டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 3, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்சுதந்திரமடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், 26 ஜனவரி 1950 ல், சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டபோது இந்தியாவின் முதல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற முறையில், பிரசாத் அரசியலமைப்புச் சட்டத்தின் படி முறையாகச் செயல்பட்டதுடன் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இந்தியாவின் தூதராக உலகம் முழுவதும் பயணம் செய்தார், வெளி நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை உருவாக்கினார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையை நிகழ்த்திய ஒரே இந்திய ஜனாதிபதியாவார். ராஷ்டிரபதி பவனிலுள்ள முகலாயத் தோட்டம் அவரது பதவிக்காலத்தில் முதல் முறையாக சுமார் ஒரு மாத காலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது,
அரசியலுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்பட்டார், அரசியலமைப்பின்படி ஜனாதிபதியின் எதிர்பார்க்கப்பட்ட பாத்திரத்தைப் பின்பற்றினார். இந்து கோட் மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து , அவர் மாநில விவகாரங்களில் மிகவும் தீவிரமான பங்காற்றினார். 1962 ஆம் ஆண்டில், 12 ஆண்டுகள் ஜனாதிபதியாக பணியாற்றிய பிறகு, அவர் ஓய்வுபெறும் முடிவை அறிவித்தார். மே மாதம் 1962 ல் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியைத் துறந்து , பாட்னாவுக்குத் திரும்பினார் மற்றும் பீகார் வித்யாபீடத்தின் வளாகத்தில் தங்க விரும்பினார். இந்திய-சீனப் போருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 9 செப்டம்பர் 1962 அன்று அவரது மனைவி இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
28 பிப்ரவரி 1963 அன்று 78 வயதில் காலமானார். பாட்னாவில் உள்ள ராஜேந்திர ஸ்மிருதி சங்க்ரஹாலயா அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.ராஜேந்திர பிரசாத் 3 டிசம்பர் 1884 ஆம் ஆண்டில் பிறந்து 28 பிப்ரவரி 1963 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார், வழக்கறிஞர், இந்திய சுதந்திர ஆர்வலர், பத்திரிகையாளர் மற்றும் அறிஞராவார், மகாத்மா காந்தியின் ஆதரவாளரான பிரசாத் , உப்பு சத்தியாகிரகம் மற்றும் 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பிரிட்டிஷ் அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபை தேர்தலுக்குப் பிறகு, பிரசாத் மத்திய அரசில் உணவு மற்றும் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பிறகு, பிரசாத் இந்திய அரசியலமைப்புச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , இது இந்திய அரசியலமைப்பைத் தயாரித்து அதன் தற்காலிக பாராளுமன்றமாகப் பணியாற்றியது .அவரது நினைவைப் போற்றும் விதமாக ஆண்டு தோறும் வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள்