மதம் மாறிய ஆதிதிராவிட பட்டியலினத்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு கருத்து
மதம் மாறிய ஆதிதிராவிட பட்டியலினத்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு கருத்துத் தெரிவித்ததில்.
ஹிந்து மதத்திலிருந்து அயல் நாட்டில் தோன்றிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய, மதங்களுக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில். அந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்கே கவுல், அபய் எஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெறுகிறது.
வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்து சமுதாயத்திலிருந்த அடக்குமுறைச் சூழல், கிருஸ்துவ அல்லது இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. அதனால் அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியமல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட ஜாதிகள்) அரசாணைப் படி இந்தியாவில் தோன்றிய ஹிந்து, பௌத்த அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே அட்டவணை ஜாதி அந்தஸ்தை வழங்குகிறது, இது அரசியலமைப்பிற்கு எதிரானதல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஏற்கனவே பதிலளித்துள்ளார் .அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, ஹிந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தைச் சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் . ரவிசங்கர் பிரசாத் தனது ஒரு பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், ஹிந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார்.
2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் ஹிந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், ஹிந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது. ஆக இனி உச்சநீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு தான் அதை முடிவு செய்யும்.
கருத்துகள்