தமிழ்நாட்டில் திருமணமான ஆண் மகன் இறந்தால் அவருக்கு வாரிசாக அவனது மனைவி மற்றும் மக்கள் அவரது தாய் மட்டுமே வாரிசாக அனுமதிக்கப்பட்டனர்.
தந்தை வாரிசாக அனுமதிப்பது இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே இருந்து வந்தது.
ஆனால், இனி மேல் தந்தையும் வாரிசாக சேர்கப்படவேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசாணை எண்.478. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள்:29.09.2022 .வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு வாரிசு சான்றிதழ்கள் வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு அரசு வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை எண்:478 ஐ வெளியிட்டுள்ளதன் படி
புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதன்படி, இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக இணைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர்.
சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
வாரிசு சான்றிதழ் வழங்குவதில் தமிழக அரசின் புதிய நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது
மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், நீதிமன்றத்தை நாடி விண்ணப்பிக்கலாம்.
வாரிசுகள், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். வட்டாடயசியர் வழங்கிய வாரிசு சான்றிதழ் தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
அதிலும் தவறு எனில் அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் கூறப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” அதன்படி இனி மகன் வாரிசுரிமை சான்றில் தாய் மற்றும் தந்தை பெயர் இடம்பெறும். தந்தை இறந்தால் மகன் வாரிசு அந்த மகன் இல்லை என்றால் பேரன் வாரிசாக தனி வாரிசு சான்று அவரது தந்தை அடிப்படையில் பெற வேண்டும்.
கருத்துகள்