குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிப்பு
குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாகும். இரண்டாவது கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி நிறைவடைகிறது. முதற்கட்ட தேர்தலில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை நவம்பர் 15 ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 17 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நிறைவடையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4.91 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது மேலும் .குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக அம்மாநில தேர்தலை நடத்துவது அவசியம்.
குஜராத்தில் கிட்டதட்ட கால் நூற்றாண்டாக பாஜ ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலின்போது மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜ 99 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜ- காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்ம சொப்பனமாக ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ள நிலையில் .
இன்று மதியம் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் அரங்கத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடையே தேர்தல் ஆணையர் பேசியதாவது:
குஜராத் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்குகிறது. வேட்புமனு திரும்ப பெற முதல்கட்டத்திற்கு நவ. 17 மற்றும் 2ம் கட்டத்திற்கு நவ. 21ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்