இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் இந்தோனோஷியாவிற்கு இந்தியா பக்கபலமாக இருக்கும்”.
கருத்துகள்