பொய் வழக்கில் மனித உரிமைகள் மீறல் காவல்துறை ஆய்வாளர் மற்றும் அரசு மருத்துவருக்கு ஐந்து லட்சம் அபராதம்
புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
பழனிச்சாமி, சுரேஷ்குமார், மனோகர், ராஜரத்தினம், மூக்கையா. ஆகிய 5 பேரும் அன்னவாசல் காவல்நிலைத்தில் சில விபரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 ன் படி மனுச் செய்தனர். அந்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் உரிய தகவல் அளிக்காத நிலையில், எங்களிடமே தகவல் கேட்கிறீரகளா என்ற
ஆத்திரமடைந்த அப்போது அன்னவாசலில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் , சார்பு ஆய்வாளர் ஆகியோர் மனுதாரர்கள் 5 பேரையும் தாக்கியதுடன் அவர்கள் மீது 18 ஆகஸ்ட் 2015 ஆம் தேதியன்று பொய் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்
தாக்குதலில் காயமடைந்த பழனிச்சாமி, இராஜரத்தினம் இருவரும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றனர். அப்போது, அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கால் டாக்டர் ராயப்பன் மார்டின் உடனே டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதை விசாரித்த மாநில மனித உரிமைகன் ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், பாதிக்கப்பட்ட 5 பேருக்கும் இழப்பீடாக தலா ரூபாய் .ஒரு லட்சம் வீதம் ஐந்து லட்சமும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில் அப்போது அன்னவாசல் காவல் நிலைய சரகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய பாலசுந்தரத்திடமிருந்து ரூபாய்.2 லட்சமும், சார்பு ஆய்வாளர் சோமசுந்தரத்திடமிருந்து ரூபாய்.2 வட்சமும், டாக்டர் இராயப்பன் மார்ட்டினிடமிருந்து ரூபாய்.ஒரு லட் மும் வசூலிக்கப்பட வேண்டும். மேலும், பாலசுந்தரம், சோமசுந்தரம், டாக்டர் ராயப்பன் மார்ட்டின் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாமென்றும் உத்தரவிட்டார். தற்போது பாலசுந்தரம் பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது தெரிகிறது.
கருத்துகள்