அதானி குழுமத்தின் பங்குகள்.20 சதவீதம் வரை சரிவு.
மும்பை பங்குச்சந்தையிலிருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரையில் சரிந்து நீண்ட கால முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுது. இந்தச் சரிவுக்கு Hindenburg அறிக்கையும் காரணமாகும். இந்தியாவின் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குழுமத்தின் கடந்த ஆண்டு ஒப்பந்தங்களை முழுமையாக ஆய்வு செய்யவும்,
கண்காணிப்பைஅதிகப்படுத்தவும் முடிவு செய்த வேளையில் Short Seller நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆய்வு செய்ய செபி முடிவு அதானி குழுமத்தின் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதன் விசாரணையில் அதைச் சேர்க்க உள்ளதாகத் தகவல்.
அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவிலான முதலீட்டில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவது நாடறிந்த உண்மை . அதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் தலையீடும் உள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனம் செயல்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்யச் செபி முடிவு செய்துள்ளது. இது வரையில் அதானி குழுமம் சுமார் 17 offshore special purpose vehicle-ஐ (SPV) தனது கையகப்படுத்தல் திட்டத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் நிறுவனங்கள் "கேளிக்குறிய" வகையில் சந்தை கையாளுதல் மற்றும் கணக்குகளில் பல்வேறு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. Hindenburg அறிக்கை அதானி குழும நிறுவனப் பங்குகளை மட்டுமல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெருத்த சரிவை ஏற்படுத்தியுள்ள
அதே வேளையில் பில்லியனர் முதலீட்டாளரான William Ackman தனது டிவிட்டரில் அதானி குழுமம் குறித்து அறிக்கை சிறப்பான ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படு உள்ளது அதைக் கண்டிப்பாக நம்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் Hindenburg அறிக்கையில் அதானி குழுமம் அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளிநாட்டுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷாட் பொசிஷன் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்து வந்த அதானி குழுமம் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் உள்ளது. அதானி டேட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி வில்மார், NDTV, அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ, ஏசிசி லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ். இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்த 10 நிறுவனங்களும் சரிவைச் சந்தித்துள்ளது
ஓரே நாளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலைக்கு முக்கியக் காரணம் Hindenburg என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான் எனக் கூறப்பட்டு உள்ளது
அனைத்தும் பொய், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெளியிட்ட அறிக்கை என இரண்டு நாட்களாகக் கூறி வரும் வேளையில், நேற்று Hindenburg நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட 89 கேள்விகளுக்கும் இன்று வரிக்கு வரி விளக்கம் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மிகப்பெரிய முயற்சியாக விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Hindenburg Research, எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மை சரிபார்க்கவோ எந்த முயற்சியும் செய்யாமல், ஜனவரி மாதம் 24 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
தற்போது எழுப்பப்பட்டுள்ள 89 கேள்விகளில் 21 கேள்விகளுக்குப் பொது வெளியீடாக வந்துள்ள 2015 அதானி போர்ட்ஃபோலியோ பிரசன்டேஷன் அறிகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பேர்க் செய்த கணக்கியல் அல்லது மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்கச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பேர்க் அறிக்கை அதானி குழுமத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும், தனது அறிக்கையில் ஒன்றை விட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டதென்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
ஹிண்டன்பேர்க் நிறுவனம் என்பது குறுகிய காலப் பங்கு விற்பனையில் தனித் திறன் பெற்றது. அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காகப் பிட்டிங் செய்யு பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்கார நிறுவனம். அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பு மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் பலன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஹிண்டன்பர்க் நிதியியல் சந்தையில் மனிதர்களால் செய்யப்படும் மோசடிகளைக் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டு ஷாட் செல்லிங் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவை இதுவரை 16 நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு பெரும் தொகையைச் சம்பாதித்துள்ளது.
அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமத்தின் பங்குகளை FPO கீழ் விற்பனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது பெரும் பின்னடைவாக உள்ளது. குறிப்பிடத்தக்கது
இதில் தற்போது நம்மிடையே அம்பானியின் ஜியோ மூணுமாதமா 'அன்லிமிட் டாக் டைம்' ரீசார்ஜ் பண்றதுக்கு ஜியோவுல 555 ரூபாய் வாங்கிய நிலையில் ஏர்டெல் போன்ற கம்பேனிகளின் கட்டணம் கொஞ்சம் முன்பின் இருக்க இப்போது 666 ரூபாய்னு உயர்த்தியாச்சு. தினமும் ஒன்றரை ஜிபி நெட் அவுட்கோயிங் அன்லிமிட்ன்னு இதை பயன்படுத்தி ஆண்டுக்கணக்கா பயன் படுத்திய நிலை . வீட்டில உபயோகித்த சிம் கார்டுக்கு இன்கமிங் ஃப்ரீ, தேவைப்பட்டா எப்போதாவது ஒன்னு ரெண்டு போனு பேசிக்கலாம்னு நெட் இல்லாத கனெக்சனா ஒரு தொலைபேசி இருக்கும்.
மாசாமாசம் 100 ரூபாய் அதுக்கு ரீ சார்ஜ் பண்ணி வைப்போம். இப்போது அதை 155 ரூபாய்னு ஏத்தி விட்டுட்டாங்க. புறா விடும் தூது இல்லன்னா நேர்ல போயே பேசிட்டு வருவது நல்லது என்ற நிலை வரும் போலிருக்கு.
இதுமாதிரி அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பேச ஜியோ முதலாளியோ அல்லது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைக் காணோம். அதானி லாஸ் ஆன பின்னணி, அம்பானிய அவுட் ஆக்குன கண்மணினு கவர் ஸ்டோரியும் டிபேட் பானிபூரியும் இறிலிருந்து தொடங்கிவிடும்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகள் ராதிகாவுக்கும் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது அந்த விழாவில் அம்பானி குடும்பத்தினர் நடனம் ஆடி மணமக்களை வாழ்த்தினர்.மக்கள் பணத்தில் வாரிக்கொழுத்தவர்கள் இதில் பொது நீதி யாதெனில்
முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக் கொள்ளும் " என்ற உண்மை கார்ல் மார்க்சின் வாசகத்தை நானும் பல வருடங்கள் நம்பிக் கொண்டிருந்தவன் அதன் உண்மை இப்போது புரிகிறது அதை கவியரசர் கண்ணதாசன் வரிகளில் கூற வேண்டுமானால் "வாழ்வின் பொருள் என்ன ? நீ வந்த கதையென்ன ? ' என்கிற வரிகள் பல்லாண்டுகளில் எனைத் தொடர்ந்த படியே இருக்கிறது. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலை நேக்கி மக்கள் பயணப்படும் நிலை 2000 ஆண்டு வரை வரவில்லை அதன் பின் நாட்டில் நல்ல தலைமைப் பஞ்சம் தான்.
கருத்துகள்