அயல் நாட்டின் சட்டங்கள், நமது நாட்டின் பாம்பரியம் மற்றும் கலாச்சாரம், வரலாற்றுப் பெறுமையுடன் கலந்த காலங்காலமாக வந்த வாழ்வியல் முறைமை
எல்லாம் அறியாத. நம் நாட்டிற்கு துளியும் சம்பந்தப்படாத பீட்டா ,புளூகிராஸ் போன்ற அமைப்புகள் நமது நாட்டு விழாக்களில் புகுந்து தடை செய்ய முயலும் செயலாகப் பார்க்கும் பீட்டாவின் நீதிமன்ற வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் ஆலயத்தில் நந்தியாக, ஆன்மீகத்தில் ரிஷபமாக, விவசாயத்தில் உதவும் காளைகளை வீட்டில் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் நமது மக்கள் சார்ந்த வினா ?தற்போதய சட்டம் நீதி சார்ந்த இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
2011 அம் ஆண்டில் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு வலுத்தது . பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதித்தது.
இந்த தடைக்குத் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பும் எழுந்த நிலையில். 2017 ஆம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பெரிய மக்கள் திரள் போராட்டம் நடந்ததையடுத்து அப்போதிருந்த அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
வந்தேரிகளான பீட்டா போன்ற அமைப்புகள் காளைகளைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டா? ஏற்கவே முடியாது. என வானத்துக்கும் பூமிக்கும் குதியோகுதியெனக் குதித்து வாதத்தை முன்வைக்க உச்சநீதிமன்றம் இந்த சுளீர் கேள்வியை கேட்ட நிலையில் வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அவசரச் சட்டத்துக்கு தடைகோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தி கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கம்பளா எனும் எருதுகட்டு விடும் போட்டிக்கு தடைகோரியும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடக்கிறது. நேற்று காலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் பாசமாக வளர்க்கப்படும் காளைகள் பீட்டா வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் காளைகள் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாக அமைந்துள்ளது .நேற்று மீண்டும் நடந்த விசாரணையில்
பீட்டா சார்பில் வாதம் செய்த மூத்த வழக்குரைஞர் ஷ்யாம் திவான் வாதிட்டார். ‛‛பாரம்பரியக் காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றியிருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. மேலும் காளைகளை பாதுகாப்பதாகக் கூறி அவசரச் சட்டம் வாயிலாக காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது. காளையை வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. விதிகள், சட்டங்கள் இருந்தாலும் கூட அதனை முழுமையாக பாதுகாப்பானதாக நடைமுறைப்படுத்த முடியாது'' என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் அமர்வு சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்காக புதிதாக சட்டம் உள்ளது. வழிமுறைகள் உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கண்காணிக்கிறார். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டுக் காளைகள் திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை. முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகு தான் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.
இறுதிக் கேள்வி இதுதான் பல ஆண்டு காலமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாகப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், மிகுந்த பாசத்துடன் காளைகள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை கொடூரமானதென அனைவரும் கூறுவார்களா?. இருப்பினும் காளைகளை கொடுமைப்படுத்தப்படும் செயல்களை அனுமதிக்க முடியாது. தற்போது விதிமீறல் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் ஜல்லிக்கட்டை எந்த வடிவத்திலாவது நடத்தலாமா? அல்லது நடத்தவே முடியாதா? என்பது தான் இறுதிக்கேள்வியாக உள்ளது'' எனக்கூறி வழக்கை நேற்று ஒத்திவைத்தனர். அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
கருத்துகள்