தமிழ்நாடு அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பதவியேற்று 19 மாதங்களுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது தொடர்பான முடிவை முதல்வர் ஆளுநரிடம் அளிக்க வேண்டும். இதற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். பொதுவாக இது போன்ற அமைச்சரவை மாற்றத்தில் ஆளுநர்கள் எதிர்க்கருத்து தெரிவிக்க மாட்டார்கள். அமைச்சரவை மாற்றம் இன்று மாலை நடக்கிறது என்றால் இன்று காலை கூட கடிதத்தை அனுப்ப முடியும். ஆளுநர் உடனே இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.
இந்த நிலையில் நேற்று அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை உடனே ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இணைய உள்ளார். அவருக்கான பதவி ஏற்பு விழாவை டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி காலை நடத்த ஆளுநர் ஆர். என் ரவியின் முதன்மை செயலாளர் ஆனந்த் பாட்டீல் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறி இருக்கிறார்.
கருத்துகள்