மஹாகவி பாரதியாராகிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
மகாகவி பாரதியாராகிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக ‘மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்.” எனத் தெரிவித்தார்.சுப்பிரமணியன் பாரதியார் ஆன உண்மை வரலாறு பலர் அறிய இன்னும் சிலர் அறியவில்லை.
எட்டயபுரம் அரண்மனையில் பணிசெய்த சின்னசாமி ஐயரின் மகன் தான் சுப்பிரமணியன் அவரது உற்ற நண்பர் சோமசுந்தரம். இருவரும் தமிழாய்ந்த புலமை கொண்டு நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் திறமை கொண்டிருந்த நிலையில் திருநெல்வேலிக்கு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனையில் அவையில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றுமாறு வந்திருந்த அனைத்துப் புலவர்களையும் போட்டி வைத்துக் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களையும் மரபுக் கவிதைகள் மற்றும் சந்தக் கவிதைகளைச் சமர்பித்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் இருவர் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தேர்வு செய்த யாழ்பாணப் புலவர் இருவருக்கும்
பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். டிசம்பர் மாதம் 11ஆம் தேதி 1882 ஆம் ஆண்டில் பிறந்து செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் 39 ஆம் வயதில் இறந்து போன பாரதி
விடுதலை பெற்ற இந்தியாவில் முதலில், நாட்டுடையாக்கப்பட்ட எழுத்துகள் 1949 ஆம் ஆண்டு பாரதியின் எழுத்துகள் தான்.
சினிமாப் படவுலகமும் பாரதியின் பாடல்களை அதிகம் பயன்படுத்திக் கொண்டது. மெட்டுக்கு கட்டுப்படும் கவிதைகளாகத்தான் எப்போதுமே பாரதியின் எழுத்து இருந்திருக்கிறது. "ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்." என்று தன்னை அறிவின் சுடராய் அறிந்த, அறிவித்த எம் மண்ணின் மகாகவி பாரதியாரின் பிறந்த தினமின்று.
தினந்தோறும் அவரை நினைத்தாலும்
' கணந்தோறும் புதியதொரு வியப்பையும்
நவ நவமாய்க் களிப்பையும்' காணச் சொன்ன மஹாகவியை இன்று நினைவு கூர்வோம்
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையென்ப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.?"
மஹாகவி சுப்ரமணிய பாரதியின் 140 ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்.
கருத்துகள்