தமிழ்நாட்டில் 16 இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ராவும்,
வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வாவும்,
டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கிரண் குரலா பேரூராட்சிகளின் இயக்குனராகவும்
உயர்க்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமியும்
வீட்டு வசதித்துறை செயலாளரான ஹிதேஷ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே.சிரு, சமூக நலத்துறை செயலாளராகவும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்தத் துறைச் செயலாளராலவும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக இ.சரவணவேல்ராஜும்,
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் திட்ட இயக்குனராக வி.கணேசனும்.
தொழில் துறை சிறப்பு மேலாளர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்புச் செயலாளராகவும்.
பேரூராட்சிகள் இயக்குனராக இருந்து வரும் டாக்டர் ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளராகவும்.
தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளராக ஆர்.நந்தகோபாலும்.
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும்
சேலம் சாகோசெர்வ் மேலாண்மை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி எம்.என்.பூங்கொடியும்.
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார நல இயக்குனராக அனில் மேஷ்ராமுமஹ நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்