புதுவருடத்தில் அதிகரிக்கப் போகும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் விலை.
புத்தாண்டுக்கு புதிய மோட்டார் வாகனம் வாங்க வேண்டிய நேரமிது. ஏனெனில் புது வருடப் பிறப்பிற்கு தற்போதுள்ள விலையை விட1 முதல் 3 சதவீதம் வரை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலை கூட வாய்ப்புள்ளது.
இந்தியாவிலிருக்கும் மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் சொகுசுக் கார்களை விற்பனை செய்கிறது, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஜனவரி மாதம் விலை ஏற்றம் குறித்த அறிவிப்புகளையும் பகிர்ந்துள்ளன. வழக்கம் போல் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவே அனைத்து நிறுவனங்களும் காரணமாகும். இது தவிர கூடுதலாக செமி கண்டக்டர் சிப் தட்டுப்பாடும் மற்றொரு காரணமாகும் கார்களின் மாடலைப் பொறுத்து விலை உயர்விருக்குமெனத் தெரிகிறது. அதனை அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்துள்ளது.
ஏப்ரல் மாதம் அமலாகும் விதிமுறைகளுக்கிணங்க கார்களை தயாரிப்பதால் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதனை துறை சார்ந்த வல்லுநர்களும் உறுதி செய்த நிலையில். இந்த விதி இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்துமெனத் தெரிகிறது.
இந்தக் கடுமையான எமிஷன் விதிமுறைகள் காரணமாக சில பிரபலமான கார் மாடல்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல். ஏனெனில் அதற்கு தகுந்த வகையில் எஞ்சினில் மாற்றம் மேற்கொள்ள வேண்டி உள்ளதைச் செய்தால் அக் கார்களின் விலை கூடி விடும் எனத் தகவல்..
நவம்பர் மாதம் 1-ஆம் தேதி ஹீரோ மோட்டோகாரப் நிறுவனம் ஸ்கூட்டர், பைக் என தங்கள் நிறுவனத் தயாரிப்புகளின் வாகன விலையை உயர்த்தியது. இப் புதிய விலை உயர்வு அதிகபட்சமாக ரூபாய்.1500 வரையிலிருக்கும் எனத் தெரிவித்தது. மாடல் ரேஞ்ஜை பொறுத்து விலையில் மாற்றமிருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. மற்ற இருசக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்பிருக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு மத்தியில் மோட்டார் வாகனங்களின் விலை உயர்வும் வாகனம் வாங்கும் நபர்களுக்கு பாதிப்பேயாகும்.
கருத்துகள்