காசி தமிழ் சங்கமம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர்
காசியில் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான ஆன்மிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமை குறித்து விளக்கும் நிகழ்வாக இது அமைய உள்ளது.
இந்த நிகழ்வு குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், எழுதி செய்தித்தாளில் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையை ட்விட்டரில் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பகிர்ந்திருந்தார். இந்த ட்வீட்டை தானும் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மீது எனக்கு பேருவகை ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடுவதாக இருக்கும்”.
கருத்துகள்