உயர்ஜாதியினர் உட்பட பொருளாதார ரீதியான ஏழைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு வேலைகள் மற்றும் நிறுவனங்களில் 10 சதவீதம் தாக்கல் செய்துள்ளது.
அதே போல் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்த சட்டத்த் திருத்தத்தைக் கொண்டு வந்ததை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு அப்போது வெளியானது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனவும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாதென்றும் தீர்ப்பளித்ததன் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103 ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 10% இட ஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானதென்ற கடுமையான வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்த வேண்டும் எனவும் பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாதென்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது தனது மனுவில் இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கும் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதென்றும். முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறதென திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.
சமூகத்தில் முன்னேறிய ஜாதியினர் உட்பட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) என்பது 133 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறதென்பதால் அந்த அடிப்படையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்துமாறும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்ததில்
இந்தியாவின் மக்கள்தொகையை இடஒதுக்கீடு நோக்கங்களுக்காக பரஸ்பர பிரத்தியேகப் பிரிவுகளாகப் பிரிப்பதைத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது, இது சகோதரத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையை அடிப்படையில் சிதைக்கிறதென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பணி செய்யும் ஊழியர்கள் குறித்த தகவலில்மத்திய அரசுப் பணியில் 27 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20 சதவீதம் ஏன்?..என்ற வினா வருகிறது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆண்டறிக்கையில் உள்ள தகவல் படி
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடிருந்தும் அவர்கள் மத்திய அரசுப் பணியில் 20 சதவீதம் என்ற அளவிற்கே பணியிலுள்ளதாக மத்திய அரசின் பணியாளர்கள் துறை அமைச்சக ஆய்வறிக்கையின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, மத்தியரசின் 55 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 20.43 சதவீதம் மட்டுமே.
ஆனால் அவர்களுக்கு அரசியலமைப்பின் இடஒதுக்கீட்டின் படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை விடக் குறைவேயாகும், எஸ்சி - எஸ்டி வகுப்பினரை பொறுத்தவரை, மத்தியரசுப் பணியில் 15 சதவீத இடஒதுக்கீடு பெறுகின்றனர். தற்போது 17.39 சதவீத பணியாளர்கள் பணியிலுள்ளனர். அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பழங்குடியினர் 7.64 சதவீதம் பேர் பணியிலுள்ளனர். இந்தப் புள்ளி விபரங்களில் ஓபிசி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் காட்டிலும் அவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமலும், காலியாகவும் உள்ளன.
ஓபிசி பிரிவினர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒன்றிய அரசு அவ்வப்போது அறிவிப்பாணைகளை வெளியிட்டாலும் கூட, அரசுப் பணியில் சேருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவர்கள் இடஒதுக்கீட்டின் முழு பலனையும் பெறவில்லையென்றும் கூறப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாமென்றும், அதனால் முப்பதாண்டுகளாக ஓபிசி பிரிவில் பணியாளர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியரசின் பணியாளர்கள் விபரத்தில், பழங்குடியின வகுப்பினர் - 3,95,712 பேர், ஓபிசி வகுப்பினர் - 1,47,953 பேர், அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3,36,927 பேர், பொது மற்றும் இதர பிரிவினர் - 10,56,504 பேர் என, மொத்தம் 19,37,096 பேர் மத்தியரசுப் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்