முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசுப் பணி செய்ய லஞ்சம் பெற்ற பலர் பல மாவட்டத்தில் கைதும் விசாரணை முடிவில் தண்டனையும்

ரூபாய் எட்டாயிரம் லஞ்சம் வாங்கிய நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் கைது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியரையும்


ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் பெற்றதாக, ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்பு  கண்காணிப்பு  மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்வருவாய்  வட்டாட்சியராகப் பணியாற்றுபவர் லட்சுமிபிரபா(வயது49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிகப் பாரம்  இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி ஓட்டுநர் மற்றும்  உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணம் இல்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக்கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.



லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர் கைது: பொறையாறில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிக்கினார்

திருவாரூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர், ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்புத் துறையினர்  கைது செய்தனர்.




திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியராகப் பணி செய்து  வருபவர் லட்சுமிபிரபா(வயது 49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிக எடை இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணமில்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக் கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் குமார் புகார் தெரிவித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரைப்படி, நேற்று முற்பகல் 11 மணியளவில் லட்சுமிபிரபாவை குமார் தொடர்பு கொண்டு, பணத்தை எங்கு கொண்டு வந்து தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு, தான் திருவாரூர் தபால் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை தரும்படியும் லட்சுமிபிரபா கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் தபால் நிலையத்துக்கு அரசு சாட்சியுடன்  சென்ற குமாரிடமிருந்து பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லட்சுமிபிரபா பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், லட்சுமி பிரபாவை கைது செய்தனர். மேலும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் ஓட்டுநர் லெனின்(வயது 35) என்பரையும் கைது செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறை யாறு பார்வதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன்(வயது 57). தனது காலிமனைக்கு பட்டா மாறுதல் கேட்டு, தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வட்டாட்சியர் மற்றும் மயிலாடு துறை கோட்டாட்சியர் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான உத்தரவைப் பிறப்பித்தனர். அந்த உத்தரவு நகலை குமாருக்கு வழங்க, கோட் டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி(வயது 57) ரூபாய்.20 ஆயிரம் லஞ்சமாககா கேட்டதாகக் தெரிகிறது.





இதுகுறித்து நாகபட்டிணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் மனோகரன் புகார் அளித்ததையடுத்து, ஊழல் தடுப்புத் துறையினரின் அறிவுரைப்படி, பொறையாறு சிவன் வடக்கு வீதியிலுள்ள மலர்விழியின் வீட்டுக்கு நேற்று அரசு சாட்சியுடன் சென்ற மனோகரன், அங்கு பினாப்தலின் இரசாயனபஹ பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மலர்விழியிடம் கொடுத்தார். அதை மலர்விழி வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்  நந்தகோபால், ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் ஊழல் தடுப்புத் துறையினர். மலர்விழியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.


மேலும், அவரது கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூபாய் .30 ஆயிரம் பணம், பட்டா நகல்கள்  ஆகியவற்றையும் பறிமுதல் செய்த நிலையில் விசாரணை நடத்தினர். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம்  திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் காட்டூர் வின்நகரில்  உள்ளது. 

திருவெறும்பூர் வட்டம் காட்டூர் அருகில் பாப்பாக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியனின் மகன் அசோக்குமார். நிலங்கள் வாங்கி விற்பனை  செய்கிறார்.  பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்த நிலையில். பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார்.


 அந்த நிலத்தை அரசு நில வழிகாட்டி  மதிப்பீட்டின் படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியுமென்று சார்பதிவாளர் கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக புஞ்சை என 47(A) படி  பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூபாய்.ஒரு லட்சம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் விவசாய புஞ்சை நிலமாக மாற்றம் செய்து ஸ்டாம்ப் டூட்டி குறைத்துப் பதிவு செய்ய முடியுமென்று தெரிவித்ததால்  லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சிராப்பள்ளி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  மணிகண்டனிடம் புகாரளித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின்படி நேற்று அரசு சாட்சி முன்னிலையில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.ஒரு லட்சத்தை அசோக்குமார் கொடுத்த.

 பணத்தை பாஸ்கரன் பெற்ற போது, அவரை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறையினர் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்



சார் பதிவாளர் பாஸ்கரன் பணியிட மாறுதல் காரணமாக ஆறு  மாதங்களுக்கு முன்னர் திருவெறும்பூர் சார் பதிவாளராகப் பொறுப்பேற்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததாகவும், அலுவலகத்தில் அவர் இருக்காமல், அவரது இருக்கையில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவாரென்றும் புகார் இருந்துதாகத் தெரிவித்தனர்.

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் போல இலஞ்சம் பெறும் பலருக்கும் அலுவலகத்தில் அச்சம் நிலவுகிறது. மேலும் ரூபாய்.500 லஞ்சம் பெற்ற வழக்கில் உதகமண்டலம் வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய்.6 ஆயிரம் அபராதமுமஹ விதித்து உதகமண்டலம் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியவர் தாண்டவ நடராஜன். 2007-ஆம் ஆண்டு உதகமண்டலத்தைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ வாரிசுச் சான்றிதழுக்காக உதகமண்டலம் வட்டாட்சியர் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலர், அதைப் பரிந்துரை செய்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க வேண்டுமானால் ரூபாய்.500 லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால், ஜான்பாஸ்கோ ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜான்பாஸ்கோவிடம் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணத்தை வழங்கி, வருவாய் ஆய்வாளரிடம் வழங்கக் கூறினர். வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜனிடம், அரசு சாட்சி முன்னிலையில் ஜான்பாஸ்கோ பணத்தை வழங்கும்  போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாண்டவ நடராஜனைக் கைது செய்தனர்.

அது தொடர்பான வழக்கு உதகமண்டலத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சி.ஸ்ரீதர், குற்றவாளியான தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் . மேலும், ரூபாய்.6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படட நிகழ்வு அரசுத் தரப்பில் பணியாளர்கள் பலருக்குப் பயம் நிலவும் படி செய்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...