதன் நினைவாக மகனுக்கு ஆனந்த போஸ் எனப் பெயர்
இராஜஸ்தான் பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் போஸ். 1977 ஆம் ஆண்டு பேட்ஜ் கேரளா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாவர்.
கேரளாவின் கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியவர் போஸ்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கருணாகரன் கேரள முதலமைச்சராக இருந்த போது அவருக்கு முதன்மைச் செயலாளராக இருந்தார் ஆனந்த போஸ். மேலும், வேளாண்மை அமைச்சகத்துக்குக் கூடுதல் செயலாளராகவும் இருந்தார்.
2011-்ம் ஆண்டில் பணி ஓய்வுக்கு முன்பாக, புது டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு இயக்குநராகவும் இருந்தார்.
மேற்குவங்காளத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் என்பவரை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. கடந்த ஜூலை மாதத்தில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க கூட்டணி. இதையடுத்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்குவங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆனந்த போஸ் மேற்குவங்க ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்
கருத்துகள்